தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10299 topics in this forum
-
நாட்டுக்கோழியும்...ரூ.1,000 பணமும்... தீபாவளி பரிசு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ. தீபாவளி பண்டிகையை ஒட்டி கட்சி நிர்வாகிகளுக்கு நாட்டுக்கோழியும், ஆயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தனது தொகுதிக்குட்பட்ட 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு அளித்துள்ளார். இதனால் கலசபாக்கம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் பணிபுரிபவர்கள் மற்றும் சார்ந்து உள்ளவர்களுக்கு தீபாவளி பரிசு வழங…
-
- 0 replies
- 423 views
-
-
பட மூலாதாரம்,X கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 பிப்ரவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் காவல்துறையினர் தேர்வில் இருந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதால், தனது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் தனது அறை எரிக்கப்பட்டதாக தமிழக ஏடிஜிபி ஒருவர் குற்றம்சாட்டிய கடிதம் வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை காவல் துறை மறுத்திருக்கிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஏடிஜிபி மற்றும் உறுப்பினராக இருந்தவர் கல்பனா நாயக். சென்னை எழும்பூரில் உள்ள அவரது அலுவலக அறை, கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில்…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE படக்குறிப்பு, சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 18 மே 2025 'ஒரு மனிதனின் தாழ்ந்த நிலையைக் காரணம் காட்டி கோவில்களில் நன்கொடை பெற மறுப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம்' என, கடந்த ஏப்ரல் 29 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் திருநாகேஸ்வரர் கோவிலில் தங்களை உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறி பட்டியல் பிரிவினர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அறந…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
அனுமதியின்றி தொழுகை: 500 இற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு மதுரை மகபூப்பாளையத்தில் அனுமதியின்றி தொழுகை நடத்திய 550 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் பொது ஊரடங்கு அமுலில் உள்ளது. இதன் காரணமாக பொது இடங்களில் கூடும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினியை பயன்படுத்துதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மகபூப்பாளையம் பகுதியின் அன்சாரி தெருவில் அமைந்துள்ள பொதுப்பாதையில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கிட்டத்தட்ட 500 இற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இரவு 9 மணிக்கு முதல் 10.25 வரை தொழுகை நடத்தியுள்ளனர். இதனையடுத்து தகவ…
-
- 0 replies
- 564 views
-
-
தேர்தலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார்- சீமான் குற்றச்சாட்டு சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகள் வாங்கியது குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடம் கிடைக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார். மக்கள் பிரச்சனைக்கு பாஜக வராது. ஏனெனில் மக்களின் பிரச்சனையே பாஜகதான். இவ்வாறு அவர் கூறினார். https://www.maalaimalar.com/news/topnews/2020/11/02131443/2028712/Seeman-accusation-Kamal-Haasa…
-
- 0 replies
- 378 views
-
-
தமிழீழத்துக்கு எதிரான அரசியல் கட்சிகளை புறக்கணிக்கப் போவதாகவும், ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாக இருந்த நாடுகளின் பொருட்களை புறக்கணிக்க போவதாகவும் இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற சட்ட மன்ற தீர்மானதிற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு மற்றும் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வே…
-
- 0 replies
- 478 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த முடிவு தவறு.. தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்றம் போய் மக்களுக்காக போராட வேண்டும் என திமுக கூறியுள்ளது. பாஜகவும் விஜயகாந்த் முடிவு தவறு என கருத்து தெரிவித்துள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவையில் இருந்து தமது கட்சி உறுப்பினர் ஆறு பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாகச் சாடிய அவர், இந்த விவகாரத்திற்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவ…
-
- 0 replies
- 608 views
-
-
பொங்கலுக்கு விடுமுறை இல்லை... பாஜக அரசின் அதிரடியால் அதிர்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்! டெல்லி: நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் கட்டாய விடுமுறை தினத்திலிருந்து பொங்கல் விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் சூரியன், மழை, பனி உள்ளிட்ட இயற்கை சக்திகளுக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையாக பொங்கலை முன்னோர்கள் கொண்டாடினர். பிற்காலத்தில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் திருநாள் …
-
- 0 replies
- 518 views
-
-
ஜெயலலிதாவின் சிலையுடன் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் ஆறு அடி உயர மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவியொருவர் மடிக்கணினி பெறுவது போன்று சிலையானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைவிட, அருங்காட்சியகத்தில் எட்டு அடி உயர மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த …
-
- 0 replies
- 347 views
-
-
