Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முதல்வர் உடல்நிலை... சி.பி.ஐ விசாரணை தேவை! -சசிகலா புஷ்பா 'திடீர்' சர்ச்சை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிரடியாக பேசி இருக்கிறார் சசிகலா புஷ்பா. ' முதல்வரின் உடல்நிலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்' என சர்ச்சை கிளப்பியிருக்கிறார். டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, " முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, நான் பேசிய பிறகே அப்போலோ மருத்துவனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுகிறது. குறிப்பாக, 'ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன் போடுவேன்' என பேட்டி கொடுத்த பிறகுதான் அறிக்கை வெளிவருகிறது. என்னைப் போல, சசிகலா நடராஜனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். கட்சியின் சீனி…

  2. ஜெயாவை பார்க்க வந்த மர்ம நபர் யார்.? : காரணம் வெளியாகியது.! தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு வாரங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில்; உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பூங்கொத்து அனுப்பி வைத்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவரை இன்னமும் நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லை. ஒரு மாநில முதல்வர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல நண்பரும் கூட. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட அப்பல்லோ வந்து முதல்வரின் நலம் விசாரித்தார். ஆனால் பிரதமர் மோடி இன்னமும் வராதது ஆச்சரியமாக பார்க்கப்படுக…

  3. 'உள்துறை அமைச்சர் போதும்!'- அ.தி.மு.க: 'பொறுப்பு முதல்வர் வேண்டும்!' - கவர்னர் ராஜ் பவனில் நடந்த அரசியல் பஞ்சாயத்து முதல்வர் ஜெயலலிதா குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்று மருத்துவமனை தரப்பில் சொன்னதால், ஆளுங்கட்சியில் அடுத்தடுத்த விறுப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் காலகட்டம் மாதிரியான அசாதாரண அரசியல் சூழ்நிலையில் பி.ஜே.பி. அரசு மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமித்தது. தற்போது ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிற சூழ்நிலையில், பி.ஜே.பி-யின் ஆதரவு அ.தி.மு.க&வில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ராகுல் …

  4. ராகுல் ஏன் வந்தார்? ஜெயலலிதா-அப்போலோ-அரசியல்! ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...’ இந்த மூன்று வார்த்தைகளுக்குள், எத்தனை... எத்தனை... திட்டங்கள், நம்பிக்கைகள், மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை இந்திய அரசியல் நன்றாக அறியும். கடந்த ஒரு நூற்றாண்டில், இந்திய அரசியலின், நிறம் மாறிய நிகழ்வுகள் அனைத்தும், இந்த மூன்று வார்த்தைகளில் இருந்து பிறந்தவைதான். ராகுல்காந்தியின் அப்போலோ வருகைக்குப் பின்னும், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு...” என்ற வார்த்தைகளே வந்து விழுந்துள்ளன. இவையும், இனிவரும் தமிழகத்தில்... ஏன் இந்திய அளவில்கூட, அரசியல் அதிர்வுகளை உண்டாக்கலாம். மரியாதை நிமித்தமா? அரசியல் நிமித்தமா? டெல்லியில் இருந்து, தனி விமானத்…

  5. காலை 11 மணி முதல் மதியம் 1.30 வரை..! ராம்குமார் பிரேதப் பரிசோதனை நிமிடங்கள் 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் இன்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர் குப்தா தலைமையில் இரண்டரை மணி நேரம் இந்த பரிசோதனை நடைபெற்றது. சென்னையை சேர்ந்த பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நுங்கம்பாக்கம் போலீஸார், ஜூலை 1-ம் தேதி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமாரை கைது செய்தனர். அப்போது அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சை சென்னை ராயப்பேட்டை அரசு…

    • 8 replies
    • 1.2k views
  6. முதல்வர் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்கள் அரசு இயந்திரம் இயங்கும் ? 15 நாட்களைக் கடந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் 22ம் தேதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என தொடக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து சிறப்பு நுரையீரல் மற்றும் செப்ஸிஸ் மருத்துவ நிபுணர் வந்து சென்ற பிறகுதான் தொற்றுக்கான சிகிச்சை தருகிறோம் என்று அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சைகளை பார்த்துச்சென்றுள்ளனர். இந்தநிலையில், முதல்வருக்கு இதுநாள் வரை …

  7. முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்! முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் 17 நாட்கள் ஆகிறது. இதுவரை அவரை மருத்துவர்கள் தவிர யாரும் சந்திக்க வில்லை. ஆளுநர் வித்யாசாகர் ராவ் உட்பட பல தலைவர்கள் மருத்துவமனை வந்தும், மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்களே தவிர, ஜெயலல…

  8. ஜெ. உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்: அப்பல்லோவில் ராகுல் காந்தி பேட்டி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். உடன் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் சென்றிருந்தார். ராகுல் காந்தியை அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்களை சந்தித்து ஜெ. உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சுமார் அரை மணி நேரம் மருத்துவமனையில் இருந்தார் ராகுல். பின்னர் மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், …

