Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. செயற்கை ஒளி செடிகளுக்கு நல்லதா? வீட்டில் வைக்கப்படும் செடிகளை வெளிச்சம் அதிகம் உள்ள அறையில் வைக்குமாறு அடிக்கடி பரிந்துரைக்கிறோம்; அதாவது, சூரிய ஒளி எளிதாக உள்ளே நுழையும் ஜன்னல்கள் உள்ளன. மேலும் அவை அனைத்தும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதற்கு ஒளி தேவை, எனவே, அவற்றின் உணவை உற்பத்தி செய்து வளர முடியும். ஆனால், செயற்கை ஒளியுடன் ஆரோக்கியமான தாவரங்கள் இருக்க முடியுமா? குறுகிய பதில் ஆம், உங்களால் முடியும்.. இப்போது, செடிகளுக்கு செயற்கை ஒளியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், ஏனென்றால் அவை அனைத்தும் வேலை செய்யாது. உண்மையில், நாம் வழக்கமாக வீட்டில் வைத்திருக்கும் பல்புகளின் வெளிச்சம் நல்ல வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்க போதுமானதாக இல்லை. இதைச் செய்ய, நாம் குறிப்பிட்ட விளக்குகள் அ…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சிசிலியா பாரியா பதவி,பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை எரிபொருட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மூன்று நாடுகளில் இந்த நோக்கத்தை நிறைவேற்ற உதவும் வகையில் மிகப்பெரிய இயற்கை வள இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள லித்தியம் கனிம இருப்புக்களில் பாதி அளவு அர்ஜென்டினா, சிலி, பொலிவியாவில் உள்ளது. இந்த மூன்று நாடுகளும் உலகின் லித்தியம் முக்கோணமாக மாறிவிட்டன. இதன் மூலம் உலக நாடுகள், முதலீட்டாளர்களின் கவனம் இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது விழுந்தது. மின்சா…

  3. நானோ டைஜஸ்ட் என்ற உலகளாவிய விஞ்ஞான இதழின் முதல் பக்கத்தில் தனது நான்கு சிறந்த நானோ கண்டுபிடிப்புக்களுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கிறார் தெய்வசாந்தி. இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டு பல்லாயிரம் ரூபாய்கள் பெறுமானமுள்ள காப்பர், சில்வர் நானோ துகள்கள், கிராஃபைன் ஆகியவற்றைத் தயாரித்து ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்டோர்களுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளார். தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான சோதனையில் நோபல் பரிசு பெற விழையும் பேராசிரியை தெய்வசாந்தி இராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் 1978 ஆம் வருடம் பிறந்தவர். எங்கே பிறந்தாலும் சாதனை புரியலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. கணவர் திரு. சங்கர். இயற்பிலில் முனை…

  4. பட மூலாதாரம்,WEBBTELESCOPE.ORG படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்துள்ள யுரேனஸின் படம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சூரிய குடும்பத்தின் இந்தக் கோளைச் சுற்றி இருக்கும் ஒளி வளையங்கள் இதற்கு முன் இவ்வளவு தெளிவாகத் தெரிந்தில்லை. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்தக் கோள் வட்டமான ஒளி வட்டத்தால் மூடப்பட்டிருப்பது போலக் காட்சியளிக்கும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, யுரேனஸின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டவை. யுரேனஸ் நமது சூரிய குடும்பத்தின் ஏழாவது கிரகம். 1986ஆம் ஆண்டு …

  5. சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனின் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது ‘கொரோனல் ஓட்டை’ என்று விஞ்ஞானிகள் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று காட்சி அளிக்கிறது. இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23ஆம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது. கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் கொரோனல் ஓட்டையில் இர…

  6. நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள் இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர், வானியல் விஞ்ஞானிகள். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன. இந்த வாரத்தில், அதிலும் குறிப்பாக நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) இந்த கிரக வரிசையைக் காண முடியும். அவ்வாறு காண விரும்புவோர், சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என்கிறார், நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக். இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும். ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும், ‘ஒரே நேரத்தில் 5 கிரக …

