Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யார் நீங்க " என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்... காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர் ஜெ.அன்பரசன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக…

  2. காயமடைந்தவர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் நிதியுதவி #Liveupdates தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடிக்கு வந்துள்ளார். ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களைத் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், கமல்ஹாசன் ஆகியோர் சந்தித்துச் சென்றனர். இந்நிலையில், இன்று தூத்துக்குடி வந்துள்ள ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திக்கிறார். க…

  3. தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள். | படம்: என்.ராஜேஷ். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள அந்த ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் அங்குள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். திடீரென ஏராளமானோர் கூடியதால், அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியது காவல்துறை. போர…

  4. ``துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?’’ - கேள்வியைக் காதில் வாங்காமல் நழுவிச்சென்ற ஓ.பன்னீர்செல்வம் ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். சட்ட ரீதியான பணிகளையும் அரசு செய்யும்" எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில், கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், 13 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம…

  5. ஸ்டெர்லைட்: இந்தியாவில் வேதாந்தாவின் சர்ச்சைக்குரிய 4 திட்டங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு பிறகு வேதாந்தா நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டன் நிறுவனமான வேதாந்தா சர்ச்சையில்…

  6. பி.ஜே.பி-க்கு ஸ்டெர்லைட் கொடுத்தது எத்தனை கோடி? ‘தமிழர்கள் படுகொலை செய்யப் படுகின்றனர். ஏனென்றால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு அடிபணிய மறுக்கின்றனர். மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது’ என ஸ்டெர்லைட் விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். உடனே, பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ‘‘ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். உண்மையில் ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் மட்டுமல்ல, காங்கிரஸுக்கும்கூடத் தொடர்பு இருக்கிறது. டெல்லி அசோகா ரோட்டில் உள்ள பி.ஜே.பி தலைம…

  7. மிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை! கழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன” என்றார். ‘‘அவை என்ன?” ‘‘போர்க்களத்தில்தான் பதுங்கு குழிக்குள் படுத்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படித்தான் தூத்துக்குடியில் வேனில் ஏறிப் படுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஊர்ந்து போய் சுட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு இடுப்புக்கு மேலேயே குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. போலீஸ் நண்பர் ஒருவர். ‘Center Mass பற்றி விசாரியுங்கள்’ என க்ளூ கொடுத்தார். அதுபற்றி விசாரித்த…

  8. தூத்துக்குடி: சட்டவிரோத கைதுகள், சித்ரவதைகள் - போலீஸுக்கு அதிகாரம் அளித்தது யார்? பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "இளைஞர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களை அடிக்கும் அதிகாரத்தை போலீஸாருக்கு யார் அளித்தது?" என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், தூத்துக்குடியில் இருந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி டிபேனுடன் பிபிசி தமிழ் பேசிய போது, "22ஆம் தேத…

  9. "புற்றுநோய் தாக்கியதா? என்ன சொல்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளர்கள்?" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVEDANTA Image captionஸ்டெர்லைட் ஆலை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடங்கிய போரட்டம், துப்பாக்கிச் சூடு - கலவரத்தில் முடிந்தது. குறைந்தது 13 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர். ஸ்டைர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு…

  10. `ஒன்னு கிடக்க ஒன்னு....' - அப்போலோவில் ஜெயலலிதா பேசியது 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நிலவி வந்த குழப்பங்களுக்கு பிறகு ஓ.பி.எஸ் - சசிகலா தலைமையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அது, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதாவது இறப்பதற்கு 68 நாள்கள…

  11. 'நாளைக்கு நிறைய வேலை இருக்கு!'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து வெளிவராத சில தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அன்று நடந்த கலவரம் மற்றும் தடியடியால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது நடந்து நான்கு நாள்கள் ஆகிய பிறகு நேற்றில் இருந்துதான் தூத்துக்குடியில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை தி…

  12. தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்! தூத்துக்குடியில் காவற் துறையின் உச்சபட்ச அராஜகம்…. க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) ———————————– தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் டுக்காக கொலை செய்த போலீசின் வன்மம் தொடர்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஒற்றை மனிதனாக எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே கண்ணில்படுவோர் அனைவரையும் காட்டு மிராண்டித்தனமாகவும் கொலை வெறியோடும் தாக்குதல் நடத்தி தனது விசுவாசத்தை வேதாந்தா குழுமத்திற்கு சமர்ப்பித்திருக்கிறது காவல்துறை. இதன் ஒரு பகுதியே, ம…

  13. அனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை- பகீர் தகவல்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பல முறை அனுமதி இல்லாமல் இயங்கியது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.#bansterlite #sterliteprotest சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி நகர மக்கள் இன்றுடன்(சனிக்கிழமை) சேர்த்து 104-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களில் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நட…

  14. இயல்பு நிலைக்கு திரும்பியது தூத்துக்குடி; மூன்று நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்தது: போலீஸ் பாதுகாப்புடன் பெரும்பாலான பேருந்துகள் இயக்கம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு 3 நாட்களுக்குப் பிறகு நேற்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டம் ஓரளவு இருந்தது. - படம்: மு.லெட்சுமி அருண் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்து, சகஜநிலை திரும்பியது. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் நேற்று காலை முதல் படிப்படி யாக இயங்கத் தொடங்கின. கடைகள், வணிக நிறுவனங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டன. மக்கள் அன்றாடப் பணிகளை தொடங்கினர். தூத்துக்குடியில் ஸ…

