Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை கொன்றிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை அனாதைகள் ஆக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் காதுகளைச் செவிடாக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டின் இடிச் சத்தம் ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை ஓட வைத்தது பள்ளிகளைப் போர் சூழ்ந்த முன்னொரு நாளில் வகுப்பறை நாற்காலிகளை கண்ணீர் பூக்கள் நிறைத்தன …

      • Like
    • 3 replies
    • 378 views
  2. "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி" "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி சின்ன இடையாளே! செருக்குப் பிடித்தவளே துன்பம் வேண்டாமே! மௌனம் கலைத்தாலென்ன? இன்பமொன்றே எண்ணி உன்னிடம் வந்தேனே!" "மின்னல் வேகத்தில் கோபம் கொள்ளாதே கன்னம் சிவக்க உற்றுப் பார்க்காதே! அன்ன நடையில் மனதைப் பறிகொடுத்து கன்னி உன்னை மனதாரக் காதலித்தேனே!" வண்ணக்கிளியே அழகே! தனிமை என்னைவாட்டுதே மண்ணில் வாழும்வாழ்வும் எனக்கு வெறுக்குதே! கண்கள்கூட நீயில்லாமல் இரவில் மூடமறுக்குதே எண்ணமெல்லாம் நீயொருத்தியே! அருகில் வாராயோ?" "விண்ணில் மலரும் நிலாவும் சுடுகுதே …

  3. அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் தொலைபேசியும் அனுமதியில்லை தொடர்புகொள்ளவும் முடியவில்லை மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் மீளாத்துயில் கொண்டதேனோ! சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே! இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே! ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு இருபத்தொரு அகவையில…

  4. "கசக்கும் உண்மைகள்" "பொய்களை பூசி பெருமை பேசுகிறான் மற்றவனை தாழ்த்த புராணம் படைக்கிறான்! மகாவம்சம் ராமாயணம் இனிக்கும் பொய்கள் உண்மையான வரலாறு கசக்கும் உண்மைகள்!" "கல்வெட்டு தொல்பொருள் சான்றுகள் வர கன்னத்தில் கைவைத்து தடைகள் செய்கிறான்! மாயைத்திரைகள் கிழிந்து உண்மை கட்டிட அரச படையுடன் அட்டகாசம் புரிகிறான்!" "தைரியம் கொண்டு கசப்பை ஒப்புக்கொள் ஆழங்களில் உள்ள ஞானம் வெளிவரும்! வளர்ச்சிக்கான வாய்ப்பு, கட்டாயம் உயரும் உண்மைகள் விழித்து விடுதலை ஓங்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  5. தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை. දශක තුනක් පුරා දිවයිනේ සියලු ආක්‍රමණ කල්දැමුවේ ඔබයි. ඔබ නිහඬව දශකයක්වත් ඔබට මුහුණ දීමට නොහැකි වී ඇත. එබැවින් ඔබ දිවයින මුදාගත් ආරක්ෂක නිලධාරියා ය. දිවයිනේ අනෙක් පැත්ත ආරක්ෂා කරන මුහුදු කොල්ලකරු ඔබම වේ. සියලු සීමා මායිම් රකින මායිම් இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால். எனவேநீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள…

  6. "மாற்றம் ஒன்றே மாறாதது" "காதல் ஏற்றிய விழியும் குருடாகும் காமம் வீசிய எழிலும் முதுமையாகும் காவலர்கள் கூட அநீதி இழைப்பர் காரணம் எதுவாகினும் மாற்றம் மாறாதது!" "உற்சாகம் தரும் அமுதமும் விடமாகும் அற்புதம் நிகழ்த்திய உடலும் கருகும் குற்றம் புரிந்தவனும் நீதிபதி ஆவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்றும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [விடம் - நஞ்சு]

  7. "காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  8. "அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"

  9. "சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்! அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்! அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னை கண்டதால் தியாகம் அறிந்தோம் ச…

