யாழ். போதனா வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு: சந்தேகநபரை கைது செய்ய மக்களின் உதவி கோரல்!
யாழ். போதனா வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு: சந்தேகநபரை கைது செய்ய மக்களின் உதவி கோரல்!
24 Feb, 2026 | 05:49 PM
![]()
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு:
கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தின் 06 ஆம் இலக்க வாயிலுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கறுப்பு நிற HONDA ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, திருட்டு இடம்பெற்ற பகுதியில் இருந்த CCTV கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் மூலம் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் புகைப்படம் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:
தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் (யாழ்ப்பாணம்): 071-8591329
பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவு (யாழ்ப்பாணம்): 071-2384310

























