Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிப்.15-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய சசிகலா | படம்: எல்.சீனிவாசன். அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை. இத்தகைய சூழலில் அதிமுகவில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தொகுப்பு: இப்பக்கத்தை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்க. 1.10 pm: சொத்துக் குவிப்…

  2. கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள் - துண்டுச் சீட்டால் பரபரப்பு கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துவதாக கூறி வந்துள்ள துண்டுச் சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்டின் லெட்டர் பேட் அல்லது துண்டுச் சீட்டில் எங்களை ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கூறி வந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை எழுதியது யார் என்பது தெரியவில்லை. எம்.எல்.ஏக்கள்தான் தற்போது அங்கு வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதால் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது உண்மையா என்றும் தெரியவில்லை.…

  3. போயஸ் கார்டனையும் ஜெயலலிதாவின் சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும்... காரியத்தில் கண்ணாக இருக்கும் சசி சிறைக்கு செல்ல உள்ள சசிகலா போயஸ் கார்டனையும் அவரது சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். சென்னை: தான் சிறைக்கு சென்றாலும் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு மற்றும் சொத்துக்களை அரசுடைமையாக்கமால் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரையும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டனர். …

  4. முதல்வர் பதவிக்கு மோதும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என 2 தரப்புகளும் உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநர் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப் பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட் டார். இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், 7-ம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத் தினர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து அதிமுக வ…

  5. சொத்துக் குவிப்பு வழக்கு: ‘சிவன் மலை முருகன் முன்கூட்டியே வழங்கிய தீர்ப்பு’ - சமூக வலைதளங்களில் பரவும் வைரல் சிவன்மலை முருகன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள இரும்புச் சங்கிலி. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கற்தூணில் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள். இந்தக் …

  6. சிங்கம் அமர்ந்த இடத்தில் இவர்களா? - கேள்வி எழுப்பிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கோவை விளாங்குறிச்சிக்கு வந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை வரவேற்ற பொதுமக்கள். ஓ.பன்னீர்செல்வத்துடன் முதலில் இணைந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டிக்கு அவரது சொந்த ஊரில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த இவர், அந்த ஊராட்சியில் 1996-ம் ஆண்டு முதல் 3 முறை தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார். 2011, 2016 தேர்தல்களில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுக்குட்டி, தனது ஜமாப் இசை…

  7. சென்னை : சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா, சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது. வாய்மொழியாக...: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நிலையை காரணம் கேட்டு, சரணடைய இரண்டு வார கால அவகாசம் கோரி சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர். நிராகரிப்பு: ஆனால், இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா கோரிக்கையை ஏற்க முடியாது. தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.…

  8. 3 நாளில் தமிழக நிலைமை தெளிவாகும்: அட்டர்னி ஜெனரல் எதிர்பார்ப்பு புதுடில்லி: மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி கூறியதாவது: சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.தமிழக அரசியல் சூழ்நிலை 2 அல்லது 3 நாளில் தெளிவாகும் என எதிர்பார்க்கிறேன். இதன் பின்னர் வழக்கமான முதல்வர் செயல்படுவார். இனிமேல், இரண்டு தரப்பும் சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத்தரவிடலாம். அல்லது ஒரு தரப்புக்கு போதிய பலம் உள்ளது என கவர்னர் கருதினால், அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத…

  9. திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர திடீர் உத்தரவு! சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடும்பட்சத்தில் தி.மு.க எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏக்களிடம் கேட்க முடிவு செய்துள்ளது சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே இன்று மாலைக்குள் சென்னை வருமாறு கட்சி கொறடா சக்ரபாணி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் …

  10. மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்? ‘‘ஆமாம்! ஆமாம்! அப்படித்தான் சொல்கிறார்கள்...’’ என்று யாரிடமோ போனில் பேசியபடி பரபரப்பாக எதிரில் வந்து தரிசனம் தந்தார் கழுகார். ‘சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு’ குறித்த நமது நிருபர்களின் கட்டுரையைப் படித்தவர், ‘‘ஒன்பதே நாட்களில் தங்கள் கனவு சிதையும், சாம்ராஜ்யம் சரியும் என சசிகலா எதிர்பார்த்திருக்க மாட்டார்’’ என்றார். ‘‘கடந்த 5-ம் தேதி சட்டமன்ற அ.தி.மு.க தலைவராகத் தேர்வான நிமிடத்திலிருந்தே அவரிடம் உற்சாகம் கரை புரண்டு ஓடியதே’’ என்றோம். ‘‘ஆமாம்! ஆனால் அவர் முழுமனதாக இந்த முடிவில் இல்லை என்கிறார்கள். மன்னார்குடி குடும்பத்தினர் அவசரம் காட்டியதன் விளைவு இது. ‘நாம் அமைதியாக இருந்திருந்தால்…

