சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
அமேசன் காட்டை பாதுகாக்கும் உடன்படிக்கையில் 7 தென்னமெரிக்க நாடுகள் கைச்சாத்து September 8, 2019 அமேசன் காட்டை பாதுகாப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் 7 தென்னமெரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. பொலிவியா , பிரேசில், கொலம்பியா , ஈக்வடோர், கானா , பெரு மற்றும் சுரிநம் ஆகிய நாடுகளே இவ்வாறு இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஏழு நாடுகளும் ஏற்கனவே பழங்குடியின மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற நிலையிலேயே இவ்வாறு இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இவ்வாண்டில் மட்டும் அமேசன் காடுகளில் 80,000 தீ பரவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்ப…
-
- 0 replies
- 293 views
-
-
இங்கிலாந்தில் இறந்தபடி கரையொதுங்கும் திமிங்கிலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இங்கிலாந்தின் கடற்கரையோரங்களில் இறந்தபடி கரையொதுங்கும் திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் ஆயிரம் கடல் விலங்குகள் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமிங்கிலங்கள், டொல்பின்கள் மற்றும் கடல் பன்றிகள் என நான்காயிரத்து 896 விலங்குகள் இறந்த நிலையில் கரையொதுங்கியதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த எண்ணிக்கையானது 2011 இற்கு முன்பதான 7 வருடங்களுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகரிப்பாகும் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. தொற்றுநோய்கள…
-
- 0 replies
- 242 views
-
-
படத்தின் காப்புரிமை DAVID SCHNEIDER, HERPETOLOGICAL ASSOCIATES இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகவே நிகழும். நச்சுத் தன்மை கொண்ட அந்தப் பாம்புக் குட்டிக்கு இரண்டு தலைகள், இரண்டு நாக்குகள் மற்றும் நான்கு கண்கள் உள்ளன. இரண்டு தலைகளும் ஒன்றோடு ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக இயங்குகின்றன. 'டபுள் டேவ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாம்புக் குட்டி ஹெர்படோலாஜிக்கல் அசோசியேட்ஸ் எனும் சுற்றுச்சூழல…
-
- 0 replies
- 298 views
-
-
உலக கடல் மட்டத்தை உயர்த்துவதற்கு ஏதுவான மிகப் பெரிய பனிப்பாறை உருகியது! கிறீன்லாந்தின் பெரும்பாலான பனி படலங்கள் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் மிகப் பெரிய பனிப்பாறையும் உருகியிருக்கலாம் என்று அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம், சராசரி உலக கடல் மட்டத்தை ஒரு மில்லிமீட்டருக்கு மேல் உயர்த்துவதற்கு ஏதுவான பனி உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கடற்கரைகளை அண்டிய நகரங்களின் எதிர்காலம் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும், பலர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தெற்கு கிறீன்லாந்தில் ஒரு பனிப்பாறை இறுதியாக 2004…
-
- 0 replies
- 292 views
-
-
சுவிட்சர்லாந்தில் பரவி வரும், கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு. சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள். சுவிட்சர்லாந்தில் Processionary Caterpillar என்னும் ஒருவகை அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பலருக்கு நச்சுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் நுண் முடி உடலில் பட்டால், பயங்கர எரிச்சல் ஏற்படுவதோடு, ஒவ்வாமையும் சில நேரங்களில் ஆஸ்துமா பிரச்சினையும் ஏற்படுகின்றது. அதேநேரம் இந்த பூச்சிகளை நுகர்ந்து பார்க்கும் நாய்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றன. இந்த கம்பளிப்பூச்சிகளும், அவற்றின் அந்துப்பூச்சிகளும் (moth) ஐரோப்பா முழுவதும் சுவிட்சர்லாந்திலும் பரவிவருவதைய…
-
- 0 replies
- 313 views
-
-
அமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்! அமேசன் காடுகளில் கடந்த 48 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவது தெரியவந்துள்ளது. பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தினால் எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில் அமேசன் காடுகளில் 88 ஆயிரத்து 816 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றில் 51 சதவீதத்திற்கும் அதிகமான தீ விபத்து அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டதாக பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அமேசன் காடுகளில் தீ விபத்து ஏற்படுவதற்கு பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோவே முக்கிய காரணம் என சுற்றுச்சூழல…
-
- 1 reply
- 1.1k views
-
-
தொடாவிடினும் சுடும் அமேசன் தீ ! இந்தப் பூமி தனி ஒருவருக்கு சொந்தமானது அல்ல. மற்றும் மனிதன் என்ற ஓர் உயிரினம் மட்டும் வாழ்வதற்கானதும் அல்ல. இது எல்லோருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் உரியது. மனிதன் எப்படி நீரை, காற்றை, நிலத்தை அனுபவிக்கிறானோ அதே உரிமை சிங்கத்துக்கும் சிட்டுக்குருவிக்கும் ஏன் கண்களுக்குப் புலப்படாத சிறு புழுவுக்கும் உள்ளது. இயற்கையின் படைப்பு எல்லோருக்குமானதே. ஆனால் மனிதன்மையை அழித்துவிட்டு மனிதன் என்ற உடலுக்குள் இருக்கும் பேராசை கொண்ட கொடூரமான பெருவிலங்குகள் இயற்கையின் கொடைகளை அழித்து அத்தனையையும் வெறும் பணமாக்க முனைகின்றன. இந்தப் பேராசையின் விளைவுகள் உலகில் பெரும் இயற்கை அழிவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஓசோனில் ஓட்டை விழுந்ததற்கும் பல நாடுகள…
-
- 1 reply
- 775 views
-
-
இன்றைய சூழல் சுற்றாடல் பற்றிய அருமையன ஒரு பட்டி மன்றம் விழிப்புணர்வை எளிதான முறையில் கொண்டு செல்லும் ஒரு முறை சுற்றாடல் பற்றியதில் பொறுப்புள்ளவர்கள் மக்களை இல்லை ஆட்சியாளர்களா? மரம் வளர்த்தேன், சென்ற அணிலும் குருவியும் திரும்பி வந்து விட்டன ...
