Jump to content

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி கிழமைக்கு ஒன்றாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்ட
 
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / 82 பகுதி
"Origins of Tamils? [Where are Tamil people from?]" / 82 parts
மிக நீண்ட ஆய்வுக் கட்டுரையை,
 
உடனடியாக எல்லோருக்கும் தேவைப்படாத விபரங்களைத் தவிர்த்து, உதாரணமாக
 
- சுமேரிய & சிந்து வெளி மக்களின் வாழ்வு முறையின் அல்லது கண்டுபிடிப்புகளின் அல்லது நம்பிக்கைகளின், இலக்கியங்களின் நீண்ட அலசலைத் தவிர்த்து -
 
தமிழ் மற்றும் தமிழருடன் நேரடியாகத் தொடர்புடையனவற்றை மட்டும் அலசி, சுருக்கமாக அண்ணளவாக 32 பகுதிகளாக ஒவ்வொரு செய்வாய்க் கிழமையும் தமிழில் பதியவுள்ளேன். 
 
சமகாலத்தில், இந்தக் கட்டுரை என் முகநூலிலும், வலைத்தளத்திலும் பதிவிடப் படும்.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
13557881_10206809775385732_2158402577440108355_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BQ8j-6e7FpEQ7kNvgFgAJUv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCyJoNfHrcv4MfvrrTAFq5tjA4OTpLW6eDnnPvCohmDMw&oe=6657A884 May be an image of text that says 'Inanna / Kali' 13521893_10206809776865769_3800176147586677136_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=oZ_ggBvrqgoQ7kNvgEZdNIn&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfChFzUwcri8lJKvjNKVCcaFQ_qECcLZO4SUUAuQ5QTC3w&oe=66579C0A
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 01 
 

அண்மை காலத்தில் வெளி வந்த ஆதாரம், தடயம் வரை, தமிழர்களின் வரலாறு, வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துக்கு முன்1000- 500 ஆண்டு அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. அனால், இப்போது தமிழர் / திராவிடர் பண்பாடு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பழைய நாகரிகத்தை சேர்ந்த தொல்லியல் களங்களிலும் [பெருங்கல்லாலான இடங்களும் சின்னங்களும்], இலங்கை புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி அல்லது கதிரவெளி போன்றவைகளுடன் தொடர்புடையது என வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருளியலாளரும் கருதுகிறார்கள். தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமான அரிக்கமேடுவில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டத்தின் துண்டுகள், பொம்மைகள் போன்றவைகள், மிகப் பழைய குடியேற்றப் பகுதியான  இலங்கை, சுன்னாகம் பகுதியில் உள்ள கதிரமலை [கந்தரோடை] பகுதியிலும் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இவைகள் சில கிறிஸ்துக்கு முன் 2000 ஆண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொல் பொருள் சாட்சிகள், இந்தியா இலங்கையில் உள்ள இந்த வரலாற்று இடங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததிற்கு ஆதாரமாக உள்ளது.
 

ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமான வையாக கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும், சுட்ட களி மண்ணினாலான தாழிகளும், தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல தாழிகளும், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொன்பரிப்பு அகழ்வாய்வில் வரலாற்றுக்கு முற்பட்ட அடக்கக் களம் (burial site) ஒன்றையும், பல ஈமத்தாழி [Burial urn for the dead in ancient times] களையும் இங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள் அமைத்தல். இறந்தோரைப் புதைப்பதற்காக தாழிகளை நம் முன்னோர் பயன்படுத்தி உள்ளனர். அத்தாழிகளில் இறந்தோரைப் புதைக்கும் பொழுது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும், விரும்பிய பொருள்களையும், இறந்தோர் உடலுடன் புதைத்த பழைய மரபை அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிய முடிகிறது. கதிரவெளியில், அகழாய்வின் போது கி மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி பி. 2ம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய பல தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்த்திய அகழ் வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது. இங்கு மண் பாண்டங்கள் பல கிடைத் துள்ளன. விற்பனைச் சாலைகள், பண்டகச் சாலைகள் முதலியவை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடியேற்றப் பகுதிகளில் கதிரமலை [கந்தரோடை] முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப் பழைய இடங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது. தற்போது இது சிறிய ஊராக இருப்பினும் பழைய காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. முன்னைய காலத்தில் உக்கிரசிங்கன் என்ற தமிழ் மன்னன் கந்தரோடையை தலை நகரமாக கொண்டு ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகின்றது. இவனுடைய காலப்பகுதியாக கி.பி. 785ம் ஆண்டுப்பகுதி குறிப்பிடப்படுகின்றது. இவன் கலிங்க தேசத்திலிருந்து குடியேறியவன் என்றும், விஜயனுடைய பரம்பரையைச் சேர்ந்தவனென்றும் 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவ மாலையை இயற்றிய மயில்வாகனப் புலவர் வைபவமாலையில் கூறுகிறார். மேலும் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவன் சோழ இளவரசியாகிய மாருதப்புரவல்லி மீது காதல் கொண்டு, மணம்புரிந்தான். இவன் தீவிர சைவனாக விளங்கியுள்ளான் என்பதை இவன் செய்த சைவத் திருப்பணிகள் நிரூபிக்கின்றன. இவ்வூரில் செய்யப் பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பல பண்டைய கால சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இப்பகுதியில் அகழ் வாய்வுகளில் கிடைத்த பொருள்கள் சில கி மு. 2000 ஆண்டை சேர்ந்தவை என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
 

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந் துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்து 169 மனித தலையோடு ,எலும்புக்கூடு, உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள் கொண்ட  சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் தோண்டியெடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அரிசி உமியும் தானியமும் கருகிய [தீய்ந்த] அரிசியும், வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கோடரி போன்ற கருவியும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என உறுதி கூறுகிறது. கல்வெட்டெழுத்துக்களையும் கலைத் தொழில் வேலைப்பாடமைந்த பொருள்களையும் ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள், தமிழர் நாகரிகம் குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்துள்ளார்கள். 
 

