தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
சசிகலாவிடம் 10 கேள்விகள் – ஊடகவியலாளர் என். ஜீவேந்திரன் கட்டுரைகள் Feb 9, 2017 47 தமிழக அரசியல் பெரும் பரபரப்பாக உள்ளது. சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க போவதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம். மறுபுறத்தே ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை மீளப் பெறப்போவதாக ஒரு பரபரப்பு. இவற்றுக்கு நடுவே சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 1 வாரத்துக்குள் இறுதி தீர்ப்பு வந்து விடும் என நீதிபதிகள். இவ் இடியப்பச் சிக்கலான நேரத்தில் சசிகலாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை அதாவது நேர்காணலில் எவ்வாறான கேள்விகள் கேட்கப்பட வேண்டியவை என ஊடகவியலாளர் என். ஜீவேந்திரன் தனது முகநூலில் சசிகலாவிடம் 10 கேள்விகள் என பதிவிட்…
-
- 0 replies
- 369 views
-
-
அதிமுக- ஆட்சியும்.... ஆறு மாதங்களும்! இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது என்றால்... அது தமிழ்நாடாகத்தான் இருக்கும். அதிமுக கட்சியிலும் ஆட்சியிலும் நடக்கும் குழப்பங்களும் அதிரடி மாற்றங்களுமே அதற்கு சாட்சி. கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பதவியேற்ற அதிமுக அரசின் தொடக்கத்தில் காவிரிப் பிரச்னை விஸ்வரூபமெடுத்தது... இதிலிருந்து விடுபட முயற்சி செய்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தல் கழகத் தொண்டர்கள், தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இந்த…
-
- 0 replies
- 571 views
-
-
ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்.. அதிமுக அரசு டிஸ்மிஸ் ஆகுமா? தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையில் தமிழக நிலவரம் குறித்து விரிவாக விளக்கியுள்ளாரம் ஆளுநர். இது தவிர மேலும் ஒரு விரிவான அறிக்கையையும் ராஜ்நாத் சிங்குக்கு விரைவில் ஆளுநர் அனுப்பவுள்ளாராம். சசிகலாவை அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் தங்களது சட்டசபை கட்சித் தலைவராக தே…
-
- 0 replies
- 328 views
-
-
கூவத்தூரில் கடும் மோதல்... எம்எல்ஏக்களை வெளியேற்ற கிராம மக்கள் கோரிக்கை அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் கிராம மக்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்றக்கோரி கூவத்தூர் பகுதி மக்கள் அதிமுகவினர் மற்றும் மன்னார்குடியில் இருந்து இறக்கப்பட்ட அடியாட்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக ஓபிஎஸ் அணி விகேஎஸ் என பிரிவுகளாக உள்ளது. யார் முதல்வர் பதவியை ஏற்பது என்பதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் மன்னார்குடி கும்பல் அச்சமடைந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள்…
-
- 0 replies
- 476 views
-
-
கவர்னரிடம் பன்னீர்செல்வம் வைத்த 5 கோரிக்கைகள்... 6 கோப்புகள்! #OPSVsSasikala தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், வாழ்வா? சாவா? போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் சசிகலாவும், பன்னீர் செல்வமும்... முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ், அதை வாபஸ் பெற்று, மீண்டும் அந்த இடத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார். 128 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்திருக்கும் சசிகலா முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடப் போராடிக் கொண்டிருக்கிறார். யாருக்கு வெற்றி என்பது தற்காலிகமாக கவர்னரின் கையில்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட ‘இருதலைக்கொல்லி’ நிலையில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஓ.பி.எஸ், வி.கே.எஸ் என இருவருக்கும் ஒரே நாளில் அப்பாயின்ட்மென்ட் கொடு…
-
- 0 replies
- 247 views
-
-
போயஸ் கார்டனை இளவரசிக்கு எழுதி வைத்து விட்டார் ஜெ... திடீர் தகவலால் பரபரப்பு! போயஸ் கார்டன் இல்லத்தை இளவரசிக்கு ஜெயலலிதா எழுதி வைத்து விட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த, அவருக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீட்டை, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு உயில் எழுதி வைத்து விட்டதாக அவரது தரப்பு கூறுவதாக நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தி தெரிவிக்கிறது. கோடானு கோடி அதிமுக தொண்டர்களை அதிர வைப்பதாக உள்ளது இந்த செய்தி. தமிழக மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இந்த செய்தி வந்துள்ளது. VIDEO …