-
- 0 replies
- 335 views
-
-
மூழ்கும் நகரங்கள் - சிஎன்என் பட்டியல் இந்தோனேசியா தனது தலைநகர் ஜகார்த்தா கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதால் தலைநகரை வேறு பகுதிக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து சிஎன்என் மூழ்கிக்கொண்டிருக்கும் முக்கிய நகரங்களின் பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. உலகில் மிக வேகமாக கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் நகரம் ஜகார்த்தா என உலக பொருளாதார மன்றம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. கடல்மட்டம் அதிகரிப்பதாலும் நிலத்தடி நீர் அதிகளவிற்கு பயன்படுத்தப்படுவதாலும் இந்த நிலையேற்பட்டுள்ளது என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் Houstonநகரமும் கடலில் மூழ்கின்றது என சிஎன் என் குறிப்பிட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்ப…
-
- 0 replies
- 551 views
-
-
எரியும் அமேசான் காடு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை. படத்தின் காப்புரிமை Getty Images 2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை கூறுகிறது. படத்தின் காப்புரிமை Getty Images அதாவது இவ்வாண்டு இதுநாள் வரை 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் அமேசானில் நிகழ்ந்துள்ளன. பிர…
-
- 5 replies
- 1.9k views
-
-
2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:35 -க. அகரன் வவுனியா மாவட்டத்தில், 1 இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு, சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, வவுனியா – கூமாங்குளம், குளக்கரை, அதனை அண்டிய பகுதிகளில், நேற்று (17) 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு, வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால். 10 ஆயிரம் பனை விதைகள், வவுனியா பிரதேசத்தில் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/வவுனியாவில்-1-இலட்சம்-விதைகளை-நடும்-திட்டம்-ஆரம்பம்/72-236925 எழுத்தூர் குளத்தை ஆழப்படுத்த நடவடிக்கை 2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 0…
-
- 0 replies
- 486 views
-
-
காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்! மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனமொன்று காற்றை சுத்தப்படுத்தக் கூடிய செயற்கை மரங்களை வடிவமைத்துள்ளது. இயற்கை மரங்களை வளர்ப்பதற்கு அதிக இடமும், நேரமும் தேவைப்படும் சூழலில், இத்தகைய ஒரு செயற்கை மரம் 368 இயற்கை மரங்களுக்கு இணையாக காற்றிலுள்ள கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பயோஅர்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மரங்கள், செயற்கையான வேதிவினைகள் மூலம் இயற்கை தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அளவுக்கு அதிகமான காற்று மாசுபாட்டைக் கொண்டிருக்கும் மெக்ஸிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு…
-
- 0 replies
- 381 views
-
-
தாவரங்கள் சார்ந்த உணவுக்கு மாறும் போது, காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராட முடியும் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான பாரிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாக்கப்பட்டுள்ளது. மேற்கத்தேய நாடுகளில் அதிக அளவாக இறைச்சி மற்றும் பால்பொருள் உணவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பூகோள வெப்ப அதிகரிப்பு முக்கிய காரணியாக அமைகிறது. எனவே தாவர உணவுகளை புசிப்பதன் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். எனினும் மக்கள் அனைவரும் தவார உண்ணிகளாக மாற வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்வைக்கவில்லை.107 விஞ்ஞானிகள் இணைந்து, இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். http://www.hirunews.lk/tamil/221860/தாவரங்கள்-சார்ந்த-உணவுக்கு-மாறும்-போது-…
-
- 0 replies
- 548 views
-
-
மிக வெப்பமான காலப்பகுதியாக ஜூலை மாதம் பதிவாகியுள்ளது! சர்வதேச ரீதியாக மிகவும் வெப்பம் நிலவிய மாதமாக இந்த வருடம் ஜூலை மாதம் பதிவாகியுள்ளதாக செய்மதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவையின் ஆராய்ச்சியாளர்களால் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது பூமி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பமயமாதலை அனுபவிக்கிறது என்பதற்கான சமீபத்திய அறிகுறி இதுவென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் ஆர்க்டிக் வட்டத்திற்குள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையுடன், வெப்பமான காற்றலைகள் கடந்து சென்றன. அதேவேளை கடந்த மாதம் ஐரோப்பா முழுவதும் உயர்வான வெப்பநிலை அளவுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகளவில், 2019 ஜூலை மாதம் ஓரளவு வெப்பமா…