[மேலே உள்ள படத்தில்,ஆதிச்சநல்லூரில் வரலாற்றுக்கு முற்பட்ட இரும்பு காலத்திற்கு உரிய  அடக்கக் களத்தில், தாழி ஒன்று வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துடனும், மனித எலும்புக்கூடும்  மற்றும் சிற்றுருவ பாத்திரங்களும் காணப்படுகின்றன. இவை கி மு.20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள் ஆகும். மேலுள்ள படத்தில் தாழியில் உள்ள எழுத்துக்கள் வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துகளாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை "கறிஅரவனாதன்" என்று படித்து நச்சுடைய பாம்பை அனிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன். ஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை "கதிஅரவனாதன்" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார்]
 
 
தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகளின் மூலம் தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்பது அடுத்தடுத்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மெய்ப்பிக்கப்பட்டுள்ள காலத்தை விடவும் தமிழர்கள் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பது இன்று தெரிய வருகிறது. குறிப்பாக கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் பல செய்திகளை வெளியே இன்று கொண்டு வருகின்றன. உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரிய வந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
 
 
கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள், எழுத்துப் பொறிப்புகள், பொருட்கள் ஆகியவை அங்கு ஒரு நகர நாகரிகம்  இருந்ததை உறுதி செய்தன. பொதுவாக கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டுவாக்கில் இருந்த நகரமயமாக்கம் (Urban Civilisation) தமிழ் நாட்டில் இல்லை என்பது தான் பொதுவான கருதுகோளாக இருந்தது வந்தது. அதேபோல, பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் அங்கிருந்தே தமிழ் நாட்டிற்கு அந்த எழுத்துகள் வந்தன என்றும் கருதப்பட்டது. ஆனால், கீழடியில் நடந்த ஆய்வுகளின் முடிவுகள், நகரமயமாக்கம் குறித்த கருத்துகளை மாற்றின. அந்த காலகட்டத்திலேயே பிராமி எனப்படும் தமிழி பரவலாக எழுதப்பட்டதை, அங்கு கிடைத்த பானை ஓடுகள் உறுதிப்படுத்தின. உதாரணமாக, சிவகளை அகழாய்வில் விளிம்புடன் கூடிய மண் கிண்ணம் ஒன்றில் கிடைத்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆக்ஸிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ரோமெட்ரி [Accelerator mass spectrometry] முறையில் பகுப்பாய்வு செய்தபோது, அந்த பானை ஓடுகள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்திருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
 
 
கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான செங்கல் கட்டுமானங்களும் தமிழி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், கீறல்கள் எழுதப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை தவிர, மணிகள், கற்கள், தாயக்கட்டைகள், கங்கைச் சமவெளிக்கே உரியவை என்று கருதப்பட்ட கறுப்பு நிறப் பானைகள், சீப்புகள் போன்றவையையும் கிடைத்துள்ளன.
 
இங்கு கிடைத்துள்ள கட்டுமானத்தையும் தொல்பொருட்களையும் வைத்துப் பார்க்கும் போது, கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் இந்தியாவுடனும் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கக்கூடும் என்றும் தெரிய வருவதாக மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
 
மேலும் இந்த அகழாய்வில் சந்திரன், சூரியன் மற்றும் வடிவியல் குறியீடுகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கிடைத்தது. இந்தக் காசை, குப்தர் காலத்தைச் சேர்ந்த ஹர்தேக்கர் வரிசை காசுகளுடன் ஆய்வு செய்த நாணயவியல் ஆய்வாளர் சுஷ்மிதா, இதனை மௌரியர் காலத்துக்கு முற்பட்ட காசு எனக் குறிப்பிட்டிருப்பதாக மாநிலத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆகவே, கீழடி பகுதிக்கும் வட இந்தியப் பகுதிகளுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருப்பதை இந்தக் காசு உறுதி செய்திருப்பதாகக் கருதலாம்.
 
அதேபோல, கீழடியிலும் கொற்கையிலும் கிடைத்த கறுப்புநிற பானை ஓடுகளை கவனமாக ஆராய்ந்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரியும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திர என் திவாரியும், கங்கைச் சமவெளிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்ததை உறுதி செய்வதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
 
கீழடியில் கிடைத்த கரிமப் பொருட்களின் மீது ஏற்கனவே செய்யப்பட்ட கரிமப் பகுப்பாய்வின்படி, அதன் காலம் கி.மு. 585 என தெரிய வந்துள்ளதாகவும் தற்போதைய அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மீது செய்யப்பட்ட மேலும் இரண்டு கரிம ஆய்வுகளும் இந்தக் காலக் கணிப்பை உறுதிப்படுத்துவதாகவும் தொல்லியல் துறை கூறுகிறது.
 
மேல் கூறியவற்றால் நாம் அறிவது தமிழ் திராவிடர்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும்  ஏறத்தாழ 3000 - 4000 ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பது. ஆனால் இது தவறு. தமிழர்கள் இதிலும் கூடிய காலம் வாழ்ந்து உள்ளார்கள் என்பதே உண்மை. ஆகவே இதற்கு முன்பு எங்கு வாழ்ந்தார்கள் என்பதை நாம் காண வேண்டும்.
 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]



பகுதி 02 தொடரும்  


பி கு : 
 
படம் 01 : [ஆதிச்சநல்லூர் அகழாய்வில்  இரும்பு கலன்கள்]
 
படம் 02 : விளிம்புடன் கூடிய மண் கிண்ணம், சிவகளை அகழாய்வு
 
படம் 03 : அடுக்குகளுடன் கூடிய துளையிடப்பட்ட குழாய்கள், கொற்கை
 
படம் 04 :  Annaikottai (variant spelling Annaicoddai) seal inscription
 
படம் 05 : Inscribed potsherd from archaeological excavation at Tissamaharama, Hambantota District, Sri Lanka: From left to right the first letter is Li, second one is ra and the third one is ti. From right to left they are read as tiraLi. The fourth and fifth ones are symbols or graffiti marks. The sixth letter is mu and the seventh one is Ri. The last two are read from left to right as muRi. A little away is found a vertical line that perhaps marks the end of the legend. Thus evidences the presence of ordinary Tamil speaking people in the population of that region as early as at 2200 years before present, says archaeologist and epigraphist, Ponnampalam Ragupathy. The identification of the script of the legend as Tamil Brāhmi and the decipherment getting the reading Thira’li Mu’ri in Tamil by veteran epigraphist Iravatham Mahadevan in an article in The Hindu.
 
