Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் July 22, 2019 ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நளினி ஆறு மாதம் பரோல் கேட்டிருந்த போதும் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டது. மத்திய சிறையில் இருந்து வெளியே வரும் அவர் ; உறவினர்களுடன் தங்குவதற்காக வேலூரில் வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த நாட்களில் இவர் அங்கு மட்டுமே தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 ஆண்டு சிறை வாழ்க்கையில் அதிக நாட்கள் நளினி பரோலில் வெளியே வருவது இது முதல் முறையாகும். இறுதியாக நளினி தன்னுடைய தகப்பனாரது இறுதிச் சட…

  2. தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இந்தி திணிப்பை மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையில் இந்தியர்களே மற்ற நாட்டவர்களுக்கு குருவாக இருப்பார்கள். தொழில்முனைவோரை உருவாக்கிடவும், தொழில்களை பெருகிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். சூட்கேஸ்கள் ஆங்கிலேயரின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக் கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் வரவு செலவு திட்டம் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்…

  3. தமிழகத்தில் நெல்லை, மதுரை, தேனி உள்பட 14 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாக தமிழகத்தை சேர்ந்த 14 பேர் துபாயில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லியில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 14 பேர் இல்லங்களிலும் சென்னை, மதுரை, தேனி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்த வருகிறது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்…

    • 0 replies
    • 628 views
  4. உழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் அண்ணாச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகரிலுள்ள சிறிய கிராமத்தில பிறந்தவராவார். தனது 12 வயதில் இருந்து உழைக்க ஆரம்பித்தார். அப்போது போக்குவரத்து வசதி கூட இல்லாத அந்த அந்த கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வந்த ராஜகோபால், முதலில் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்றில் மேசை துடைக்கும் பணியாளராகவே தனது பணியை தொடங்கினார். பின்னர் ஹோட்டல் டீ மாஸ்டருடன் பழகி டீ போடுவது எப்படி என்பதை கற்று கொண்டு டீ மாஸ்டராக மாறினார். இதன் பின்னர் பலசரக்குக்டை ஒன்றை தொடங்கினார். அப்போது பகல் வேளையில் கடைக்கு வந்த ஒருவர் அண்ணாச்சி சமான்களை சீக…

  5. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓனர் ராஜகோபால் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல் ஜீவஜோதி என்பவரது கணவர் சாந்தகுமரை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுள் தண்டனையை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபால், கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது ராஜகோபாலின் உடல்நிலை மோசமாக உள்ளதாக ஸ்டான்லி மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொலை வழக்கில் தண்டனை பெற ராஜகோபாலுடன் சரணடைந்த ஜனார்த்தனன் என்பவருக்கும், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜாதகம், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டி…

  6. அத்திவரதரை தரிசிக்க வந்து, கூட்ட நெரிசலில் சிக்கி... ஒரே நாளில் 4 பக்தர்கள் பலி.. காஞ்சியில் பரபரப்பு காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி இரு ஆண்கள், இரு பெண்கள் என 4 பேர் பலியாகியுள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பிரசித்தி பெற்ற வைபவமான அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த 1979-இல் நடந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனந்தசயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.அத்திவரதர் வைபவத்துக்காக 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி…

  7. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினியால் தொடரப்பட்ட வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு அனுமதியளிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை மேல் நீதிமன்றில்; மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணையின…

    • 0 replies
    • 409 views
  8. கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43 டி.எம்.சி. நீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மழை அளவு மற்றும் அணைக்கான நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு சம்மதம் தெரிவித்த நிலையில் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் கர்நாட அண…

  9. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூரைச் சேர்ந்த பெண்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாத…

  10. சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர், முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க இருப்பதாக கூறினார். சென்னையில் 80 பேருந்துகளும், மதுரை மற்றும் கோவையில் தலா 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். மொத்தமாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே போக்குவரத்து துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில், பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமு…

  11. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்! ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தால் எதுவுமே சாத்தியம் என்பதை இந்தி- ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்து இன்று தமிழக எம்.பி.க்கள் நிரூபித்திருக்கின்றனர். தபால்துறை அண்மையில் பல்வேறு பணி இடங்களுக்கு போட்டித் தேர்வை நடத்தியது. பொதுவாக இத்தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். இம்முறை திடீரென இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இத்தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்தது. இந்நிலையில் 989 தபால்துறை ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை துறைசார் த…

