Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போயஸ் கார்டனுக்குள் அதிகாரிகளுக்கு நோ என்ட்ரி! - கோட்டையில் கோலோச்சும் ஓ.பி.எஸ். அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. அதே சமயம், 'முதல்வர் மரணம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சை எழுப்புவதால், மிகப் பொறுமையாகவே காய் நகர்த்தி வருகிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, 'அ.தி.மு.கவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும்' எனக் கட்சியின் சீனியர்கள் பேசி வருகின்றனர். 'இதற்காக அ.தி.மு.கவின் உட்கட்சி விதிகளையும் தளர்த்துவோம்' என நேற்று பேட்டி அளித்தார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன். "ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்தவர்கள் எல்லாம், இப்போது சசிகலா…

  2. “ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லையா? அப்போ அப்போலோ CCTV காட்சிகளை வெளியிடுங்கள்!” - சசிகலா புஷ்பா அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளராக விளம்பரப்படுத்திக்கொள்ளும் சசிகலாவை எதிர்த்தும், ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் சசிகலா புஷ்பாதான் இப்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக். எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத காரியத்தைத் தைரியத்துடன் செய்திருக்கும் சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த சிறப்பு பேட்டி. ‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறீர்களே?’’ ‘‘அம்மாவின் மரணத்தில் ஏதோ ஒன்று மக்களுக்குத் தெரியக…

  3. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்: டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி பிரத்யேக பேட்டி சுப்பிரமணியன் சுவாமி. | கோப்புப் படம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார். ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து? மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த ப…

  4. பெருங்கனவோடு காத்திருந்த நான்..! ஜெ. மறைவால் பேரறிவாளன் கண்ணீர் கடிதம் ஜெயலலிதாவின் கைகளால் விடுதலை பெற்று எனது அன்னையோடு சென்று நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்த நான் கடற்கரை மணல் பரப்பில் கல்லறையில் துயிலும் அவரை எங்ஙகனம் எதிர்கொள்ளப் போகிறேன் என்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் தொடக்கத்திலேயே உருக்கமாக எழுதியுள்ளார். "அழாதீர்கள் அம்மா..! உங்கள் மகன் உங்களுடன் சேரப்போகிறாரே..! கலங்காதீர்கள்..!"- என எனை ஈன்றவள் கரம்பற்றி ஒருதாயின் பரிவோடு கண்ணீர் துடைத்துவிட்ட 'அம்மா', எம்மை துயரக்கடலில் தள்ளிவிட்டு வங்கக்கடலோரம் ந…

  5. சசிகலாவிடம் கேட்க வேண்டிய 25 கேள்விகள்

  6. சென்னை அருகே கரையைக் கடக்கிறது 'வார்தா' புயல் சென்னை அண்ணாசாலை | படம்: எல்.சீனிவாசன் செயற்கைக்கோள் புகைப்படம் | 12.12.2016 காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்டது. அதிதீவிர புயலான வார்தா, இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. * திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுத…

  7. கெளதமி மோடிக்கு எழுதிய கடிதத்தின் முழு தமிழாக்கம்! தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிர் இழந்தார். அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணம் அடைந்த நாள் வரை பல மர்மங்கள் இருப்பதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பான கேள்விகளை யாரிடம் கேட்பது என மக்கள் புரியாத நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில், ஜெயலலிதா-வுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகை கெளதமி இது குறித்து பதில் அளிக்கும் படி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடித்ததின் சாராம்சம் இது... ‘‘இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அவர்களுக்கு... அன்புடையீர், நான், இந்தக் கடிதத்தை ஒரு சாதாரண இந்திய பிரஜையாக எழுதுகிறேன…

  8. இப்போதே முதல்வர் ஆகிவிட்டாரா சசிகலா? கடித சர்ச்சை! கச்சத்தீவில் புதுப்பிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயத்தின் தொடக்க விழாவில் தமிழக மீனவர்கள் 100 பேர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டிருப்பது, சசிகலா இப்போதே முதல்வர் ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவானது, இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது செல்லாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில், அவரது சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வழக்கு தொடர்…

