பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! January 4, 2025 — சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா — (அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் உள்ள பாரதிபள்ளி தயாரித்து வழங்கிய, “சிலப்பதிகாரம்” நாடக ஆற்றுகையின் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் கடந்த 2024 டிசெம்பர் 6 ஆம், 8ஆம் திகதிகளில் விக்டோரியாவில், டண்டினோங்க் நகரத்தில் அமைந்துள்ள, ட்றம்ப் எனப்படும் அழகிய உள்ளரங்கில்நடைபெற்றன. இந்த நாடக ஆற்றுகை பற்றிய எனது பார்வையைப் பதிவுசெய்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.) இள…
-
- 0 replies
- 367 views
-
-
தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils! / பகுதி / Part 04 [In English & Tamil] தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக சங்க காலத்தில் எழுதப் பட்ட எட்டுத் தொகை / பத்துப் பாட்டுகளை இனி பார்ப்போம். இங்கு பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!ஆனால் அது தான் ஆண்டின் தொடக்கம் என எங்கும் குறிக்கப் படவில்லை. "மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன் இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு .............................. தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோள் குறுமகள் அல்லது மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே" [நற்றிணை 80] தொழுவத்துள்ள அகன்ற தலையை யுடைய கரிய எருமையின் மிக இனிய பால் நிரம்பக் கறந்து கொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகள…
-
- 0 replies
- 483 views
-
-
தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils! / பகுதி / Part 03 [In English & Tamil] "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!''கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக "-புறநானூறு 172[ கி மு 500 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த புறநானுறு ] "உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக;அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த,பாடுவதில் சிறந்த,விறலியர் மாலைகளைச் சூடுக; " அதாவது "உலையை ஏற்றுக;சோற்றை ஆக்குக"என்பது பொதுவாகக் கூறப்பட்ட பொங்கலிடும் முறையாகும். “புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' (சிலப். 5:68-69) எனும் இ…
-
- 0 replies
- 329 views
-
-
"தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils!" / பகுதி / Part 02 [In English & Tamil] சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு "புதியீடு" என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். 'புதியீடு விழா' என்று ஒரு கல் வெட்டுக் குறிப்பதாக அறிந்து உள்ளேன். விவசாயிகள் 'அறுவடையில் ஒரு பங்கை' அரசனுக்கு / கோயிலுக்குக் கொடுக்கும் விழாவாக இருக்கலாம்?. "புதியீடு" என்பது, புதுஇடு என்று பிரிபடும்? புதிய (அறுவடையில்) ஒரு பங்கு என்று கொள்ள முடியும்? உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். பொங்கல் …
-
- 0 replies
- 241 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னரதேவனின் கல்வெட்டு ஒன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கடலூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு சொல்லும் புதிய செய்தி என்ன? கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள எஸ். நரையூர் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முற்றிலும் சிதிலம் அடைந்த சிவன் கோவிலில் சில வாரங்களுக்கு முன்பாக புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி? ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியா…
-
- 1 reply
- 354 views
- 1 follower
-
-
"தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils!" / பகுதி / Part 01 [In English & Tamil] பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் உள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் பொதுவாக தெரியாது. தமிழ் நிலங்களில் கார்த்திகை மாதம் வரை மழை இருக்கும். மார்கழி மாதம் வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. அதனால் தை என்னும் பெயர் இந்த மாதத்திற்கு வந்திருக்கலாம…
-
- 0 replies
- 271 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் தற்காலத்தில் அரசுகள் தங்களுக்குள் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைப் போலவே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவும் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் பற்றி கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்குத் தருகின்றன. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு, இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. கி.பி.1178ஆம் ஆண்டு முதல் கி.பி.1218ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தவராகக் கருதப்படும் சோழ அரசரான மூன்றா…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
"முத்தமிழே என் தாய் மொழியே!" "முத்தமிழே என் தாய் மொழியே முழுமை மொழியாய் என்றும் திளைத்தவளே முழக்கம் இட்டு உன்னை வாழ்த்துகிறேன்!" "கீழடியை கேள் பெருமை சொல்லும் கீர்த்தி கொண்ட வரலாறு கூறும் கீழோர் மேலோர் வேறுபாடு இல்லை கீறல் பானைகள் எழுத்தைக் காட்டுது!" "சுமேரு இலக்கியம் ‘சங்கம்மா” செப்புது ஈனன்னா துதிப்பாடல் சக்தி போற்றுது சிவகளை அகழாய்வு வரலாற்றை திருத்துது சிந்து வெளியை பின்னுக்கு தள்ளுது!" "சங்கத் தமிழ் செம்மொழி ஆகிற்று சத்தம் இல்லாமல் ஈழத்திலும் வாழுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 712 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2024, 03:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தின் தொல்லியல் வரலாற்றில், சிந்து சமவெளி கண்டறியப்பட்டது மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிந்து சமவெளி கண்டறியப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகி இன்றோடு நூறு ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவம் என்ன? கடந்த 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியன்று வெளிவந்த The Illustrated London News இதழின் முகப்புப் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தி, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு குறித்த புரிதலையே மாற்…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
இங்கிலாந்திலிருந்து ஐயா சூரியசேகரம் எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக செய்யும் சேவை. 80-81 வயதிலும் ஓடியாடி வேலை செய்கிறார்.மிகவும் பெருமையாக உள்ளது. முன்பள்ளியின் முக்கியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறார். யாராவது ஆர்வமிருந்தால் 53 நிமிட காணொளியை பாருங்கள்.
