தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சென்னையில் சிறப்பு நீதிமன்றம்.... 'கிலி'யில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள்! சென்னையில் சிறப்பு நீதிமன்றம் ஸ்டார்ட். கிலியில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-கள் `தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ எனக் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இதன்பிறகு இந்த வழக்கு கடந்த ஆண்டு …
-
- 0 replies
- 1.5k views
-
-
சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் அமிர்தலட்சுமி என்பதாகும். இவர் எழும்பூர் கெங்குரெட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமாரின் மனைவியாவார். கடந்த சிலதினங்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சலால் பாதிகப்பட்டார். இதையடுத்து அமிஞ்சிகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அமிர்தலட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அதற்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் அமுதலட்சுமிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கடந்த 4 ஆம…
-
- 0 replies
- 239 views
-
-
சிறையில் இருந்த காலகட்டத்தில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை பிரகாஷ் எழுதியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த எலும்பியல் நிபுணரான டாக்டர் பிரகாஷ் தன் மருத்துவமனையில் பணியாற்றியவர்களைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை இணைய தளங்களில் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவரால் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தப் புகாரின் பேரில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரகாஷ் கைதுசெய்யப்பட்டார். முதலில் 2001ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக…
-
- 0 replies
- 239 views
-
-
ஐய்யப்பன் விரதமிருந்த 14 பேர் பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை அருகே காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் காஜிபேட் கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் மாலை அணிந்து விரதம் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு ஒரு சுற்றுலா வானில் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர், தமிழகம் வந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்காக ந…
-
- 0 replies
- 766 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, "இந்த அவையிலே இன்றைய தினம் " உறுப்பினர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய இந்தத் தீர்மா…
-
- 0 replies
- 645 views
-
-
இலங்கைக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்கிறது. உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்ற…
-
- 0 replies
- 402 views
-
-
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து சொன்னாலும் தி.மு.க.வில் நிலைத்து நிற்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை குஷ்பூ. ஸ்டாலினுக்கு எதிராக அவர் கொடுத்த பேட்டியால் தி.மு.க. கூடாரமே சில வாரங்களாக திண்டாடித் தவித்தது. குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொதித்தார்கள். குஷ்பூ வீட்டைத் தாக்கினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உடனே நடவடிக்கை எடுத்தார். அதாவது... குஷ்பூவுக்கு எதிராக கருத்துச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். நடிகர் சந்திரசேகரை போனிலேயே வறுத்தெடுத்த கருணாநிதி மகளிரணி நிர்வாகிகளையும் 'என் முகத்திலேயே விழிக்காதிங்க' என சத்தம் போட்டார். இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் அம்மணி குஷ்பூ சமாதானம் ஆகவில்லை. இறுதியாக கருணாநிதியின் உத…
-
- 0 replies
- 623 views
-
-
ராமமோகன ராவிடம் மீண்டும் விசாரணை முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக்கிடம், வரு மான வரித் துறையினர், மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறிய தாவது: டிச., 30ல் ஆஜரான விவேக், நாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு, பதில் அளித்தார். முழுமையான விளக்கம் அளிக்க, கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளார். அதுபோல், ராவின் அலுவலகத்தில் சிக்கிய, இரண்டு மொபைல் போன்களில் உள்ள பதிவுகளை, ஆய்வு செய்ய உள்ளோம். சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என்ப தால், சேகர் ரெட்டி,ராமமோகன ராவ் வீடுகளில், முதலில் சோதனை செய்தோம். அந்த சோதனைகள் முடிந்ததும், புஹா…
-
- 0 replies
- 389 views
-
-
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா அணி வேட்பாளர் தினகரன், தன் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார். தன் வெற்றியை விரும்பாத, 13 அமைச்சர்கள், தனக்கு எதிராக வேலை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன், 80 ஆயிரம் ஓட்டுகள் பெறுவார் என, வெளியான சர்வே முடிவால், ஒட்டுமொத்த சசி தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்தில், தொண்டர் களின் வெள்ளத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நீந்தி செல்லும் அளவுக்கு கூட்டம் கூடுகிறது. தினகரனுக்கு ஆதரவாக, வெளியூரில்இருந்து அழைத்து வரப்பட்டுள்ள தொண்டர்களின் கூட்டம் தான் காணப்படுகிறது. …