  9. ‘அம்மா’ வுக்குப் போட்ட அதே 45 டிகிரி கும்பிடு! - சசிகலாவை கிடுகிடுக்கச் செய்த அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுப்பட்டதோ அதை அச்சுப் பிசாகாமல் தமிழக அமைச்சர்கள் சசிகலாவுக்கும் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவர், உயிரோடு இருக்கும் வகையில் அ.தி.மு.கவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாகவில்லை. இதனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக்கட்சியை யார் வழிநடத்துவது என்பதில் கடும் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் நிழலாக அவரது தோழி சசிகலா போயஸ் கார்டனில் இருந்தார். தற்போது, ஜெயலலிதாவின் இடத்தில், அதாவது அ.தி.மு.கவின் பொது செயலாளராக சசிகலாவை ஒர…

  10. “அத்தையிடம் நான் நெருங்கிவிடக் கூடாது என பயந்தார்கள்!” உண்மைகளை உடைக்கும் தீபா ஜெயலலிதா உயிருடன் இருக்கு வரையில் அவரை சந்திக்க முயன்று தோற்றுப் போனவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ‘‘அப்போலோ தொடங்கி ராஜாஜி ஹால் வரையில் பெரிய போராட்டத்தையே நடத்திவிட்டேன். கடைசியாக அவரிடம் ஒரு வார்த்தை பேசக் கூட முடியாமல் போய்விட்டதே’’ என உருகுகிறார் தீபா. ஜூ.வி-காக அவரிடம் பேசினோம். ‘‘அப்போலோவிலே உங்களை அனுமதிக்கவில்லை. அஞ்சலி செலுத்த எப்படி போனீர்கள்?’’ ‘‘அத்தையின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தபிறகு அப்போலோவில் இருந்து கார்டனுக்கு போனேன். அங்கே நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரையில் ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தேன். அத்தையைப் பார்க்கவிடவில்ல…

  11. ஜெயலலிதா இடத்தில் சசிகலா... சசிகலா இடத்தில் திவாகரன்! பரபரக்கும் மன்னார்குடி 'கள நிலவரம்' "உங்களுக்கு துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை; உறவுமில்லை. உங்களுக்கு உண்மையான தங்கையாகவே இருக்கவே விரும்புகிறேன். அவருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்" - 2011-ம் ஆண்டு இறுதியில் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய சசிகலா, 2012-ம் ஆண்டு துவக்கத்தில் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி தான் இது. இதை அறிக்கையாகவும் வெளியிட்டார் சசிகலா. இந்த கடிதத்தை ஏற்று சசிகலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்று, மீண்டும் கட்சிக்குள்ளும், கார்டனுக்குள்ளும் சசிகலாவை அனுமதித…

  12. 16 வருடங்களுக்கு முன்னர் ஆந்திராவில் உயில் எழுதினாரா ஜெயலலிதா?! - ஆந்திர பத்திரிகை செய்தி மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று தமிழ்நாட்டில் பரபர விவாதங்கள் நடைபெறும் வேளையில், ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ஆந்திராவில் வெளிவரும் ‘சாக்‌ஷி’ (விட்னஸ்) பத்திரிகையில், '16 ஆண்டுகளுக்கு முன்னரே ஜெயலலிதா தன் சொத்துக்களை ரத்த உறவுகளின் பெயரில் உயில் எழுதி வைத்து விட்டார்' என செய்தி வெளியிட்டிருக்கிறது. கடந்த 2000 ஜூலை 14-ம் தேதி அன்று டாக்குமென்டரி புத்தகத்தில் 3132-ம் எண்ணில் ஹைதராபாத், பஷிராபாத் ஜெ.ஜெ. கார்டன் முகவரியில் நமது எம்.ஜி.ஆர். பெஸ்ட் சாரிடபிள்…