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
படக்குறிப்பு, 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் அடுத்த பெரியபட்டினம் மரைக்காயர் நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரூ மொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதையடுத்து தொல்லியல் துறையினர் அதை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அந்த கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், அக்கல்வெட்டு குறித்த…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
பாண்டியர் ஆட்சியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகரின் மனைவி, மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா? படக்குறிப்பு, அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் திருக்கோவில் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2024, 03:12 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரசுகள் உருவான காலத்தில் இருந்தே சிறைச்சாலைகளும் கடும் தண்டனைகளும் இருந்து வருகின்றன. சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் சிறை தண்டனைகள் எந்தக் காரணங்களுக்காக வழங்கப்பட்டன என்பதை பாடல்களும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. பல மத இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்க…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 4 ஆகஸ்ட் 2024, 04:20 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் சோழப் பேரரசர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு விழாவாகவும் அது கொண்டாடப்படுகிறது. ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பெருவுடையார் கோவில் வளாகத்தில் அவரது பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா களை கட்டியுள்ளது. தொல்காப்பியம் மேற்கோளிட்டு காட்டிய தமிழ்நாட்டி…
-
- 1 reply
- 589 views
- 1 follower
-
-
ஆனைக்கோட்டையின் பூர்வீக - தொன்மையான நாகரிகம் எப்போதிருந்து வளர்ந்து வருகிறது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது - ஆனைக்கோட்டையில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகுறித்து - வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் 16 JUL, 2024 | 11:55 AM ஆனைக்கோட்டையின் பூர்வீகதொன்மையான நாகரீகம் எப்போதிலிருந்து வளர்ந்து வருகின்றது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளதாக வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இதுவரை ஆனைக்கோட்டையில் ஏறத்தாள 9 அடிக்கு மேல் 11 கலாச்சார மண்ணடுக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் பூர்வீகக் குடியிருப்பு மைய…
-
- 2 replies
- 547 views
- 1 follower
-
-
"Tamil Slang / கொச்சை வழக்கு சொற்றொடர்" Enna elavu [என்ன எலவு] - Literal meaning What death (ceremony), usually used to describe an unknown and non-understandable situation. Enna Elavo theriyaathu [என்ன எலவோ தெரியாது] means What death, I don’t know. Enna kothari [என்ன கோதாரி] - Meaning same as enna ellavu but true meaning of Kothari unknown. My mom used to say "Kothari" but even she doesnt knew what does it mean? All she knew is that its a bad word. but my Grandma has told me that its kind of disease/கோதாரி’ என்பது கொள்ளை நோயையும் வாந்திபேதியையும் குறிக்கும். மனிதரை நோக்கி இச்சொல் பயன்படுத்தப்பட்டால் அந்த நோயை ஒ…
-
- 0 replies
- 3.1k views
-
-
படக்குறிப்பு, சோழர் ஆட்சியில் மருத்துவமனை செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 08:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள தற்போதைய கால கட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் பல உள்ளன. சாதாரண தலைவலி முதல் இதயம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை மருத்துவத்துறை வெகுவாக முன்னேறிவிட்டது. நகர்ப்புறங்களில் பல மருத்துவமனைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்த…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
-
"பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!" முதற்கண் [முதலில்] தாழ்மை பற்றிய சொல்லின் பொருளை பார்ப்போம். 1] lowliness of mind, humility, பணிவு 2] inferiority of rank ; கீழ்மை 3] poverty, எளிமை ஆகும். ஆகவே தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணிப் படியாகும்..! அதாவது தாழ்மை என்பது ‘பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்’ என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது. இது நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவது என்று பொருள்படாது. ஆணவத்தை அல்லது ‘நான்’ என்கின்ற சிந்தனையை அடக்குவதே என பொருள் கொள்ளலாம். ‘நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டு மெனில்…
-
-
- 2 replies
- 677 views
-
-
படக்குறிப்பு,ஆலத்தூர் கல்வெட்டு கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வணிகத்தில் லாபமே குறிக்கோள் என்றாலும் கூட, அதில் ஈட்டும் செல்வத்தைக் கொண்டு நற்காரியங்கள் பல செய்பவர்கள் உண்டு. அந்த வகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த வணிகர்கள் அல்லது வணிகர்கள் சேர்ந்த குழுக்கள் பல இடங்களில் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை உருவாக்கியிருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. வருமானத்தில் ஒரு பகுதியை அறப்பணிகள் செய்ய தனியே கணக்கு எழுதி, சேமித்து வைக்கும் வழக்கம் அன்றைய தமிழக வணிகர்களிடம் இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சோழர்…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 3 January 31, 2024 | Ezhuna மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை…
-
- 0 replies
- 241 views
-
-
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி கிழமைக்கு ஒன்றாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்ட "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / 82 பகுதி "Origins of Tamils? [Where are Tamil people from?]" / 82 parts மிக நீண்ட ஆய்வுக் கட்டுரையை, உடனடியாக எல்லோருக்கும் தேவைப்படாத விபரங்களைத் தவிர்த்து, உதாரணமாக - சுமேரிய & சிந்து வெளி மக்களின் வாழ்வு முறையின் அல்லது கண்டுபிடிப்புகளின் அல்லது நம்பிக்கைகளின், இலக்கியங்களின் நீண்ட அலசலைத் தவிர்த்து - தமிழ் மற்றும் தமிழருடன் நேரடியாகத் தொடர்புடையனவற்றை மட்டும் அலசி, சுருக்கமாக அண்ணளவாக 32 பகுதிகளாக ஒவ்வொரு செய்வாய்க் கிழமையும் தமிழில் பதியவுள்ளேன். …
-
-
- 44 replies
- 4.1k views
-
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 01 ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழம் வழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழி வழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம். அதே வேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற் கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். அதாவது, பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்…
-
- 29 replies
- 12k views
-
-
"சிந்து சம வெளி மக்களின் கேத்திர கணித அறிவு" சுல்ப சூத்திரத்தில் (Shulba Sutras, 800-200 BC) விவரிக்கப் பட்ட கேத்திர கணித கொள்கைகளே இந்தியா உப கண்டத்தில் கணிதத்தின் ஆரம்பமாக முதலில் [அதிகமாக] கருதப்பட்டது. பலி பீடங்களை அமைப்பதற்கான விதிகளை உரைக்கும் இந்த சுல்ப சூத்திரம், வேதத்தின் [Vedas] ஒரு பிற்சேர்க்கை ஆகும். கணித ரீதியாக மிக முக்கியமான நாலு சுல்ப சூத்திர பகுதிகள் பௌத்தயானா [Baudhayana, 800 BC)], மானவ [Manava, 750 BC], அபஸ்தம்பா [Apastamba, 600 BC], கட்யயன [Katyayana, 200 BC] போன்றவர்களால் தொகுக்கப் பட்டது. இவர்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. இதில் இந்தியாவின் முதல் கணிதக் குறிப்பை வழங்கியவர் பெளத்தயானா ஆகும். 'மூலை வி…
-
- 1 reply
- 474 views
-
-
"ஆருடம் கூறுபவர் யாரோ ? வருடம் தையா? சித்திரையா ?" "கார்த்திகை மழை பொழிந்து ஆர்ப்பரித்து மலை இறங்கி ஊர்வலமாய் வயல் தாண்டி மார்கழியில் குளம் ஆனாள்" "கார்த்திகை தீபம் ஒளிர மார்பினில் அவனை ஏற்றி சேர்ந்து ஒன்றாய் வாழ மார்கழியில் தவம் இருந்தாள்" "தையில் குளநீர் தெளிய தையல் திருமணம் வேண்டி தையில் முன்பனி நீராடி தையல் தன்தவம் முடித்தாள்" "தையோடு மார்கழி சித்திரை தையல் சேர்ந்து கொண்டாட தையில் வழி பிறக்குமென தையல் பொங்கல் பொங்கினாள்" "தை பிறந்தால் வழிபிறக்கும் தைரியமாய் நீ சொல்லுகிறாய் தைத்து புத்தாடை வேறுஅணிகிறாய் தையலே சித்திரைப்பெண்ணே வா" "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே ஊருக்க…
-
- 0 replies
- 165 views
-