Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கணவருடன் பைக்கில் செல்லும் போது, துப்பட்டா சக்கரத்தில் சிக்கி 25 வயது தாய் ஒருவர், துடிதுடித்து பலியாகியுள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள ஆலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பாக, பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி தனது பள்ளிப்பருவத்துக் காதலியான பிரணாலி தனுவை(25) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் மற்றும் 10 மாதக் கைக்குழந்தையான மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை, தனது மனைவி மற்றும் மகளுடன் ஆகாஷ் தனது சொந்த கிராமத்திற்குக் கிளம்பியுள்ளார். கைக்குழந்தையான ஸ்வராவை, அவரது மனைவி மடியில் வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்துள்ளார்.…

  2. பொதுவாக நமது சொந்த ஊரில் நாம் படிக்க நினைக்கும் கல்வியை கற்கும் வாய்ப்பு கிடைக்காமல்போகும் நிலைமையில்தான் நாம் வேறு ஊருக்குபோக நினைப்போம். கல்விக்காக வெளியூர் செல்லும் மாணவர்கள் அவ்வப்போது அங்கேயே தனிவீடு எடுத்து தங்கிவிடுவதுண்டு. சொந்த ஊரைவிட்டு வெளியேறிய பின்னர், புது இடத்தில் நாம் கிட்டதட்ட அடிமையாகிப் போனதாய் உணருவோம். வீட்டு உரிமையாளர்கள் போடும் நிபந்தனைக்கெல்லாம் கட்டுப்படுவோம். ஜெர்மனியில் லியோனி முல்லர்(23) என்பவரின் பாட்டியின் வீடு, அவள் படிக்கும் டுபின்ஜென் நகர பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 530 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதனால், பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடிபுகுந்தார், லியோனி. வீட்டு உரிமையாளருடன் ஆறு மாதங்களுக்கு மு…

    • 0 replies
    • 343 views
  3. உலகின் ஏழு அதிசயங்களாக போற்றப்பட்டவை எல்லாம் பழைய அதிசயங்களாகவே இருந்தன. அவற்றில் பல அழிந்து விட்டன. இதனால் புதிய உலக அதிசயங்களை பட்டியல்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்பினர். ஹீரோடோடஸ் (கி.மு 484, கி.மு.425) மற்றும் காலிமாசஸ் (கி.மு. 305, கி.மு.240) காலத்தை நோக்கி பின்சென்றால், கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை, அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். இவற்றில் கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ போன்ற பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன. நியூ 7 ஒண்டர்ஸின் மைல்கற்கள் பக்கத்தின்படி, சுவிசில…

    • 0 replies
    • 509 views
  4. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கியூரியாசிட்டி விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது. அங்கு அந்த விண்கலம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அங்குள்ள மலைகள், பாறைகள், மண்ணின் தன்மை, செவ்வாய் கிரகத்தின் அமைப்பு உள்ளிட்டவற்றை போட்டோக்களாக எடுத்து அனுப்பியுள்ளது. தற்போது அது தனது ‘ரோபோட்டிக்’ கரங்களால் செவ்வாய் கிரகத்தை ‘செல்பி’ எடுத்துள்ளது. அது குறித்த போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளது. கடந்த வாரம் செவ்வாய் கிரகத்தில் ‘மரியாஸ் பாஸ்’ என்ற பகுதிக்கு நகர்ந்து சென்ற கியூரியாசிட்டி அங்கு பாறையை துளையிட்டு மாதிரியை எடுத்தது. அப்போது தனது ‘ரோபோட்டிக்’ கைகளால் அதில் உள்ள கேமராவின் மூலம் ‘செல்பி’ எடுத்து அசத்தியது. ‘மரியாஸ் பாஸ்’ பகுதியில் மல…