  13. ராஜீவ் கொலை பின்னணியில் உள்ள 'உண்மையான சதிகாரர்கள்' யார்?- உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் கேள்வி பேரறிவாளன் | கோப்புப் படம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளதா? உண்மையான சதிகாரர்கள் யார்? என்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப, சிபிஐ இதற்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு புதனன்று வந்த போது, சென்னை தடா கோர்ட்டின் உத்தரவு இருந்தும் ராஜீவ் கொலை பின்னணியில் பெரிய அளவில் சதி நிகழ்ந்துள்ளதா என்பதை ஏன் விசாரிக்கவில்லை என்று சிபிஐ-க்கு வ…

  14. தீபாவை தலைமையேற்க அழைக்கும் பேனர்களால் பரபரப்பு ! பெரம்பலூர் : ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அ.தி.மு.க. தலைமையேற்க வருமாறு அழைத்து பெரம்பலூரில் ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் அழைப்பு விடுக்க... இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கண்டனக் குரல்கள் எழத்துவங்கியுள்ளன. இந்நிலையில், ஜெயலலிதாவின் ரத்த வாரிசான தீபா தலைமையில் கட்சி செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை திடீரென எழுந்துள்ள…

  15. ‘அப்போலோ ரகசியத்தை வெளியிட்டால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும்!’ - மிரட்டும் ஹேக்கர்ஸ் 'ஹேக்கிங்' இந்த வார்த்தையே பலரை பீதியூட்டுவதாக மாறிவிட்டது. 'ஹேக்கிங்' என்பது நல்லது, கெட்டது இரண்டு செயல்களுக்கும் பயன்படுத்த முடியும். ஆனால் தற்சமயம், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திருடி, தனக்கு சாதகமாக்கி கொள்வதற்கே ஹேக்கிங் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. லீஜியன் என்ற ஹேக்கர் குழு இந்தியாவைப் பற்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், நாங்கள் ஹேக் செய்துள்ள, சில அரசியல் தகவல்களை வெளியிட்டால், இந்தியா மிகப் பெரும் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே அது. இந்த லீஜியன் ஹேக்கர் குழுதான், காங்கிரஸ் கட்சியின்…

  16. சசிகலாவுடன் இந்து என். ராம் திடீர் சந்திப்பு! அதிமுக அழியும் என சாபம் கொடுத்தவர்! சசிகலாவை இந்து என் ராம் இன்று திடீரென சந்தித்தார். சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் பேரழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார் ராம். சென்னை: மூத்த பத்திரிகையாளரான இந்து என் ராம் இன்று திடீரென சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார். அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைத்தால் பேரழிவுதான் ஏற்படும் என கடுமையாக விமர்சித்த இந்து ராம் திடீரென போயஸ் கார்டனுக்கு விசிட் அடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினார் சசிகலா. இதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் இந்து ராம். அரசியல் …

  17. ஜெயலலிதா மரணமும்...ஒரு வாரத்தில் மாறிய காட்சிகளும்! கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை... சென்னை ராஜாஜி ஹாலே மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனது. சென்னை விமான நிலையம், இந்தியா முழுவதிலும் இருந்து வந்த பிரதமர் உள்ளிட்ட தலைவர்களால் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்த செல்வி ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அஞ்சலி முதல் அடக்கம் வரை எல்லாம் ஒரேநாளில் நடந்தேறின. தமிழக அரசு சார்பில் ஒரு வார கால துக்கம் அனுசரிக்கப்படும் என அ.தி.மு.க அரசு அறிவித்தது. ஆனால் அடக்கம் செய்த ஈரம்கூட காய்வதற்குள், அடுத்த பொதுச்செயலாளருக்கு ஆள் புடிக்கத் தொடங்கி விட்டார்கள் அ.தி.மு.க-வின் ரத்தத…