-
- 0 replies
- 542 views
-
-
ஒரே நாளில் பல பில்லியன் டன் பனி உருகியுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்! கிரீன்லாந்தில் ஒரே நாளில் பல பில்லியன் டன் பனி உருகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கிரீன்லாந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பநிலை 22°c ஆக பதிவாகியுள்ளது. இதன்போது ஒரே நாளில் 11 பில்லியன் டன் அளவிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளன. 197 பில்லியன் டன் பனி இருக்கும் கிரீன்லாந்து பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 பில்லியன் டன் பனி உருகுவது வழக்கம். கோடை காலத்தின் போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்தின் மேற்பரப்பில் பனி உருகுவதும், பின்னர் ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது அது மீண்டும் உறையும் நிகழ்வும் வழக்கமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந…
-
- 0 replies
- 325 views
-
-
கடலாமை (Turtle) என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரை கூட உயிர் வாழும். ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள்.ஆமைகளின் புதைபடிவங்கள் டிராசிக் காலத்தைச் சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 245 மில்லியன் ஆண்டுகள் முன்பானது. இதனால் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தைச் சார்ந்திருப்பதால், ஊர்வன இனம் டைனோசர்கள் (200 மில்லியன் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவை) தோன்றும் முன்பாகவே இருந்ததை குறிப்பிடுகிறது. உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகு…
-
- 1 reply
- 731 views
-
-
எலக்ட்ரிக் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அந்த எலக்ட்ரிக் கார்களின் அடையாளமாக கருதப்படுவது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமாகும். இந்தியாவில் ஆட்டோமொபைல் மார்கெட் என்பது மிக பெரியதாகும். அவ்வாறு இருக்கையில் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படுமா செய்யப்படாதா என பல கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ட்விட்டரில் யஸ்வந்த் ரெட்டி என்பவர் எலான் மஸ்கிடம் ‘இந்தியாவிற்கு எப்போது டெஸ்லா கார்கள் வருகிறது?' என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ‘இந்தியாவில் இறக்குமதி வரியானது ரொம்ப கூடுதல் (100 சதவிகிதம்) என அறிகிறேன்' என பதிலளித்திருந்தார். 2014 முதலே இந்தியாவில் டெஸ்லா அறிமுகம் செய்யப்படும் என்ர பேச்சு இருந்து வந்தது. 2016 …
-
- 0 replies
- 461 views
-
-
வீட்டில் செடிகள் அல்லது மரங்கள் வளர்க்கலாம் எனத் திட்டமிடும் பலருக்கும் இருக்கும் சந்தேகம், என்ன மரங்கள் வளர்க்கலாம், என்ன செடிகள் வளர்க்கலாம் என்பதுதான். அதற்கான விடை இதோ. 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது நல்லது' என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். மரம் வளர்க்க இடம் இல்லாதவர்களின் அடுத்த சாய்ஸ் செடிகள். இந்த இரண்டையும் ஏன் வளர்க்க வேண்டும் என்ன மாதிரியான தாவரங்கள், செடிகள் வளர்க்க வேண்டும் என்பதிலும் கொஞ்சம் அலசி ஆராயத்தான் வேண்டியிருக்கிறது. ஒரே நீர், ஒரே பாதுகாப்பு முறை... ஆனால், பலன் என்பது கிடைக்க வேண்டுமல்லவா. அதற்குத்தான் பயனுள்ள தாவரங்களைத் தேர்வுசெய்து வீட்டில் நடலாம். அதற்குரிய ஆலோசனைகளை அந்தத் துறை சார்ந்த வல்லுநர்களிடமே கேட்டோம். ஓய்வுபெற்ற வன…
-
- 1 reply
- 2.2k views
-
-
காலநிலை மாற்றங்களினால் உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன- அவுஸ்திரேலிய பல்கலைகழகம் காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்கனவே உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன என எச்சரித்துள்ள மெல்பேர்னின் மொனாஸ் பல்கலைகழகம் அடுத்த தசாப்தத்தில் காலநிலை மாற்றங்கள் காரணமாக சிறுவர்களின் வளர்ச்சி குறைவடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. போசாக்கின்மை மற்றும் நுண்ணறிவு திறன் குறைதல் போன்ற பாதிப்புகளை சிறுவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் எனவும் பல்கலைகழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2030 முதல் 2050 வரையான காலப்பகுதியில் புவி வெப்பமடைதல் காரணமாக வருடமொன்றிற்கு 250,000 பேர் மரணமடையும் நிலையேற்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதை மொனாஸ் பல்கலைகழகம் தனது…
-
- 0 replies
- 601 views
-
-