  12. தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் ஆயுத உதவி செய்ய வேண்டும் என தாம் கேட்டதாக மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து பேசும் போது வாஜ்பாய் முன்பு ஆற்றிய ஒரு உரையை மேற்கோள்காட்டினேன். வங்கதேச தனிநாட்டை உருவாக்கியதற்காக இந்திரா காந்தியை துர்காதேவியாக பார்க்கிறேன் என வாஜ்பாய் பேசியிருந்தார். அதே போல தனி தமிழ் ஈழத்தை உருவாக்கி கொடுத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு உங்களை அன்னை பராசக்தியாக தமிழர்கள் வணங்குவார்கள் என்றேன். அப்போது உணர்ச்சிவசப்பட்ட இந்திரா காந்தி அம்மையார், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகிற தமிழர்கள் அம்மண்ணின் பூர்வகுடிகள் என பிரகடனம் செய்தார். h…

  13. பிற மாநிலங்களைப் போல அதிமுக ‘பெருந்தலைகள்’ கூண்டோடு அப்படியே பாஜகவில் ஐக்கியமாகின்றனவா ? தமிழகம் தவிர பிற மாநிலங்களில் கட்சிகளை காலி செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. இதனால் பல கட்சிகள் கரைந்து பாஜகவின் கை ஓங்கி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜக கட்சிகளை கலைக்கும் விளையாட்டை இன்னமும் தொடங்காமல் இருக்கிறது. அதேநேரத்தில் அப்படி கலைத்து விளையாடும் போது படு உக்கிரமானதாகத்தான் இருக்கும் என்பதற்கான அடித்தளம் வலுவாக போடப்பட்டு வருகிறது.தற்போதைய நிலையில் அதிமுகவை தம் பிடியில் வைத்திருக்கிறது. முதல் கட்டமாக அதிமுகவின் 7 ராஜ்யசபா எம்.பிக்களை தம் பக்கம் வளைக்கப் போகிறது. இதன் மூலம் ராஜ்யசபாவில் பலத்தை உயர்த்த நினைக்கிறது பாஜக.இதனைத் தொடர்ந்து கட்சிகளின் பெருந்தல…

  14. மீனாட்சி அம்மன் கோவிலின் அருகில் பாதாள சிறை கண்டுப்பிடிப்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அருகில் பழமையான பாதாள சிறையொன்று கண்டறியப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகனம் நிறுத்துமிடம் அமைப்பதற்காக 30 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 10 அடி நீளம் கொண்ட கருங்கல் தூண் ஒன்று வெளிப்பட்டுள்ளது. குறித்த தூண் பாதள சிறை என்பதை உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இராணி மங்கம்மாள் காலத்தில் இது சிறைச்சாலையாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/மீனாட்சி-அம்மன்-கோவிலின்/

  15. உதயநிதி ஸ்டாலினுக்கு, "திராவிட புதல்வன்" பட்டம்- ரசிகர்கள் அதிரடி! திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு 'திராவிட புதல்வன்' பட்டம் கொடுத்துள்ளனர் கரூர் ரசிகர்கள். திமுகவுக்குள் திடீரென நுழைந்தார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி. லோக்சபா தேர்தலிலும் உதயநிதி பிரசாரம் செய்தார்.மேலும் லோக்சபாவில் தமது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கியும் கொடுத்தார் உதயநிதி. தேர்தலில் திமுக வென்றதையடுத்து உதயநிதிக்கு கட்சிப் பதவி வழங்க கோரி திமுக மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதை ஏற்று திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார். பதவியில் அமர்ந்த உடனே இளைஞரணி கூட்டத்தைக் கூட்டினார்.இந்நிலையில் கரூரில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உதயநிதி …

  16. 4 நாட்களில் பிணையில் வருகின்றார் நளினி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, இன்னும் 4 நாட்களில் பிணையில் வெளியே வரவுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். நளினியின் மகள் ஹரித்ரா திருமணத்திற்காக பிணையில் வருகைத் தரவுள்ளதுடன் அவரது மகளும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் பிணை ஆவணங்களை, வேலூர் சிறை நிர்வாகத்திடம் இன்று (சனிக்கிழமை) வழங்கிய பின்னர் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நளினியின் மகள் திருமணத்திற்கு 6 மாதங்கள் பிணை கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் 1 மாத காலம் மாத்…

