Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'ஓட்டெடுப்புக்குச் செல்வாரா ஓ.பன்னீர்செல்வம்?!' -கார்டன் கொந்தளிப்பின் பின்னணி ' பொங்கலுக்குள் சசிகலா முதல்வர் ஆவார்' என மன்னார்குடி உறவுகள் பேசி வந்தாலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. 'முதலமைச்சர் பதவியை விட்டுத் தருவாரா என்பதைக் காட்டிலும் அவரது மௌனம்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். அண்ணா தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அதேநேரம், ' கட்சிக்கும் ஆட்சிக்கும் சின்னம்மாவே தலைமை தாங்க வேண்டும்' என அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். நேற்று மக்கள…

  2. முதல்வர் பதவி! சசிகலாவுக்கு தம்பிதுரை முக்கிய கோரிக்கை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் பேசிய சசிகலா, "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்" என்றார். பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு மு…

  3. சசிகலாவுக்கு முக்கியத்துவம் : சொம்பு தூக்கும் செய்தி துறை மறைந்த முதல்வர், ஜெயலலிதா இறுதி ஊர்வல வீடியோ காட்சியில், அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்தி மக்கள் தொடர்பு துறை விளம்பரப்படுத்தி வருகிறது. அரசின் பணிகளை, திட்டங்களை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களை, மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி பரப்புரை செய்வது, செய்தி மக்கள் தொடர்பு துறையின் முக்கிய பணி. ஆனால், கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின், அது தனி மனித துதிபாடும் துறையாகிப் போனது. அடி பணிந்து நிற்கின்றனர் இருப்பினும், ஆட்சியாளர்கள் என்பதால், யாரும் ப…

  4. தம்பிதுரை அறிக்கை சீர்குலைக்கும் செயல்: ஸ்டாலின் சென்னை : 'முதல்வருக்கு உள்ள பலத்தை, சட்டசபையில் உடனடியாக நிரூபிக்க, கவர்னர் உத்தரவிட வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். அவரது அறிக்கை: முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் உள்ளது. கொச்சைப்படுத்தி விட்டார் திடீரென, முதல்வர் பதவியை சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி, கவர்னர் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, சசிகலா முதல்வராக வேண்டும் என, ஒரு அறிக…

  5. உதயகுமாரை தொடர்ந்து : தம்பிதுரை ராஜினாமா? சசிகலாவுக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய, அமைச்சர் உதயகுமார் தயாராக இருப்பது போல, சசிகலா உறவினருக்காக, எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய, தம்பிதுரை முன்வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில், அவரது தோழி சசிகலா அமர்ந்துள்ளார். தற்போது, முதல்வர் பதவிக்கும் அவரே வர வேண்டும் என, அமைச்சர் உதயகுமார், முதல் குரல் எழுப்பினார். சசி, முதல்வரானால், தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களின் மனநிலை, சசிகலாவிற்கு எதிராக உள்ளது. ஜெயலலிதா நினைவிடத…

  6. அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப்பேற்றதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சசிகலாவை ஏற்றுக்கொள்ள முடியாமல், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள, இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.சென்னையில் நேற்று, கட்சித் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மற்ற சில பகுதிகளில், கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நேற்று பொறுப்பேற்றார். 'தனக்கு சாதகமான பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து, சசிகலா பொதுச்செயலராகி உள்ளார். முன்னணி தலைவர்கள், தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக, பதவி சுகத்தில் உள்ளவர்கள் சசிகலாவை …

  7. தமிழக அமைச்சரவையில், அதிக முக்கியத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் கேட்டு, அ.தி.மு.க.,வில் உள்ள, ஆதி திராவிட எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். கட்சியிலும், ஆட்சியிலும் மற்ற ஜாதியினரையே முன்னிறுத்துவதாக, அவர்கள் பகிரங்க புகார் கூறத் துவங்கியுள்ளதால், பிரச்னை வெடித்துள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஜெயலலிதா இருந்த வரை, கட்சியிலும், ஆட்சியிலும் ஜாதி வேறுபாடு தலைகாட்டவில்லை. அவர், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அமைச்சரவையில் இடம் கொடுத்தார். ஒரு அமைச்சரை நீக்கும் போது, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த வேறு ஒருவரையே, அமைச்சராகவும் நியமித்தார். அமைதி கா…

