தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
சில்மிஷம், சீண்டல்.. ஒருத்தரும் வாலாட்ட முடியாது.. ஒட்ட நறுக்க வந்துவிட்டது "பிங்க் கலர்" வண்டி பெண்களிடம் ஆகட்டும், குழந்தைகளிடம் ஆகட்டும்.. அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவே பிங்க் கலரில் ஒரு புதிய ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. நம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கம், பயத்தை சமீப காலமாக அதிகமாகவே தந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்த அரசு முயன்று வந்தது.அதன்படி, மாவட்டந்தோறும் இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கபட்டு மகளிர் ஸ்டேஷனுடன் இணைத்து செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுக்கு தலைவராக ஏடிஜிபி ரவி இருக்கிறார். இந்த பிரிவுதான், பெண்கள் மற்றும் குழந்தைகள…
-
- 0 replies
- 1.2k views
-
-
"'உங்க உயிரு என் மடியிலதாம்மா போகும். கவலைப்படாதீங்க'ன்னு ஆறுதல் சொன்னா!'' ஒரு அம்மாவுக்கு, தான் பெற்றவர்களில் `ஓஹோவென்று வாழும் பிள்ளைகளை'விட, வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற பிள்ளைகள் மீதுதான் அக்கறை அதிகம் இருக்கும். பாசத்தைக்கூட, அந்தப் பிள்ளைகளின் மீது சற்று கூடுதலாகத்தான் காட்டுவார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதியாக இருக்கிற நளினியின் அம்மா பத்மாவின் நிலையும் இதுதானே... 28 வருடங்கள் அம்மாவையும் குடும்பத்தையும் பிரிந்து சிறையில் இருந்துவிட்டு, மகள் திருமணத்துக்காக தற்போது ஒரு மாத பரோலில் வந்திருக்கும் நளினி எப்படியிருக்கிறார்; அவருடைய இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள அவருடைய அம்மா பத்மாவிடம் பேசினோம். …
-
- 2 replies
- 1.4k views
-
-
நாட்டிலேயே மோசமான மாசு ஏற்படுத்தும் ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று.. மத்திய அரசு நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் பேராசிரியர் பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார். வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளவர் அரசுத்தரப்புக்கு உதவியாக இருக்க வேண்டும் என ஆலைதரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததைச் சுட…
-
- 0 replies
- 552 views
-
-
வி.கே.புரம்: பாபநாசம் அணை 100 அடியை எட்ட இன்னும் 3 அடிகளே தேவை. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை சற்று குறைந்த நிலையில் பாபநாசம் அணை நாளை 100 அடியை எட்டுமா? என்று விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக ஆக.5ம் தேதி முதல் மலைப்பகுதியிலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் தொடர்ந்து சாரல் பொழிந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் குண்டாறு அணையும், கொடுமுடியாறு அணையும் நிரம்பியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை நேற்று சற்று குறைந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 94.80 அடியாக இருந்தது இன்று காலை 97 அடியானது. அணைக்கு வினாடிக்கு 1521 கனஅடி நீர் வருகிறது. 154.75 …
-
- 2 replies
- 912 views
-
-
திமுக கச்சத்தீவை தாரை வார்த்தது ஏன்? – விஜயகாந்த் மகன் கேள்வி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்க சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என தெரிவிக்கும் தி.மு.க, கட்ச தீவை மட்டும் தன்னிற்சையாக இலங்கைக்கு தாரை வார்த்தது ஏன் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் கேள்வியெழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ தெரிவித்த கருத்தால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் கூட்டணி கட்சிக்குள் ஏற்பட்டிரு…
-
- 1 reply
- 886 views
-
-
வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி முடிவு இன்று! வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 அறைகளில் எண்ணப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு அறையிலும் தலா 14 மேசைகள் போடப்பட்டுள்ளதுடன், வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. மழைவருவதற்கான வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் துணை…
