தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
'உங்கள் அதிகாரம் மொத்தமும் பறிபோய்விடும்!' - கார்டன் தூதுவரிடம் மனம் திறந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போட்டியாக தொடர் கடிதங்களை எழுதி வந்த சசிகலா, தற்போது நிதானமாகச் செயல்பட்டு வருகிறார். 'கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்குள் நூறு சதவீத அதிகாரத்தைக் கைப்பற்றும் வேலையில் நீங்கள் இறங்கினால், இருக்கும் அதிகாரங்களும் பறிபோய்விடும்' என சசிகலா தூதுவரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, கோட்டையை நோக்கிப் பார்வையை திருப்பினார் சசிகலா. அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒரே …
-
- 0 replies
- 724 views
-
-
ஸ்டாலின் Vs சசிகலா அல்ல வைகோ Vs சசிகலா! ஒருவனுக்கு தினசரி இரவில் தன் வீட்டு வாசல் கதவை யாரோ தட்டுவதுபோல் தோன்றியது. பக்கத்து வீட்டு நண்பனிடம் ஆலோசனை கேட்டான். அவன் உள்பக்கத்தில் இருந்து பெரிய ஆணிகளை அடித்தால் வெளியே ஊசி முனையாக இருக்கும் யாரும் கதவை தட்ட மாட்டார்கள் என ஆலோசனை சொன்னான். நண்பன் ஆலோசனையை சிரமேற்கொண்டு ஆணி அடித்து முடித்தான். அன்று இரவு அவன் வீட்டிற்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்ட வந்தாள். கதவு முழுவதும் வெளிப்புறம் முள் ஆணியாக இருக்கவே வந்த அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டாமலே போய் பக்கத்து வீட்டு கதவை தட்டி விட்டாள். இந்த கதை வைகோவிற்கும் மிகவும் பொருந்தும். தமிழகத்திற்கு அதிகமான இலக்கிய ஆளுமைகளையும்,…
-
- 0 replies
- 519 views
-
-
“சின்னம்மா என அழைப்பவர்கள் அப்பாவிகளா?” இலக்கிய விழாவில் அரசியல் பேசிய ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் எழுத்தாளர்கள் சாருநிவேதிதாவும் ஜெயமோகனும். ஒருமுறை ‘உயிர்மை’ புத்தக வெளியீட்டுவிழாவில் ‘ஜெயமோகனின் புத்தகம் கவிஞர் மனுஷ்யபுத்திரனை இழிவுபடுத்துகிறது’ என்று அந்தப் புத்தகத்தை மேடையிலேயே கிழித்தெறிந்தார் சாருநிவேதிதா. ஆனால், திடீரென்று தமிழ் சினிமாவில் வரும் திடுக்கிடும் திருப்பத்தைப் போல, ‘தம்பி ஜெயமோகன் ’ என்று உறவு பாராட்ட ஆரம்பித்தார் சாருநிவேதிதா. இருவருக்கும் இடையில் இணக்கம் நிலவும் சூழலிலும் இருவரும் ஒரே மேடையில் பேசியதில்லை. அந்த அதிசயமும் நிகழ்ந்தது சமீபத்தில். அராத்து எழுதிய ஆறு புத்தகங்களின் வெளியீட்டு விழா ஜன…
-
- 0 replies
- 895 views
-
-
தமிழக முதல்வர் பதவி சந்திக்கப்போகும் சட்டச் சிக்கல்கள் “சின்னமாவை முதல்வராக்கு” என்பதுதான் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் முழக்கமாகத் தமிழகத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம், தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால், இதுவரை ‘சின்னம்மா முதல்வராக வேண்டும்’ என்ற கோரிக்கையை முதலமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வம் விடுக்கவில்லை. ஆனால், முதலமைச்சருக்குரிய பணிகளை மட்டும் தொடர்ந்து செய்து வரும் அவர், கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். சசிகலா நடராஜனை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்த தீர்மானத்தை கொண்டு போய்க் கொடுத்து, “நீங்கள் கட்சிப் பண…
-
- 0 replies
- 556 views
-
-
ஜெ., அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் சென்னையில்... முகாம்!:அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை:பேனர்களை அகற்றிய போலீசாருடன் பல இடங்களில் மோதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவின் ஆதரவாளர்கள், சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் தீபா ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்கிறார். இதற்கிடையில், தமிழகத்தின் பல பகுதிகளில், தீபா பேனர்களை அகற்றிய போலீசாருடன், அவரது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலானோர், தீபாவை அரசியலுக்கு வரும்படி, அழைப்பு விடுத்து வருகின்றனர். த…
-
- 0 replies
- 281 views
-
-
சென்னையில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபா பேரவை தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவர் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அதே சமயம், அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள தொண்டர்கள் பலர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். தீபா தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக சென்னை தி.நகரி…