May be an image of 2 people May be an image of brass No photo description available. May be an image of text that says 'The Jaffna unilingual biscript Metal Seal: tivuko IN TAMIL DYY a 犬音學 + 人 አ tivu-island island tivu ti- ti i-VU-KÔ ti-VU-KOò- VU -KÔ ko king' May be an image of text May be an image of text that says 'Keeladi (A Sangam Age Habitation Site in in the Vaigai River Valley) DISTRICT SIVAGANGA, TAMIL NADU (2014 (2014-2015&2015-2016) 2015& 2015 2016) प्र्पवोहिय्यागुना κ. K.AmarnathRamakrishna Amarnath Ramakrishna SuperintendingArchacologist Superintending Archacologist Archacological Survey ArehacologicalSurveyofIndia of India Temple TempleSurveyProject(SR) Survey Project (SR) Chennai (January 2023' May be an image of text that says 'TISSAMAHARAMA INDUS A 206t SRI LANKA 56 TAMIL NADU' May be a graphic of ‎text that says '‎Indus scripts אשוך หำปบร 6 Chembiyankandiyur Chembi Kilvalai Anaikotai‎'‎ 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 02 

இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப் பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட - கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும், ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை அல்லது வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], திராவிடர்கள் இந்தியா முழுவதும் அதாவது வட கிழக்கு பகுதி உட்பட எல்லா இடங்களிலும் பரந்து வாழ்ந்தார்கள் என்று கூறுகிறது. சில பன்மொழி அறிஞர்கள், இந்திய - ஆரிய இனத்தவர்களின் இடப்பெயர்ச்சிக்கு முன்பு, திராவிடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே பரந்து இருந்தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள்.

திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப் பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்து விட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்கு திராவிடச் சொற்களுடன் [அல்லது பழைய ஆரம்பகால தமிழ் சொற்களுடன்] பேசப்படக் கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. உலகெங்கும் 85 திராவிட மொழிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுவாக இவர்கள் கரு நிறத் தோல் கொண்டவர்கள்.

நிலம், தீ, நீர், காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. மயக்கமான நிலை நாளடைவில் மங்கத் தொடங்கியது. சிறிது சிறிதாய் உலகத்தின் வெளிப்புறத் தோற்றம் பரிமாணங்கள் பெற்றுத் தெளிவு பெறத் துவங்கியது என்கிறார் தொல்காப்பியர் 3000-2500 ஆண்டுகளுக்கு முன்


 
"நிலம் தீ நீர்வளி விசும் பொடைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லோடு தழாஅல் வேண்டும்"

 

இப்படி படிப்படியாக உருப் பெற்ற உலகில், எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் 'ஹொமினினே' [Homininae] என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக் கொண்டே இருந்தது. மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, அது, இன்று இருக்கும் மனித இனமான 'ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ். [homo sapiens sapiens ,Actually, the root "homo" means "man" and the root "sapien" means "being." So, human being.Modern humans are the subspecies Homo sapiens sapiens] என்கிற இனமாக உருவானது என்கிறார்கள் அறிஞர்கள். அத்துடன் இந்த மனித இனம் தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் முதல் முதல் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். இந்த மனித இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்த வெளிகளை நோக்கி பயணித்தன. இந்த 'ஹோமோ சேப்பியன்' இனத்தவர் தான் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்படுகிறது. "ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே" [ஓரிடத் தோற்றக் கருதுகோள்] என்ற இந்த மாதிரி மிகவும் ஏற்றுக்கொள்ளப் பட்ட  விளக்கம் ஆகும். வெவ்வேறு  நிலவியற் பகுதிகளில் வாழும் மக்களில் இப்ப காணப்படும் வெவ்வேறு உருவ அமைப்பு, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கடைசி 60 ஆயிரம் வருடங்களாக படிப்படியாகத் தோற்றுவிக்கப் பட்டதாக நம்பப்படுகிறது [பரிணாமம் அடைந்தது என].

"பல்பிராந்திய"மாதிரி [பல்லிடத் தோற்றக் கருதுகோள்] இரண்டாவது ஆகும். இது மனிதர்களின் மூதையார்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறி, பரவி முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்கா, ஆசிய, ஐரோப்பியா பிராந்திய குழுக்களாக தோற்றம் அடைந்தார்கள் என்கிறது. எனவே ஆசிய, ஐரோப்பியா நவீன மனிதர்கள் அதன் பின் ஒரே சமயத்தில் அந்தந்த இடங்களில் பரிணாமம் அடைந்ததாக கருதுகிறார்கள். [நவீன மனிதர்களாகக் கூர்ப்படைந்தனர் என] 

இதே மாதிரி, போட்டியிட்டுக் கொண்டு பல கருது கோள்கள், எங்கு, எப்போது தமிழன் அல்லது திராவிடன் தோன்றினான், பின் எவ்வாறு பரவினான் என பலதரப்பட்ட கல்விமான்களால் விளக்கம் கொடுக்கப் படுகின்றன. ஒரே மாதிரியான மொழியும் பண்பாடும் இரு வேறுபட்ட, ஒன்றோடு ஒன்று எந்த தொடர்பும் அற்ற இரு இடங்களில் வளர்ச்சி அடைய முடியாது என்பதால், நாம் ஒரு மாதிரியையே, - "ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே" என்ற உதாரணம் மாதிரி ஒன்றையே - தெரிந்து எடுக்க வேண்டி உள்ளது. ஆகவே தமிழ் மொழியும் அதனுடன் இணைந்த பண்பாடும் தமிழ் நாட்டிலேயே அல்லது தமிழ் நாடு, இலங்கை ஆகியவற்றை ஒருமிக்க கொண்ட ஒரு நிலப்பரபிலோ அல்லது இவையை தவிர்ந்த வேறு ஒரு நிலப்பரப்பில் தோன்றி, வளர்ந்து  4000-5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு. இலங்கைக்கு வந்திருக்கலாம் என கருத இடம் உண்டு. ஆகவே பல அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் படி, பல சாத்தியம் இன்று உண்டு. அவை:

[1] குமரிக் கண்டம் 


[2] சுமேரியா


[3] சிந்து வெளி நாகரிகம்  


[4] ஆஃப்ரிக்கா 

ஆகும். திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் போதாமையால், இது தொடர்பான சர்ச்சைகள் மேலே கூறிய யோசனைகள் படி முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இவர்களுட் சிலர் திராவிடர் மத்திய தரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்று வாதாடுகின்றனர். எப்படியாயினும், ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆஃப்ரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆஃப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத் தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மனித பரிணாமம் என்பது குரங்கு போன்ற மூதாதையர்களிடமிருந்து மக்கள் தோன்றிய மாற்றத்தின் நீண்ட செயல்முறையாகும். இது  ஏறக்குறைய ஆறு மில்லியன் ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும் அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன.

