தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
சிறையில் பிறந்த நாள்... சசிகலாவை வாழ்த்தச் செல்லும் தினகரன்! “ஜெயலலிதா பரிசாகத் தரும் புடவை, உறவுகளின் வாழ்த்து, நெருக்கமானவர்களின் பூங்கொத்து என்று பிறந்த நாளை கொண்டாடியவர் சசிகலா. இந்தப் பிறந்த நாள் அவருக்கு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது” என்று உருக்கமாக சொல்கிறார் சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர். ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவின் பிறந்த நாள். அ.தி.மு.க-வின் அதிகார சத்தியாக இருந்தபோதுகூட அவருடைய பிறந்த நாள் குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரியாது. சசிகலாவின் பிறந்த நாளை அவருடைய உறவுகள் கூட வெளிப்படுத்த மாட்டார்கள். காரணம் ஜெயலலிதா மீதான பயம். அதனால் சசிகலா தனது பிறந்த நாளை வேதா இல்லத்தில் நான்கு சுவற்றுக்குள்ளே கொண்டாடுவார். ஜெ…
-
- 1 reply
- 491 views
-
-
-
-
- 9 replies
- 910 views
-
-
நாடு முழுவதும் 71வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். சுதந்திர தினத்தன்று பள்ளிகளிலும் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில், ராஜஸ்தானில் புஷ்கர் என்ற நகரில் உள்ள பள்ளியில் ஆகஸ்ட் 15ம் தேதி, கொடியேற்றத்துக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பள்ளி மாணவ - மாணவியர் அணி வகுத்து, தாளாளர் வருகைக்காகக் காத்திருந்தனர். அதற்குள் எங்கிருந்தோ இரு குரங்குகள் அந்தப் பகுதிக்கு வந்தன. அவை, என்ன நினைத்ததோ தெரியவில்லை கொடி கட்டப்பட்டிருந்த கயிற்றை மிக நேர்த்தியாக இழுத்து, தேசியக் கொடியைப் பறக்க விட்டு விட்டு சென்று விட்டன. யாரும் அந்தக் குரங்குகளை விரட்டவில்லை. குரங்குகள் கொடியேற்றி…
-
- 2 replies
- 407 views
-
-
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு! ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இதனிடையே, துணைப் பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில…
-
- 3 replies
- 794 views
-
-
அ.தி.மு.க-வுக்கு தீபாவின் அதிர்ச்சி..! - தேர்தல் ஆணையத்திடம் 13 பக்க ஆதாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம், அ.தி.மு.க. ஜெ. தீபா அணி சார்பில் 13 பக்க ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது, நிச்சயம் அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க., மேலும் பிளவுபட்டுள்ளது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, அந்த அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அணி உருவானது. சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், சசிகலா அணியில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ…
-
- 0 replies
- 375 views
-
-
அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருப்ப தால்,கடும் கோபமடைந்துள்ள தினகரன், அவர்களை மிரட்டத் துவங்கி உள்ளார். 'என் பக்கம் சேராவிட்டால், நான் சொல்வதை கேட்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும், 'சர்ச்சை படங்களை வெளியிடுவேன்' என்றும், அமைச்சர்களை அச்சுறுத்த ஆரம்பித் துள்ளார். அமைச்சர்களிடையே, தனக்கு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி, முதல்வர் பழனிசாமியை பயமுறுத்தவும், தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இல்லாமல், சுதந்திர மாக செயல்பட, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார். அதற்கு, முழு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பக்கம் நிற்கின்றனர். ஒரு அமைச்சர்…
-
- 0 replies
- 276 views
-
-
காவி அடி.. கழகத்தை அழி.. அதிமுகவை பிளவு படுத்திய பாஜக.. நமது எம்ஜிஆர் பரபரப்பு கவிதை! சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் இதழிலில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வெளியாகியுள்ள கவிதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது எம்ஜிஆர் நாளிதழில் கடந்த சில வாரங்களாகவே பாஜகவே திட்டி கவிதை எழுதி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நிலையில் நமது எம்ஜிஆரில் இன்று எழுதப்பட்டுள்ள கவிதை பாஜகவை கடுமையாக சாடியுள்ளது. காவி அடி, கழகத்தை அழி என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கவிதையில் உத்தர்காண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், பீகார், கோவா என பல்வேறு மாநிலங்களில் பாஜக பின் வாசல் வழியாக நுழைந்தது அதிகாரத்தை பிடித்தத…
-
- 2 replies
- 2k views
-
-
மிஸ்டர் கழுகு: “எவ்வளவு செலவானாலும் கட்சியைக் கைப்பற்ற வேண்டும்!” - சசி குடும்ப சபதம் மூவண்ணக் கொடியைச் சிறகுகளில் செருகியபடி வந்தார் கழுகார். அச்சு அவசரம் கருதி, சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்ச்சியைப் பெட்டிச் செய்தியாகக் கொடுத்து விட்டுப் பேசத் தொடங்கினார். ‘‘மேலூரில் இருந்து தொடங்குகிறேன்... ‘கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்; எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்ட வேண்டும்’ என்றுதான் டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே பிரமாண்டக் கூட்டத்தை மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ சாமி கூட்டிவிட்டார். ஒருபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திகைப்பு... இன்னொரு…
