Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெ. உடல்நிலை ரகசியம் என்ன? ஜனாதிபதிக்குச் சென்ற மனு எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுவரை அவர், அங்கு சிகிச்சையில் இருக்கிறார். ஆனால், அவருடைய உடலுக்கு என்ன பாதிப்பு, அவருடைய சிகிச்சை எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி முறையான தகவல்கள் இதுவரை இல்லை. மேலும், அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட யாரும் ஜெயலலிதாவை சந்திக்க…

  2. வதந்தியைப் பரப்புவது வாட்ஸ்அப் அல்ல... அரசாங்கம்தான்! ‘‘அண்ணே... மெட்ராஸ்ல இருந்து பெரியண்ணன் குடும்பத்தோட கிராமத்துக்கு வந்திருந்தாங்க. இப்ப தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்காங்க. நைட் ஒண்ணும் பிரச்னை இருக்காதே பத்திரமா போய் சேர்ந்துடுவாங்கதானே! ஏன்னா, கண்டபடி தகவல் வருது. அதான் சந்தேகமா இருக்கு. நீங்க மெட்ராஸ்லதானே இருக்கீங்க. கொஞ்சம் செக் பண்ணி சொல்ல முடியுமா? ''அங்கிள், நான் அரசன் பேசுறேன். ஈ.சி.ஆர்ல இருக்கிற எங்க ஐடி ஆபீஸ்ல இருந்து வெளியில போன ரெண்டு கேப் (வாடகைக் கார்கள்) திரும்பி வந்துடுச்சு. வெளியில நிலைமை சரியில்ல. போரூர்ல வேற ரெண்டு பஸ்ஸை எரிச்சுட்டாங்களாம். என்ன நடந்திட்டிருக்குனு கொஞ்சம் சொல்ல முடியுமா? நைட் ஷிப்டுன…

  3. ‘‘முதல்வரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!” - சசிகலா புஷ்பா பேட்டி ஒரு சசிகலா, ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக இருக்க... இன்னொரு சசிகலா, ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக வாள் சுழற்றத் தொடங்கிவிட்டார். ‘அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சசிகலா புஷ்பா அமைதியாகிவிடுவார்’ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் மாறாமல் இருக்கிறார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க-வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்.பி-யான சசிகலா புஷ்பா, இப்போது நாடார் சமூக விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளில், அவரது நினை விடத்துக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர், ‘ஜெயலலிதா சொன்னால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய…

  4. அறை எண் 2008-ல் ஜெயலலிதா! ப.திருமாவேலன், படங்கள்: ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன் தமிழ்நாட்டு அரசியலோடு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட சம்பந்தம் அப்போலோவுக்கு உண்டு. முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போலோவில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது நடந்த தேர்தலில் (1984), அவருக்குப் பதிலாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்றவர்தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு அடுத்து இவர்தான் என்ற முத்திரையே அவருக்கு விழுந்தது. டெல்லியில் இருந்து வந்த பத்திரிகையாளர் ‘சண்டே’ அனிதா பிரதாப், ‘`நீங்கள் சென்ற இடம் எல்லாம் ஏன் இவ்வளவு கூட்டம் திரண்டது?” என்று ஜெயலலிதாவிடம் கேட்டார். ‘`என்னை ஜெயலலிதாவாக மக்கள் பார்க்கவில்லை. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள…

  5. பிரேத பரிசோதனை : ராம்குமார் தந்தை மனு தள்ளுபடி புதுடில்லி : சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் இரு விதமான முடிவுகளை தெரிவித்தனர். இதையடுத்து 3-வது நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்தார். அவர், எய்ம்ஸ் மருத்துவர் ஒருவரின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தவும் 27-ந் தேதிக்குள…

  6. ஜெயலலிதாவின் மெடிக்கல் ரிப்போர்ட்! அப்போலோ மருத்துவமனையின் 2-வது தளத்தில் உள்ள அறை எண் 2008. ‘எமர்ஜென்சி வார்டு’. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இதயநோய் நிபுணர் டாக்டர் ஒய்.வி.சி.ரெட்டி, டாக்டர் சத்யமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. 22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 23-ம் தேதி பகல் 1.50 மணி அளவில், அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டியும், அவரது மகள் ப்ரீத்தா ரெட்டியும் ஜெயலலிதா சிகிச்சைபெற்று வரும் அறைக்குச் சென்று, அவரது மருத்துவ அறிக்கையைப் படித்துப் பார்த்து நோய்த் தீவிரம் பற்றி சிறப்பு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ஏற்கெனவே முதல்வருக்கு…

  7. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வியாழக்கிழமை இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இந்த தகவலைத்தொடர்ந்து சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ ம…