-
- 0 replies
- 211 views
-
-
மிஸ்டர் கழுகு: ‘என்னமோ திட்டம் இருக்கு...’ ‘‘வெயிலுக்கு இதமாக தொப்பிகூட போட முடியவில்லை. ஆர்.கே. நகர் பக்கம் போனால், ஒருவித ‘எதிர்பார்ப்போடு’ நம்மைப் பார்க்கிறார்கள்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘எல்லா கெடுபிடிகளையும் மீறி, ஆர்.கே. நகரில் பணம் பாய்கிறதாமே?” என்றோம். ‘‘ஆமாம்! இடைத்தேர்தல் சோதனைகளும் கெடுபிடிகளும் இந்த அளவுக்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆளும்கட்சி மிரண்டு போய்தான் இருக்கிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று படை பட்டாளங்களைக் குவித்திருந்தாலும், அவர்கள் தயங்கித் தயங்கியே வேலை செய்கிறார்கள். அவர்களிடம் வழக்கமான இடைத்தேர்தல் உற்சாகம் இல்லை. சென்னை போலீஸ் ஆணையர் கரன் சின்ஹா, தொகுதிக்கே வந்து நேரடி ஆய்வுகள்…
-
- 0 replies
- 947 views
-
-
அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவு! - ஐ.டி-க்கு அல்வா கொடுக்க அதிரடி #VikatanExclusvie தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்குப் பிறகு, அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களது ஆடிட்டர்மூலம் வருமான வரித்துறையினருக்கு அல்வா கொடுக்கும் வேலையில் மும்முரமாக சிலர் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. இதனால், வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்திவிட்டு, அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதுபோல, ஓ.…
-
- 0 replies
- 472 views
-
-
மிஸ்டர் கழுகு: ஒடிஷா டு சேலம்... எடப்பாடிக்கு பிடி இறுகுகிறது! ‘‘கொடைக்கானல் வரை பயணம் போயிருந்தேன்’’ என்றபடி வந்தார் கழுகார். ‘‘ஓ.பன்னீர்செல்வம் பயணம் தொடங்கிவிட்டாரே?” என்றோம். ‘‘ஆம்! பன்னீர் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிவிட்டார். இனி இரண்டு அணிகளின் இணைப்பும் இருக்காது என்பதுதான் இன்றைய நிலவரம்!” என்றபடி கழுகார் செய்திகளைக் கொட்டத் தொடங்கினார். ‘‘இனிமேல் தனி ஆவர்த்தனம்தான் என்ற முடிவுக்கு பன்னீர் வந்துவிட்டதாகவே சொல்கிறார்கள். அ.தி.மு.க இரு அணிகளையும் இணைக்கும் பேச்சு வார்த்தைக்கு இரு அணிகள் சார்பிலும் 7 பேர் கொண்ட குழுக்களை அமைத்தனர். அந்தக் குழுக்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு முன்னரே, ‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விச…
-
- 0 replies
- 798 views
-
-
உயிரோடு இருப்பவர்களின் படங்களுடன் பேனர் வைப்பதைத் தடைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களின் படங்களுடன் பேனர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகளை, பதாகைகளை வைப்பதற்கு தடைசெய்யும் வகையில் விதிகளை உருவாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption(கோப்புப் படம்) …
-
- 0 replies
- 654 views
-
-
உலகளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நகரங்கள் பட்டியலை, சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது global prime sector எனப்படும் Candy GPS நிறுவனம். இந்தப் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்றே ஒன்றுதான் இடம் பெற்றிருக்கிறது. அது தலைநகரமான டெல்லி அல்லது இந்தியாவின் கேட்வே எனப்படும் மும்பை அல்லது தகவல் தொழில்நுட்பத்துறை நகரமான பெங்களூரு என நீங்கள் நினைத்திருந்தால் சரியான யூகமல்ல... தமிழகத்தின் கலாசார நுழைவாயில் என்றழைக்கப்படும் சென்னைதான் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நகரம். சென்னையில், ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் காரணிகள் குறித்து Candy GPS வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்…
-
- 0 replies
- 456 views
-
-
உலக பசி குறியீட்டில் இந்தியா 107-ஆவது இடம் கவலையளிக்கிறது - ராமதாஸ் டுவீட் 2022ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து, பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளதாவது: ‘’2022ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது! உலக பசி குறியீடு என்பது பசி, பட்டினியை…
-
- 0 replies
- 228 views
-
-
தமிழக அரசுக்கு 50 கோடி ரூபாய் நஷ்டம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 450 புதிய பேருந்துகளை முதலமைச்சர் வருகைக்காக இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதால் அரசுக்கு 50 கோடி ரூபாய் நஷ்டம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், 9 ஆயிரத்து 153 புதிய பேருந்துகள் 7 ஆண்டில் வாங்கப்படும் என அரசு அறிவித்திருந்ததை அதில் சுட்டிக்காட்டி உள்ளார். இதுவரை, பாதி அளவுக்குக் கூட புதிய பேருந்துகள் வாங்காத நிலையில் வாங்கப்பட்ட பேருந்துகளும் முழு அளவில் இயக்கப்படவில்லை என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். புதிய பேருந்துகளை இயக்காமல் பணிமனைகளில் நிற…
-
- 0 replies
- 392 views
-
-
பட மூலாதாரம்,SENTHIL BALAJI /FACEBOOK எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி செய்தியாளர், சென்னை சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அதானி குழுமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக எந்த உறவும் இல்லை என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். …