  9. ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று? யாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெர…

  10. ஆளுநர் - தலைமைச் செயலாளர் திடீர் சந்திப்பு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து கிண்டி ராஜ்பவனுக்கு திடீரென வந்திருக்கிறார். தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தன்னை சந்திக்க வருமாறு அவசரமாக அழைத்திருக்கிறார். அதன்பேரில், சற்று முன்பு, தலைமைச் செயலகத்தில் இருந்து ராஜ்பவனுக்கு தலைமைச் செயலாளர் சென்றார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், ஆட்சி எப்படி நடக்கிறது? என்பது பற்றியும் சில விளக்கங்களை தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் கேட்டறிய விரும்புகிறார் என்றே அதிகாரிகள் பேசிக்கொள்ளுகிறார்கள். முதல்வர் குணமாகி வருகிறவரைக்கும் பொறுப்பு முதல்வரை நியமிக்கும் யோசனையையும் தலைமைச் செயலாளர் ஆளுநரிடம் சொல்லி அ…

  11. அப்போலோ வளர்ந்த கதையும், ஜெயலலிதா மருத்துவச் செலவும்...! "அரசாங்க ஹாஸ்பிடல் வேண்டாம், என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் டிரீட்மென்ட் வேணும்ன்னு வர்றவங்களுக்காக வெளிநாட்டுல இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைக்கப் போறோம். டாக்டர்கள் கூட வெளிநாட்டுல இருந்து வரப் போறாங்க. இதன் மூலமா வெளிநாட்டுப் பயணக் கட்டணம்,நேர விரயம்,மொழிப் பிரச்னை ஏதும் இல்லாம சிகிச்சையைக் குறைந்த செலவுல எடுக்கலாம் " 33 ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ ஆரம்பிக்கப்பட்ட போது பிரதாப் ரெட்டி சொன்ன வார்த்தைகள்தான் இவை. ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டி படித்தது சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில். 1983-ம் ஆண்டு சிற…

  12. ’பொறுப்பு முதல்வர்’... பரபரப்பின் பின்னணி! தமிழகத்தின் முதல்வர் ஜெயலிலதா கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. நேற்று அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதல்வர் உடல்நிலை சீராக இன்னும் சில நாட்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், அதுவரை மருத்துவமனையிலே அவர் இருக்க வேண்டிவரும் என்று தெரிவிக்கபட்டது. முதல்வரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழவினர் இரண்டு தினங்களுக்கு முன் அப்போலோ வருகை தந்தனர். அவர்கள் ஜெயலிலதாவின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை ஆய்வு…

  13. மிஸ்டர் கழுகு : ஹெல்த் என்னதான் ஆச்சு? அப்போலோ காட்சிகள்... நம் முன் வந்தமர்ந்த கழுகார் மீது ஆஸ்பத்திரி வாசனை. ‘‘இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை என்றவருக்கு பகோடாவையும் லெமன் டீயையும் நீட்டினோம். ``இப்போது எப்படி இருக்கிறார்?’’ என்றோம். லெமன் டீயை உறிஞ்சியபடி பேச ஆரம்பித்தார், கழுகார். ‘‘கடந்த வாரத்தில் நடந்த பல சம்பவங்கள், அப்போலோ மருத்துவமனைக்குள் நடப்பது, அதையொட்டி மீண்டும் ஆதிக்கத்துக்கு வந்த மன்னார்குடி குடும்பம், அ.தி.மு.க-வில் முற்றிலுமாக ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள மூத்த அமைச்சர்கள், சசிகலாவின் கண் அசைவில் செயல்படும் அதிகாரிகள், நீதிமன்றத்தின் வாயை அடைப்பதற்காக எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைத்தது, இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்ப…

  14. மருத்துவமனையில் ஜெயலலிதா.. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது தெரியுமா? டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்தார். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. இந்நிலையில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்தார். வருமானத்திற்கு அதிகமாக ஓரளவுக்குதான், ஜெயலலிதா …

  15. 'முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி நடக்கும் மோசடிகள்...!' -படபடக்கும் சசிகலா புஷ்பா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ' முதல்வர் உடல்நலமில்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி, சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார். அ.தி.மு.கவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டாலும், அதுதொடர்பான கடிதத்தை மாநிலங்களவை செயலரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் இன்னமும் அளிக்கவில்லை. தமிழக முதல்வரோடு முரண்பட்டு நின்றாலும், அ.தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பியாகவே அவர் தொடர்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்ட்டி…