  8. மேலும் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! காவிரியில் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்பின் படி, கர்நாடக மாநிலம் தண்ணீர் திறக்கவில்லை. இன்றுடன் அந்த அவகாரசம் முடிவடையும் நிலையில், காவிரியில் கூடுதலாக 3 நாட்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மனு மீதான விசாரணையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் கர்நாடக சட்டப்பேரவை தீர்மானங்கள் உச்சநீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், கர்நாடக அரசின் இத்தகைய செயல்பாடுகள், நீதிம…

  9. வெள்ளிக்கு 50 கோடி டீல்... தங்கத்துக்கு தகரடப்பா! ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றது 6 வீரர்கள். அவர்களால் எந்த பதக்கமும் வெல்ல முடியவில்லை. ஆனால், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன். ஆங்கில ஊடகங்கள் முதற் கொண்டு அந்த நேரத்தில் மாரியப்பன் மாரியப்பன் என ஓயாமல் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தன. ரியோ ஒலிம்பிக்கில் குட்டி குட்டி நாடுகள் கூட பீல்டு அண்டு டிராக் ஈவன்ட்டுகளில் அதாவது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் தங்கப் பதக்கம் வெல்வதை காண முடிந்தது. குட்டி நாடு பிஜீ, காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டனைச் சாத்து சாத்தென்று சாத்தி ரக்பி செவன்சில்…

  10. பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது…

  11. உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தனித்து போட்டி : வைகோ சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என ஏந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ம.ந.கூ. தலைவர்கள் முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், வைகோ ஆகியோர் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தனர். வைகோ புகார்: இந்திய இறையாண்மையை கர்நாடக அரசு கேள்விக்குறியாக்கி விட்டதாக வைகோ புகார் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக சட்டம…

  12. சசிகலா புஷ்பாவை இன்று கைது செய்ய போலீஸ் தீவிரம் தனது ஆதரவாளர்களுடன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக வந்த சசிகலா புஷ்பா | கோப்புப் படம்: எஸ்.ஜேம்ஸ் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது இவர்களது வீட்டில் பணி புரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற போலி வக்காலத்து நமுனா தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும், இதற்காக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) கோ.புதூர் போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதன்பேரில் போலீஸார…

  13. தமிழக உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது! அக். 3 கடைசி நாள். சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளில் இருப் பவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக …

  14. தமிழ்நாட்டின் மிஸ் பண்ணக்கூடாத அருவிகள்: பாகம் - 1. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் சுற்றுலா மேற்கொள்ள வசதியாக உள்ள தமிழ்நாட்டின் மிஸ்பண்ணக்கூடாத அருவிகளின் தொகுப்பையும், விபரங்களையும் விரிவாக பார்க்கலாம். 1. ஒகேனக்கல் அருவி: இந்தியாவின் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒக்கேனக்கல் அருவி முக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கிறது. தர்மபுரி இருந்து 47 கி.மீ., ஓசூரில் இருந்து 88 கி.மீ., சேலத்தில் இருந்து 85 கி.மீ., பெங்களூரில் இருந்து 146 கி.மீ., சென்னையிலிருந்து 345 கி.மீ., மைசூரில் இருந்த…

  15. "தங்கமகன் மாரியப்பனுக்கு" தபால் முத்திரை வெளியிடப் பட்டது. சேலம்: ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு தபால் துறை சிறப்பித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். மாரியப்பன் டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் விளையாட்டுத்துறையினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய மாரியப்பன், அடுத்த பாராலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல முயற்சி செய்வதாக கூறினார். சென்னையில் இருந்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி…

  16. அப்போலோ மருத்துவமனையும் அரசியல் சரித்திரமும்...! செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..இந்தத் தளங்கள் எல்லாம் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் ராஜாங்கக் களங்கள். இதே அளவிற்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அன்றும் இன்றும் விளங்கி வருவது அப்போலோ மருத்துவமனை. உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் அரசியல் தலைவர்கள், அப்போலோவில் அட்மிட் ஆவார்கள். அதையொட்டி, அகில இந்திய அரசியல் மட்டுமல்ல.. தமிழக அரசியலும் தலைகீழாக மாறும். அப்படிப்பட்ட சில நினைவுகள்... எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் சகாப்தத்தில் இருந்துதான் தொடங்கியது. 1983 அக்டோபரில் தொடங்கப்பட்ட அப்போலோ மருத்துவமனையில், 1984 அக்டோபர் 5-ம் தேதி, எம்.ஜி.ஆர் …

  17. ஜெ. சுகவீனம் எதிரொலி... அதிர்ச்சியில் அதிமுக பிரமுகர் மயங்கி விழுந்து மரணம். தஞ்சை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலம் சரியில்லை என்பதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தஞ்சையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த வியாழன் அன்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்த டி.மகேந்திரன் (54) அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு மயக்கத்தை…