  17. `தமிழ்நாடு என்ன அடிமை தேசமா?' - - அஞ்சல்துறை தேர்வில் தமிழ் ரத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! தேர்தல் முடிந்து நாளை அஞ்சல்துறை தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இரண்டு நாள் முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சல்துறை இந்திய அஞ்சல்துறை தொடர்பாக போஸ்ட்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாது என்று நேற்று முன்தினம் மத்திய அரசு தபால்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அஞ்சல்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான முதல்தாளுக்கான தேர்வு இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்த வேண்டும். இரண்டாம் தாளுக்கான தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் ந…

  18. சென்னை மண்ணடி மற்றும் நாகை மாவட்டம் சிக்கலில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இலங்கைக் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவில் இருக்கலாம் என்ற தகவலால், அவர்கள் குறித்த விசாரணை நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கைக் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், உளவுத் துறையின் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் சோதனை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை மண்ணடி, புரசைவாக்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், மஞ்சக்கொல்லை ஆகிய பகுதிகளில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினர். சென்னையில் என்.ஐ.ஏ சோதனை நாகையில் தேசியப் புலனாய்வு ம…

    • 0 replies
    • 521 views
  19. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சிப்காட் நிறுவனம் மூலம் ₹634 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார். பேரவையில் நேற்று பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படித்த அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்க்க `யாதும் ஊரே’’ என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்சு, இஸ்ரேல் மற்றும…

    • 0 replies
    • 605 views
  20. வேதனையில் வெம்பும் முகாம் தமிழர்கள்! ‘இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது. திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன், யோகேஸ் வரன் உள்ளிட்ட 65 இலங்கைத் தமிழர்கள், இந்திய குடியுரிமை வழங்கக்கோரி கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய போதுதான் நீதிபதி இப்படிச் சொன்னார். இந்த வழக்கில், ‘16 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, அதுதொட…

    • 0 replies
    • 438 views
  21. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகள், பொதுமக்கள் குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரிதும் நம்பியுள்ள வடகிழக்கு பருவமழை, கடந்த சில ஆண்டுகளாக சிறிதளவு கூட பெய்யவில்லை. முன்மழை, பின்மழை, மத்திய மழை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த வடகிழக்கு பருவமழை கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் பெய்யாமல் போய் விட்டது. கடும் புயல் காலங்களிலும் இந்த பகுதியில் மட்டும் சொட்டு தண்ணீர் கூட மழையாகப் பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என்று கூறும் அளவிற்கு ஒரு நாள் பெய்த மழையும் கடல்பகுதியில் பெய்து வீணாகி போனது. …

    • 0 replies
    • 688 views
  22. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு சென்னை மேல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. கடந்த எட்டு மாதங்களாக இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிக…

  23. படத்தின் காப்புரிமை Getty Images ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் முதல் ரயில் இன்று சென்னை வந்தடைந்தது. இந்த ரயில் மூலம் ஒரு தடவைக்கு இரண்டரை லட்சம் தண்ணீர் கொண்டுவர முடியும். சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீரை ரயில் மூலம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்திலிருந்து ரயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்டு, அந்த ரயில் இன்று காலை ஜோலார்பேட்டையிலிருந்து 7.20 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில்…

  24. எல்லை தாண்டி மீன்படித்ததாக நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் 6 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 1 நாட்டுப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது. மே…

    • 0 replies
    • 354 views
  25. தமிழகத்தில் ஹிந்துத்துவா படையெடுப்பை முறியடிப்பேன் என்று மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. “தி.மு.க பிரதிநிதிகளாக சண்முகம், வில்சன் ஆகிய இருவரும், ம.தி.மு.க சார்பில் நானும் மாநிலங்களவைக்கு தெரிவான சான்றிதழை சட்டப்பேரவை செயலாளரிடம் பெற்றிருக்கிறோம். தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் பெரியார் திடலுக்கு சென்று விட்டு, அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு செல்கிறோம். அங்கு அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்திவிட்டு, உறுதிமொழி ஏற்போம். தமிழகத்தை, தமிழினத்தை, தமிழக வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்திற்கே பேராபத்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.