-
- 0 replies
- 1.6k views
-
-
கோட்டையை உடைக்கும் தினகரன்! ஆணவம்... ஃபோர்ஜரி... 420... தலைக்கனம்... மடியில் கனம்... அட்டைக்கத்திகள்... மேலூர் திணறத் திணற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி அணி ஓங்கியப்பிறகு, தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு. சசிகலா குடும்பத்துக்கு இது வாழ்வா, சாவா யுத்தம். அதனால், உள்ளுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஒளித்துவைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து மேலூரில் கவனத்தைக் குவித்தது. ஒரு நாள் முன்னதாகவே மேலூர் வந்துவிட்ட திவாகரன், எல்லா ஏற்பாடுகளையும் நேரில் பார்த்துத் திருப்தி அடைந்தார். ஜெயா டி.வி-யையும், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழையும் நிர்வகித்துவரும் இளவரசியின் ம…
-
- 0 replies
- 2.7k views
-
-
கருணாநிதி, மீண்டும் மருத்துவமனையில் அனுமதி. திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட உணவு குழாய் மாற்றப்பட்ட பின்னர் வீடு திரும்புவார் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.கருணாநிதி கடந்த 7 மாதங்களாக முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன் தமிழரசு ஆகியோர் அப்போது உடனிருந்தனர். இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் …
-
- 0 replies
- 390 views
-
-
முதலமைச்சரை ராஜினாமா செய்யக் கோராதது ஏன்? - கமல் கேள்வி தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளை ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். தமிழக அரசில் உள்ள ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு டிஜிட்டல் வடிவில் புகார் அனுப்புங்கள் என்று தமிழக மக்களுக்கு கமல் வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் இணையதளத்திலிருந்து அமைச்சர்களின் அதிகாரபூர்வ இ-மெயில் முகவரிகள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டைகள் குறித்தும் கமலின் ட்விட்டரில் பதிவிட்டார். இந்தநிலையில், கமலின் மற்றொரு ட்வீட் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப…
-
- 1 reply
- 484 views
-
-
"ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவன் நான்"- எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவில் தினகரன் பேச்சு மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எற்பாடு செய்யப்பட்டிருந்தது. அ.தி.மு.க மூன்றாகப் பிரிந்த பிறகு, ஒ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 14 எம்.எம்.ஏ-க்கள் மற்றும் 5 எம்.பி-க்கள் பங்கேற்றனர். விழாவில் கூடியிருந்த மக்களிடம் தினகரன் பேசியது: "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்…
-
- 1 reply
- 647 views
-
-
‘தலைவர் நாடாள வரப்போகும் கதை கேட்கப்போகிறோம்!' - திருச்சிக்குப் படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்! ரஜினிகாந்தின் அரசியல் பயணம் அவசியம் என்பதை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு திருச்சி அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில் தமிழருவி மணியன் தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது. `இந்த மாநாட்டில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்களும் கலந்துகொள்ள வேண்டும்' என்று ரஜினி ரசிகர் மன்ற தலைமையகத்திலிருந்து அனைவருக்கும் ரகசிய உத்தரவு சென்றுள்ளது. அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர், மாவட்ட நிர்வாகிகளை போன் மூலம் தொடர்புகொண்டு, `தலைவரை அரசியலுக்கு அழைக்கும் சிறப்பு மாநாடு இது. இதில் ஒவ்வொர…
-
- 0 replies
- 857 views
-
-
தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க நினைத்தால் அதற்கு 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்: - ராதாரவி பேச்சு [Monday 2017-08-14 08:00] தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க நினைத்தால் அதற்கு 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்’’ என தூத்துக்குடியில் நடந்த கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகர்.ராதாரவி பேசினார்.தூத்துக்குடி, தாளமுத்து நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேசிய நடிகர் ராதாரவி, ‘’ ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணி, தீபா அணி என பல அணிகளாக அ.தி.மு.க பிளவுபட்டுக் கிடக்கிறது. தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிச்சுட்டா ஓ.பி.எஸ் அணி நம்ம பக்கம் சேர்ந்துடும், அதை வச்சு இரட்டை இலை சின்னத்தை மீட்…
-
- 0 replies
- 399 views
-
-
ராஜீவ் ஏன் கொல்லப்பட்டார் ? அதனால் ஆதாயம் அடைந்தவர்கள் யார் ?