  7. மல்டிவர்ஸ் என்றால் என்ன? நாம் வாழும் பேரண்டம் தவிர வேறு பேரண்டங்கள் உண்டா? பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY கட்டுரை தகவல் எழுதியவர்,டெய்சி ரோட்ரிக்ஸ் பதவி,. 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் 7 ஆஸ்கார் விருது வென்ற "எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" படத்தின் பாத்திரமான ஈவ்லின் ஒரே நேரத்தில் ஒரு சலவை இயந்திர நிறுவனத்தின் உரிமையாளராகவும், குங்ஃபூ நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு திரைப்பட நட்சத்திரமாகவும், நீண்ட, தளர்வான விரல்களைக் கொண்ட பெண்ணாகவும் இருக்கிறார். இந்த பாத்திரம் பல்வேறு இணை பிரபஞ்சங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்கிறது. அவரது சுயத்தின…

  8. 2046 காதலர் தினத்தில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ள விண்கல் Published By: SETHU 10 MAR, 2023 | 12:19 PM 2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை நாசா பின்தொடர்ந்து வருகிறது. 2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இவ்விண்கல் முதன்முதலில் அவதானிக்கப்பட்டது. இது 160 அடி (48.7 மீற்றர்) விட்டமுடையதாக இருந்தது என நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 18 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில், ஒரு விநாடிக்கு 24…

  9. கோழிக் கழிவு மூலம் சமையல் எரிவாயு தயாரிப்பு முதல் கார் சார்ஜிங் வரை செய்யும் விவசாயி காணொளிக் குறிப்பு, கோழிக் கழிவு மூலம் சமையல் எரிவாயு தயாரிப்பு முதல் கார் சார்ஜிங் வரை செய்யும் விவசாயி 8 மணி நேரங்களுக்கு முன்னர் கோழிக் கழிவு மூலம் பயோ கேஸ் உற்பத்தி செய்து, அதை வைத்து சமையல் செய்கிறார், வெந்நீர் வைக்கிறார், தோட்டத்தைப் பராமரிக்கிறார், கார் சார்ஜ் செய்கிறார் இந்த விவசாயி. இது எப்படி? படக்குறிப்பு, கோழிக்கழிவு https://www.bbc.com/tamil/articles/ck7j7mxz1v2o

  10. வானில் இன்று நிகழும் அரிய நிகழ்வு – ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி…! இன்று வானில் மிக அரிதான நிகழ்வாக, மிக அருகில் வெள்ளி, வியாழன் கோள்களை காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றும் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அப்படி சுற்றும் போது கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழக்கமானது. அந்த வகையில் கடந்த 21, 22 ஆம் திகதிகளில் வானில் வெள்ளி, வியாழன் மற்றும் நிலவு ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வை காண முடிந்தது. அந்தவகையில் இன்று (புதன்கிழமை) வானில் வெப்பமான கோளான வெள்ளியும், இராட்சத கோளான வியாழனும் மிக அருகில் வருவதை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள…

  11. நிர்க்கதியான விண்வெளி வீரர்களுக்காக ரஷ்யா அனுப்பிய அவசர மீட்புக் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது Published By: SETHU 27 FEB, 2023 | 09:42 AM சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் திரும்புவதற்கான விண்கலம் சிறிய விண்கல் மோதல் காரணமாக சேதமடைந்துள்ளதால், ரஷ்யா அனுப்பிய அவசர மீட்பு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. சோயுஸ் எம்எஸ்-23 எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், கஸகஸ்தானின் பய்கனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலைய பங்காளரான அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதனை நேரடியாக ஒளிபரப்பியது. இவ்விண்கலம் நேற்றுஞாயிற்றுக்கிழ…

  12. புதிய விண்மீன் திரள் கண்டுபிடிப்பு Published By: T. SARANYA 24 FEB, 2023 | 11:11 AM விண்வெளி தொலைநோக்கி மூலம் பால்வளி மண்டலத்திற்கு அப்பால் உள்ள புதிய விண்மீன் திரளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு நடத்தினர். அப்போது பிரபஞ்சம் தோன்றிய பின்னர் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இருக்கும் புதிய விண்மீன் திரளைக் கண்டுபிடித்துள்ளனர். அதன் அனைத்து நட்சத்திரங்களின் மொத்த எடை சூரியனை விட 100 பில்லியன் மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். …

  13. நவீன அறிவியல் உலகில் செயற்கை இதயம் எட்டா கனவாகவே இருப்பது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,சியன் இ ஹார்டிங் பதவி,பிபிசி ஃப்யூச்சர் 22 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES நகரங்களுக்கு அடியில் சுரங்கம் அமைப்பது முதல் நிலவுக்குப் பயணிப்பது வரை மானுட வளர்ச்சி அளப்பரிய சாதனைகளைக் கண்டுள்ளது. ஆனால், செயற்கை இதயத்தை உருவாக்குவது மட்டும் ஏன் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக சவால்களை கொண்டுள்ளது? செயற்கை இதயத்தைக் கண்டறிவதற்கான வரலாறு, புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு மற்றும் தொடர்ச்சியான மருத்துவ தோல்வி ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. நிலவுப் பயணமும் செயற்கை …

