Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெ. உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்: அப்பல்லோவில் ராகுல் காந்தி பேட்டி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். உடன் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் சென்றிருந்தார். ராகுல் காந்தியை அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்களை சந்தித்து ஜெ. உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சுமார் அரை மணி நேரம் மருத்துவமனையில் இருந்தார் ராகுல். பின்னர் மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், …

  2. ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று? யாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெர…

  3. ஆளுநர் - தலைமைச் செயலாளர் திடீர் சந்திப்பு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து கிண்டி ராஜ்பவனுக்கு திடீரென வந்திருக்கிறார். தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தன்னை சந்திக்க வருமாறு அவசரமாக அழைத்திருக்கிறார். அதன்பேரில், சற்று முன்பு, தலைமைச் செயலகத்தில் இருந்து ராஜ்பவனுக்கு தலைமைச் செயலாளர் சென்றார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், ஆட்சி எப்படி நடக்கிறது? என்பது பற்றியும் சில விளக்கங்களை தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் கேட்டறிய விரும்புகிறார் என்றே அதிகாரிகள் பேசிக்கொள்ளுகிறார்கள். முதல்வர் குணமாகி வருகிறவரைக்கும் பொறுப்பு முதல்வரை நியமிக்கும் யோசனையையும் தலைமைச் செயலாளர் ஆளுநரிடம் சொல்லி அ…

  4. அப்போலோ வளர்ந்த கதையும், ஜெயலலிதா மருத்துவச் செலவும்...! "அரசாங்க ஹாஸ்பிடல் வேண்டாம், என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் டிரீட்மென்ட் வேணும்ன்னு வர்றவங்களுக்காக வெளிநாட்டுல இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைக்கப் போறோம். டாக்டர்கள் கூட வெளிநாட்டுல இருந்து வரப் போறாங்க. இதன் மூலமா வெளிநாட்டுப் பயணக் கட்டணம்,நேர விரயம்,மொழிப் பிரச்னை ஏதும் இல்லாம சிகிச்சையைக் குறைந்த செலவுல எடுக்கலாம் " 33 ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ ஆரம்பிக்கப்பட்ட போது பிரதாப் ரெட்டி சொன்ன வார்த்தைகள்தான் இவை. ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டி படித்தது சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில். 1983-ம் ஆண்டு சிற…

  5. ’பொறுப்பு முதல்வர்’... பரபரப்பின் பின்னணி! தமிழகத்தின் முதல்வர் ஜெயலிலதா கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. நேற்று அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதல்வர் உடல்நிலை சீராக இன்னும் சில நாட்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், அதுவரை மருத்துவமனையிலே அவர் இருக்க வேண்டிவரும் என்று தெரிவிக்கபட்டது. முதல்வரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழவினர் இரண்டு தினங்களுக்கு முன் அப்போலோ வருகை தந்தனர். அவர்கள் ஜெயலிலதாவின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை ஆய்வு…

  6. மிஸ்டர் கழுகு : ஹெல்த் என்னதான் ஆச்சு? அப்போலோ காட்சிகள்... நம் முன் வந்தமர்ந்த கழுகார் மீது ஆஸ்பத்திரி வாசனை. ‘‘இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை என்றவருக்கு பகோடாவையும் லெமன் டீயையும் நீட்டினோம். ``இப்போது எப்படி இருக்கிறார்?’’ என்றோம். லெமன் டீயை உறிஞ்சியபடி பேச ஆரம்பித்தார், கழுகார். ‘‘கடந்த வாரத்தில் நடந்த பல சம்பவங்கள், அப்போலோ மருத்துவமனைக்குள் நடப்பது, அதையொட்டி மீண்டும் ஆதிக்கத்துக்கு வந்த மன்னார்குடி குடும்பம், அ.தி.மு.க-வில் முற்றிலுமாக ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள மூத்த அமைச்சர்கள், சசிகலாவின் கண் அசைவில் செயல்படும் அதிகாரிகள், நீதிமன்றத்தின் வாயை அடைப்பதற்காக எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைத்தது, இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்ப…

  7. மருத்துவமனையில் ஜெயலலிதா.. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது தெரியுமா? டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்தார். இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. இந்நிலையில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்தார். வருமானத்திற்கு அதிகமாக ஓரளவுக்குதான், ஜெயலலிதா …

  8. 'முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி நடக்கும் மோசடிகள்...!' -படபடக்கும் சசிகலா புஷ்பா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ' முதல்வர் உடல்நலமில்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி, சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார். அ.தி.மு.கவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டாலும், அதுதொடர்பான கடிதத்தை மாநிலங்களவை செயலரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் இன்னமும் அளிக்கவில்லை. தமிழக முதல்வரோடு முரண்பட்டு நின்றாலும், அ.தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பியாகவே அவர் தொடர்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்ட்டி…

  9. துணை முதல்வர் பதவி?!' -அப்போலோவில் விவாதித்த அமைச்சர்கள் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டன. ' அரசின் முக்கிய அலுவல்களை கவனிப்பதற்காக துணை முதல்வர் நியமிக்கப்படலாம்' என கோட்டை வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். தற்போது எய்ம்ஸ் மருத்துவக் குழு ஒன்று, முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. முதல்வர் உடல்நலன் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிடும் தகவல்கள் மட்டுமே, தொண்டர்கள் மத்தியில் ஆறுதல் அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக அரசு அலுவல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க…

