Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பணிவுக்கு வேலை கொடு . Tuesday, 26 February, 2008 12:05 PM . பெய்ஜிங்,பிப்.26: சுயநலம் மிக்க பயணிகள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக சீனாவில் மாபெரும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. . இதனை முன்னிட்டு பார்வை யாளர்களுக்கு இணக்கமான சூழ் நிலையை நாடு முழுவதும் ஏற்படுத் துவதில் சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போட்டியை காண வரும் பார்வையாளர்களிடம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பலவிதங்களில் அரசு வலியுறுத்தி வருகிறது. பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் வரிசையாக காத்திருக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. யாரை பா…

  2. Started by nunavilan,

    சாக்லேட் கார் ரோம்,பிப்.25: இத்தாலி நாட்டில் ஒரு வருட காலமாக உழைத்து சாக்லேட்டால் ஆன சுவைமிகு காரை உருவாக்கியுள்ளனராம். கார் பந்தய உலகில் பெராரி நட்சத்திர அந்தஸ்து பெற்ற காராக விளங்குகிறது. வேகம் மற்றும் வடிவமைப்புக்கு பெயர் பெற்ற இந்த கார், ரசிகர்களின் மனங்கவர்ந்த காராக திகழ்கிறது. . பெராரி உரிமையாளர்களுக்கான விருந்து நிகழ்ச்சிக்காக சாக்லேட்டா லேயே பெராரி கார் ஒன்று தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு வருட கால முயற்சிக்கு பின்னர் இந்த கார் உருவாக்கப் பட்டுள்ளது. முழுக்க முழுக்க சாக்லேட்டால் ஆன இந்த சுவை மிகு கார் விருந்து நிகழ்ச்சியின்போது ஒரு வார காலம் ரசிகர்களின் பார்வைக்கு விருந்து படைக்க உள்ளது. அதன்பிறகு இந்த கார் அவர்களின் நாவிற்…

  3. இதற்கும் லாட்டரி . மரானோ, பிப். 22: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் லாட்டரிச் சீட்டை வாங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இத்தாலியிலோ வித்தியாசமாக கல்லறையில் இடம் பிடிப்பதற்காக லாட்டரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா

  4. தாலி கட்ட சொன்னதால் தப்பியோடிய காதலர்கள்....இந்த சம்பவம் நேற்று uச்சிபிள்ளையார் கோவில் பகுதியில் நடந்துள்ளது...மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வந்த காதலர்களிடம் இந்து முன்னனியினர் தாலியை கொடுத்து கட்ட வற்புருத்தியதால் கோயிலுக்கு வந்த காதலர்கள் தலைதெரிக்க தப்பியோடினர். உண்மையான காதல்கள் என்றால் தாலியை கட்டிக்கொள்ளுங்கள் சாமிகும்பிடபோறோம் என்று கோயில் புனிதத்தைகெடுக்கமால் ஒடிவிடுங்க்ள என்று எச்சரித்தனர் இந்து முன்னயினரின் காவல் தொடர்ததால் பலயோடிகள் ஏமாறறம் அடைந்து திரும்பி சென்றன. இதேவேளை தன்னுடைய மனைவியை தேடி கோவிலுக்குள் பக்கத்து வீட்டு பெண்ணுடன் சென்ற சின்னப்புவிற்கும் இதேநிலைமை ஏற்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.....

    • 17 replies
    • 2.7k views
  5. பெண்ணுக்கு 4 கிட்னி-2ஐ தானம் செய்கிறார்! திங்கள்கிழமை, பிப்ரவரி 18, 2008 லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. அதில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லாலா மூன். 18 வயதாகும் இவருக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. நான்குமே நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்ய அவர் முன்வந்துள்ளார். இதுகுறித்து லாரா மூன் கூறுகையில், எனக்கு கூடுதலாக இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றை தானம் செய்ய முன்வந்துள்ளேன். இதன் மூலம் இரண்டு பேருக்கு உதவ முடியும் என்றார் அவர். அவருக்கு ஒரு ஜோடி சிறுநீரகம் 14 செமீ அளவிலும், இன்னொரு ஜோடி 9 செமீ அளவிலு…

  6. நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியான ஈஸ்வரி மாயா சினால், அநாட்டிலேயே மிகவும் ஒல்லியான மற்றும் குள்ளமான பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார். அவரைப் பார்க்க தினசரி பெரும் கூட்டம் கூடுகிறதாம். நேபாள நாட்டின் டாங் மாவட்டத்தில் உள்ள சைலை கிராமத்தில் கடந்த 1991ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர் ஈஸ்வரி மாயா. இவருக்கு தற்போது 16 வயதாகிறது. இவரது உயரம் 28 இன்ச்சுகள்தான். எடையோ வெறும் 6 கிலோதான். நேபாளத்திலேயே இவர் தான் மிகவும் குள்ளமான மற்றும் ஒல்லியான பெண். இவர் குறித்த தகவல் நேபாளத்தில் வெகு வேகமாக பரவவே பிரபலமாகி விட்டார் ஈஸ்வரி. தற்போது மேற்கு நேபாளத்தில் உள்ள நேபாள்கஞ்ச் என்ற இடத்தில் தேசிய வர்த்த திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் ஈஸ்வரி ஒரு காட்சிப் பொருள் போல வை…