  8. எந்தத் தொகுதி வெற்றித் தொகுதி?! - சசிகலாவுக்கு 'ஷாக்' கொடுத்த உளவுத்துறை 'தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்' என அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 'சமுதாய வாக்கு பலத்தோடு அதிக ஓட்டு சதவீதத்தில் எந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியும்' என மன்னார்குடி உறவுகள் ஆலோசித்து வருகின்றனர். அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றார் சசிகலா. கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கார்டன் அறிவுறுத்தலின்படியே செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து, எந்த எதிர்ப்பும் இல்லாமல் முதலமைச்சர் பதவியில் அவர் அமர வேண்டும் என்பதற்காக, காய் நகர்த்தி வருகின்றனர் மன்னார்குடி …

  9. Started by நவீனன்,

    ஜெயலலிதா நேசித்த 5 பெண்கள்! #jayalalithaa ஒரு பெண்ணின் எல்லைகள் இவைதான் என வகுத்திருந்தவற்றைத் தகர்த்தெறிந்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா. அவரின் மறைவுக்கு கட்சி பேதமின்றிப் பலரும் கண்ணீர் சிந்துவதற்கு முக்கியக் காரணம், தான் ஒரு பெண்தானே என்று எந்த இடத்திலும் தயக்கம் கொள்ளாமல், தன் ஆளுமையை வளர்த்துக்கொண்டு நிகரில்லாத தலைமையாக விளங்கியதே. பல தலைவர்களோடு கைகோத்து தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி, தோல்விகளைப் பார்த்தவர். எப்போதும் தன் ஆளுமையைச் சரித்துக்கொள்ளாதவர். ஜெயலலிதா, தன் வாழ்க்கையில் நேசித்த பெண்களில் ஐந்து பேர் முக்கியமானவர்கள். அன்னை சந்தியா: தன்னுடைய சிறுவயதிலேயே அப்பாவை இழந்த ஜெயலலிதாவுக்கு அம்மாவாக மட்டுமல்லாமல் சிறந்த தோழியாகவும்…

  10. 51 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு இலங்கையில் நடந்த இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் அந்நாட்டு சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு: தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய இலங்கை இடையில் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய விவசாயம் மற்றும் மீனவளத் துறை மந்திரி ராதா மோகன் சிங் மற்றும் இலங்கை மந்திரி மஹிந்தா அமரவீரா ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு அமைச்சர்களும் க…

  11. பதவி இறங்க மறுக்கிறாரா பன்னீர் செல்வம்? - Exclusive தமிழகம் இதுவரை பார்த்திராத பல அரசியல் கேவலங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளது. 'முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி.. ' என்ற ஒரே தகுதி போதும், கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரும் கட்சியை நிர்வகிக்கவும், ஏழரை கோடி தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டை ஆளவும் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர் அதிமுக நிர்வாகிகள். வெளியிலிருந்து பார்த்தால் கட்சி நிர்வாகிகள் எல்லாம் சசிகலாவை 'சீக்கிரம் சிஎம் ஆகுங்க... அப்பதான் எங்க ஜென்மம் சாபல்யமடையும்' என்று வற்புறுத்துவது போலத் தெரிந்தாலும், உண்மை நிலவரம் வேறு என்கிறார்கள். சசிகலா மற்றும் அவரது குடும்ப கேங்கின் வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாகவே கட்சியினர் சசிகலாவுக்கு வேண்டுகோள் …

  12. கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! ‘கோபல்ஸ்’ (Goebbels), வரலாற்றின் பக்கங்களை இருள் சூழவைத்த ஹிட்லரின் பரப்புரையாளன்; எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி, மக்களை நம்பவைக்கும் வித்தை அறிந்தவன்; ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து... அதை, பொதுக் கருத்தாக்கி... அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைப்பவன்; பெரும் தந்திரக்காரன். அவன், பிரசாரத்துக்காக 19 யுக்திகளை வகுத்துச் சென்றான். அதை, அப்படியே சுவீகரித்துக் கொண்டு... அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, மிகத் தந்திரமாக காய்களைக் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் நகர்த்திக் கொண்டிருக்கிறார். பிரசாரத்துக்கு கோபல்ஸின் யுக்திகளும்... சசிகலாவின் நகர்வுகளும்!…