ஒரே கையெழுத்து ஓஹோன்னு வாழ்க்கை! சசிகலாவின் மாஸ்டர் பிளான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியை ஜெயலலிதா இறந்து இருபத்தி ஐந்து நாட்களில் கைப்பற்றிய சசிகலாவினால், அதே ஜெயலலிதா அமர்ந்திருந்த முதல்வர் ஆசனத்தை பிடிக்க முடியாமல் இன்று வரை திணறிவருவதுதான் வேடிக்கை. “ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக” என்று மேடைதோறும் அந்த கட்சியின் முன்னணியினர் முழங்கி வந்தார்கள். ஆனால் அந்த கட்சியின் பொதுச்செயலாளரை வெறும் இரண்டாயிரத்து ஐநுாறு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே நாளில் தேர்ந்தெடுத்து முடிசூட்டு விழாவையும் நடத்திவிட்டார்கள். இதுதான் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா எப்படி வரலாம் என்ற எரிச்சல் இன…
-
- 0 replies
- 477 views
-
-
இலங்கை அதிகாரிகளுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிப்பதை கண்டித்து ஜூன் 25ம் தேதி வைகோ தலைமையில் குன்னூரில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது. கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்த…
-
- 0 replies
- 371 views
-
-
பன்னீர் அணியினர் சுறுசுறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா அக்காள் மகன் தினகரனை தோற்கடிக்கும் முனைப்பு டன், பன்னீர்செல்வம் அணியினர், ஓட்டுச் சாவடிக்கு, 14 பேர் என, 'பூத் கமிட்டி' அமைத்து, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக துவக்கி உள்ளனர். ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரு அணியினரும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், களம் இறங்குகின்றனர். சசிகலா அணி சார்பில், தினகரன்; பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகின்றனர். இருவரும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, தே…
-
- 0 replies
- 358 views
-
-
‘ஸ்டாலின் vs கனிமொழி!’ - ஜெயிக்கப்போவது யாரு? தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வருகிற ஜூன் 3-ம் தேதி 94-வது பிறந்தநாள்! உடன்பிறப்புகளுக்குக் கடிதம், அரசியல் அறிக்கை, போராட்டம், பொதுக்கூட்டம்... என இந்திய அரசியலில் ஓய்வின்றி சுழன்றுவந்த கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலமின்றி முடங்கிப் போயுள்ளார். தொடர்ச்சியான சிகிச்சையின் பலனாக உடல்நலம் தேறிவரும் கருணாநிதியின் இந்த வருடப் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடும் உற்சாகத்தோடு செயலாற்றி வருகிறார்கள் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள். ஜூன் 3-ம் தேதி ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே....’ என கரகர காந்தக் குரலில் தன் தலைவன் பேச்சைக் கேட்பதற்காக இப்போதிருந்தே ஏக்கத்தோடு காத்துக்கிடக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
தி.மு.க., பவள விழாவில் அ.தி.மு.க., மும்மூர்த்திகள்! தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அ.தி.மு.க., கூட்டணி, எம்.எல்.ஏ.,க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மும்மூர்த்திகளும், மூன்று முறை சந்தித்து பேசியுள்ளனர். இந்த மும்மூர்த்திகளும், ஆகஸ்ட்டில் நடக்க உள்ள, 'முரசொலி' நாளிதழ் பவள விழாவில் பங்கேற்று, தி.மு.க., ஆதரவாளர்களாக அணி மாறுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெற்றி கடந்த, 2016ல் நடந்த, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், கருணாஸ் தலைமை யிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சியும், தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை கட்சியும், தமிமுன் அன்சாரி த…
-
- 0 replies
- 491 views
-
-
சசிக்கு பணிவிடை செய்த புகாரில் அதிகாரி அனிதா தூக்கியடிப்பு பெங்களூரு:அ.தி.மு.க., சசிகலாவுக்கு உதவிய குற்றச்சாட்டில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி, அனிதாவும் துாக்கியடிக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும், பிப்ரவரி, 15ல், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், சிறைத் துறை, டி.ஜி.பி.,யாக இருந்த, சத்யநாரா…
-
- 0 replies
- 274 views
-
-
ஆடி போயி ஆவணி வரட்டும் ஜெயலலிதா காலில் அமைச்சர்கள் விழுந்து வணங்கும் போதெல்லாம் அதனை விமர்சிக்காதவர்கள் யாரும் இல்லை.. ஆனால், அந்த இராணுவ கட்டுப்பாடுதான் அ.தி.மு.க.வை கம்பீரமாக சிதறாமல் வைத்திருந்தது என்பது அவரது மறைவின் பின் அமைச்சர்கள் நடந்து கொள்ளும் முறைமைகளில் தெளிவாக விளங்குகிறது. ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிக்கு மாறுவது போல அ.தி.மு.க.வுக்கு உள்ளேயே எம்.எல்.ஏ.க்கள் அணிமாறுகின்றனர். இதையெல்லாம் தடுத்து கட்சி மீண்டும் நிலையானதாக மாறவேண்டுமெனில் சிறந்த தலைமைத்துவம் ஒன்றின் தேவைப்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. ஜெயலலிதா என்ற ஆளுமையின் மறைவு தமிழகத்துக்கு மட்டும் வெற்றிடத்தை ஏற்பட…
-
- 0 replies
- 642 views
-
-
ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எக் காலத்திலும் கொண்டு வரக்கூடாது – அண்ணாமலை ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எந்தக் காலத்திலும் கொண்டுவரக் கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவே சேது சமுத்திர திட்டத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அண்ணாமலை நல்லூரில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பங்கேற்ற பின்னர் அங்கு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டிற்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்தியா – இலங்கை கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 399 views
-
-