ஆரம்பகால வரையறுத்த மனிதப் பண்புகளில் ஒன்றான இரு கால்களில் நடக்கும் திறன் -- 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மற்ற முக்கியமான மனித குணாதிசயங்களான  -- ஒரு பெரிய மற்றும் சிக்கலான மூளை, கருவிகளை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் திறன் மற்றும் மொழிக்கான திறன் போன்றவை [large and complex brain, the ability to make and use tools, and the capacity for language ] -- சமீபத்தில் உருவாக்கப்பட்டது. பல மேம்பட்ட பண்புகள் -- சிக்கலான குறியீட்டு வெளிப்பாடு, கலை மற்றும் விரிவான கலாச்சார பன்முகத்தன்மை [complex symbolic expression, art, and elaborate cultural diversity] -- முக்கியமாக கடந்த 100,000 ஆண்டுகளில் வெளிப்பட்டன.

மனிதர்கள் முதலில் ஆஃப்ரிக்காவில் உருவாக்கி, மனித பரிணாமத்தின் பெரும்பகுதி அங்கேயே நிகழ்ந்தது உள்ளது. 6 முதல் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரம்பகால மனிதர்களின் புதைபடிவங்கள் முற்றிலும் இன்று ஆஃப்ரிக்காவில் இருந்து தான் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெரும்பாலான விஞ்ஞானிகள் தற்போது 15 முதல் 20 வெவ்வேறு வகையான ஆரம்பகால மனிதர்களை அடையாளம் காண்கின்றனர். எவ்வாறாயினும், இந்த இனங்கள் எவ்வாறு தொடர்புடையவை அல்லது எவை வெறுமனே இறந்துவிட்டன என்பது பற்றி விஞ்ஞானிகள் அனைவருக்கும் இடையில் ஒரு உடன்படவில்லை. பல ஆரம்பகால மனித இனங்கள் -- நிச்சயமாக அவற்றில் பெரும்பாலானவை - வாழும் சந்ததியினரை விட்டுவிடவில்லை. ஆரம்பகால மனிதர்களின் குறிப்பிட்ட இனங்களை எவ்வாறு அடையாளம் கண்டு வகைப்படுத்துவது மற்றும் ஒவ்வொரு உயிரினத்தின் பரிணாமம் மற்றும் அழிவை எந்த காரணிகள் பாதித்தன என்பது பற்றியும் விஞ்ஞானிகள் இன்னும் விவாதிக்கின்றனர்.

ஆரம்பகால மனிதர்கள் முதன்முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு 2 மில்லியன் முதல் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தனர். 1.5 மில்லியன் மற்றும் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ஐரோப்பாவிற்குள் நுழைந்தனர். என்றாலும் நவீன மனிதர்களின் இனங்கள் மிகவும் பிற்காலத்தில் தான் உலகின் பல பகுதிகளிலும் குடியேறின. உதாரணமாக, மக்கள் முதலில் ஆஸ்திரேலியாவிற்கு கடந்த 60,000 ஆண்டுகளுக்குள் வந்திருக்கலாம் மற்றும் கடந்த 30,000 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாம். விவசாயத்தின் தொடக்கமும் முதல் நாகரிகங்களின் எழுச்சியும் கடந்த 12,000 ஆண்டுகளில் தான் நிகழ்ந்தன. 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி 03 தொடரும் 

441541551_10225124557283833_8629086934460597397_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=7UZyzu_K9EsQ7kNvgHflFrG&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCrxzqbuDMCNlpJE4DuP5ydnAbl116mXLPZI4ukFcdRLA&oe=663EC116 441503134_10225124557163830_3518573798368361040_n.jpg?stp=dst-jpg_p235x350&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Z9Oj_8gsyo8Q7kNvgHhvQ4n&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBfQhx4XkGHj65xxERYCyt0kiQ7DAHOEFwgIXM3EplQAA&oe=663ECEAB 441456437_10225124557043827_7152550654564795127_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=W5sKok6WsskQ7kNvgF76lea&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCHzw6mmuybFVDAbB_EuaY8O79ysUQTlDRZECPfiJEPIw&oe=663EDBF8 441466751_10225124557683843_5099489647215833185_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3sEDS_l92cQQ7kNvgGyAMQT&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDvd5HpNu9p8fpLsGLyX4LQecnzX68npvMtsXpnlO9D0A&oe=663EDF4A May be an image of map and text that says 'Ancient MESOPOTAMIA ASSYRIA ASSUR NINEVEH BUPHRATES RIVER TIGRIS RIVER BABYLON. URU SUMER -UR ERIDU phillijpmartin.com MARTIN' May be an image of map and text that says 'ஹரப்பா ப்பா ஹர மெஹெர் கர் மொஹெஞ்சதாரோ தாரோ லோத்தல் லோ த்தல்' May be an image of map and text 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 03 

 

"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு. கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றியிருக்க முடியாது. ஆனால் இது தாம் மூத்த குடி என்பதையும் வீரக் குடி என்பதையும் வெளிக்காட்ட ஏற்படுத்திய சொல் வழக்காக இருக்கலாம் என்று நம்புகிறேன். என்றாலும் இது பண்டைய பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று. ஆமாம், ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள் தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வு மையத்தினர் [‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ / 'the Centre for Cellular and Molecular Biology / Hyderabad]. இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து  இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டு பிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர், பிபிசி [BBC] தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