எத்தியோப்பியாவில் 12 மணி நேரங்களில் 35 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை! எத்தியோப்பியாவில் பெறுமளவிலான பொதுமக்கள் 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். சீரற்ற பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகின்ற நிலையில், பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2-வது நாடாக திகழும் எத்தியோப்பியாவில், வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வருகின்றது. கடந்த நூற்றாண்டில் 30 சதவீதமாக இருந்த எத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு, கடந்த 2000 ஆம் ஆண்டில், 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந…
-
- 1 reply
- 629 views
-
-
தஞ்சாவூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் மரம் வளர்த்து வரும் பெண்களை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நூறு நாள் திட்டத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைத்து வளர்த்து அந்த இடத்தையே சோலைவனமாக மாற்றி வரும் பெண்களை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாரட்டி வருகின்றனர். தஞ்சாவூர் திருச்சி சாலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் புதிய கலெக்டர் அலுவலகம். இந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்கப்பட்டு வருகிறது. சுமார் ஐந்து வருடத்திற்கு முன் கட்டாந்தரையாக இருந்த இந்த இடத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் வளர தொடங்கி இன்றைக்கு சோலைவனமாக மாறி நிற்கிறது. ஏக்கம், எதிர்பார்ப்பு…
-
- 0 replies
- 502 views
-
-
லண்டனில் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ! உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு அந் நாட்டு மக்களின் அன்றாட நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டனிலும் நாளையதினம் வெப்பநிலை 100 பாகை பர்னைட் ஆக அதிகரிக்குமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இங்கிலாந்தின் அதிகூடிய வெப்பமானது 102 பாகை பர்னைட் ஆக பதிவாகியுள்ளது. இதனை முறியடிக்கும் வகையில் அதிகரித்துவரும் லண்டனின் வெப்பநிலை நாளை 100 பாகை பர்னைட்டை (38 C) எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இங்கிலாந்தில் ஜூலை மாதத்தில் பதிவான 98.1 பாகை பர்னைட் (36.7 C) முறியடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வெப்பநிலை அதிகரிப்பு தொடரும் பட்சத்தில் 10…
-
- 27 replies
- 3.3k views
- 2 followers
-
-
ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கிறது வெப்பம்! ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக் காலத்தில் இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலை பதிவான நகராக பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரம் உள்ளது. அங்கு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) 41.2 பாகை செல்சியஸ் அதாவது 106.1 ஃபெரனைட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த 2003 ஆம் ஆண்டு நிலவிய 40.7 பாகை செல்சியஸ் வெப்பநிலையை முறியடித்துள்ளது. இந்த நிலையில். ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் பரவலாக வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவி…
-
- 0 replies
- 545 views
-
-
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு போதுமான காலமில்லை : மைக்கேல் கோவ் காலநிலை மாற்றத்தை உடனடியாகச் சமாளிக்கா விட்டால் வளமற்ற மண், பிளாஸ்டிக் நிறைந்த கடல்கள், அசுத்தமான நீர் மற்றும் கடுமையான வானிலை ஆகிய நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடுமென சுற்றுசூழல் அமைச்சர் மைக்கேல் கோவ் எச்சரித்துள்ளார். பூமிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடிவடைந்து வருவதாக எச்சரித்த கோவ் அடுத்த ஆண்டு பல்லுயிர் மற்றும் பெருங்கடல்கள் தொடர்பான சர்வதேச உச்சிமாநாடுகளில் பிரித்தானியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில்; பூமிக்கு எம்மால் இழைக்கப்பட்ட சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடி…
-
- 0 replies
- 243 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு என உங்களுக்கு பிடித்த உணவுகள் இல்லாமல் போகும் பருவநிலை மாற்றத்தால் நமக்கு பிடித்த சில உணவுகளுக்கோ, குளிர்பானங்களுக்கோ நாம் பிரியாவிடை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வெப்பநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், பயிர்கள் வளர்வதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றும் மீன்கள், விலங்குகள் செத்துப் போகலாம். எனவே எதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும் காணாமல் போகலாம். ஏன் தெரியுமா? …
-
- 0 replies
- 828 views
-