    • 5 replies
    • 1.6k views
  7. மதுபானத்தை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் , உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்; சர்வதேச மருத்துவ நிபுணர்கள் , இப்படி ஒரு திகில் தகவலை வெளியிட்டுள்ளனர். பிரிட்டீஷ் மருத்துவ புத்தகம் வெளியிட்ட இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபானம் குடிப்பதை விட, இனிப்பு அதிகமாக உள்ள குளிர்பானம் தான் உடலுக்கு அதிக பாதிப்பை தருகிறது. அதிக இனிப்பு உள்ள குளிர்பானம், ஜூஸ் குடிப்பவர்களுக்கு , கீல்வாத நோய் அதிகமாக ஏற்படுகிறது. மதுபானத்தை விட, குளிர்பானத்தில் தான், ‘ப்ரக்டோஸ்’ ரசாயனம் அதிகமாக உள்ளது; கீல்வாத நோய் வர இது தான் காரணம். இந்த நோய் ஏற்பட, மற்றவர்களை விட, குளிர்பானம் குடிப்போருக்கு இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு மாதத்துக்கு இரண்டு பாட்டில் குளிர்பானம் குடிப்…

  8. காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காதலர்களுக்கு தாலிக் கயிறு வழங்கும் நூதனப் போராட்டத்தை இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ரவி பாலன் கூறுகையில், காதலர் தினம் நமது நாட்டு கலாச்சாரம் அல்ல. மாறாக, நமது நாட்டுக் கலாச்சாரத்தை சீரழிக்க வந்த கொண்டாட்டம் இது. காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று, காதலர்களிடம் தாலிக் கயிற்ரை அன்பளிப்பாக வழங்கி, கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்தவுள்ளோம். இதற்காக 500 மஞ்சள் கயிறுகளை வாங்கி வைத்துள்ளோம். காதலர் தின கொண்டாட்ட தடுப்புக் கமிட்டிகளையும் நாங்கள் அமைத்துள்ளோம். பொது இடகளில் கா…

  9. 155 மேலாடைகளை அணிந்து உலக சாதனை செய்த ஒருவர்--- காணொலியில் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  10. திருவனந்தபுரம்: கேரளாவில் 88 வயது மூதாட்டி, சிதையை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ளது வெஞ்சரமூடு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் கோமதி அம்மா. 88 வயதாகும் அவருக்கு புற்று நோய் இருந்து வந்தது. இதனால் பெரும் அவதிப்பட்டு வந்தார் கோமதி அம்மா. இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டுக்கு அருகே மரக் கட்டைகளை அடுக்கி வைத்து அதில் தீ மூட்டினார். பின்னர் அதில் குதித்தார். சிறிது நேரத்திலேயே கோமதி அம்மாள் தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார். அந்த சமயத்தில் கோமதி அம்மாவின் பேரன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் தீ எரிவதைப் பார்த்து விரைந்து வந்தனர். அப்போது கோமதி அம்மாளின் உடல் கர…

  11. Last witness remembers Hitler's suicide Guy Jackson | Berlin Rochus Misch still remembers the sight as if it were yesterday: 60 years ago on Saturday he looked through a doorway and saw Adolf Hitler had committed suicide. Misch (88) is the only person still alive today to have seen the Nazi leader and his wife Eva Braun dead in their bunker deep under the shattered city of Berlin. "Hitler was sitting at the table, slumped forward, and Eva Braun was lying next to him. I saw that with my own eyes," Misch told French news agency AFP on Thursday from his home in the German capital. "But we had been expecting it. It didn't come out of the blue. …

    • 0 replies
    • 1.5k views
  12. சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயமானார். அவரை வாலிபர் கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கரிவலம்வந்தநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா. இவரது மகள் அய்யம்மாள். முறம்பு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே மில்லில் வேலை பார்த்த அருவன்குளத்தை சேர்ந்த குருசாமி சிவகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் அய்யமாளுக்கு பெற்றொர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தனர். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அய்யம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து சண்முகையா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார்…