05 JUL, 2023 | 11:35 AM செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், அகரம் கிராமத்தில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பேராசிரியரும் தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளையின் தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான சி.சந்திரசேகர் மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தொடர்ச்சியான கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு நடந்த ஆய்வு ஒன்றில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகிஷாசுர மர்த்தினி நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் சந்திரசேகர் கூறியதாவது: தமிழகத்தில் அதிக அளவில் கிடைத்துள்ள பலகைகல் சிற்பங்களில் பெரிதும் காணப்படும் உருவம் துர்க்கை அம்மன் ஆகும். இது சங்க காலத்தில் இருந்து, பல்லவர் கால…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,IMD 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மதுரையில் வீடு ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. ஈரோட்டில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டிலும், கன்னியாகுமரியிலும் 12 செ.மீ மழை மாநிலம் முழுவதும் பெய்துவரும் மழையின் காரணமாக, கட்டடங்கள் இடிந்து விழுவது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது போன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக மேல கடையநல…
-
- 0 replies
- 572 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மு.க ஸ்டாலின்: 4,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் , தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 1,300 கோடி ரூபாய் முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398059
-
- 0 replies
- 201 views
-
-
13 APR, 2025 | 12:30 PM தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் 61 நாட்கள் வருடாந்த மீன்பிடி தடை அமுலுக்கு வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை (15) நள்ளிரவு முதல் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் குறித்த இடங்களில் மீன்பிடிக்க இயலாது. இது ஆயிரக் கணக்கான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை பாதிக்கக்கூடும். 1983 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட இந்த பருவக்கால தடையானது, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை பாதுகாப்பாய் மாற்றுவதற்கும் முட்டையிடும் காலத்தில் மீன் வளங்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மீன்பிடித் தடை அமுல் காலத்தில் ராமேஷ்வரத்தில் மட்டும் சுமார் 700 இற்கும் அதிகமான இயந்திரமயமாக்கப்பட்ட படகுக…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
' விஜயகாந்த் தலைவர் என்றால், பிரபாகரன்?' -வைகோ கூடாரத்தின் அடுத்த விக்கெட் ம.தி.மு.கவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தன்னுடைய விலகல் கடிதத்தை வைகோவிடம் கொடுத்துவிட்டார். விரைவில், ' அவர் தி.மு.கவில் ஐக்கியமாக இருக்கிறார்' என்ற தகவலால் ம.தி.மு.க வட்டாரமே அதிர்ந்து போய்க் கிடக்கிறது. ' சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு, வைகோ இணைந்ததை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி வெல்லும் என்று எந்த நம்பிக்கையில் வைகோ சென்றார்? பிரபாகரனை தலைவர் என்று சொல்லிக் கொண்டவர், விஜயகாந்தை தலைவராக ஏற்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன்பிறகும் ம.தி.மு.கவில் நீடிப்பதை விரும்பவில்லை' என்கின்றனர் மணிமாறனின் ஆதரவாளர்கள். ஆனால…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டமூலம்! இந்தி திணிப்பை தடை செய்யும் நோக்கில், தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து விவாதிக்க சட்ட வல்லுநர்களுடன் நேற்று இரவு அவசர கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சட்டமூலம் தமிழ்நாடு முழுவதும் இந்தி விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களைத் தடை செய்ய முயல்கிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சட்டமூலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த திரவிர முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். அதை நாங்கள் கடைப்பிடிப்போம், இந்தி …
-
- 0 replies
- 176 views
-
-
உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து நமக்கொரு பிம்பம் இருக்கும். அங்கு படிப்பவர்கள் எல்லாம் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள்... அனைத்தையும் பரந்த மனப்பான்மையுடன் அணுகுபவர்கள் என்று. ஆனால், அண்மையில் நடந்த ஒரு சம்பவம், அந்த எண்ணங்களை எல்லாம் பொய்யாக்கி உள்ளது. தனது முகநூல் பக்கத்தில் ’கபாலி’ திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்தோடு இருக்கும் புகைப்படத்தை வைத்ததற்கு, ஐ.ஐ.டி-யில் படிக்கும் ஒரு மாணவருக்கு என்னென்ன கமென்ட்கள், மெசேஜ்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். ‘சூப்பர் மச்சி’, ‘கூல் டூட்’, ‘செம’ என்கிற கமென்ட்களை நீங்கள் எதிர்பார்த்தீர்களானால் ஏமாந்துபோவீர்கள். "உன்னையெல்லாம் வெட்டி பன்றிக்குத்தான் போட வேண்டும்." "கீழ்த்தரமான உன்னைப் பார்க்கும்போது உன் தாயு…
-
- 0 replies
- 272 views
-
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா.. காவிரிக்காக உண்ணாவிரதம் இருப்பாரா ஜெ? சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று பெங்களூருவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரிக்காக 1993, 2007ம் ஆண்டுகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது போல முதல்வர் ஜெயலலிதா இப்போதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 50 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி, தமிழ்நாட்டுக…
-
- 0 replies
- 518 views
-