    • 0 replies
    • 496 views
  5. 8.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான உலகின் விலை­யு­யர்ந்த பொம்மை வீடு முதல் தட­வை­யாக காட்­சிக்கு வைக்­கப்­ப­ட­வுள்­ளது. அமெ­ரிக்க கொல­ராடோ மாநி­லத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செய­ற­்படும் கலை­ஞ­ரான எலெயின் டியஹ்ல் என்­ப­வரால் 29 அறை­களைக் கொண்ட மேற்­படி பொம்மை வீடு உரு­வாக்­கப்­பட்­டு­ள்­ளது. அவர் இந்த பொம்மை வீட்டை உருவாக்க 13 வரு­டங்­களை செல­விட்­டுள்ளார்.அத்­துடன் அவர் பல தச்சு வேலை செய்­ப­வர்கள், கண்­ணாடி சிற்பக் கலை­ஞர்கள், வெள்ளி பொருட்­களை செதுக்­கு­ப­வர்கள் ஆகி­யோரின் உத­வி­யுடன் மேற்­படி பொம்மை வீட்­டிற்கு தேவை­யான சின்­னஞ்­சிறு தள­பா­டங்கள் மற்றும் அலங்­காரப் பொருட்களை வடி­வ­மைத்­துள்ளார். அத்­துடன் இந்த பொம்மை வீட்­டிற்­காக 7,000 அமெ­ரிக்க டொலர் ப…

  6. நிர்வாண செல்பி கேட்டு நச்சரித்த மாப்பிள்ளை... திருமணத்தை நிறுத்தினார் புதுப்பெண்! மும்பை: மும்பையில் வருங்கால கணவர் நிர்வாண செல்பி கேட்டதால், ஆத்திரமடைந்த கல்யாணப்பெண் கோபத்தில் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார். மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், தானேயில் கால்செண்டரில் பணிபுரிந்து வரும் ஜிதேந்திரா என்ற 33 வயது இளைஞருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இருவரும் கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினர். தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளனர். அதோடு தங்களது புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், ஜிதேந்திராவுக்கு திடீரென விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனது வருங…

    • 11 replies
    • 710 views
  7. https://www.facebook.com/100009993400005/videos/125353871141059/ மட்டு/ஓட்டமாவடி பிரதான வீதியில் , பாலத்திலிருந்து வரும் போது முதலாவதாகக் காணக்கூடியதாக இருந்த காளியம்மன் கோவிலை அழிக்கப்பட்ட பின் கோயில் காணியை அபகரித்து பள்ளி வாயலுக்குக் கொடுத்தது நானே தான் , அந்தக் கோவிலை இல்லாமலாக்கியதும் நானே தான் சொல்கிறார் -முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா.

    • 0 replies
    • 245 views
  8. பெண்களின் பாலியல் உணர்வைத்தூண்டும் புதிய மருந்து ஒன்றுக்கு அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக அனுமதியளித்திருக்கிறது. அதன் பெயர் ஃபிலிபான்செரின். ஆனால் சந்தையில் பெரும்பாலும் இந்த மருந்து வேறொரு பெயரால் விற்கப்படுவதையே நீங்கள் பார்க்க நேரலாம். “பெண்களுக்கான வயாக்ரா” என்பதே இதற்கான பிரபல பெயராக இருக்கக் கூடும். ஆனால் ஆண்களின் பாலியல் இச்சையைத் தீர்க்க உதவும் புகழ்பெற்ற வயாக்ரா மாத்திரையும் பெண்களுக்கான இந்த புதிய மாத்திரையும் ஒன்றா? இல்லை. அப்படி சொல்ல முடியாது. வயாக்ரா: ஆண்களுக்கானது. பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் மூலம் அதன் விறைப்புத்தன்மையை அதிகப்படுத்தியும், நீட்டித்தும் ஆண்களில் பாலியல் இச்சைக்கு செயல்வடிவம் கொடுக்க வயாக்ரா உதவுகிறது. …

  9. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உடபட்ட மொசூல் நகரில் கிலானி முகாமில் 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை கூறி அவர்களை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கும் நகரங்களில் கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி வருவதாக குர்தீஷ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக ஈராக் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. கிலானி முகாமில் இருத 5 பெண்கள் தங்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை என கூறி இந்த தண்டனை நிறைவேற்றபட்டு உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை அளித்து வருகின்றனர்.கடந்த ஒரு மாத…