  18. தஞ்சாவூரில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக பிரமுகர் கோயில் கட்டியுள்ளார். தஞ்சாவூர் மேலவீதியைச் சேர்ந்தவர் எம்.சாமிநாதன்(44). 18-வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் கொறடாவுமான இவர், மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 லட்சம் செலவில் கோயில் கட்டியுள்ளார். இதுகுறித்து எம்.சாமிநாதன் கூறியது: என்னைப் போன்ற சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவரது மறைவு என்னை பெரிதும் பாதித்தது. அவருக்காக மேலவீதியில் கடந்த 7-ம் தேதி கோயில் கட்டும் பணியை தொடங்கினேன். தற்போது கட்டுமான பண…

  19. போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறார் சசிகலா?! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் வசித்த போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறாராம் சசிகலா. கடந்த 5-ம் தேதி இரவு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்த மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதி மற்றும் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கட்சியை வழிநடத்தும் அதிமுகவின் அடுத்த பொது செயலாளர் யார் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. எதிர்பாரா திருப்பமாக கட்சியின் சீனியர் தலைவர்கள், சசிகலா பொது செயல…

  20. சென்னை விமான நிலையம் திறக்கப்பட்டது வர்தா புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது. ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை இரத்து செய்யவும் அதிகாரிகள் உத்தர…

  21. தமிழக ஆளுநராக சுப்பிரமணியன் சுவாமி நியமனம்? மறுப்பு சொல்லாத பொன்.ராதாகிருஷ்ணன் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவாரா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. நாகர்கோவில்: பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியை தமிழக ஆளுநராக நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், இக்கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்: தமிழகத்துக்கு ஒரே ஒரு முதல்வர்தான் உள்ளார் என்பதால், தமிழ்நாட்டில் இரட்டை தலைமை ஆட்சி …

  22. ‘ஜெயலலிதா மகள்’ என வைரல் ஆகும் படத்தில் இருப்பவர் உண்மையில் யார்? சின்மயி விளக்கம் மேலே இருக்கும் படம்தான் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் ஒரு மொபைல் விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம். 'இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்" என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரையே அழைத்து கேட்டோம். "இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வ…

  23. சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரூம் மூத்த பத்திரிக்கையாளருமானவர் சோ.ராமசாமி. 82 வயதான இவர் உடற்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று(07-12-16) அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1664287&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+(Dinamalar.com+|முதல்+பக்கம்)

  24. உண்மையில் இறந்த நேரம் என்ன? - காட்சி -1 - அப்போலோ தனித்திருந்து பொதுவாழ்க்கை வாழ்ந்த பெண்களின் வாழ்வு பெரும்பாலும் கேள்விக்குறியில் தான் நிறைவுபெறுகிறது. ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவரது உடல்நிலை சீராகி வருவதாக அப்போலோ நிர்வாகமும், அ.தி.மு.க. பிரமுகர்களும் சொல்லி வந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி மாலை திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். ‘எக்மோ’ உள்ளிட்ட இதய இயக்கவியல் கருவிகள் அவருக்குப் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ அறிக்கை வெளியிட்டது. அதேச…

  25. “அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி சசிகலா புஷ்பா தமிழ்நாட்டு அரசியல் சசிகலாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்குமான அரசியலாக மாறிவிடும்போல இருக்கிறது! ஜெயலலிதா இருக்கும்போதே பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்த சசிகலா புஷ்பா, இதோ அடுத்த அஸ்திரத்தை வீசி இருக்கிறார். ‘‘ஜெயலலிதா, இயற்கையாக இறந்தாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்’’ என்று அடுத்த ஷாக் கிளப்பி இருக்கிறார் சசிகலா புஷ்பா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ‘‘எந்த ஆதாரத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறீர்கள்?’’ ‘’செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஆரம்பித்து, உயிரற்ற உடலாக அம்மாவை வெளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.