  14. இதயத்துடிப்பை அறியும் ஸ்டெதாஸ்கோப்பை கண்டு பிடித்த பிரான்சு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ரீனே லீனெக் (René Laennec) கின் 237 ஆவது பிறந்த நாள் இன்று. அவர் பிறந்த ஆண்டு பிப்ரவரி 17, 1781. மதுத்துவரான ரீனே தனது மருத்துவமனையில் இருக்கும் போது பெண் ஒருவர் இதயம் தொடர்பான பிரச்னைக்கு மருத்துவம் பார்க்க வந்திருந்தார். இதயத்துடிப்பை அறிய, நோயாளியின் மார்பகத்தில் காதை வைத்து தான் உணர முடியும். ஆனால் கூச்ச சுபாவம் கொண்ட ரீனே அந்த பெண்ணின் இதயத்துடிப்பை அறிய, மார்பில் காதை வைத்து கேட்க சங்கோஜப்பட்டார். அதன் விளைவாக அவர் கண்டுபிடித்த கருவிதான் ஸ்டெதாஸ்கோப். ஆரம்பத்தில் ஒரு தாளை சுருட்டி, உருளையாக்கி, அதன் மூலம், ஒருபுறத்தை நோயாளியின் இதயத்திலும், மறுமுனையை தனது …

    • 6 replies
    • 525 views
  15. சூரிய வெடிப்பு நடந்தது உண்மையா? அறிவியலாளரின் எளிய விளக்கம் விஷ்ணுப்ரியா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில தினங்களுக்கு முன்பு சூரியனின் ஒரு துண்டு வெடித்து சிதறிவிட்டது என்றும் அது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலம் அது தெரியவந்தது என்றும் செய்திகள் வெளிவந்தன. அதேபோல சூரிய வெடிப்பு, சூரிய காற்று என்ற சொற்றொடர்களும் அந்த செய்திகளில் இடம் பெற்றிருந்தன. சூரியன் வெடித்து அதன் பகுதியை இழந்தது உண்மையா? சூரிய காற்று என்றால் என்ன? இதனால் மனிதர…

  16. அலெக்சாண்ட்ரா மார்ட்டின்ஸ் பிபிசி உலக சேவை நம்முடைய உடல் தோரணையும் முக பாவனைகளும் மூளைக்கு முக்கியமான சமிக்ஞைகளை அனுப்புகின்றன. அவற்றுக்கு ஏற்ப மூளை செயலாற்றுகிறது என, ஸ்பெயினின் மட்ரிட்டில் உள்ள கம்ப்லுடென்சே பல்கலைக்கழகத்தைச் (Complutense University of Madrid) சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி நாசரேத் கேஸ்ட்டெல்லெனோஸ் கூறுகிறார். "நமது முகம் கோபமாக தோன்றினால், நாம் வழக்கமாக கோபமாகவே இருப்போம் எனக்கருதி கோபம் தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை தூண்டிவிடும்," என அவர் கூறுகிறார். அதேபோன்று தான், நம் உடல் தோரணை மற்றும் முக பாவனைகள் கவலையாக தோன்றினால் கவலை தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை ஊக்குவிக்கும். …

  17. ஹவாயின் மவுனா கியாவில் உள்ள ஒரு வான்வெளி ஆய்வு நிலையம், இந்த காட்சிகளைப் படம் பிடித்துள்ளது. வானில் ஒரு சிறிய புள்ளியாக தோன்றி, நகர்ந்து, பின்னர் அது சூழல் வடிவம் போன்று காட்சியளித்தது.

  18. 50,000 ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜான்வி மூலே பதவி,பிபிசி மராத்தி 29 ஜனவரி 2023, 08:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DAN BARTLETT VIA NASA வானில் ஒரு புதிய விருந்தாளி பூமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பச்சை நிற வால் நட்சத்திரம் என அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம், உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்குகிறது. இதற்கு முன்பு இந்த வால் நட்சத்திரம் வருவதற்…

  19. மரபணு நோய்களை கண்டறிய உதவும் அவதார் படத்தின் தொழில்நுட்பம் - அறிவியல் உலகில் புதிய சாதனை பட மூலாதாரம்,20TH CENTURY STUDIOS படக்குறிப்பு, மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அவதார் போன்ற திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக பயன்படுத்தபட்ட மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைக் (Motion Capture Technology) கொண்டு மனித உடல்களின் இயக்கத்தைப் பாதிக்கும் நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவ்வளவு…