  11. பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை தயார்: பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: பிடிஐ. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணா கூறியதாவது: சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்…

  12. அரசியல் வாழ்வில் மாபெரும் சரிவை சந்திக்கும் சசிகலா சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அரசியல் வாழ்வில் தற்போது மாபெரும் சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 1956 ஜனவரி 29-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவே கானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியரின் 6 குழந்தைகளில் 5-வதாக பிறந்தவர் சசிகலா. எல்லா பெண்களைப் போலவே வளர்ந்த சசிகலாவின் வாழ்வில் திருமணம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. திமுகவில் தீவிர ஈடுபாடு கொண்டவரும், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியுமான மன்னார்குடியைச் சேர்ந்த ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். …

  13. அதிமுக-வின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம்! சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி தினகரன் அ.தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பால், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலா அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை, சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி தினகரன் மற்றும்…

  14. எந்த தீர்ப்பை எதிர்த்து தாடி வளர்த்து, காவடி எடுத்து, மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்பை இன்று அதிமுகவினர் கொண்டாடுவது வேடிக்கை: ஸ்டாலின் பேட்டி கோப்புப் படம். | க.ஸ்ரீபரத். கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது எந்த தீர்ப்பை எதிர்த்ஹ்டு தாடி வளர்த்து, காவடி எடுத்து மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்புக்கு இன்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுப்பது வேடிக்கையானது என்று கூறினார். அவர் கூறியதாவது: சசிகலா தான் எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற கட்சித் தலைவர், அவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் …

  15. தீபாவை ஏன் பா.ஜ.க முன்னிறுத்துகிறது? சில நண்பர்கள் இது பா.ஜ.கவின் பார்ப்பனிய சதி என்கிறார்கள். ஆனால் எனக்கு பா.ஜ.கவின் நோக்கம் வேறு என படுகிறது. அதிமுகவில் தீபாவுக்கான இடத்தை பா.ஜ.க ஆரம்பத்திலேயே சின்னதாய் கோடிட்டு உருவாக்கி விட்டார்கள். அவரை தயாராக்கி இப்போது சரியான சந்தர்பத்தில் கொணர்ந்திருக்கிறார்கள். முக்கியமான காரணம் கடந்த சில நாட்களில் ஒ.பி.எஸ் பெற்றுள்ள பரவலான மக்கள் ஆதரவு. அவரை எதிர்க்கிறவர்கள் கிட்டத்தட்ட யாரும் இல்லை எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தி.மு.க கூட ஒ.பி.எஸ் பக்கம் என்கிறார்கள் (இதை ஸ்டாலின் மறுத்தாலும் கூட). இப்போது சசிகலா ஜெயிலுக்கு போவது உறுதியாகி விட்ட பின், வரும் நாட்களில் கணிசமான எம்.எல்.ஏக்கள் ஒ.பி.எஸ் அணிக்கு தாவுவார்கள் எனில் அதிமுகவின் ஒ…

  16. முதல்வரை துரோகியாக்கிய துணை சபாநாயகர் ''பன்னீர்செல்வம் ஒரு துரோகி; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரைப் பற்றி, இனி பேசி பயனில்லை,'' என, கூறியிருப்பதன் மூலம், அனைத்து, எம்.பி.,க்களும் முகாம் மாறினாலும், தம்பிதுரை மட்டும் மாறமாட்டார் என, தெரிய வந்துள்ளது. சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என, தீவிரமாகவும், வெளிப்படையாகவும் கூறி வந்தவர், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை. முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பிரச்னை ஏற்பட்ட பின், தனக்கு முக்கிய பதவி கிடைக்குமென, தம்பிதுரை நம்பினார். ஆனால், கட்சி நிர்வாகிகளை சசிகலா மாற்றியமைத்த போதும், தம்பிதுரையை கண்டு கொள்ளவில்லை. பொருளாளர், அவைத் தலைவர் என, முக்கிய பதவிகளில…