    • 0 replies
    • 359 views
  10. அடுத்த மாதம் செப்டம்பர் 15 – 28 ஆகிய தேதிகளுக்குள் மிகப்பெரும் விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவுள்ளதாகவும், இந்த சம்பவத்தால், பூமியில் மிகப்பெரும் சேதம் ஏற்படும் என்று கடந்த சில தினங்களாக இணைய பதிவுகளிலும் பிளாக்குகளிலும் தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக விண்கல் மோதுவதால், அமெரிக்காவின் கடற்கரை பகுதிகள், மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் பெரும் அழிவை ஏற்படும் என்று கூறப்பட்டு வந்ததால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில், விண்கல் பூமியில் மோதுவதாக வெளியாகும் தகவலை நாசா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக நாசா கூறுகையில், இந்த தகவலில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. இணயங்களில் கூறப்பட்டுள்ள தேதிகளில் விண்கல்லோ அல்லது …

    • 0 replies
    • 287 views
  11. இஸ்ரேல் நலன்களுக்காக உளவு பார்த்த டொல்பின் மீன் ஒன்றை காஸா கடற்கரை பகுதியில் கைப்பற்றியதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்ப்பில் ஹமாஸ் அமைப்புடன் நெருக்கமான வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி பிரிட்டனின் டைம்ஸ் என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.உளவு கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் குறித்த டொல்பின் மீனில் கட்டப்பட்டிருந்ததாக ஹமாஸ் கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் உளவுத் துறை (மொசாத்) உளவு பார்க்க பயன்படுத்தும் நீண்ட மிருக இனங்களின் பட்டியலில் டொல்பின் மீன் இனமும் அடங்குவதாக குறித்த பிரிட்டிஷ் பத்திரிக்கை சுட்டிக் காட்டி உள்ளது. இஸ்ரேலுக்காக உளவு பார்த்த சந்தேகத்தில் சவூதி மற்றும் சூடான் ஆகிய நாடுகள் ஒரு சந்தர்ப்பத்தில் வேட்டையாடும் பறவைகள் …

    • 0 replies
    • 311 views
  12. கனடா நாட்டை சேர்ந்த அண்ணன், தங்கை இருவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சந்தித்துக்கொண்ட உருக்கமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஆல்பெர்ட்டா மாகாணத்தை சேர்ந்தவர் டோன்னா ஹார்ட்டி. இவர் அதே மாகாணத்தில் உள்ள எட்மோண்டன் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 1960ம் ஆண்டில் பிறந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் லெஸ் கான் என்ற நபரிடமிருந்து இவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.அதில், அந்த நபர் தன்னுடைய குடும்பத்தின் வரலாறு குறித்து ஆய்வு செய்வதாகவும் அதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு டோன்னாவும் சம்மதித்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு, லெஸ் கானிடமிருந்து மற்றொரு மின்னஞ்சல் வந்துள்ளது. அ…

    • 0 replies
    • 782 views
  13. யுத்தகளத்தில் முன்னணியில் நின்று போர்புரிவதில் ஆண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 381 ஆண்கள் மற்றும் 19 பெண்களுடன், ராணுவ ரேஞ்ஜர்களுக்கான தலைமைப் பயிற்சி ப்ளோரிடா மாகாணத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்த பயிற்சியின் போது, வன விலங்குகள் மற்றும் அதிக நச்சுத் தன்மையுள்ள பாம்புகளை அடித்துக் கொல்வது, பேரிடரில் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காடுகளில் மறைந்திருந்தபடி பல நாட்கள் உயிர் வாழ்வது எப்படி? என்பன உள்ளிட்ட பல்வேறு போர் பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்பட்ட…