  20. செய்மதிகளைவிட பூமியை நெருக்கமாக கடந்து செல்லவுள்ள விண்கல்: நாசா தெரிவிப்பு By SETHU 26 JAN, 2023 | 06:26 PM ஒரு பஸ் அளவிலான விண்கல். இன்னும் சில மணித்தியாலங்களில் பூமியை சுமார் 3,600 கிலோமீற்றர்கள்; (2,200 மைல்கள்) தொலைவில் கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பல செய்மதிகளைவிட இந்த விண்கல் பூமியை நெருங்கிச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது. 2023 BU (2023 பியூ) என இவ்விண்கல்லுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூ…

  21. 'அந்த விஷயத்தில்' குரங்கும் மனிதனும் ஒன்றுதான் - இதோ ஆதாரம் கட்டுரை தகவல் எழுதியவர்,விக்டோரியா கில் பதவி,அறிவியல் நிருபர், பிபிசி செய்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் மற்ற குரங்குகளுடன் பொதுவான சைகை மொழியைப் பகிர்ந்து கொள்கிறார்கள், காட்டு சிம்ப்பன்ஸி மற்றும் பொனொபோஸ்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தும் பல சைகைகளைப் புரிந்துகொள்கிறார்கள். குரங்கு சைகைகளை தன்னார்வலர்கள் மொழிபெயர்த்த வீடியோ அடிப்படையிலான ஆய்வின் முடிவு இதுதான். இந்த ஆய்வு செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆ…

  22. மூளைப்புலன்கள் - தூங்கும்போது கட்டிலில் இருந்து ஏன் விழுவதில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இரவில் கண்களை மூடுவதற்கும், காலையில் கண்களைத் திறப்பதற்கும் இடையில், ஆழ்ந்த ஓய்வின் மகிழ்ச்சியை மட்டுமே அறியும் அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆனால் நாம் தூங்கும்போது மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். தூங்கும்போது நாம் கனவு காண்பது மட்டுமில்லை, குறட்டை விடுகிறோம், பேசுகிறோம், சிரிக்கிறோம், கத்துகிறோம், உதைக்கிறோம், குத்துகிறோம், உருள்கிறோம். ஆனால், மிக சிறிய கட்டிலில் தூங்கினாலும் சரி, அகலமான கட்டிலில் தூங்கி…

  23. வியாழன் கோளை சுற்றி வரும் ஐஸ் நிலாக்களை ஆராயப் போகும் ஜூஸ் செயற்கைக்கோள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோனத்தான் அமோஸ் பதவி,பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/SWRI/MSSS வியாழன் கிரகத்தின் பனிக்கட்டி நிலவுகளை ஆராய்வதற்காக ஐரோப்பா தனது மிகப்பெரிய விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. ஜூஸ் செயற்கைக்கோள் பிரான்சின் துலூஸ் நகரில் இறுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகு தென் அமெரிக்காவில் உள்ள ஏவுதளத்திற்கு அனுப்பப்படும். ஏப்ரல் மாதத்தில் பூமியில் இருந்து தனது பயணத்தை அது தொடங்கும். இந்த 60…

  24. வானில் மின்னலின் பாதையை மாற்றியமைத்து வெற்றி By T. SARANYA 18 JAN, 2023 | 11:46 AM வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வெற்றி பெற்றுள்ளனர். வானில் தோன்றும் மின்னலை தடுப்பதற்கான மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்ளின் என்பவர் 1752-ம் ஆண்டு மின்னல் மற்றும் மின்சாரத்திற்கு இடையேயான தொடர்பு பற்றி விளக்கினார். இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் மின்னலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை லேசர் உதவியுடன் அதனை முயன்று பார்த்து உள…

  25. மரத்திலிருந்து உருவாகும் பேட்டரிகள் - மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,கிறிஸ் பரனியுக் பதவி,பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், விஞ்ஞானிகள் நிலையான பேட்டரிகளை தயாரிப்பதற்கான பொருட்களைத் தேடுகின்றனர். மரங்களில் காணப்படும் லிக்னின் என்ற பொருள், ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறது சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தின் ஒரு பெரிய காகித உற்பத்தியாளர் உலகம் மாறி வருவதை உணர்ந்தார். டிஜிட்டல் ஊடகங்களின் எழுச்சியால் அச்சுத்தொழில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.