இந்தியாவின் பழமையான மக்கள் நெகிரிட்டோ (Negrito) க்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன் வந்த இனக் குழுக்களில் முதன்மையானவர்கள் அவர்கள் தான். அவர்கள் கேரளா மற்றும் அந்தமான் தீவுகளின் மலைப்பகுதிகளில் குடியேறினர். ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற சில பழங்குடியினர் [Kadar, Irula and Puliyan tribes] நெகிரிட்டோக்களுடன் அதிக அளவில் ஒத்திருக்கிறார்கள். அவை  ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அவற்றின் அண்டை தீவுகளுடன் தொடர்புடையவை. நெகிரிட்டோக்கள் கருப்பு (கருமையான) தோல், கம்பளி முடி, அகன்ற மற்றும் தட்டையான மூக்கு மற்றும் சற்று நீண்டு சென்ற தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பலாங்கொடை மனிதன் தெற்காசியாவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட மறுக்க முடியாத பழமையான ஹோமோ சேபியன்ஸ் புதை படிவமாகும். அவை குறைந்தது 28,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் அவை கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் இலங்கை தென் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதாவது மகாவம்ச விஜயன் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 25,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும்.  

 

அதே போல, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை [Harvard University] சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் [David Reich] ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள்.

 

அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது எனவும், முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து [when agriculturists from the Zagros region of Iran] நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள் எனவும், இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது என்றும். இந்த விவசாய மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்றும் அடையாளம் காட்டி உள்ளார்கள். 

 

இரண்டாவது குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு 2000 மற்றும் 1000 க்கு இடையில், மத்திய ஆசிய ஆயர்களால் [மேய்ச்சல் தொழில் செய்பவர் / Steppe pastoralists] நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் [Kazakhstan] பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே என்கிறார்கள். 

 

எனவே ஆரியர்கள் இந்திய மண்ணில் கிறித்து பிறக்க 1500 ஆண்டுகளுக்கு முன் - இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்  - கால் வைத்தார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். ஆனால் சிந்து வெளியில் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்ட நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, அஃது ஆரியருக்கு முற்பட்ட ஒரு நாகரிகத்தின் அடிப்படையிலே அமைந்தது என்பது பொருந்தும். இதனாலும், மற்றும் சத்தி வழிபாடு, சிவன், லிங்க வழிபாடும் இன்னும் பல காரணங்களாலும்  உலகின் பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் சிந்து நாகரிகம் தமிழியம் (திராவிடம்) சார்ந்தென்று உறுதிப்பட மொழிந்துள்ளனர். மேலும் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறுகள் சுமேரிய நாகரிகத்துடன் ஒப்பிட வாய்ப்பளித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

 

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான இரண்டு  பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அவையை தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென் இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள். 

 

ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது. மொழியியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் திராவிட மொழி பண்டைய சமஸ்கிருதத்தை பாதித்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றனர், இது இந்தோ - ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் தோன்றும் ஏராளமான திராவிட கடன் வார்த்தைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிட மொழி [தொல் தமிழ்] குறைந்தது 4,500 ஆண்டுகள் பழமையானது, இது கிமு 2,500 க்கு முந்தையது, மேலும் இந்தோ - ஆரிய மொழிகளைப் பேசும் மக்கள் தோன்றுவதற்கு முன்பு இந்தியா முழுவதும் திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர் என்றும் மொழியியலாளர்கள் நம்புகிறார்கள்.

 

"குயிலோசைக் கேளாவிட்டால் செவி அழிவதில்லை
மயில் நடனம் காணாவிட்டால் மலர் விழி துடிப்பதில்லை
உயிர் தமிழ் நினைப்பு இன்றேல் உலகினில் வாழ்வே இல்லை"

 

என்று தமிழ் உயர்வைப் பாடி வைத்தான் ஒரு கவிஞன்.அவன் காதில் இந்த பெருமை விழட்டும். அவனோடு சேர்ந்து நாமும் மகிழ்வோம், ஆனால் அதே நேரத்தில் உண்மைகளை மேலும் மேலும் கொண்டுவர தொடர்ந்து முற்சிப்போம்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி:04 தொடரும்  

436299017_10225166415250256_8791973744341579216_n.jpg?stp=dst-jpg_p240x240&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zoANru-oBrQQ7kNvgFcw9Ug&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDLqmqW_qx8u0HTDI6HQXhv-AU36NMtPISUAQKFW9O_CQ&oe=66483264 436266595_10225166414890247_7411040020724235580_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Ui98vC32gyYQ7kNvgEuSOaQ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYD7HWm8HRNVtExLHR6caIBgEVwhBGMaBjGBA7keOTGkaQ&oe=6648244F 435961480_10225166415090252_2164208224420859580_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ANaX0x-YsjIQ7kNvgEa2A2N&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYARBggZ3GYV1TUvxWektsXF4BrtaU-2IgvqdeHNsrWfvg&oe=66483301 436096661_10225166415530263_1768553081833154108_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=U8Nc6l0Hj_cQ7kNvgHLwoZx&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC6sopuBCxPxaMFFXlVDKfZRi1xh0PxfdWEnR6URXuk9Q&oe=66483407 436237066_10225166415810270_242869417184507741_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ANRWl8HimmEQ7kNvgE_VsiW&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDAaU2rAffTkGtGUIVP13HR1DvCVEYEXrUenO-ak8Aw2g&oe=66483084