    • 0 replies
    • 410 views
  14. கான்பெர்ரா: ஆஸ்திரேலிய நாட்டின், புதிய தென் வேல்ஸ் பகுதியில் டாப் லோடர் இருக்கும் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்டு மூன்று மணி நேரம் தத்தளித்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றியுள்ளனர். இதனை தீயணைப்புத் துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இதுவரை தீயணைப்புத் துறை செய்திராத வகையில், முதல்முறையாக வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட வாலிபரை காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஷிங் மெஷினின் வெளிப்பகுதியை முற்றிலுமாக நீக்கிவிட்டு, பின்னர் அதன் டிரம்மை உடைத்தெடுத்து, அந்த வாலிபரைக் காப்பாற்றியுள்ளனர். வாஷிங் மெஷின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அந்த வாலிபர் காப்பாற்றப்பட்டார். வாஷிங் மெஷினை விட்டு வெளியே வந்ததும்…

  15. கெட்ட வார்த்தையால்..... பாட்டியை காய்ச்சி எடுத்த கிளி. கூண்டோடு.... தூக்கி வந்து, விசாரித்த போலீஸ்! சந்திராபூர்: புனேயில் 85 வயது பாட்டியினை கிளி ஒன்று ஓயாமல் திட்டியதாக வந்த புகாரினை அடுத்து போலீசார் அக்கிளியிடம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. சந்திராபூர் மாவட்டம் ரஜூரா பகுதியை சேர்ந்த 85 வயது பாட்டி ஜனாபாய். இவரது வளர்ப்பு மகன் ஸ்டீபன் சுரேஷ். இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். ஸ்டீபன் சுரேஷ் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு "ஹரியால்" என்று பெயர். அந்த கிளிக்கு நன்கு பேச சொல்லி கொடுத்தார். அந்த கிளியும் அவர் சொல்லி கொடுத்ததை எல்லாம் சரளமாக பேசியது. இந்த நிலையில், ஜனாபாய் அந்த பகுதியை கடந்து செல்லும் போதெல்லாம், கூண்…

  16. அடிச்சு வளர்த்திருக்கணும் இப்ப போட்டு அடித்து என்ன பலன்??

  17. காமராஜருக்கு பிடிக்காத ஒரு விஷயம் சினிமா ஆனால் காமராஜரை வைத்தே ஒரு சினிமா கதையை உருவாக்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர் !அந்த கதை உருவான கதை 1962 ம் ஆண்டு , தேர்தல் நேரம் .. கும்மிடிப் பூண்டி ரயில்வே கேட் அருகே வந்த எம்.ஜி.ஆரின் கார் .... கேட் மூடப்பட்டிருந்ததால் அந்த இடத்தில் நிற்க...அவரது காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது.எட்டிப் பார்த்த எம்.ஜி.ஆர். தனது உதவியாளரிடம் சொல்கிறார் … ” அது காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, போய் பார்த்துட்டு வா… ” போய் பார்த்து விட்டு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் , “ஆமாங்க... காமராஜர் ஐயாதான்...” என்று சொல்ல , உடனே தன் காரை விட்டு இறங்கிப் போன எம்.ஜி.ஆர் , தலை வணங்கி காமராஜருக்கு வணக்கம் சொன்னார்... காமராஜர் பதட்ட…

  18. 54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம் Breaking Now பப்புவா அருகே சென்ற போது ரேடாரில் இருந்து விலகியது Read more at: http://tamil.oneindia.com/

  19. மார்பில்... வேறு பெண்ணின் பெயரை, பச்சை குத்திய கணவர். நஞ்சு அருந்திய மனைவி. கிருஷ்ணகிரி: மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கிருஷ்ணகிரி போலீசார் கணவரைக் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி நகரிலுள்ள மேல் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(26). இவரது மனைவி சத்யா (22). இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் சதீஷ் தனது மார்பில் ரூபா என்ற பெயரை பச்சைக் குத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா, ரூபா யாருடைய பெயர் என விசாரித்துள்ளார். ஆனால், இதற்கு சதீஷ் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சத்யா, வீட்டில் இருந்த விஷ மருந்தைத் தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி…