    • 4 replies
    • 1.6k views
  13. தந்தையை கொன்ற மகள்.தாயை காயப்படுத்தினார். நேற்று முன்தினம் இரவு மிச்சம் பகுதியில் தனது தந்தையை மரக்கட்டை விளையாட்டு கயிறு வேறு பொருட்களால் தாக்கிவிட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் மகள். 14 வயது நிரம்பிய இவரின் இந்த செயலால் இந்த கிரமமும் அந்த நாட்டு மக்களும் அதிர்வில் உறைந்திருக்கின்றனர். இத்துடன் அவர் வெறி அடங்கவில்லை தனது தாயரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதையறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து இறந்த தந்தையின் உடலையும் தாயரையும் மருத்துமனையில் சேர்த்தனர் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயார் தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். மகளை காவல் துறையினர் மேலதி…

  14. சென்னை-எச்சில் துப்பினால் ரூ100 அபராதம்! வியாழக்கிழமை, ஜனவரி 31, 2008 சென்னை: சென்னையில் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ, குப்பையை வீசினாலோ அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. வீடுகளின் வெளிப் பகுதிகளை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தெடார்பான தீர்மானம் இன்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரோட்டில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், பொதுக் குழாயில் நின்று குளித்தல், நடுரோட்டில் குளியல் ப…

  15. சென்னை: திருமணம் முடிந்த மூன்றே மணி நேரத்தில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திருமண வீடு பெரும் சோகத்தில் மூழ்கியது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவர் போர்ட் கார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக உள்ளார். இவருக்கும் ரேணுகா (26) என்பவருக்கும் நேற்று திருப்பதியில் திருமணம் நடந்தது. அங்குள்ள அகோபில மடத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 7 மணிக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னர் மகேஸ்வரும், ரேணுகாவும், தம்பதி சமேதாரக திருப்பதி கோவிலில் சென்று வழிபட்டனர். அதன் பின்னர் இருவரும் உறவினர்களுடன் வெளியே வந்தனர். அப்போது வராகசாமி கோவில் அருகே வந்தபோது திடீரென மகேஸ்வரன் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அனைவர…

  16. பெரும்போர் மூளும் அபாயம்! சிங்கள மக்கள் நடுவில் அதிர்ச்சியும் அச்சமும்! அடுத்த போர் சிங்களப் பகுதியிலேயே நடக்கும்! கடந்த ஐந்தாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த போர் நிறுத்த உடன்பாட்டினை தன்னிச்சையாக சிங்கள அரசு நீக்கிக்கொண்டுள்ளது. இதற்கு உலக அரங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஐய்.நா. பேரவையின் பொதுச் செயலாளரும்-அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மீண்டும் பெரும் போர் மூண்டெழும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. விடுதலைப்புலிகள் இறுதிக் கட்டப்போருக்குத் தயாராகி வருகின்றனர். சிங்கள வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செ…

  17. பெண் சாமியின் ஆறு கொலை... போலிச் சாமியார்களில் ஆணும் பெண்ணுமாக பக்த கோடிகளுக்கு பட்டை நாமம் சாத்திய பலரை நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். காம களியாட்டம் தாண்டி கொலை வரை போன சாமியார்களும் புதுசில்லை. ஆனால் பெங்களுரு போலீசின் பிடியில் இப்போது இருக்கிற மல்லிக சாமியாரின் கொள்ளை கொலை பிரதாபங்கள் முதுகெலும்பை உறையவைக்கும் ரகம் அதை படிப்படியாக பார்ப்போம். பெங்களுருக்கு அருகே உள்ள படிக்கட்டே என்ற ஊரைச் சேர்ந்த கனுமாப்பா என்பவரின் மனைவி மல்லிக. இவர்களிற்கு இரண்டு மகள்கள். ஒரு மகன் படிக்கட்டேவில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து வாரந்தோறும் ஏலச் சீட்டு நடத்திவந்தார் மல்லிகா. ஒரு கட்டத்தில் ஏலத்தில் சீட்டெடுத்தவர்கள் பணம் கட்டாமல் போக..மல்லிக தலையில் அத்தனை சும…

  18. நாட்டு நடப்பு Jan 27 08 ஒளி வடிவில்!