-
- 0 replies
- 441 views
-
-
'துணை சபாநாயகரா? சசிகலா பிரதிநிதியா?' -தம்பிதுரையை கலாய்த்த அருண் ஜெட்லி #VikatanExclusive #OPSvsSasikala தமிழக ஆளுநரை இன்று இரவு 7.30 மணியளவில் சந்திக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. ' சட்டசபையில் பலத்தை நிரூபிக்கும் கட்சிக்குத்தான் ஆளுநர் வாய்ப்பு கொடுப்பார். பன்னீர்செல்வத்தால் முடியவில்லை என்றால், ஆட்சிக் கலைப்பை நோக்கிச் செல்லும் முடிவில் இருக்கிறது மத்திய அரசு' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் அணி திரண்டு வருகின்றனர். இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்தார் அவைத் தலைவர் மதுசூதனன். இப்படியொரு சந்திப்பை மன்னார்குடி உறவுகள் எதிர்பார்க்கவில்ல…
-
- 0 replies
- 388 views
-
-
நான் சொல்லாத 90%-ஐ என்னுள் புதைத்துவிட்டேன்: ஓபிஎஸ் சிறப்புப் பேட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன் நான் சொல்லாத 90% உண்மையை என்னுள்ளேயே புதைத்துவிட்டேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். கடந்த 7-ம் தேதி சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சியில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் அதன்பின்னர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்திருக்கிறார். அதன் சாராம்சம்: கட்சித் தலைமைக்கு எதிராக உங்களைப் பேசத…
-
- 0 replies
- 282 views
-
-
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றம்? சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பதவியில் இருந்து ஜார்ஜ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகரத்தின் புதிய போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா ஐ.பி.எஸ் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இன்று காலை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/tamilnadu/80243-chennai-police-commissioner-george-transferred---sanjay-arora-ips-may-replace-him.art
-
- 0 replies
- 596 views
-
-
சசிகலா முகாம் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாடகை எவ்வளவு தெரியுமா...? #OPSVsSasikala தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியின் முன் கொடுத்த பேட்டியானது தமிழக மக்களை மட்டுமல்லாமல், இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுநாள் வரை தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சாம்ராஜ்யமாக இருந்த அ.தி.மு.க இரண்டு பிரிவாக உடைந்து நிற்கிறது. ''மக்கள் விரும்பினால் முதலமைச்சர் பதவியை மீண்டும் ஏற்பேன்'' என்கிறார் பன்னீர்செல்வம். ஆனால், அது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. இதற்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அப்படி இல்லையென்றால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மட்டும் சசிகலாவை விட்டு வெளியே வந்து, அதனால் அ.தி.மு.க ப…
-
- 0 replies
- 567 views
-
-
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் உற்சாகம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: பிடிஐ பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தமிழக அரசியல் சூழலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு ஏற்பட்டுவரும் நிலையில், ஆளுநர் வருகை தருவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார். வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் மதுசூதனன் திடீரென சென்னை கிரீம்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வந்தார். அவர் …
-
- 1 reply
- 369 views
-
-
40 வருட அரசியல்... 33 வருட நட்பு... ஓ.பி.எஸ் Vs சசிகலா கடந்து வந்த பாதை #OPSvsSasikala #Infographic ஐந்து முறை முதல்வர்களாக இருந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் கிடைக்காத சலுகை இப்போது சசிகலாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஒருமுறையாவது முதல்வர் நாற்காலியில் உட்கார மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் ஸ்டாலினுக்கும், அன்புமணிக்கும் கிடைக்காத வாய்ப்பு, 'ஜஸ்ட் லைக் தட்' சசிகலாவுக்கு உருவாகியிருக்கிறது. அதேபோல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின்போது... இரண்டு முறை முதல்வர் நாற்காலி ஓ.பி.எஸ்ஸுக்குக் கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா-வின் மறைவுக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் தற்போது தொடர்ந்தும் வர…