-
- 17 replies
- 1.5k views
-
-
ஆகஸ்ட் 15 நடக்க உள்ள தேர்தல் எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் ஏன் நாங்கள் அமெரிக்கா போன்று வரமுடியாது ? 12000 கிராமங்களையும் எவ்வாறு மாற்ற வேண்டும் ? எவ்வாறு மக்கள் தங்கள் தேவைகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பேச்சு
-
- 0 replies
- 469 views
-
-
தமிழ் நிலத்துக்கே உரிய வழிபாடு, முருகன் வழிபாடு. முருகனைப் பற்றி குறிப்பிடும்போதும் 'தமிழ்க் கடவுள்' என்றே சொல்கின்றனர். தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்கிறார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறியிருக்கும் இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் முருகக் கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பத்துமலைக் குகைக் கோயில் மிகவும் பிரபலமானது. இயற்கையாக உருவான சுண்ணாம்புக் குகைக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைதான், இதன் புகழுக்குக் காரணம். இந்த பிரமாண்ட முருகனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் மலேசியாவிற்குச் செல்கின்றனர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
`மிசோரத்தில் உள்ளதை எடுங்கள். இந்தி மொழிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை எடுக்க வேண்டும்.'' ''நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் மக்களின் முடிவு. ஆனால், தொடர்ந்து களத்தில் நிற்பதுதான் எங்களது கொள்கை. அதனால்தான் அனைத்துத் தேர்தலிலும் போட்டியிடுகிறோம்'' என்று வேலூர் தேர்தல் முடிவு பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சீமான் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''தி.மு.க, அ.தி.மு.க தேர்தலை எந்த அளவுக்கு நேர்மையாகச் சந்திக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறது பெரும்…
-
- 2 replies
- 1.2k views
-
-
பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்- தமிழிசை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இடையிலான வார்த்தை மோதல் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் தெரிவித்ததாவது, “தமிழகத்தைப் பொருத்தவரையில் வைகோவும், கே. எஸ். அழகிரி சண்டை போட ஆரம்பித்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வரை எதையும் பேசாமல், தெரிவு செய்யப்பட்ட பிறகு காங்கிரசை குறை கூறுகிறார் வைகோ. அவர் கூறுவதிலும் சில கருத்துகள் இருக்கின்றன. அழகிரி சொல்வதிலும் சில கருத்துகள் உள்ளன. ஆக பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தார்கள். இ…
-
- 0 replies
- 598 views
-
-
அணைகள் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடங்கிப் போய் கிடக்கிறது. கடந்த வாரம் வரை, நீர்நிலைகள் மைதானமாக காட்சியளித்த நிலையில், தற்போது சாலைகளே நீர்நிலைகளாக மாறிவிட்டன. புதன்கிழமை மழை பெய்யத் தொடங்கியபோது, இதுவும் சாதாரண மழைதான் என்று கோவை மக்கள், தங்களது டே பிளானை (Day plan) அமைத்திருப்பார்கள். ஆனால், மழை வேறு பிளானை செயல்படுத்திவிட்டது. புதன்கிழமை தொடங்கிய மழை, வெள்ளிக் கிழமை வரை கொட்டிக்கொண்டிருக்கிறது. வால்பாறை முற்றிலுமே முடங்கிப் போய்விட்டது. பழங்குடி கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்மழை காரணமாக, கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை தகவலை முன்னிட்டு மத்திய உளவுத்துறை கொடுத்துள்ள தகவலால் சென்னை விமான நிலையத்துக்கு ‘ரெட் அல்ர்ட்’ கொடுக்கப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் 73வது சுதந்திர தின விழா வருகின்ற 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இக்கோலாகல கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 603 views
-
-