  18. ஜெயலலிதாவை அப்போலோவுக்கு அனுப்பிய 6 'டென்ஷன்'கள்! தன் உடல் நலம் பற்றி எந்த செய்திகளும் வரக்கூடாது என நினைப்பவர் தான் ஜெயலலிதா. உடல் நலம் பற்றி பேசியவர்கள் மீதும், எழுதிய பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தது இதைத்தான் காட்டியது. கொடநாட்டில் ஓய்வு, சிகிச்சை என செய்திகள் வெளியானபோது, அதை மறுத்தவர்கள் எல்லாம், இப்போது சென்னை அப்போலோ மருத்துவமனை வாசலில், உள்ளே சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்காக காத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு, மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறார் என அடுத்தடுத்து அறிக்கை வந்து கொண்டே இருக்கிறது. உண்மையில் ஜெயலலிதாவுக்கு என்ன தான் பிரச்னை என்பது யாருக்கும் தெரியவில்லை. யாருக்கு தெரியும் என்ற…

  19. சென்னை விமான நிலையத்தில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பி.பெஞ்சமின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பத்தகம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி பரிசுத் தொகை அறிவித்தது. இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு மாரியப்பன் …

  20. மெட்ராஸ் அந்த மெட்றாஸ் 1: தொழிலதிபரின் இன்னொரு பக்கம்! 1954-ல் மெட்றாஸ் மவுண்ட் ரோடு - இப்போது அண்ணா சிலை உள்ள இடம். வாலாஜா சாலை முனை. கோப்புப் படம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, முன்னர் மெட்றாஸ் என்று அழைக்கப்பட்டது. அந்த மெட்றாஸ் பல வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் திருப்புமுனைகளுக்கும் சாட்சியாகத் தொடர்கிறது. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல்வேறு வெளிநாட்டவர்கள் தென்னிந்தியாவில் முதன்முதல் காலூன்றிய இடம் மெட்றாஸ். மாகாணத்தின் தலைநகரமாக இருந்த மதறாஸ் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், முஸ்லிம்கள், ஆங்கிலேயர், குஜராத்தியர், மராட்டியர் என்று பல்வேறு பிரிவினருக்கும் உற்ற உறைவிடமாக இருந்தத…

  21. கருணாநிதி-ஸ்டாலின் மோதல் "உச்சகட்டம்"... கதிகலங்கும் திமுக நிர்வாகிகள்.சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரில் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திமுக நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்... திமுகவின் முகமாக அரை நூற்றாண்டுகாலமாக கருணாநிதிதான் இருந்து வருகிறார். இப்போது திமுக என்றால் 'தளபதி' ஸ்டாலின் என்ற நிலை தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. கருணாநிதியின் குடும்பத்தில் ஸ்டாலினுக்கு இணையாக மு.க. அழகிரியும் தன்னை முன்னிறுத்திப் பார்த்தார். ஆனால் இந்த யுத்தத்தில் அழகிரி தோற்றுப் போனார். கனிமொழிக்கு ரெட்கார்ட் அழகிரியைப் போலவே கனிமொழியும் தம் பங்குக்கு தலைதூக…

  22. ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடைந்து சிதறும்.. சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு சென்னை: அதிமுகவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நிறைய பேர் உள்ளதாகவும் அவர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார். மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடையும் எனவும் சூசகமாக கூறியுள்ளார் சசிகலா புஷ்பா. நக்கீரன் இதழுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கேள்வி: அ.தி.மு.க.வில் அண்மைக்காலமாக தொண்டர்களிடம் ஒரு இறுக்கமான சூழல் இருப்பதாகச் சொல்கிறார்களே? பதில்: கட்சிக்காக உழைச்சவங்களை ஓரங்கட்டிவிட்டு, "பேக்கேஜ் பேசிஸ்…

  23. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா.. காவிரிக்காக உண்ணாவிரதம் இருப்பாரா ஜெ? சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று பெங்களூருவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரிக்காக 1993, 2007ம் ஆண்டுகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது போல முதல்வர் ஜெயலலிதா இப்போதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 50 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி, தமிழ்நாட்டுக…

  24. சுவாதி கொலை வழக்கு: சிறையில் ராம்குமார் மர்ம மரணம் சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். இன்று அவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். சிறையில் ப்ளக் பாய்ண்ட்டில் (லைட் எரிய பயன்படுத்தும் இணைப்பில்) வரும் வயரை பல்லால் கடித்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. ராம்குமார் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டுள்ளார். மதிய உணவுக்கு அனைவரும் சென்ற பின்னரும் ராம்குமார் செல்லவில்லை. சிறையில் முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர். மிகவும் …

  25. Started by Athavan CH,

    பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ. இயற்கை ஆறுகள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.