  10. "சமாதானம்" [அந்தாதிக் கவிதை] "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்! கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர் மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!" "தலைகுனிந்து உலகமும் கண் மூடியது மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்! சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான் தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  11. "இன்றே இணைவோம் ஒற்றுமையாய்" "இன்றே இணைவோம் ஒற்றுமையாய் நாம் இழந்த உரிமைக்கு குரல் கொடுப்போம்! இளிச்ச வாய்கள் இனி வேண்டாம் இடித்து கூறுவோம் துணிந்து நிற்போம்!" "காட்டிக் கொடுத்து கோட்டை கட்டியது காலம் கடத்தி நீதி ஏமாற்றியது காவலனாக இருந்தே வேலி மேய்ந்தது காணும் இனி விலகி நில்!" "முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் தமிழர் ஒன்றாய் கூடித் திரண்டால் சிறைகள் எங்கே வெற்றி எமதே! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [முரசு முழங்கு தானை மூவருங்கூடி - வெற்றி முரசு முழங்…

  12. "கார்த்திகை தீபம்" [கவிதை] "கார்த்திகை திருநாள் தீபம் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லுது! கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் காரிருளை அகற்றி வெளிச்சம் தருகுது!" "காக்கை வன்னியன் இன்றும் இருக்கிறான் காசுக்கு தன் இனத்தையே விற்கிறான்! காட்டிக் கொடுத்து அடிமை ஆக்கிறான் காரணம் கேட்டால் எதோ மழுப்புறான்!" "காணும் காட்சிகள் இருளை கொடுக்குது காது கேட்பதும் பொய்யாய் தெரியுது! காதல் புரிந்தே கொலையும் செய்கிறான் கார்த்திகை தீபம் உண்மை பரப்பட்டும்!" "ஈன்றவன் இல்லை இணைந்தவன் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை! சிதைந்த…

  13. "முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும் "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  14. "படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில்…

  15. "ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!" [எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்] "ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே! நீலக் கருங்குயிலே! அருகில் வாராயோ காலம் கடத்தாமல் நெற்றியிலே பொட்டுவைக்கவா?" "வேகாத வெயிலுக்குள்ளே குந்தி இருப்பவனே தகாத உன்னுறவு எனக்கு வேண்டாம் ஆகாச கோட்டை பொடிப்பொடியாகப் போகட்டும்!" "மண்டை பெருத்தவளே வீறாப்புநீ பேசாதேடி கண்டகண்ட பயல்கள்தான் உனக்குத் தேவையோ வண்ணக்குயிலே நெருங்கிநிண்ணு நான் பேசவாடி" "கால்ரூபாய்க்கு விறகுவிற்று காலம் கழிப்பவனே அல்லும்பகலும் திண்ணை திண்ணையாத் தாண்டுபவனே கல்லுநெஞ்சம் எனக்கில்லை கண்டவனுக்கும் தலைகொடுக்க!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  16. "தாய்" [12 மே 2024] "அன்பின் இலக்கணம் அன்னை ஆகி அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்! அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி அனைவரையும் அணைக்கும் ஆண்டவன் ஆவாள்!" "பாதிக்கும் இடர்களை தானே தாங்கி பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்! குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள் குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையில் துணை நின்று நமதவறுகள் மன்னித்து ஒன்று சேர்ப்பாள்! கடையன் என்று பிறர் சொலினும் கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்தையில்லை வான்நிலாவும் மலரும் மழைவெயிலும் அதிசயமில்லை வானவன் படைத்தத…

  17. "தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!" "தோழனாய் நீயிருக்கத் துன்பமேது அன்பே ஆழமான உன்இதயத்தில் நானே இருப்பேனே! அழகான என்னுடலும் உனக்கே தருவேனே அழலாக பாசம் நெஞ்சில் சுடர்விடுகிறதே ஈழம் தந்த வீரனே வாழ்கவாழ்கவே!" "காதலர் தினம் ஆண்டுக்கு ஒன்றல்ல காலம் முழுவதும் அன்பின் நாளே! காமம் ஒருபக்கம் நட்பு மறுபக்கம் காத்திருப்பேன் என்றென்றும் எந்தன் பாதிக்கு கார்த்திகை தீபத்தின் நாயகன் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்" "பெருவெடிப்பு ஒன்று சிதறிப் பாய சிதறிய ஒவ்வொன்றும் ஒரு உலகமாக உலகம் எல்லாம் வெவ்வேறு அழகு தர காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ள மகிழ்ச்சி தந்த உத்வேகத்தில் தூரிகை எடுத்து வரையத் தொடங்கினேன்!" "மாலைக் காற்று மெதுவாய் வீச பாடும் குயில்கள் பறந்து செல்ல வானவில் ஜாலங்கள் புரிய மனதை நெருடி மகிழ்ச்சி தர நாணம் கொண்ட என்னவளை நினைத்து என் எண்ணத்தின் பெரு வெடிப்பில் சிதறிய அவள் அழகுத் துகள்களை பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து ஓவியம் ஆக்கினேன்!" "அகன்ற மார்பும் சிறுத்த இடையும் …