  13. ஜெ., மரணத்திற்கு நீதி கேட்டு நெடும் பயணம் மக்களை சந்தித்த பின் முடிவெடுக்கிறார் தீபா 'கட்சியும், ஆட்சியும் உங்களோடு; மக்களும், தொண்டர்களும் எங்களோடு' என்ற கோஷத் துடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், அண்ணன் மகள் தீபா, மக்களிடம் நீதி கேட்கும் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில், 'சசிகலா தலைமை ஏற்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, எதிர் பார்த்த படியே,சசிகலா, பொதுச்செயலராகி உள்ளார். எனினும், தனி அதிகாரியை நியமித்து, முறைப்படி தேர்தல் நடத்த, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. கட்சி விதிப்படி, பொதுச்செயலரை,…

  14. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது ப…

  15. சசி பாரதம் தொடக்கம்! ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்’ எனச் சொன்ன ஜெயலலிதா, பொதுமக்களை கார்டனில் சந்தித்தது அபூர்வம்தான். எம்.ஜி.ஆரின் அரவணைப்பு, ஜெயலலிதாவின் பரிவு என நவரசங்களையும் தொட்டார் சசிகலா. கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா பெரியம்மாவாக மாறிக்கொண்டிருக்கிறார். பொதுக்குழு நடந்த ஏரியாவில் ஜெயலலிதாவின் பிரமாண்டமான பேனர் இருந்தது. ‘சசிகலா பொதுச்செயலாளர்’ என்றதும் ஜெயலலிதாவை மறைத்துவிட்டு (!) சசிகலாவின் பேனர் உதயமானது. சட்டப்படிதான் நடக்குறாங்களாம். ராமரின் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி நடத்திய பரதன் காட்சி ரிப்பீட் ஆனது. ஜெ. இல்லாத பொதுக்குழுவுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய குஷன் நாற்காலியையும் டீப்பாயையும் காரில் பத்திரமாகக் கொண்…

  16. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை: துவங்கியது புதிய சர்ச்சை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த தகவல்களை தர, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. கவர்னர் அலுவலகமோ, அரசின் பொதுத்துறை பதில் அளிக்க அறிவுறுத்திஉள்ளது. ஜெயலலிதாவின் மறைவில், மர்மம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது. இந்நிலையில், ஜெ.,க்கு அளித்த சிகிச்சை தொடர்பாக, நீலகிரி மாவட்டம், தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் என்பவர், அப்பல்லோ மருத்துவ மனையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒன்பது கேள்விகள் கேட்டிருந்தார்.இந்தக் கேள்விகளுக்கு, அப்பல்லோ …

  17. எம்.எல்.ஏ., பதவியை துறக்கிறார் மந்திரி உதயகுமார்ராஜினாமா? :திருமங்கலம் தொகுதியில் போட்டியிட சசி திட்டம்:சென்னை ஆர்.கே.நகரில் தினகரனை களமிறக்க முடிவு அ.தி.மு.க., பொதுச்செயலராகி உள்ள சசிகலா, திருமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறைவேற்றிய, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், அவருக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அத்துடன், கட்சியில் பொதுச்செயலருக்கு அடுத்த இடத்திற்கு, தினகரனை கொண்டு வர வசதியாக, அவரை ஆர்.கே.நகரில் களமிறக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வராக இருந…

  18. “ஜெ. வெற்றிடத்தை வைகோவால் நிரப்ப முடியாது! - திருமா அதிரடி “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும்” என்று சொல்கிறார், இந்த அணியைத் தொடங்குவதற்கு முன்முயற்சி எடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளாரே?” “கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்ணன் வைகோ அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக மக்கள் நலக் கூட்டணியை மிகச் சிறப்பா…

  19. ‘செல்லாக்காசு’... விரிசல் விழுந்த ம.ந.கூ. அ.தி.மு.க., தனது புதிய தலைமையைத் தேர்வு செய்துள்ளது. தி.மு.க தனது தலைமையை உறுதிசெய்கிற முடிவில் இருக்கிறது. இத்தகைய அரசியல் சூழலில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகுவதாக, அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைகோ வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வைகோ விலகலுக்கு, பிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ நடவடிக்கை தொடர்பான கருத்துவேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையான காரணங்கள் வேறு! ஒருங்கிணைப்பாளர் பதவி ‘நோ’! கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முதலில் எடுத்தவர் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன். இந்த முழக்கத்தை தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள…