-
- 1 reply
- 551 views
-
-
அ.தி.மு.க தொண்டர்கள் யார் பக்கம்? பன்னீர்செல்வம் Vs சசிகலா..? (Video) #OPSVsSasikala தமிழக அரசியலில் யாரும் எதிர்பாரக்காத வகையில், பதுங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் புலியாகப் பாய்ந்தது ஏன்? முதல்வராக தனக்கு ஏற்பட்ட அவமானங்களை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் சில கருத்துகளைத் தெரிவித்தார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை அவரது பேட்டி ஏற்படுத்தி உள்ளது. பன்னீர்செல்வம் எடுத்த முடிவு திடீரென்னு எடுக்கப்பட்ட முடிவா? அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பன்னீர் செல்வம் முடிவெடுதது விட்டார். சசிகலா எதிர்ப்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பரிச்சயமான ஒரு முகம…
-
- 0 replies
- 377 views
-
-
ரிசார்ட்டில் இருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் எங்கே? காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் ரிசார்ட்டை விட்டு வெளியேறிய ஜெயக்குமார், காரில் சென்றார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இது சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஜெயக்குமாரிடம் கருத்து கேட்க அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், "கட்சி சீனியர்களில் ஒருவர் ஜெயக்குமார். ஆனால் அவருக்கு மீன்வளத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்ப…
-
- 0 replies
- 376 views
-
-
திமுக ஆசைகாட்டியதா?- ஓ.பி.எஸ்.ஸுக்கு சசிகலா கேள்வி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: வி.கணேசன். "திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசியது போல், கருத்து வேறு வகையிலும் பரிமாறப்பட்டதா? ஆசைகாட்டப்பட்டதா?" என்று பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுகவினரை பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை என்றும், மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்புப் போக்கின் தொடர்ச்சியாக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனைக் கூட்டம்…
-
- 3 replies
- 822 views
-
-
சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டுகள் தமிழ்நாடே தற்போது ஒரு அரசியல் பிரளயத்தை கண்டு வரும் நேரத்தில், நடிகர் கமலஹாசன் சர்ச்சையான இரண்டு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார். முதல் டுவீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வர…
-
- 2 replies
- 716 views
-
-
பன்னீர்செல்வம் வீட்டுக்கு விரைந்தார் தீபா..! சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைந்துள்ளதாகவும் இருவரும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணி அளவில் திடீரென வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 50 நிமிஷங்கள் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறகு செய்தியாளர்கள் சசிகலா…
-
- 0 replies
- 478 views
-
-
சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் துடிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி? OPSvsSasikala ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தையேப் புரட்டிப் போட்டுவிட்டது.கடந்த டிசம்பர் 5 - ம் தேதியில் இருந்து தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.அனைத்து மாநில அரசியல் நகர்வுகளையும் மக்கள் மறந்துவிட்டு தமிழகத்தையே உற்று நோக்குகிறார்கள் இந்திய மக்கள். அந்த அளவுக்கு அதிரடி மாற்றங்கள், அனல் பறக்கும் அரசியல் பேட்டிகள் என தமிழக அரசியல் களம் அதகளப்படுகிறது. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டவுடன் விரைவில் முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாக அப்போதே தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூ…
-
- 0 replies
- 445 views
-
-
கவர்னர் சென்னை வருவது உறுதியாகவில்லை சென்னை : தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவது உறுதியாகவில்லை என மும்பை கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. கவர்னரின் தமிழக பயணம் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை எனவும், அவர் இப்போது வரை டில்லியில் தான் இருக்கிறார் எனவும் மும்பை கவர்னர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.dinamalar.com/news_detail.asp?id=1706941
-
- 7 replies
- 582 views
-