-
- 0 replies
- 531 views
-
-
சிறையில் இருந்து சசிகலா கண்ணீர் கடிதம் 'அ.தி.மு.க., என்ற இரும்புக்கோட்டையில், விரிசல் விழுந்து விடக்கூடாது. முன்பை விட, உறுதியாக செயல்பட்டு கட்சியையும், தமிழகத் தையும் காக்க வேண்டும்' என, சிறையில் இருந்தபடி, முன்னாள் முதல்வர், ஜெ.,யின் தோழி சசிகலா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள, கண்ணீர் கடிதம்: ஜெயலலிதா நம்மோடு இருந்தால், நாம் எவ்வாறு உணர்வோமோ, அந்த உணர்வோடு தொண்டர்கள் கட்சியில், தாயின் பரிவை, பாதுகாப்பைதொடர்ந்து இனியும் உணரலாம். நம் கண் முன், ஜெ., காட்டிய லட்சிய பாதை, விரிந்து கிடக்கிறது. அதில், அ.தி.மு.க., என்ற, இந்த கட்…
-
- 0 replies
- 577 views
-
-
தினகரன் Vs எடப்பாடி! யார் 420 ‘ச்சீ 420(போஃர் ட்வென்ட்டி)’ எனத் தமிழ் திரைப்படங்களில் காதலி, காதலனை செல்லமாகத் திட்டும் காட்சிகள் பிரபலம்; ‘420 பீடா’ ரகம் பரவலாக அறியப்பட்ட லகிரி வஸ்து; ராஜ்கபூர் ‘ஸ்ரீ420’ என்ற பெயரில் ஹிந்திப் படம் ஒன்றை தயாரித்தார். என்றளவிலும், அடிக்கடி 420 பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டிகளின் மூலம் 420 என்ற வார்த்தை அகில இந்தியப் பிரபலமாகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு நாட்களாக 420 என்பது வைரலாக வலம் வந்தது. 420-ல் அப்படி என்னதான் இருக்கிறது? நீயும் 420... நானும் 420... அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நியமனம் செல்லாது என தம…
-
- 0 replies
- 551 views
-
-
மிஸ்டர் கழுகு: “எப்போதும் கவிழ்ப்பேன்!” - ‘மூக்குப்பொடி’ தினகரன் - ‘தேசியக்கொடி’ எடப்பாடி சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகளைப் பார்வையிட்டுவிட்டு வந்த கழுகார், ‘‘கோட்டை வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது’’ என்று சொன்னபடி அமர்ந்தார். ‘‘கோட்டை உறுதியாக இருக்கிறது. ஆனால், முதல்வர் நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதே?’’ என்றோம். ‘‘ஆமாம்! ‘எந்த நேரமும் ஆட்சியைக் கவிழ்ப்பேன்’ என்று சொல்லி வருகிறார் தினகரன். சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்குமுன், டெல்லி கொடுத்த வேலைகளை வேகமாக முடிக்கவேண்டிய நிர்பந்தம் எடப்பாடிக்கு. இப்போது அந்த வேலைகளைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்.” ‘‘அதுதான் தினகரன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
தினகரன் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் செல்வார்களா? - அதிமுகவில் நடக்கும் கடைசி நேர குழப்பங்கள் டிடிவி தினகரன் - கோப்புப் படம் மதுரை மாவட்டம், மேலூரில் நாளை தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்களும், தொண்டர்களும் பங்கேற்க செல்வதை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க முதல்வர் பழனிசாமியின் உத்தரவுக்காக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் காத்திருக்கிறார்கள். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நாளை மேலூரில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த வாரம் வரை முதல்வர் பழனிசாமியும், தினகரனும் கருத்து வேறுபாட…
-
- 0 replies
- 327 views
-
-