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
"7 கோடி மக்களில் 70 ஓவியர்கள் கூட இல்லை" : சிவகுமார் ஆதங்கம்
-
- 0 replies
- 598 views
-
-
இப்படித்தான் வந்தது வெள்ளம்.. ஒவ்வொரு சென்னைவாசியும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ Wednesday, December 9, 2015, 17:28 [IST] சென்னை: இன்னும் கூட அந்த படபடப்பு மாறாமல்தான் உள்ளனர் ஒவ்வொரு சென்னைவாசியும். அப்படி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது சென்னையையும், அதன் சுற்றுப் பகுதிகளையும் புரட்டிப் போட்ட பெரு வெள்ளம். இப்படிப்பட்ட வெள்ளத்திற்கு என்ன காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு ஏன் இப்படி ஒரு பேயாட்டம் போட்டது மழை என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதில் அலை மோதியபடி, மீண்டும் அப்படி ஒரு வெள்ளம் வருமா என்ற அச்சத்தில் தவித்துப் போய் உள்ளனர் சென்னை மக்கள். இந்த நிலையில் இந்த வீடியோ கண்ணில் பட்டது.. ஒவ்வொரு சென்னைவாசியும் பார்க்க வேண்டிய வீடியோ இது.. பாருங்கள் Re…
-
- 0 replies
- 619 views
-
-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு 1,043 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவின் இறுதியில், தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, செய்தியாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேக் வெட்டி கொண்டாடினார். வரும் புத்தாண்டுக்குள், நிச்சயமாக வாரியம் அமைக்கப்படும். திரையரங்குகளில், படம் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல், திரையில் படத்தின் தலைப்பு போடுவதற்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்க…
-
- 0 replies
- 481 views
-
-
அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள்:தொகுதிகள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடக்கம்! சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள 7 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் தங்களுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள, பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுசெயலர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூது, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் , தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் , இந்திய குடியரசு கட்சி…
-
- 0 replies
- 297 views
-
-
வருமான வரி விவகாரம்: எங்க சசிகலாவுக்கு ஒரு நீதி? உங்க ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா?- சீமான் வருமான வரித்துறை விவகாரத்தில் சசிகலாவுக்கு ஒரு நீதி? ரஜினிகாந்துக்கு ஒரு நீதி ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக நேற்று ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: குடியுரிமை சான்றிதழ்களை நாம் தமிழர் கட்சியினர் எவரும் தர மாட்டோம். எங்களை முகாம்களில் அடைத்தாலும் அதை ஏற்போம். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடுகின்றனர். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல; நாளை நம…
-
- 0 replies
- 411 views
-
-
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பலத்த மனித உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்றானது கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுவரை தமிழகத்தில் 10 ஆகக் காணப்பட்ட உயிரிழப்பு, தற்போது 11ஆக உயர்வடைந்துள்ளது. சென்னை, புளியந்தூரைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் ஓமந்தூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளமையினைத் தொடர்ந்து குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நிலையில், …
-
- 0 replies
- 296 views
-
-
தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் 11 மாடி அடுக்குமாடி கட்டடம் சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடம் வெடி மருந்து மூலம் இன்று மாலை 6.52 மணிக்கு தகர்க்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி அடுக்குமாடி கட்டத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அருகில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அடுக்குமாடி கட்டடம் இன்று இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, தரைதளம், 5வது தளம் உள்ளிட்டவற்றில் உ…
-
- 0 replies
- 589 views
-
-
பிரச்சினைகளை மறக்க வைத்த 500, 1000 ரூபா நாணயத் தாள்கள் இ ன்றைய நிலையில் தமிழகம் மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பிரதானமாக பேசப்படுவது 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியாகாதென்று பிரதமர் மோடி அறிவித்ததாகும். அடுத்தது அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவர் தோற்கடிக்கப்பட்டு, அதிரடியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாகும். இந்த இரண்டு விடயங்களும் தான் தமிழகத்தின் நகரம், கிராமம் மற்றும் பட்டித்தொட்டியெல்லாம் பேசப்படும் விடயமாக உள்ளன. இந்த விடயங்கள் தமிழகத்தின் உள்ளக அரசியல் மற்றும் பொதுப் பிரச்சினை…
-
- 0 replies
- 461 views
-