-
- 0 replies
- 404 views
-
-
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியிலிருந்து நீக்கிய மத்திய அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில்…
-
- 2 replies
- 362 views
-
-
தீபாவுக்கு எல்லாமே இவர்கள்தான்! அதிர்ச்சியில் சசிகலா தீபாவுக்கு மறைமுகமாக உதவும் அ.தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தயாராகி சசிகலாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன. அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக செயல்படுபவர் சசிகலா புஷ்பா எம்.பி. சசிகலா, பொதுச் செயலாளராகக் கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்திடம் புகார் கொடுத்துள்ளார். இவ்வாறு அ.தி.மு.க.வுக்கு எதிரணியில் இருந்து கொண்டு தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் சசிகலா பு…
-
- 0 replies
- 464 views
-
-
ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படுவது ஏன்? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு... தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவர் ஓ.பி.எஸ். அ.திமு.க. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர், சசிகலா. ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒரே தலைமைதான் என்று எழுதப்படாத கட்சி விதிப்படி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, வெகுவிரைவில் முதலமைச்சராகப் பதவியேற்பார் என கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘‘சசிகலா, முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் அந்த நாள்... எப்போது என்பது இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத பட்சத்தில்... முழு பெளர்ணமி நாளான ஜனவரி 12-ம் தேதியோ அல்லது எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதியோ பதவியேற்கலாம்’’ என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். சசிகலா தரப்புக்குச் சந்தேகம்! …
-
- 2 replies
- 611 views
-
-
ரஜினியை நம்பும் சசிகலா! கார்டனின் 'ஆல் இன் ஆல்' கார்டனில் ஆதிக்கம் செலுத்துவதில் நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி என்ற பெண் முக்கியமானவர் என்று சொல்லத் தொடங்கி இருக்கின்றனர் கட்சியினர். அவரை முழுமையாக நம்பிய சசிகலா, சில அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா, மறைந்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதற்குள் அ.தி.மு.க.வில் பல மாற்றங்கள். அ.தி.மு.க.வின் தலைமை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கையில் உள்ளது. அடுத்து சசிகலா, முதல்வராவார் என்ற எதிர்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது, சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் முக்கியமானவராக நாகர்கோவிலைச்…
-
- 0 replies
- 478 views
-
-
நேற்றொரு தோற்றம்.. இன்றொரு மாற்றம்..: அடுத்த கட்டத்துக்கு தயாராகும் சசிகலா! அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றபோது. (கோப்புப் படம்: பிடிஐ) அரசியல் தலைவர்களின் திடீர் மறைவு, கட்சிக்குள் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவது வழக்கம். ஜெயலலிதாவின் மறைவிலும் ஒருசில நாட்களுக்கு இந்த குழப்பங்களும் சலசலப்புகளும் காணப்பட்டன. ஆனாலும், மாற்றுக் கட்சியினரின் அரசியல்களுக்கு எந்தவிதத்திலும் வாய்ப்பு தந்துவிடாத வகையில், குறுகிய காலத்தில் குழப்பங்களில் இருந்து அதிமுக மீண்டிருப்பதாகவே தெரிகிறது. தலைவர் இருக்கும் காலத்திலேயே வாரிசு சுட்டப்படாத அதிமுக, இவ்வளவு விரைவில் சகஜ நிலைக்…
-
- 0 replies
- 450 views
-
-
பொங்கலுக்கு விடுமுறை இல்லை... பாஜக அரசின் அதிரடியால் அதிர்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்! டெல்லி: நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் கட்டாய விடுமுறை தினத்திலிருந்து பொங்கல் விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் சூரியன், மழை, பனி உள்ளிட்ட இயற்கை சக்திகளுக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகையாக பொங்கலை முன்னோர்கள் கொண்டாடினர். பிற்காலத்தில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் திருநாள் …