  15. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனில்லாமல் உயிர் இழந்தார். கடந்த மாதம் 12-ம் தேதி நுரையீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போலோ மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்படி, காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி(Tracheostomy) அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தப்பின் பா.ம.க இளைஞர…

    • 4 replies
    • 1.5k views
  16. தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி சென்னை: தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை என்றும் விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறினேன். தமிழக அரசு அலட்சியப்படுத்தியதாகவும், அதன் தொடர்ச்சி தான் தூத்துக்குடி சம்பவம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். தூத்துக்குடியில் 99 நாட்கள…

  17. இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் அறிவித்திருந்தன. தூத்துக்குடியில் கடந்த மூன்று நாள்களாக அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடைகள் அடைப்பு, போக்குவரத்து நிறுத்தம், இணையம் துண்டிப்புகளால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெ…

  18. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைVEDANTA புதன்கிழமையன்று இந்த உத்தரவை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஐந்தரை மணியளவில் மின்வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள இந்த ஆணையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பல நிபந்தனைகளை இந்த ஆலை நிறைவேற்றாததால், 2018-2023க்கான இசைவாணை வழங்கப்படவில்லை என்பது ச…

  19. ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும், கரென்ட் கட்... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி. ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டதை அடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உயிருக்கும், விவசாயத்துக்கும், நீருக்கும் உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தூத்துக்குடி மக்கள் கடந்த 3 மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அதுகுறித்து மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளையொட்டி ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்கள் பேரணியாக சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அத…

  20. மிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர் ‘‘ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ் என்று செய்தி பரவி வருகிறதே உண்மையா?” என்று கழுகாருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். அடுத்த நொடி நம்முன் அவர் ஆஜராகியிருந்தார். “உமக்கு அனுப்பிய மெசேஜ்ஜில் இருந்து தொடங்கும்” என்றோம். தலையாட்டியபடியே ஆரம்பித்தார். ‘‘எடப்பாடிக்கும் பன்னீருக்குமான மோதல் புதிதல்ல. நாளுக்கு நாள் அது அதிகமாகிவருகிறது என்கிறார்கள். மனசுக்குள் இருந்த கசப்புகள் இப்போது வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்துள்ளன என்று சொல்கிறார்கள்.” ‘‘வரிசையாகச் சொல்லும்!” ‘‘சமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவி…

  21. போர்க்களமான ஸ்டெர்லைட் போராட்டம்! போலீஸ் தடியடியால் சிதறி ஓடிய பொதுமக்கள்; தூத்துக்குடியில் பதற்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் தூத்துக்குடியில் பதற்றம் நிலவுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் 21 கிராம மக்கள், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதால், தூத்துக்குடி மாநகரம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டம…

    • 82 replies
    • 10.6k views
  22. 'இன்று கர்நாடகம்... நாளை தமிழகம்...' பா.ஜ.கவின் கோஷம் வெற்றிபெறுமா? நல்லதம்பி நெடுஞ்செழியன் “இன்று கர்­நா­டகா…. நாளை தமி­ழகம்” என்ற கோஷத்­துடன், தமி­ழக பா.ஜ.க.(பார­திய ஜன­தா கட்சி)வினர் கர்­நா­டக மாநிலத் தேர்தல் வெற்­றியைக் கொண்­டா­டு­கின்­றனர். கர்­நா­டகா சட்­டப் ­பே­ரவைத் தேர்­தலில் 104 தொகு­தி­களில் மட்டும் வெற்றி பெற்­றுள்ள பா.ஜ.க.விடம் ஆட்­சியை ஒப்­ப­டைத்­துள்­ள­துடன், அதன் மாநிலத் தலைவர் எடி­யூ­ரப்­பாவை முத­ல­மைச்­ச­ரா­கவும் நிய­மித்து, சத்­தியப் பிர­மாணம் செய்து வைத்­தி­ருக்­கின்றார் மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா. கர்­நா­டகா மாநில ஆளு­நரின் இந்த நட­வ­டிக்கை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. அதிக தொகு­தி­களில் வெற்­றி­பெற்ற க…

    • 1 reply
    • 749 views
  23. மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ப்ட்ட்ன்ர். இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச…

  24. தமிழினப் படுகொலைக்கு இராமேஸ்வரத்தில் நூதன முறையில் அஞ்சலி!!! இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக தமிழர் நலம் பேரியக்கம் சார்பில் நேற்று நூதன முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலின் 9ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு மே 18ஆம் திகதியான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். அந்த வகையில் தமிழர் நலம் பேரியக்கம் மற்றும் தமிழர் ஒன்று கூடல் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தை படகு வடிவில் அமைத்து அதனை இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நோக்கி ம…

  25. மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு! ‘‘திடீரென குஷ்பு டாபிக்கல் ஆகிறாரே?” என்று கழுகாரைப் பார்த்ததும் கேட்டோம்! ‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் வந்ததிலிருந்தே குஷ்புவுக்கும் அவருக்கும் ஆகவில்லை. இருவரும் மறைமுகமாக மோதிவந்தனர். இப்போது வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் திருநாவுக்கரசரின் செயல்பாடு பற்றி குஷ்பு விமர்சித்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகரில் நடந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ‘என்னைப் பதவியிலிருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். என்னை நீக்க அவர் யார்? குஷ்பு ஒரு நடிகை. படத்தில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.