August 8, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக போர் நின்றுவிடும், நல்லது நடக்கும் என தவறான தகவல்களை பிரபாகரனிடம் வைகோ அளித்து வந்தார். ஈழத் தமிழர…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசியல் எனக்கு பிடிக்கவில்லை.. வேதனைதான் மிச்சம்.. விலகுகிறேன்.. தீபா அறிவிப்புஅரசியலில் இருந்தே முழுசா விலகுவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்து உள்ளதுடன், அரசியல் எனக்கு பிடிக்கவில்லை, வேதனைதான் மிஞ்சியது என்றும் வருத்தப்பட்டு கூறியுள்ளார். தீபாவின் முடிவை தற்போது அவரது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் கொண்டாடிக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பற்றி, ஜெயலலிதா இறந்தபிறகுதான் நிறைய விஷயங்கள் வேகவேகமாக வெளியே வந்தன. ஆனாலும் சர்ச்சைகளாலேயே ஃபேமஸ் ஆனவர்தான் தீபா. ஒரு கட்சியை ஆரம்பித்த உடனேயே அலப்பறை என்றால் அது தீபாவின் 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்புதான். கட்சி ஆரம்பித்து 2 வருஷம் ஆக போகிறது.. ஆனால் கட்சியின் செயல்பாடுகள் என்ன, கொள்…
-
- 5 replies
- 1.2k views
-
-
முதுகெலும்பை பற்றி திமுக பேசலாமா?! on August 8, 2019 காஷ்மீர் பிரச்சனை விவாதத்தில் குறுக்கிட்டு பதிலளிக்க முயன்ற அதிமுக MP ரவீந்திரநாத்தை “மக்களவை என்பது முதுகெலும்பு உள்ளவர்கள் பேசும் இடம். உங்களுக்கு முதுகெலும்பே கிடையாது, உட்காருங்கள்” என்று கூறி இருக்கிறார் TR பாலு. முதுகெலும்பு பற்றி யாரெல்லாம் பேசுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. எனக்கு இது குறித்துக் கடுமையான கோபம் வரக்காரணமே “முதுகெலும்பு” வார்த்தை தான். வேறு ஏதாவது கூறியிருந்தால், பத்தோடு பதினோராவது விமர்சனமாகக் கடந்து சென்று இருப்பேன். Image Credit – Mobile Journalist இவர்கள் 2009 ல் 40 MP பதவிகளை வைத்துக்கொண்டு காங் அரசுக்கு எதிரா…
-
- 0 replies
- 688 views
-
-
இனத்தை அழித்த பாவி காங்... அற்ப புத்திக்காரர்கள்.. என்னை எம்பியாக்கியது திமுக எம்எல்ஏக்கள்.. வைகோ ! சென்னை: இனத்தை அழித்த பாவிகளான காங்கிரஸ் தயவில் நான் எப்போதும் எம்பியாக மாட்டேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசம் பொங்க கருத்து தெரிவித்தார்.காஷ்மீர் விவகாரத்தில் முதல் குற்றவாளி காங்கிரஸ்தான் என மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதை காங்கிரஸ் கட்சி கண்டித்தது. வைகோவை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் வைகோ அரசியல் நாகரீகமற்றவர். கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சிக்கிறார். காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக வைகோ பேசியது தவறு. மல்லை சத்யா காங்கிரஸ…
-
- 1 reply
- 1k views
-
-
நாயில் சாதி இருக்கும்போது மனிதரில் சாதி இருக்கக் கூடாதா ? சாதி வெறிப் பேச்சுக்கு கண்டனம் !! கேரள மாநிலம் கொச்சியில் கடந்த ஜூலை 19 முதல் 21 ம் தேதி வரை தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதன முறையை நியாயப்படுத்தியும், நாயையும் மனிதர்களையும் இணைத்தும் வெங்கடகிருஷ்ணன் என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். நாய்களில், பொம்மரேனியன், லேப்ரேடர் போன்ற பல ஜாதிகள் இருக்கும் போது, மனிதர்களிடம் ஏன் ஜாதி இருக்கக் கூடாது. மனிதர்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற முறை இருக்கிறது என்று கூறினால் ஏன் திட்டுகிறார்கள்” என்று சூப்பர் விளக்கம் ஒன்றை கொடுத்தார். அவரது அந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும்…
-
- 2 replies
- 1.2k views
-
-
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி.ரவீந்திரநாத் பேசியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீர் மறுசீராய்வு சட்ட மசோதா 2019-ல் கொண்டுவந்த மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தன்னுடைய பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 1984-ல் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இதே மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீரில் சில பிரிவினையான சக்திகளால் மக்கள் ஒடுக்கப்படுகின்ற ஒரு சூழல் நிலவுகிறது, அதற்கு மத்திய அரசாங்கம் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், ஆளுநர் ஆட்சியை ஜம்மு-காஷ்மீரில் அமுல்படுத்த முடியுமா என்ற கேள்வியை எழுப்பியும், இந்தியாவுடன் ஜம்மு- காஷ்மீரை இணைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையாக மாநிலங்களவையில் எழுப்…