-
- 0 replies
- 515 views
-
-
முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா கருத்தரங்கில் பங்கேற்றோர் அதிர்ச்சி கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா வெளியேறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'இந்தியா டுடே' குழுமம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. கருத்தரங்கை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா துவக்கி வைத்தார்; ஜெயலலிதா உருவ படத்தையும் திறந்து வைத்தார். கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போதே, அரங்கில் இருந்து சசிகலா வெளியேறினார். மாநில முதல்வர் பேசும் போது, அவர் சார்ந்த கட்சி பொதுச்செயலர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்த…
-
- 1 reply
- 601 views
-
-
தீபாவிற்கு பெருகும் ஆதரவு ... சசிகலா உறவினர்கள் திக்... திக் தஞ்சாவூர், : - சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவால், சசிகலா உறவினர்களை பீதியடைய செய்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உயர்மட்ட நிர்வாகிகள், பகீரத பிரயத்தனம் செய்து, சசிகலாவை பொதுச் செயலராக அமரச் செய்துவிட்டனர். சசிகலாவை ஏற்காத, அதிருப்தியாளர்கள், சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும், 'பிளக்ஸ்' பேனர்கள் மீது, சாணம் வீசி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். மேலும், இதற்கு மாற்றாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு, ஆதரவுகள் தமிழகம் முழுவதும் தற்போத…
-
- 1 reply
- 786 views
-
-
சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள், விரைவில் அம்பலமாகும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பான விசாரணையின் போது, ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் குறித்த அறிக்கையை, தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த மனுவில், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது; இந்த சந்தேகம், கட்சி தொண்டர்கள் மத்தியில் உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. 'ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., மற்றும் மருத…
-
- 0 replies
- 573 views
-
-
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கமிஷனை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய…
-
- 0 replies
- 313 views
-
-
ராம மோகன ராவின் மருத்துவனை ஒப்பந்த ஊழல்... அதிர வைக்கும் ஆதாரங்கள்?! அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஆதாரங்களை வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன.தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்ய டெண்டர்முறை பின்பற்றப்படுகின்றது.கடந்த 2013 - ம் ஆண்டு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டிஸ் (Padmavathi Hospitality And Facility Management Servi…
-
- 0 replies
- 447 views
-
-
'என் வழி... தனி வழி!'- சசிகலாவின் புது வியூகம் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்த அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் நிர்வாகிகளிடம் உணர்வுபூர்வமாக பேசி உள்ளார். அப்போது, 'அம்மாவின் கனவை நினைவாக்க வேண்டும். கட்சிக்காக உண்மையாக உழையுங்கள், உங்களுக்குரிய பலன் உங்களைத் தேடி வரும்' என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவையொட்டி அவரது தோழி சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானார். அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளை கட்சி அலுவலகத்தில் சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு பல அதிரடி மாற்றங்கள் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகிகளின் மனநிலையை அறிந்து கொள்ளவே இந்த ஆலோசனை நடத்தப்…
-
- 0 replies
- 503 views
-
-
மோடியின் அடுத்த ஆப்பு ரெடி ... டிஸ்கி : ஒணம் ..கூனம்... மகாவீர் ஜெயந்தி .. மயிறு ஜெயந்திகெல்லாம் விடுமுறை அளித்து அழகு பார்த்த தமிழனுக்கு இப்படி ஒரு கண்றாவியா ..? எல்லாம் பேசமா ஊரை காலி பண்ணிட்டு வேற ஊருக்கு கிளம்புங்கப்பா .. பாரத மாதாக்கி ஜே !!