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, இரு சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஒன்பது பேர் கைதாகியுள்ளனர். கர்ப்பமாக உள்ள சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்வது என்ன? தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, 17 வயது சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியை அழைத்து போலீசார் விசாரித்தபோது சிறுமியை மூன்று சிறார்கள் உள்பட, ஒன்பது பேர் பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது. மேலும், சிறுமியின் தோழியான 14 வயதான மற்றொரு சிறுமியையும் இந்தக் கும்பல் வன்புணர்வு செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. தமிழகத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ள இந்தச் சம்பவத்தில், போக்சோ வழக்கின் கீழ் மூன்று சிறார்கள் உள்பட ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்து, இரு சிறுமிகளையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்வது என்ன, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டு, போலீசார் மற்றும் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியது.   வழக்கு குறித்து போலீசார் சொல்வது என்ன? படக்குறிப்பு,பாலியல் வன்புணர்வு வழக்கில் 3 மைனர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உடுமலைப்பேட்டை காவல்துறை தெரிவித்துள்ளது. உடுமலை அனைத்து மகளிர் போலீசார், நம்மிடம் வழக்கு விவரத்தையும் முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் பகிர்ந்துகொண்டனர். நம்மிடம் பேசிய போலீசார், ‘’பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு 17 வயதான சிறுமி 14 வாரம் கர்ப்பமாக உள்ளார். இந்தச் சிறுமியை அவர்களது குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில், பெற்றோர் இறந்துவிட்டனர்." "உறவினர் வழி சித்தியும், பாட்டியும்தான் இவரை வளர்த்து வந்துள்ளனர். 10ஆம் வகுப்பை பாதியில் நிறுத்தியுள்ள இச்சிறுமி, தங்களுக்குச் சொந்தமான வீட்டில் தனியாக வசித்துக்கொண்டு அவ்வப்போது பாட்டியைச் சென்று பார்த்து வருவார்,’’ என்றனர். மேலும், ‘‘கைது செய்யப்பட்டதில் முக்கியக் குற்றவாளியான ஜெயகாளீஸ்வரன், அச்சிறுமியை காதலித்து வந்தார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியில் ஏமாற்றியுள்ளார். தனது நண்பர்களை அழைத்து வந்து சிறுமியை மிரட்டி அனைவரும் வன்புணர்வு செய்துள்ளனர். 17 வயதான சிறுமியின் தோழியான 14 வயது சிறுமியையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்,’’ என்றனர். சிறுமிகளின் வழக்கில் தொடர்புடைய, ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். காவல்துறை அளித்த விவரங்களின்படி, மூன்று சிறார்கள் உள்பட ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), யுவபிரகாஷ் (24), பவபாரதி (22), நந்தகோபால் (19) ஆகிய 6 பேர் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.   என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளையும் 9 பேர் இணைந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். (சித்தரிப்புப் படம்) வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.பி சுகுமாறன், ‘‘2 சிறுமிகள் பாதிக்கப்பட்ட வழக்கில், வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு, மிரட்டல் விடுத்தது உள்பட போக்சோ சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 இளைஞர்கள் மற்றும் ஒரு சட்டத்திற்கு முரண்பட்ட சிறார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மூன்று சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளை காப்பகத்தில் வைத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சமூக நலத்துறையினர் பராமரித்து வருகின்றனர்,’’ என்றார். ‘‘தனியார் தங்கும் விடுதிகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்குவதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஒரு தனியார் விடுதியில் வைத்து சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். விடுதி மீதும் நடவடிக்கை எடுத்து, வேறு விடுதிகளில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்கிறதா எனக் கண்காணிக்கிறோம்,’’ எனவும் டிஎஸ்பி சுகுமாறன் தெரிவித்தார். "இவ்வழக்கில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? கைது எண்ணிக்கை அதிகரிக்குமா?" என்று டிஎஸ்பி சுகுமாறனிடம் கேட்டபோது, ‘‘இரு சிறுமிகளிடமும் வாக்கு மூலம் பெற்று நாங்கள் ஒன்பது பேரை கைது செய்துள்ளோம். சிறுமிகள் நீதிபதி முன்னிலையிலும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதிலும், ஒன்பது பேரைத்தான் குற்றவாளிகளாகக் கூறியுள்ளனர். இதனால், கைது அதிகரிக்க வாய்ப்பில்லை,’’ என்றார்.   சிறுமியின் குடும்பத்தினர் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பாதிக்கப்பட்ட இரண்டாவது சிறுமியின் பாட்டி இந்தச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, ‘‘எனது பேத்தி எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு செல்ல உள்ளார். தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மாலையில் நான்தான் அவளை அழைத்து வருவேன்." "பேத்தி சிறு வயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். என் மகள் வேலைக்குச் சென்று விடுவதால் நான்தான் பேத்தியைப் பார்த்துக் கொள்வேன்." "கடந்த வாரம் உள்ளூர் திருவிழாவிற்கு வீட்டில் அனுமதியின்றி சென்றுவிட்டார். கோபத்தில் நானும் என் மகளும் பேத்தியை அடித்து அறிவுரை கூறினோம். அப்போது, எங்களிடம் கோபித்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்,’’ என்றார்.   'எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரண்டாவது சிறுமியின் வீட்டிற்கே காவல்துறை கூறித்தான் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இருநாட்கள் தேடியும் பேத்தியைக் காணவில்லை என்பதால் போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் அப்போதுதான் பேத்தி பாதிக்கப்பட்டது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர். ‘‘இரு நாட்கள் எங்கு தேடியும் பேத்தியைக் காணவில்லை என்பதால் காவல்துறையில் புகாரளித்தோம். அப்போது, போலீசார் எங்களை அழைத்து, வீட்டில் கோபித்துக்கொண்ட என் பேத்தியை, அந்த 17 வயதான சிறுமி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்ததாகத் தெரிவித்தனர்," என்று கூறும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி, தனது பேத்தி பாதிக்கப்பட்டதே போலீசார் சொல்லித்தான் தங்களுக்குத் தெரிய வந்தது என்றும் கூறினார். "எங்களுக்கு அதற்கு முன் எதுவுமே தெரியாது, என் பேத்தி குழந்தை அவளுக்கு எதுவுமே தெரியாது. குற்றவாளிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்,’’ என, தழுதழுத்த குரலில் பேசினார் அவர். மற்றொரு சிறுமியை அவரது பாட்டிதான் பராமரித்து வருகிறார், சிறுமியுடன் அவரும் காப்பகத்தில் உள்ளதால் 17 வயதான சிறுமி தரப்பு தொடர்பாக யாரிடமும் பேச முடியவில்லை. குற்றவாளிகளாக உள்ள ஒன்பது பேரின் குடும்பத்திடமும், அவர்கள் தரப்பு குறித்து விசாரிக்க பிபிசி தமிழ் பலமுறை முயன்றது. ஆனால், அவர்கள் யாரும் பேச முன்வரவில்லை.   சிறுமிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்! படக்குறிப்பு,‘‘பாலின சமவத்துவம் குறித்து பாடத்திட்டம் உருவாக்கி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் உள்ளோம்,’’ என்று கூறுகிறார் மாதர் சங்கத் தலைவர் சுகந்தி. இரு சிறுமிகளின் குடும்பத்தினரை நேரில் பார்வையிட்ட மாதர் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி, ‘‘பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாழ்க்கை, அவர்களின் பின்புலம், குடும்பம் என அனைத்தையும் பார்வையிட்டோம். சிறுமிகளின் குடும்ப சூழல், அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை பாலியல் ரீதியில் குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர்," என்று கூறினார். தமிழகத்தில் பல போக்சோ வழக்குகள் உரிய நேரத்தில் விசாரணை முடிக்கப்படாமல் விடப்பட்டதால், சாட்சியங்கள் அழிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிப்பதாகக் கூறும் சுகந்தி, "இதன் காரணமாக இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, விரைவில் விசாரணை முடித்து தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்து உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். அதுமட்டுமின்றி, ‘‘பாலின சமவத்துவம் குறித்து பாடத்திட்டம் உருவாக்கி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் உள்ளோம். பாலின சமத்துவக் கல்வியை போதிக்க வேண்டும்,’’ எனவும் சுகந்தி தெரிவித்தார்.   போக்சோ வழக்கில் சிறுமி கர்ப்பமானால் அரசு என்ன செய்யும்? சட்டம் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போக்சோ வழக்கின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் வயது மற்றும் உடல்நலத்தைப் பொறுத்து அவரது கரு கலைக்கப்படுமா, படாதா என்று சட்டபூர்வமாக முடிவு செய்யப்படும். உடுமலை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக உள்ளதால், அரசு என்ன செய்யப் போகிறது? சட்டம் சொல்வது என்ன? சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சுப.தென்பாண்டியனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் வினவியபோது, ‘போக்சோ வழக்குகளில் பாதிக்கப்படும் சிறுமி கர்ப்பமானால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறினார். "முதலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில், கருக்கலைப்பு செய்யும் அளவிற்கு சிறுமியின் உடல்நிலை ஆரோக்கியமாக கருவின் அளவும் ஏற்றபடி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும். சிறுமி வயிற்றில் கரு வலுவாகியிருந்தால் அது கலைக்கப்படாது, பிரசவம் பார்க்கப்பட்டு அந்தக் குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு சட்டப்படி தத்து கொடுக்கப்படும்,’’ என்கிறார் அவர். மேலும், ‘‘ஒருவேளை பாதிக்கப்பட்ட சிறுமி 17 வயதாக இருந்து குழந்தை பெறும்போது அவர் 18 வயதை அடைந்தால், குழந்தையைப் பெற்றெடுத்தவரே வளர்க்க விரும்பினாலும் அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படாது. நீதிபதிகள் விசாரணை முடித்து சட்டப்படிதான் குழந்தை அந்தத் தாயிடம் ஒப்படைக்கப்படும்,’’ எனவும் நம்மிடம் தெரிவிக்கிறார் வழக்குரைஞர் சுப.தென்பாண்டியன்.   ‘சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்படும்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"போக்சோவில் பாதிக்கப்படுவோருக்கு 18 வயது வரை மட்டுமல்ல 21 வயது வரை பராமரிக்க அரசு நிதியுதவி அளிக்கிறது’ என்கிறார் சமூக நலத்துறை அதிகாரி ரஞ்ஜிதா. சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு கல்வி வாய்ப்பு ஏற்படுத்துவதாக உறுதியளிக்கின்றனர் மாவட்ட சமூக நலத்துறையினர். நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்ஜிதா, ‘‘போக்சோ வழக்கில் பாதிக்கப்படும் சிறுமிகளைக் காப்பகத்தில் வைத்து பராமரித்து அவர்களின் மனநலம், உடல்நலத்தை மேம்படுத்தி, கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம்." "அவர்கள் சந்தித்த துயர சம்பவத்தில் இருந்தும், வன்புணர்வு சம்பவத்தில் இருந்தும் மன ரீதியாக அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும். உடுமலை வழக்கில் உள்ள இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.   ’21 வயது வரையில் பராமரிப்போம்’ ‘‘காப்பகத்தில் உள்ள 17 வயதான சிறுமி 10ஆம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளார். நாங்கள் அறிவுரை வழங்கிய பின், அவர் படிப்பைத் தொடர விருப்பம் தெரிவித்து, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காகத் தயாராகி வருகிறார்." "புத்தகங்கள் பெற்று படித்து வருகிறார், வரவுள்ள இடைத்தேர்வு எழுத உள்ளார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் படிப்பைத் தொடர அறிவுரை வழங்கியுள்ளோம்,’’ என்கிறார் ரஞ்ஜிதா. மேலும் தொடர்ந்த அவர், ‘’17 வயதான சிறுமிக்கு குடும்பத்தில் போதிய கவனிப்பு இல்லாததால், 21 வயது வரையில் அவரது கல்விக்கு உதவவும், அவர் விருப்பப்பட்டால் காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். போக்சோவில் பாதிப்பேருக்கு 18 வயது வரையில் மட்டுமல்ல 21 வயது வரையில் பராமரிக்க அரசு நிதியுதவி அளிக்கிறது,’’ என்கிறார் அவர். https://www.virakesari.lk/article/183944
    • ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய "சுரக்ஷா" காப்புறுதித் திட்டம் மீண்டும் ஆரம்பம்! : ஜூன் முதல் வாரத்திலிருந்து சலுகைகளைப் பெறலாம்!  19 MAY, 2024 | 01:03 PM பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த "சுரக்ஷா" மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.  அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்துக்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது.   சுகாதார பிரச்சினைகள் காரணமாக கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வியைத் தொடர வாய்ப்பளித்தல், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலை வரவையும் மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை நோக்கமாக  கொண்டு 2017ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய "சுரக்ஷா" மாணவர் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இத்திட்டம் 01.12.2022 வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், நாட்டில் தற்போது பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்திருந்தார்.  2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான மனித வளங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அதன்படி, அரசாங்க பாடசாலைகள், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கற்கும் 1- 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 5 - 21 வயது வரையான 45 இலட்சம் மாணவர்களுக்கும், விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான பாடசாலைகளில் பயிலும் 4 - 21 வயது வரையான மாணவர்களுக்கும் மருத்துவ மற்றும் விபத்துக் காப்புறுதி உள்ளிட்ட சலுகைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.  மேலும் குறைந்த வருமானம் பெறுவோர் அதாவது 180,000 ரூபாய்க்கும் குறைவான வருட வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆயுள் காப்புறுதியின் கீழ் பெற்றோரின் மரணத்துக்கான நிவாரணங்களும் இந்த திட்டத்தின் கீழ் சகல மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.  1. சுகாதாரக் காப்புறுதி   அரச, தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு 300,000 ரூபாய் வரையில் வழங்கப்படும். அதன்படி அரச வைத்தியசாலைகளில் தங்கும் ஒரு இரவுக்காக  2500 ரூபாய் வழங்கப்படும். (அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டாலும் பெற்றோர் தொழிலுக்குச் செல்ல முடியாமல் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.) தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு ஓர் இரவுக்கு 7500 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.   * நிவாரணத் தொகை 20,000 ரூபாய் வரையில் ஏற்கனவே காணப்பட்ட கண் குறைபாடுகளுக்கான கண்ணாடிகள், செவிப்புலன் குறைபாட்டுக்கான செவிப்புலன் கருவிகளுக்கான நிவாரணங்களும் வழங்கப்படவுள்ளன. அத்தோடு பிள்ளைகள் நோய்வாய்ப்படும் வேளையில் வெளி ஆய்வுக்கூடங்களில் பெறப்படும் அறிக்கைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.  * பாரதூரமான நோய்களுக்கு 200,000 ரூபாய் முதல் 1,500,000 ரூபாய் வரையில் வழங்கப்படும். 2. விபத்துகளுக்கான காப்புறுதி * முழுமையான நிரந்தர ஊனத்துக்கு-200,000/= வழங்கப்படும்.  * முழுமையான இடைநிலை ஊனத்திற்கு - 150,000/= முதல் 200,000/= வரையில் வழங்கப்படும்.  * தற்காலிக ஊனத்துக்கு 25,000/= முதல் 100,000/= வரையில் வழங்கப்படும். 3. வாழ்வாதாரக் காப்புறுதி  * பெற்றோரின் மரணத்தில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பப் பிள்ளைகளின் பெற்றோரில் ஒருவருக்கு 75,000/= வரையில் வழங்கப்படும். பெற்றோர் இருவருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும்.  ஒரு குடும்பத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இந்த நிவாரணங்கள் உரித்தாகும். ஆனால், ஒரு பிரச்சினைக்கு அதிகபட்சமாக 225,000/= ஒதுக்கப்படுகிறது. (அதிகபட்சமாக 3 குழந்தைகளுக்கு தலா 75,000/= ஒதுக்கப்படும்.) இந்தக் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணையவழி முறையின் ஊடாக இந்த நன்மைகள் அனைத்தையும் விரைவாக (குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்குள்) பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட முறைமையொன்று இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்படவுள்ளது.  இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் "சுரக்ஷா" காப்புறுதியின் கீழ் குழந்தைகளுக்கு உரித்தான நிவாரணம், பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப் பிரிவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான விசேட ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றும் உருவாக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சும் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமான பிரிவுடன் ஒருங்கிணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/183944
    • பெரிய‌ப்பு நான் தான் க‌ட‌சி இட‌ம் ப‌ஞ்சாப் ஆப்பு வைக்க‌ வில்லை மும்பை தொட‌ர் தோல்வியால் ப‌ஞ்சாப் 9வ‌து இட‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து இந்த‌ முறை பெரிய‌ புள்ளிய‌ ஒருத‌ரும் பெற‌ போவ‌து கிடையாது கூட்டி க‌ழிச்சு பார்த்தால் நான் தான் க‌ட‌சி இட‌ம்.....................ந‌ம்பின‌ அணிக‌ள் எல்லாம் கைவிட்டால் நில‌மை இப்ப‌டி தான் இருக்கும்😁...............................
    • முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு May 18, 2024     15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே 17) அந்தி வேளையில் கடற்கரையில் வணக்க நிகழ்வொன்றை நடத்தினர். ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். Shoebury East கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும் கவிதைகளாக மாற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான மிதக்கும் நினைவு விளக்குகள் அலைகளில் மிதக்க விடப்பட்டது. அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பங்கேற்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் அதே தீங்கற்ற செயல்பாடு சிறிலங்கா அரசால் தடை உத்தரவுகள், கைதுகள் மற்றும் மிரட்டல்களுடன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. Southend-on-Sea நிகழ்வில் பங்கேற்றவர்களில் பலர் இன அழிப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்களில் ஒருவரான திருமதி நிஷாந்தினி சந்திரதாசன் கூறுகையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இனப்படுகொலை நடந்த இடமும் முள்ளிவாய்க்கால் கடற்கரையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுக்கு ஒரு கடற்கரையில் அமைந்தது பொருத்தமானது என்றார். நிகழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான தருணத்திற்கு முன் அவர் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார். அதன் பின் அங்கு கூடியிருந்த அனைவராலும் நினைவு விளக்குகளும், மலர்களும் கடலில் காணிக்கையாக விடப்பட்டன. ஒளிரும் விளக்குகள் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவு சுமந்து ஆழ்கடல் நோக்கி மிதந்து சென்றன. மே 12 முதல் 18 வரை நடைபெறும் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் போது இந்த வகையான நினைவுச்சின்னங்கள் பரவலாகி, அனைத்து நாடுகளிலும் உள்ள பல கடற்கரைகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை எமது மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அடையாளமாக வருங்கால சந்ததியினர் மறந்துவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-படுகொ-7/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.