-
- 1 reply
- 458 views
- 1 follower
-
-
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறந்த அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று மக்களவையிலும் இந்த மசோதைவை அமித்ஷா தாக்கல் செய்தார், தொடர்ந்து இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மறுசீரமைப்பு மசோதாவுக்கு அதிம…
-
- 1 reply
- 428 views
-
-
பா.ஜ.கவின் வருகை இலங்கை மக்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது – தமிழிசை! பாரதிய ஜனதா கட்சி ஆட்ச்சிக்கு வந்த பின்னர் தமக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என இலங்கை மக்கள் கூறுவதாக, பா.ஜ.க வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பா.ஜ.க தமிழகத்திற்கு தேவையான நல்ல திட்டங்கள் பலவற்றை அளித்துக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க எதைக் கொண்டுவந்தாலும் தி.மு.க அதனை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பிரதமரின் வருகை எங்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது என இலங்கை மக்கள் கூறுகிறார்கள் தற்போது வேலூர் தேர்தல் நடைபெறுவதற்கு காரணமே தி.மு.கதான். ஆனால…
-
- 1 reply
- 507 views
-
-
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 35 ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான நிலை நீடித்துவருவதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் கைது…
-
- 0 replies
- 494 views
-
-
செயற்கைகோள் தயாரித்த வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்கள் கரூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்து அசத்தினர். இந்த செயற்கை கோள் வருகிற 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. கரூர்: விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்‘ என்ற போட்டியை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு அறிவித்திருந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-வகுப்பில் படிக்கும் மாணவர் நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் தங்களின் அறிவியல் ஆசிரியர் தனபால் வழிகாட…
-
- 1 reply
- 564 views
-
-
"தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா ஆகியவற்றை திமுக உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் எதிர்த்தனர். தேர்ந்தெடுத்த அரசு இல்லை மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா "இதை நான் எதிர்க்கிறேன். இந்த சட்டத் தீர்மானமும், மசோதாவும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேவையற்றது. நீங்கள் இந்த மாற்றங்களை உருவாக்க நினைத்தாலு…
-
- 1 reply
- 700 views
-
-
வேலூர் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. வாக்களிக்க மக்கள் ஆர்வம். வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கான லோக்சபா தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் சார்பில் எஸ்.தீபலட்சுமி, உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டுள்ளனர்.வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி, வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்ப…
-
- 0 replies
- 566 views
-
-
பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தி.மு.கவின் மூத்த தலைவரான துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறார். முத்தலாக் சட்டத்தின் காரணமாக பா.ஜ.க. மீதும் அ.தி.மு.க. மீதும் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதால் அவர்களது வாக்குகளும் தங்களுக்கே கிடைக்குமென தி.மு.க. நம்புகிறது. தற்போது மக்களவையில் அ.தி.மு.கவின் சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார். ஏ.சி. சண்முகம் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த எண்ணி…
-
- 1 reply
- 700 views
-