  19. அடியாள் ஏவி கணவனை கொன்ற மனைவி...? அற்ப சுகத்தக்கு ஆசைபட்டு கட்டிய கணவனையே எமோலோகத்திற்கு அனுப்பும் செய்திகளில் லேட்டஸ்..கரூ சுபாசினி. கரூர் ரெங்கசாமி நகரைச் சேர்ந்தவர் தனசேகரன் . இவர் மனைவிதான் சுபாசினி . இந்தத் தம்பதிக்கு கௌதம் நர்மதா என்ற இரு குழந்தைகள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த தனசேகரன். டிசம்பர் 30 ம் தேதி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலரால் கத்தியால் குத்தி கொல்லப் பட்டார். முக மூடி கொள்ளையர்கள் தன்னையும் தன் பிள்ளைகளையும் கட்டிப் போட்டு விட்டு தன சேகரனை கொலை செய்துவிட்டு 20 பவுன் நகையையும் 10 அயிரம் ரூபாய பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு ஓடி விட்டதாக சுபாசின் காவல்துறையிடம் புகார் கொடுத்தார் . புகாரை வாங்கிக் கொண்டு…

  20. கொலை வெறி காமூகன்..! காம கொடுரனாக அலையும் மிருகம் பட நாயகனைப் போல நிஜ கொடூரன் ஒருவன் சேலம் மாவட்ட சங்கரி மஞ்சக் கல்பட்டியைப் பதற வைத்திருக்கின்றான். தன் மிருக பசியைத் தணிக்க சரஸ்வதி என்ற பெண்ணை மீண்டும் மீண்டும் பலாத்காரப்படுத்தி கொடூரமாகக் கொலையும் செய்துவிட்ட அந்த மனித மிருகத்தின் பெயர் காளியப்பன். சுரஸ்வதியின் தாய் பழனியம்மாளை சந்திப்தபோது என் மவ நெத்துக் கனவுல வந்த கதறி அழறா என்ற ஏதோ சொல்ல ஆரம்பித்த அவர் வேறெதும் பேசமுடியாமல் நெஞ்சடைத்து தடுமாற மூத்த மகன் உதயகுமார் நடந்ததை சொன்னார் . சுரஸ்வதியை பட்டறையில் வேலைபாக்கிற தங்கவேலக்கு கட்டிக் கொடுத்தோம் . ஆரம்புத்துல நல்லாத்தான் இருந்தாங்க. அப்புறமா என் தங்கச்சியை காசு கேட்டு கொடுமைப் படுத்தியிருக்கான் . ஓ…

  21. சிறிலங்கா அரசு கூறும் புலிகளின் உயிரிழப்புத் தொகை குடாநாட்டு மக்கள் தொகையின் 2 மடங்கு: "சண்டே ரைம்ஸ்" கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: போரில் "உண்மை தான்" முதலில் மரணத்தை தழுவுவது உண்டு. கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்ப…

  22. டுபாயில் இலங்கை பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் 1/24/2008 3:05:42 PM - இலங்கை பெண்ணொருவர் டுபாய் விமான நிலைய பயணிகள் தங்குமிட அறையில் தற்கொலை செய்துக்கொண்டமை தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பைச் சேர்ந்த கலா சங்கரப்பிள்ளை என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு திரும்புதவதற்காக டுபாய் விமான நிலையத்திற்கு வந்த இவர், அங்குள்ள பயணிகள் தங்குமிட விடுதியில் தங்கியிருந்தபோதே தற்கொலை செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  23. சண் ரிவி இலவசமாக பார்க்க வேண்டுமா? இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் ... www.techsatish.com

    • 17 replies
    • 4.1k views
  24. நாமக்கல் அருகே காதலிக்க மறுத்த தங்கை மீது ஆசிட் வீசிய நவீன அண்ணனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஷீலா கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் ஷீலாவுக்கு அண்ணன் முறை உறவினர் ஆவார். தங்கை முறை உள்ள ஷீலாவை ஆறுமுகம் ஷீலாவை காதலிக்க தொடங்கினார். ஷீலா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்வது என ரகளை செய்துள்ளார். ஆனால் ஷீலா இதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் திடீரென்று ஷீலாவிடம் தனது காதலை ஆறுமுகம் வெளிப்படுத்தியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷீலா ஆறுமுகத்தின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், ஷீலா வீட்ட…

  25. ஏர்போர்ட்டில் அரிய வகை ஆந்தை .Wednesday, 23 January, 2008 11:02 AM . சென்னை, ஜன.23: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வெளிநாட்டு ராட்சத ஆந்தை ஒன்று பிடிப்பட்டது. பின்னர் அந்த ஆந்தை பிராணிகள் நல அமைப்பான புளூகிராசிடம் ஒப்படைக்கப்பட்டது. . மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று காலை அரிய வகை ராட்சத ஆந்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இதனைக்கண்ட விமானப் பயணிகள் அச்சமடைந்தனர். கார்களுக்கு இடையே அங்கும் இங்கும் திரிந்தபடி இருந்த அந்த ஆந்தையை கார் பார்க்கிங் ஊழியர்கள் பிடிக்க முயன்றும் அது அவர்களிடம் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த நாய் ஒன்று அந்த ஆந்தையை துரத்தியது. இதனால் வேகமாக ஓடிய அந்த ஆந்தை கார் பார்க்கிங் ஊழியர்களின் அறை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.