  16. துணை முதல்வர் பதவி?!' -அப்போலோவில் விவாதித்த அமைச்சர்கள் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டன. ' அரசின் முக்கிய அலுவல்களை கவனிப்பதற்காக துணை முதல்வர் நியமிக்கப்படலாம்' என கோட்டை வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். தற்போது எய்ம்ஸ் மருத்துவக் குழு ஒன்று, முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. முதல்வர் உடல்நலன் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிடும் தகவல்கள் மட்டுமே, தொண்டர்கள் மத்தியில் ஆறுதல் அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக அரசு அலுவல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க…

  17. 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர்! #FlashBack 1984 அக்டோபர் 5 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு இதே நாளில் தான் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் இருந்த எம்.ஜி.ஆருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே அவரை அழைத்துக் கொண்டு அப்போலோ மருத்துவமனை வந்தார் ஜானகி அம்மாள். அவருடன் எம்.ஜி.ஆரின் மருத்துவர் பி.ஆர். சுப்ரமணியமும் உடன் வந்தார். உடனே எம்.ஜி.ஆர் மூன்றாவது மாடியில் இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த சூப்பர் டீலக்ஸ் அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அந்த அறையின் ஒரு நாள் வாடகை ரூ.525-தான். எம்.ஜி.ஆர் கூறியபடி யாரிடமும் இந்த தகவல் சொல்லப்படவில்லை. ஆனால், எம்.ஜ…

  18. ' பணமே வேண்டாம்...போட்டி போட வாங்க...!' -விஜயகாந்தின் வேட்டை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே தே.மு.தி.க தொண்டர்கள் இல்லை. ஆனால், ' அனைத்து வேட்பாளர்களையும் தி.மு.க அறிவிப்பதற்குள், நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். தமிழக அரசியல் கட்சிகள் சுதாரித்து எழுவதற்குள், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது அ.தி.மு.க. இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது தி.மு.க. அதேபோல், மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடும் வெளியிடப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் தே.மு.தி.க என்ற கட்சியே இ…

  19. 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை தேவை!' அப்போலோ அறிக்கை முதல்வர் கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து க்ரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக ஆளுநர், முதல்வர் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனைக்கே நேற்று மாலை சென்று, மருத்துவர்களிடம் விசாரித்தார். லண்டன் மருத்துவர் ரிச்சர்டு முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதாக முன்னரே செய்திகள் வெளிவந்தன. தற்போது, அதனை உறுதி செய்யும் வகையில், செய்தி வெளியிட்டு இருக்கிறது அப்போலோ. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து தேறிவருகிறது. எக்ஸ்பெர்ட் ஒப்பீனியனிற்காக லண்டன் Guy's and St.Thomas மர…

    • 12 replies
    • 1.4k views
  20. ஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க இலண்டனில் இருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டு…

  21. காவிரிக்காக உண்ணாவிரதம்! செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால், 9 மணிக்குப் பிறகு, வேதா நிலையத்துக்குள் இருந்து, மெல்லக் கிளம்பிய தகவல், “காவிரிப் பிரச்னைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்; அதற்காக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்; சசிகலா புஷ்பாவை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்’’ என்றெல்லாம் சுற்றி, கடைசியில் அப்போலோவில் போய் நின்றது. போயஸ் கார்டனில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் கிளம்பி, கிரிம்ஸ் ரோடு அப்போலோ போனது என்று தகவல் உறுதி செய்யப்பட்டது. போயஸ் கார்டன் டு அப்போலோ யார் அனுமதி? …

  22. முதல்வர் ஜெயலலிதாவின் நிலை என்ன ? : தமிழச்சியின் கருத்தால் சர்ச்சை - ஒரு பார்வை (காணொளி இணைப்பு) தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றமேற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்கள் கடந்துவிட்டன. ‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் அப்போலோ மருத்துவர்களின் துணையோடு லண்டன் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத…

  23. முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து கலங்கிய சசிகலா! - பணியில் இருந்தே நீக்கப்பட்ட அப்போலோ நர்சுகள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. 'மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக மூன்று பேரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ' நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக முதல்வர் சிகிச்சை எடுத்து வருகிறார்…

  24. முதல்வரை சந்திக்க அப்போலோ சென்றார் தமிழக ஆளுநர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார். மேலும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை கேட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 4-ம் தேதி வரை ஆளுநர் தமிழகத்தில் தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன. ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவரும்வேளையில், ‘அவரது உடல்நிலை குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடப்படும்’ என்று கூறிவந்தனர். தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜ…

  25. நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது - சீமான் ஆவேசம் எதிர்காலத்தில் நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார் . தமிழ் நாட்டில் நடந்த கூட்டமொன்றில் பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது , தமிழ் நாட்டில் தற்போது சுமுகமற்ற சுழ்நிலை நிலவி வரும் நிலையில் கவேரி தொடர்பான பிரச்சனை இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு இருக்கையில் நான் முதல்வர் ஆகுவதே சரியான தீர்வு ஆகும் அப்பொழுதுதான் தமிழ் நாட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என சீமான் தெரிவித்தார். எனினும் இந்தியாவில் மக்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.