-
- 0 replies
- 464 views
-
-
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநரின் நம்பிக்கை! - எம்.பிக்கள் கூட்டத்தில் உறைந்த சசிகலா பிரதமருக்குத் தொடர் கடிதம், அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தோடு வலம் வரத் தொடங்கிவிட்டார். 'குடியரசு தினத்தில் ஓ.பி.எஸ் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம் கொடுத்த உத்தரவும் ஜெயலலிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட மனுவை பணியாளர் நலத்துறைக்கு ஒப்படைத்ததையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, 'ஜனவரி 2-ம் தேதி முதல்வராக பதவியேற்பார்' என நிர்வாகிகள் பேசி வந்தனர். அதன்பிறகு, 'ஜனவரி 12-ம் தேதி முதல்வர் ஆவார்' என்றனர். அதையொட்டி, அமைச்சர்கள் …
-
- 2 replies
- 687 views
-
-
தமிழகத்தில் விறுவிறு... சுப்ரீம் கோர்ட் சுறுசுறு... தொட்டுவிடும் தூரத்தில் வருகிறது தீர்ப்பு தேதி தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள் வேகமாக மாறியபடி உள்ள நிலையில், தலைமை நீதிபதி மாற்றம், நீதிபதி விரைவில் ஓய்வு என, டில்லி யில் சுப்ரீம் கோர்ட்டும் சுறுசுறுப்பாவதால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்கு கிறது என்ற பேச்சு அடிபடுகிறது. பெங்களூர் சிறப்பு கோர்ட்டில், 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பால், முதல்வர் பதவியை இழந்து சிறைக்கு சென்றார் ஜெய லலிதா. ஆனா…
-
- 0 replies
- 351 views
-
-
மூன்று நிமிட பேச்சுக்கு 3 மணி நேரம் காத்திருக்கச் செய்வதா?* சசிகலா கூட்டத்தில் பங்கேற்ற, 'மாஜி'க்கள் கொதிப்பு சசிகலாவின் மூன்று நிமிட பேச்சை கேட்க, மூன்று மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால், 'மாஜி' அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 'மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சந்திப்பு, கசப்பானதாக முடிந்து விட்டது' என்றும், கொதிப்புடன் கூறினர். அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவுக்கு, பல மட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைச் சமாளிக்க, தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார். நேற்று காலை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். மதியம், முன்னாள் அமைச்சர்கள்…
-
- 0 replies
- 416 views
-
-
எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் முடிவு * தீபா அறிவிப்பு ''எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், என் முடிவை அறிவிப்பேன்,'' என, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவை வலியுறுத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று மாலை, தொண்டர்களிடம் தீபா பேசுகை யில், ''வரும், 17ல், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை, அனைவரும் கொண்டாட வேண்ட…
-
- 0 replies
- 530 views
-
-
தீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று துவங்கினர். கட்சிக்கு, கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. தீபாவுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவால், சசிகலா வட்டாரங்கள் கலக்கத்தில் உள்ளன. அ.தி.மு.க., பொதுச்செயலராக பொறுப்பேற் றுள்ள சசிகலாவை, அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால், 'ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும்; ஜெ., விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழகம் முழுக்க பல இடங்களில், தீபா பெயரில் பேரவை துவங்கி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோ…
-
- 0 replies
- 367 views
-
-
சசிகலா கட்சிப் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக வளர்மதி அறிவிப்பு 2017-01-0800:04:59 சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக கட்சியின் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, வளர்மதி தனது குடும்பத்தினருடன் நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். மறைந்த ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது …
-
- 6 replies
- 1.7k views
-