  19. புதுக் கவிதை / நவீன கவிதை: "விடுதலையின் வித்து" "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டு, உரம் இட்டு கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!" "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்றுச் சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!" "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் ச…

  20. "மனித மனம் திருப்தி அடையாது" "மனித மனம் திருப்தி அடையாது மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது மற்றவரை தாழ்த்தாமல் வாழ முடியாது!" "கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான் கடும்மழை பொழிந்தால் திட்டித் தீர்க்கிறான் கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான் கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்!" "இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும் இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்!" "சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை சிலருக்கு வைக்க இடமே இல்லை சிக்கனம் …

  21. "தளிராடும் தூறலில்" "தளிராடும் தூறலில் தாங்காத மோகத்தில் துளிர்விடும் இன்பக் காதல் நினைவில் ஒளிவீசும் உன் ஈர்ப்பு விழிகளில் எளிமை கொண்ட வீரநடை காண்கிறேன்! குளிர் காய்கிறேன் ஈரமாய் நனைகிறேன்!" "எண்ண முடியா உடல் கவர்ச்சியும் எண்ணம் புரியா மௌனத்தின் அழகும் வண்ணம் போடும் ஆகாயத்தின் எழிலும் மண்ணில் விழும் துளிகள் சொல்கின்றனவே! விண்ணில் உன் முகம் தெரிகிறதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  22. "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து க…

  23. "அன்பே ஆருயிரே" "அன்பே ஆருயிரே அழகான மயிலே கன்னம் இரண்டும் சிவந்தது எனோ? சின்ன இடை ஆசையத் தூண்டுதே அன்ன நடையில் அருகில் வாராயோ? இன்பக் கடலே என்னைத் தழுவாயோ?" "காதலே காவியம் படைக்கும் உறவே மோதலைத் தவிர்த்து புன்னகை பூக்காயோ? ஆதரவாய் என்றும் நான் இருப்பேனே இதயத்தில் வலியை ஏன் தருகிறாய்? சாதல் வருமுன் என்னை அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  24. தடம்புரண்டோடும் மனித வாழ்வில் தடம்புரளா வண்டி போல் அவன் தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில் தபுதாரனற்ற ஒருத்தன் தவிப்பில் அவள் தவிர்க்க முடியாது தவித்த அவன் விழிகள் தத்தை அவள் தகிக்கும் வதனம் காண...... தண்ணீர் போல் கண்ணீர் தத்தளிக்கும் துளிகள் தரவரிசையாய் சரிகின்றன. தவிக்கிறது அவன் மனசு தரமறியாது தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க.. தவிர்த்த விழிகள் தகர்ந்து போகின்றன தகரடப்பா போல் போனுக்கு தத்தை அவள் கண்ணீர் கோலம் தரவாகிறது தகவலாய் மறுமுனை தாவ தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...! தகர்கிறது தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில் தகரும் அவள் வதனப் பூச்சொடு …

  25. "உயிரின் உயிரே!" "அன்பு கொண்டு .... அருகில் வந்தேன் ஆதரவு சொல்லி .... ஆனந்தம் தருவாயோ? இன்பம் மலர .... இருவரும் சேர்ந்தோம் ஈருடல் ஒன்றாக .... ஈரமான ரோசாவே உலகம் மறந்து .... உவகை கொண்டோமே!" "ஊமை விழியில் .... ஊர்வலம் சென்று எழுச்சி கொண்ட .... எம் காதலே ஏமாற்றாமல் இவனின் .... ஏக்கம் தணியாயோ? ஐம்புலனும் தேடும் .... ஐயமற்ற அழகியே ஒப்பில்லா என் .... உயிரின் உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.