-
அந்த 75 நாட்கள்.. இந்த 60 நாட்கள்... முழு உண்மையையும் உடைப்பாரா பன்னீர் ஜெ., சமாதி முன் அமர்ந்து, அவர் கண்களை மூடியிருந்த அந்த நிமிடங்களில், பல கோடி தமிழர்களின் விழிகள் மூடாமல் இருந்தன. அவர் எழுந்து வந்து, ஊடகங்களின் முன் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக, தமிழகமே செவிகளைத் திறந்து வைத்து காத்திருந்தது. பரந்து விரிந்த கடலின் மையப் பரப்பில், ஒரு புள்ளியாக உருவெடுத்து, மெதுமெதுவாக வேகமெடுத்து, சூறைக் காற்றோடு சுழற்றியடிக்கும் புயலைப் போல இருந்தது, பன்னீர் செல்வத்தின் பேட்டி. என்ன சொல்லப் போகிறாரோ, எந்தெந்த உண்மைகளை உடைக்கப் போகிறாரோ என, ஏராளமான இதயங்கள் படபடத்துக் கிடந்திருக் கலாம். ஆனால்…
-
- 0 replies
- 396 views
-
-
பன்னீர் செல்வம் அரசுக்கு திமுக ஆதரவளிக்கும் - என்.ராம் நம்பிக்கை சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள ஓ. பன்னீர் செல்வம் ஆட்சி அமைத்தால், திமுக அவருக்கு ஆதரவளிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎன். ராம் முதலில், சசிகலா முதலமைச்சராகப் போவதில்லை என்று கூறினார்கள். அதற்கு அடுத்து, நேர்மாறாக முடிவெடுத்தார்கள். பிறகு, பன்னீர் செல்வம்தான் முதலமைச்சராக வேண்டும் என சசிகலா கூறினார் என்றார் ராம். முதலமைச்சரை ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தினால் தீவிரமான குற்றச்சாட்டு. சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. …
-
- 0 replies
- 352 views
-
-
அண்ணா முதல் ஓ.பன்னீர்செல்வம் வரை - தமிழக அரசியல் பிளவுகள்! #OPSvsSasikala தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை போல, குறிப்பிட்ட கால இடைவெளியில் திராவிட இயக்கத்தில் பிளவுகளும், பிரிதல்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நீதிக்கட்சியில் பெரியார் இணைந்த பிறகு தீவிர முற்போக்கு இயக்கமாக அதை முன்னெடுத்தார். அதனால் அதில் முன்னோடியாக இயங்கிய ஜமீன்தார்களும், பணக்காரர்களும் அதை இடையூறாகக் கருதி வெளியேறினர். ஆனால் அது பெரிய பிளவாகவோ அந்த இயக்கத்துக்குத் தொய்வாகவோ இருக்கவில்லை. அதேசமயம் அந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறிய பின்னர் அதில் உருவான சில பிரிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. பெர…
-
- 0 replies
- 343 views
-
-
இந்த வரலாற்றுச் சம்பவங்களுக்கெல்லாம் மெரினா சாட்சியாக இருந்திருக்கிறது! #Marina #2MinRead உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாக விளங்கும் மெரினாக் கடற்கரைக்கு நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. சுதந்திரப் போராட்டம் முதல் ஓ.பன்னீர்செல்வத்தின் தியானம் வரைக்கும் ஏராளமான சம்பவங்கள் இந்தக் கடற்கரை மணலில் பதிவாகியிருக்கின்றன. அப்படியான சில பதிவுகளைப் பற்றியதே இந்தக் கட்டுரை! முதலில் மெரினாவைப் பற்றி ஒரு ஸ்கேனிங்: உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும் உள்ள மெரினா, 12 கி.மீ நீளமுடையது. தலைமைச் செயலகம், காவல்துறை தலைமை அலுவலகம் என தமிழகத்தின் பிரதான அரசு அலுவலகங்களும், சென்னை பல்கலைக்கழகம் உள்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஓபிஎஸ் சிரித்ததை காரணம் காட்டுவது வெட்கக் கேடானது: சசிகலா மீது ஸ்டாலின் காட்டம் ஸ்டாலின் | கோப்புப் படம் "அதிமுகவுக்குள் நிலவும் காட்சிகளுக்கு, என்னைப் பார்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது" என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்" என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. நினை…
-
- 2 replies
- 627 views
-
-
பன்னீர்செல்வத்துக்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு! தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு வலுத்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ட்விட்டரில், முதலமைச்சராக பன்னீர்செல்வம் தொடர வேண்டுமா என்று மக்களிடம் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருத்துக்கணிப்பில், தற்போது வரை 37,000 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 95% பேர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர வேண்டும் என வாக்களித்துள்ளனர். நெட்டிசன்ஸ் மத்தியில் பன்னீர்செல்வத்துக்கு அமோக ஆதரவு!! திரு O. Pannerselvam @CMOTamilNadu News and Updates from honourable Chief Minister of TamilNadu. · http://tn.gov.in Follower 34.771 …
-
- 0 replies
- 395 views
-