  17. போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி? கூவத்தூரில் இருந்து கிளம்பி, போயஸ்கார்டன் வந்த சசிகலா சற்றுமுன் 11.15 மணிக்கு போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பின், அங்கு குழுமியிருந்த தன் கட்சித் தொண்டர்களுக்கு தைரியமாக இருக்கச்சொல்லி பேட்டி கொடுத்தார்,சசி. அவரைச்சுற்றி இருந்த பெண்தொண்டர்கள் சசியைப்பார்த்து அழுதவண்ணம் இருந்தனர். பேட்டி கொடுத்த பின், உடனடியாக வீட்டுக்குள் சென்ற சசி, இன்று அதிகாலை 4 மணி அளவில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல இருக்கிறார். அங்கு செல்லும் சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் சிறிதுநேரம் பிரார்த்தனைச் செய்துவிட்டு, காரிலேயே பெங்களூரு நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்…

  18. 'சசிகலாவைச் சிக்க வைத்த சொந்தங்கள்!’ அதிர்ச்சி விலகா போயஸ் கார்டன் #DACase #OPSVsSasikala ’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா-வுக்கு முதல்வர் கனவை உண்டாக்கிச் சொத்துக்குவிப்பு வழக்கில் எப்படியாவது தப்பித்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கி... அவரை, சிறைக்குள்... அவரின் நெருங்கிய உறவினர்களே தள்ளிவிட்டனர்’’ என்று குமுறுகிறார்கள் சசிகலா ஆதரவு அ.தி.மு.க-வினர். சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று (14-2-17) உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, காலை 10.35 மணிக்கு தீர்ப்பை வாசித்தனர். அதில்,சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன்,…

  19. ரிசார்ட்டில் இருந்து மாயமான எம்.எல்.ஏ.க்கள்! வெலவெலத்த சசிகலா #VikatanExclusive #OPSvsSasikala ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சசிகலா மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை ரிசார்ட் முழுவதும் சசிகலாவின் ஆதரவாளர்கள் தேடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருஅதிகார மையங்கள் உருவாகின. இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பிறகு கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் சசிகலா, ஆலோசனையில் ஈடுபட்ட…

  20. அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு! அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூவத்தூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/80746-edappadi-palanisamy-selected-as-admk--le…

    • 7 replies
    • 1.8k views
  21. ‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ - பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க. தமிழகம் அரசியல் களம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் கலவர முகத்தோடு அமர்ந்துள்ளனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள். 'அடுத்து என்ன செய்வது?' என்ற ஆலோசனையில் இருக்கிறார் சசிகலா. 'பா.ஜ.க மேலிட நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பில் இருந்து சிலர் தூது சென்றுள்ளனர். தி.மு.க தரப்பில் இருந்து சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற பிறகு, முதலமைச்சர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தினார் சசிகலா. 'அதிகாரத்திற்குள் நீங்கள் வர வேண்டும் என்று விரும்பினால், உங்கள் அதிகார…

  22. உச்சமன்ற தீர்ப்பு பற்றி திருமாவளவன்

  23. கூவத்தூர் ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு! சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு, கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வரும் நிலையில், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டனர். இதில், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் நான்கு பேர் இருந்துள்ளனர். …

  24. சசிகலா குற்றவாளி..! இனி தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார்...? #OPSVsSasikala #DACase ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்திருந்தார். இந்த சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது தமிழகத்தின் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. இப்போதைக்கு கவர்னர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னொருபுறம் முதல்வர் பன்னீர்செல்வம் தமது ராஜினாமா கடித த்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகச் சொல்லி இருக்கிறார். எனவே, முதலில் பன்னீர்செல்வத்தை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் சொல்லலாம். ஓ.பி.எஸ் பெரும…

  25. உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: காவல்துறையின் கட்டுப்பாட்டில் கூவத்தூர் சொகுசு விடுதி கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சொகுசு விடுதிக்கு செல்லும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் | கோப்புப் படங்கள்: கோ.கார்த்திக் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கூவத்தூர் சொகுசு விடுதி உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.