''முடிவுக்கு வருகிறதா மன்னார்குடி ராஜ்ஜியம்?”- குழப்பத்தில் குடும்பங்கள்! முப்பது ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம், இப்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாகத் தளர்ந்துபோகும் நிலையை மன்னார்குடி உறவுகள் உணர்ந்துள்ளார்கள். ஆனாலும், கட்சியைக் கைப்பற்ற உச்சகட்ட போராட்டத்துக்குத் தயாராகிவருகின்றன மன்னார்குடி உறவுகள். பன்னீருக்குப் பதிலாக சசிகலா குடும்பத்தினால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட எடப்பாடி பழனிசாமி அந்தக் குடும்பத்துக்கு எதிராகத் திரும்புவார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் எந்தத் தினகரன் வெற்றிக்காக... வீதிவீதியாக யார் எல்லாம் களம் இறங்கினார்களோ, …
-
- 0 replies
- 468 views
-
-
அ .தி .மு .க வால் மலருமா தாமரை? தேசிய கட்சிகளை உள்ளே விடாமல் 20 வருடங்களுக்கு மேலாக கோலாட்சி நடத்திய திராவிட கட்சிகளை உடைத்து தமிழகத்தில் தன் கால்களை வேரூன்ற பெரும் பிரயத்தனத்தை பா.ஜ.க. தற்போது முன்னெடுத்து வருகின்றது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு அரண்கள் இருக்கும் வரையில் தமிழகத்தில் எந்த தேசிய கட்சியாலும் கால் ஊன்ற முடியவில்லை.. குறிப்பாக பா.ஜ.க.வினால் முடியவில்லை.. இந்நிலையில் தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வேறூன்ற துடிக்கும் பா.ஜ.க. தமிழகத்தில் தன் கால்களை பதிக்க பகீரத பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல வருடங்கள் மத்தியில் காங்கிர…
-
- 0 replies
- 852 views
-
-
”சந்தா கேட்டார் பிறகு மன்னிப்பு கேட்டார்..!” - ம.தி.மு.க கூட்டத்தில் வைகோ ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஓபன் மைக்கில் தொண்டர்களிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திருச்சியில் ம.தி.மு.க மகளிர் அணி, மாவட்டச் செயலாளர் ஆலோனைக் கூட்டம், வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை நேற்றும் இன்றும் நடத்திவருகிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. நேற்று காலை நடந்த ம.தி.மு.க மகளிர் அணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு மாலை 4 மணியிலிருந்து ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டப் பொறுப்பாளர்களான சேரன், வெல்லமண்டி சோமு, உயர்ம…
-
- 0 replies
- 511 views
-
-
''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420' எனப்படும், மோசடி பேர்வழி. ஸ்டாலின், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் சந்திக்க தயார்,'' என, டில்லியில், நேற்று, முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி அளித்தார். மேலும், அ.தி.மு.க., அணிகள் இணையும் என, நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார். சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 'அ.தி.மு.க., துணை பொதுச் செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது, சட்ட…
-
- 1 reply
- 400 views
-
-
முரசொலி: திராவிட முரசு! தி முகவின் கட்சி இதழான ‘முரசொலி’ தனது 75-வது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது. 60 ஆண்டு காலம் ஒரு நாள் விடாமல் தினசரி இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. கட்சியின் தலைவரான மு.கருணாநிதி தான் இந்தப் பத்திரிகையின் நிறுவனர். அச்சு ஊடகம் வழியாக அரசியல்ரீதியாகக் குரல் கொடுப்பதென்பது நவீன யுகத்தில் அமெரிக்காவில் வெளியான ‘ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ்’ கட்டுரைகளின் மூலம் குறிப்பிடத் தகுந்த விதத்தில் தொடங்கியது. 1861-ல், பிற்பாடு பிரான்ஸின் பிரதமராக ஆகவிருந்த ஜோர்ஜ் க்ளமான்ஸோ தனது இடதுசாரிக் கருத்தியலைப் பரப்புவதற்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து…
-
- 5 replies
- 6.4k views
-