  20. ’மக்களால் நான்... மக்களுக்காக நான்... அம்மா வழியில் பயணம்!’ - பொதுச் செயலாளர் சசிகலா உரை! (ஆடியோ) "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்" என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசினார் சசிகலா. அப்போது, ஜெயலலிதாவின் மறைவை குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத்தார். மேலும், அவரது முதல் குரலை கேட்க இந்த ஆடியோவை க்ளிக் செய்யவும்..! http://www.vikatan.com/news/tamilnadu/76442-…

  21. ராம மோகன ராவ் அதிரடி! என்ன பின்னணி? ரெய்டு... துணை ராணுவம் குவிப்பு... கோட்டையில் சோதனை... மருத்துவமனை அட்மிட் என தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை சுற்றி நடந்த நிகழ்வுகளின் க்ளைமாக்ஸ் பிரஸ்மீட்டில் முடிந்திருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கொளுத்திப் போட்ட திரி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. அவர் பேட்டியில் சொன்ன விஷயங்களின் பின்புலங்கள் என்ன? உதய் திட்டம், காவிரிப் பிரச்னை, மதுரவாயல் - துறைமுகத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா இல்லாத நிலையில் ‘மத்திய அரசுக்கு ஆமாம் சாமி’ போட்டு வந்தது அ.தி.மு.க. அரசு. தலைமைச் செயலாளரின் தலையை உருட்டியதோடு கோட்டையில் புகுந்து சோதனை …

  22. “சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால்... அம்மா இருந்திருக்க மாட்டார்!” ‘‘சசிபாரதம் ஆரம்பம்!” அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இருந்து கழுகார் அனுப்பிய தலைப்பு இதுதான். அடுத்த சில மணி நேரத்தில் அலுவலகத்தில் லேண்ட் ஆனார் கழுகார். ‘‘இதுவரை அம்மா தி.மு.க-வாக இருந்தது. இனி, அது சின்னம்மா தி.மு.க. ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவி அம்மா வடிவில் கண்டோம். புரட்சித் தலைவி அம்மாவை மதிப்புக்குரிய சின்னம்மா வடிவில் கண்டு, கழகப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவோம்’ என்று சூளுரைத்துள்ளார்கள். ‘அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில்கொண்டு சின்னம்மா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்…

  23. ஜெ. மரணம்... - ரிச்சர்ட் பியெலுக்கு 12 கேள்விகள்! செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கி மூன்று மாதங்களாக அப்போலோவில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டது. அதுவரை ‘சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என சொல்லி வந்தார்கள். டிசம்பர் 5-ம் தேதி வரை அளிக்கப்பட்ட ’எக்மோ’ உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் அன்றிரவு 11:30-க்கு ஜெயலலிதா இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் ஆலோசனைப் படிதான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது’ என அப்போலோ நிர்வாகம் சொல்லியது. பரபரப்பான அந்தக் கடைசி இரண்டு நாட்க…

  24. மீண்டும் காலில் விழும் கலாசாரமா முதல்வர் மீது அமைச்சர்கள் கோபம் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா காலில் விழுந்து வணங்கியது, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காணும் போதெல்லாம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி கள், அவரது காலில் விழுந்து வணங்குவர். எதிர்க்கட்சியினர் கிண்டலடித் தாலும், காலில் விழும் பழக்கத்தை, அ.தி.மு.க.,வினர் கைவிடவில்லை. ஜெ., மறைவை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வரானார்.பொதுசெயலர் பதவிக்கு அவர் போட்டியிடுவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்; ஆனால், அவர் சசிகலாவை முன்னிறுத்தினார். மற்ற அமைச்சர்களும்,…

  25. மன்னார்குடியின் மாயவலையில் சிக்கி மாண்டாரா ஜெ "ஜெயலலிதா, சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளை யர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்... 20 வருடங்களுக்கு முன் வலம்புரிஜான் தேநீர் விற்றவர் இந்தியாவின் பிரதமரானதையும் செருப்பு தைத்தவரின் மகன் அமெரிக்க ஜனாதிபதியானதையும் ஜனநாயகம் என்று பெருமை கொண்ட எம்மால் தற்போது பணிப்பெண்ணாக வந்த ஒருவர் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளராக மாறியுள்ளதோடு முதல்வராகும் துடிப்பில் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதை ஏனோ உள் மனம் ஏற்றுக்கொள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.