Jump to content

சென்று வாருங்கள் அண்ணா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி 
அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் 
தொலைபேசியும் அனுமதியில்லை 
தொடர்புகொள்ளவும் முடியவில்லை 
மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் 
மீளாத்துயில் கொண்டதேனோ!

சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் 
இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் 
பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே!
இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது 
இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே!
ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து 
சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் 

கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே 
தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ 
தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு 

இருபத்தொரு அகவையிலே ஆசிரியனாய் நீங்களும் 
படிப்பு செலவு முதல் உடுப்பு வரைக்கும் 
நான் கேட்க்காமலேயே செய்தீர்கள் 
அன்பால் எனை என்றும் அரவணைத்தே சென்றீர்கள் 
அலறித்துடிக்கின்றேன் ஆறுதல் சொல்ல வருவீரோ!

பிள்ளையின் பரீட்சசைக்காய் உங்கள் உடல் நலனை மறந்தீரோ 
பிள்ளைகள் கல்வியே உங்கள் கனவென்று சொல்வீர்கள் 
பாதிக்கனவினிலே பரலோகம் சென்றீரோ!

உங்களிடம் கற்றவரும் உற்றாரும் உறவினரும் 
உங்கள் பாசமுகம் காண ஏங்கியே தவிக்கின்றார் 
உறக்கம் கலைந்திங்கு ஓடித்தான் வருவீரோ!

பரபரக்கும் இப்புவியில் உங்கள் கடமை முடிந்ததென்று 
பாதியில் ஓய்வெடுக்க பரமனிடம் சென்றீரோ!
உங்கள் கனவனைத்தும் உறுதியாய் நிறைவேறும் 
பாசமாய் உங்கள் சகோதரர் நாமுள்ளோம் 
கவலை ஏதுமின்றி சென்று வாருங்கள் அண்ணா! 

  • Like 8
  • Thanks 1
  • Sad 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவை சந்திக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இத்துயரம் நிகழும் என எண்ணவில்லை. அப்பெருமகனின் சாதனையில் துளியளவைப் பகிர்ந்ததற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, வாதவூரான் said:

அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி 
அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் 
தொலைபேசியும் அனுமதியில்லை 
தொடர்புகொள்ளவும் முடியவில்லை 
மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் 
மீளாத்துயில் கொண்டதேனோ!

சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் 
இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் 
பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே!
இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது 
இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே!
ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து 
சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் 

கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே 
தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ 
தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு 

இருபத்தொரு அகவையிலே ஆசிரியனாய் நீங்களும் 
படிப்பு செலவு முதல் உடுப்பு வரைக்கும் 
நான் கேட்க்காமலேயே செய்தீர்கள் 
அன்பால் எனை என்றும் அரவணைத்தே சென்றீர்கள் 
அலறித்துடிக்கின்றேன் ஆறுதல் சொல்ல வருவீரோ!

பிள்ளையின் பரீட்சசைக்காய் உங்கள் உடல் நலனை மறந்தீரோ 
பிள்ளைகள் கல்வியே உங்கள் கனவென்று சொல்வீர்கள் 
பாதிக்கனவினிலே பரலோகம் சென்றீரோ!

உங்களிடம் கற்றவரும் உற்றாரும் உறவினரும் 
உங்கள் பாசமுகம் காண ஏங்கியே தவிக்கின்றார் 
உறக்கம் கலைந்திங்கு ஓடித்தான் வருவீரோ!

பரபரக்கும் இப்புவியில் உங்கள் கடமை முடிந்ததென்று 
பாதியில் ஓய்வெடுக்க பரமனிடம் சென்றீரோ!
உங்கள் கனவனைத்தும் உறுதியாய் நிறைவேறும் 
பாசமாய் உங்கள் சகோதரர் நாமுள்ளோம் 
கவலை ஏதுமின்றி சென்று வாருங்கள் அண்ணா! 

🙏.........

உங்களின் அண்ணாவின் மறைவிற்கு, இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சகோதரரின் இழப்புக்கு வருந்துகின்றோம்........ஆழ்ந்த இரங்கல்கள்........!  

Link to comment
Share on other sites

அண்ணாவின் இழப்பு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள், வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாதவூரான் said:

உங்கள் கனவனைத்தும் உறுதியாய் நிறைவேறும் 
பாசமாய் உங்கள் சகோதரர் நாமுள்ளோம் 
கவலை ஏதுமின்றி சென்று வாருங்கள் அண்ணா! 

large.IMG_6514.jpeg.d72319ac2c0441fb0fcb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

அண்ணாவை சந்திக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இத்துயரம் நிகழும் என எண்ணவில்லை. அப்பெருமகனின் சாதனையில் துளியளவைப் பகிர்ந்ததற்கு நன்றி.

 நன்றி ஏராளன் 

17 hours ago, ரசோதரன் said:

🙏.........

உங்களின் அண்ணாவின் மறைவிற்கு, இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், வாதவூரான்.

 நன்றி ரசோதரன் 

15 hours ago, suvy said:

உங்கள் சகோதரரின் இழப்புக்கு வருந்துகின்றோம்........ஆழ்ந்த இரங்கல்கள்........!  

 நன்றி தாத்தா

12 hours ago, nunavilan said:

அண்ணாவின் இழப்பு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள், வாதவூரான்.

 நன்றிநுணா அண்ணா

12 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6514.jpeg.d72319ac2c0441fb0fcb

 நன்றி கவி அண்ணா

9 hours ago, இணையவன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

 நன்றி இணையவன் அண்ணா

9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

 நன்றி ஈழப்பிரியன் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்... வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2024 at 15:22, வாதவூரான் said:

 

உங்கள் ஏங்கல் கண்ணீரை வரவழைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 25/5/2024 at 15:04, யாயினி said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏

நன்றி யாயினி

On 25/5/2024 at 17:05, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்... வாதவூரான்.

நன்றி தமிழ்சிறி அண்ணா

On 26/5/2024 at 18:06, நியாயம் said:

துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!

நன்றிநியாயம் அண்ணா

23 hours ago, குமாரசாமி said:

உங்கள் ஏங்கல் கண்ணீரை வரவழைக்கின்றது.

நன்றி தாத்தா

18 hours ago, புங்கையூரன் said:

கண்ணீர் அஞ்சலிகள்…!

 நன்றி அண்ணா

18 hours ago, பெருமாள் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏

நன்றி அண்ணா

17 hours ago, Ahasthiyan said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

நன்றி அண்ணா

17 hours ago, கந்தப்பு said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

நன்றி தாத்தா

Edited by வாதவூரான்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத்  துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும்  செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌  
    • ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்?  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • வாறது தமிழனுக்கு அடுத்த ஆப்பைச் சொருக. அதனால இனி அடிக்க மாட்டாங்கள். 2005 இல இருந்து இண்டைக்கு மட்டும் இலங்கையின்ர உற்ற நண்பன் இந்தியாதானெண்டு சிங்களத்துக்குத் தெரியும். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.