  20. உலகின் உயரமான உணவு விடுதி துபாய், உலகின் மிகப் பெரிய வணிக மையம். ஐரோப்பிய நாடுகளும்கூட வணிகத் தொடர்புகளுக்காக துபாயை நம்பியுள்ளன. துபாயின் மற்றுமோர் சிறப்பு வானுயர் கட்டிடங்கள். அந்தப் பட்டியலில் இணையவுள்ள இன்னுமோர் புதிய கட்டிடம் மேடன் டவர். துபாயில் 2009-ம் ஆண்டு கட்டப்பட்ட புர்ஜி கலிபா கட்டிடம் இதுவரை அந்நகருக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் உயரம் 829.8 மீட்டர். உலகின் மிக உயரமான கட்டிடம் இது. மேடான் ஒன் என்னும் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் 711 மீட்டர் உயரம் அளவு கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டிடத்துக்குள் 350 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று உள்ளது. இது தவிர 900 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் இந்தக் கட்டிடத்தி…

  21. பார்த்த நொடியில் பிரமிப்பை ஏற்படுத்தும் "பாங்காக்" அரண்மனை (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 08:36.26 மு.ப GMT ] ’ப்ரா போரம் மஹா ரட்ச வாங்’ என்று ’தாய்’ மொழியில் அழைக்கப்படும் ஒரு பெரிய அரண்மனைதான், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அதன் அடையாளமாகவும் இதயமாகவும் திகழ்கிறது.இது போன்ற பெரிய அரண்மனைகள், பல நாடுகளில் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் பாங்காக் அரண்மனையின் தனிச்சிறப்பே அதன் கட்டடக்கலை நுட்பம்தான். ஆயிரம் அரண்மனைகளை நாம் பார்த்திருந்தாலும் பாங்காக் அரண்மனையை பார்க்கையில் வியக்கவே செய்வோம். பாங்காக் செல்பவர்கள் அரண்மனையை தவிர்த்து, அங்கு எத்தனை இடங்களை சுற்றிப் பார்த்தாலும் முழுமை பெறாது. இந்த அரண்மனை சோவா ப்ரேயா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த பெரி…

  22. மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை கோட்டா தப்பியோட்டம் August 14, 20151:05 pm நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், முன்னாள் பாதூகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல தயாராக இருப்பதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எவன்கார்ட் ஆயுத விற்பனைத் தொடர்பில் முன்னாள் பாதூகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த தடையினை காலி நீதிமன்றம் நேற்று ஒரு மாதகாலத்திற்கு நீக்கியுள்ள நிலையில் அவர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோல்வி ஊர்ஜிதமாகியுள்ளதுடன், மஹிந்தவிற்கு பிரதமர் பத…

    • 0 replies
    • 660 views
  23. சீன வெடி விபத்தில் 50 பேர் பலி…700 பேர் படுகாயம்: அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 06:26.41 மு.ப GMT ] சீன ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளதுடன் 700க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனா நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று மாலை டியாஜின் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் இரண்டு பயங்கர வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 50 பேர் பலியாகி இருப்பதுடன் 700க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த செய்தி நிறுவனம் அச்சம…

    • 0 replies
    • 354 views
  24. கறுப்பு பந்துகளாக காட்சியளித்த ஏரி: தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் கலிபோர்னியா (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 01:24.26 பி.ப GMT ] லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சில்மர் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி வருவதை தடுக்கும் பொருட்டு 9.6 கோடி கறுப்பு பிளாஸ்டிக் பந்துகள் நீர்த்தேக்கம் முழுவதும் போடப்பட்டுள்ளன.இதன் மூலம் தண்ணீரை அழுக்கு, ரசாயனம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதோடு, நீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 1135 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியும். மேலும், சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் இந்த பந்துகள் தடுத்து விடுகின்றன. இந்த நீர்த்தேக்கத்தில் த…

    • 0 replies
    • 349 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.