  10. 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர்! #FlashBack 1984 அக்டோபர் 5 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு இதே நாளில் தான் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் இருந்த எம்.ஜி.ஆருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே அவரை அழைத்துக் கொண்டு அப்போலோ மருத்துவமனை வந்தார் ஜானகி அம்மாள். அவருடன் எம்.ஜி.ஆரின் மருத்துவர் பி.ஆர். சுப்ரமணியமும் உடன் வந்தார். உடனே எம்.ஜி.ஆர் மூன்றாவது மாடியில் இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த சூப்பர் டீலக்ஸ் அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அந்த அறையின் ஒரு நாள் வாடகை ரூ.525-தான். எம்.ஜி.ஆர் கூறியபடி யாரிடமும் இந்த தகவல் சொல்லப்படவில்லை. ஆனால், எம்.ஜ…

  11. ' பணமே வேண்டாம்...போட்டி போட வாங்க...!' -விஜயகாந்தின் வேட்டை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே தே.மு.தி.க தொண்டர்கள் இல்லை. ஆனால், ' அனைத்து வேட்பாளர்களையும் தி.மு.க அறிவிப்பதற்குள், நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். தமிழக அரசியல் கட்சிகள் சுதாரித்து எழுவதற்குள், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது அ.தி.மு.க. இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது தி.மு.க. அதேபோல், மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடும் வெளியிடப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் தே.மு.தி.க என்ற கட்சியே இ…

  12. 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை தேவை!' அப்போலோ அறிக்கை முதல்வர் கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து க்ரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக ஆளுநர், முதல்வர் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனைக்கே நேற்று மாலை சென்று, மருத்துவர்களிடம் விசாரித்தார். லண்டன் மருத்துவர் ரிச்சர்டு முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதாக முன்னரே செய்திகள் வெளிவந்தன. தற்போது, அதனை உறுதி செய்யும் வகையில், செய்தி வெளியிட்டு இருக்கிறது அப்போலோ. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து தேறிவருகிறது. எக்ஸ்பெர்ட் ஒப்பீனியனிற்காக லண்டன் Guy's and St.Thomas மர…

    • 12 replies
    • 1.4k views
  13. ஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க இலண்டனில் இருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டு…

  14. காவிரிக்காக உண்ணாவிரதம்! செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால், 9 மணிக்குப் பிறகு, வேதா நிலையத்துக்குள் இருந்து, மெல்லக் கிளம்பிய தகவல், “காவிரிப் பிரச்னைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்; அதற்காக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்; சசிகலா புஷ்பாவை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்’’ என்றெல்லாம் சுற்றி, கடைசியில் அப்போலோவில் போய் நின்றது. போயஸ் கார்டனில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் கிளம்பி, கிரிம்ஸ் ரோடு அப்போலோ போனது என்று தகவல் உறுதி செய்யப்பட்டது. போயஸ் கார்டன் டு அப்போலோ யார் அனுமதி? …

  15. முதல்வர் ஜெயலலிதாவின் நிலை என்ன ? : தமிழச்சியின் கருத்தால் சர்ச்சை - ஒரு பார்வை (காணொளி இணைப்பு) தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றமேற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்கள் கடந்துவிட்டன. ‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் அப்போலோ மருத்துவர்களின் துணையோடு லண்டன் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத…

  16. முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து கலங்கிய சசிகலா! - பணியில் இருந்தே நீக்கப்பட்ட அப்போலோ நர்சுகள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. 'மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக மூன்று பேரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ' நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக முதல்வர் சிகிச்சை எடுத்து வருகிறார்…

  17. முதல்வரை சந்திக்க அப்போலோ சென்றார் தமிழக ஆளுநர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார். மேலும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை கேட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 4-ம் தேதி வரை ஆளுநர் தமிழகத்தில் தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன. ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவரும்வேளையில், ‘அவரது உடல்நிலை குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடப்படும்’ என்று கூறிவந்தனர். தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜ…

  18. நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது - சீமான் ஆவேசம் எதிர்காலத்தில் நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார் . தமிழ் நாட்டில் நடந்த கூட்டமொன்றில் பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது , தமிழ் நாட்டில் தற்போது சுமுகமற்ற சுழ்நிலை நிலவி வரும் நிலையில் கவேரி தொடர்பான பிரச்சனை இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு இருக்கையில் நான் முதல்வர் ஆகுவதே சரியான தீர்வு ஆகும் அப்பொழுதுதான் தமிழ் நாட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என சீமான் தெரிவித்தார். எனினும் இந்தியாவில் மக்கள் …

  19. ஜெ. உடல்நிலை ரகசியம் என்ன? ஜனாதிபதிக்குச் சென்ற மனு எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுவரை அவர், அங்கு சிகிச்சையில் இருக்கிறார். ஆனால், அவருடைய உடலுக்கு என்ன பாதிப்பு, அவருடைய சிகிச்சை எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி முறையான தகவல்கள் இதுவரை இல்லை. மேலும், அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட யாரும் ஜெயலலிதாவை சந்திக்க…

  20. வதந்தியைப் பரப்புவது வாட்ஸ்அப் அல்ல... அரசாங்கம்தான்! ‘‘அண்ணே... மெட்ராஸ்ல இருந்து பெரியண்ணன் குடும்பத்தோட கிராமத்துக்கு வந்திருந்தாங்க. இப்ப தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்காங்க. நைட் ஒண்ணும் பிரச்னை இருக்காதே பத்திரமா போய் சேர்ந்துடுவாங்கதானே! ஏன்னா, கண்டபடி தகவல் வருது. அதான் சந்தேகமா இருக்கு. நீங்க மெட்ராஸ்லதானே இருக்கீங்க. கொஞ்சம் செக் பண்ணி சொல்ல முடியுமா? ''அங்கிள், நான் அரசன் பேசுறேன். ஈ.சி.ஆர்ல இருக்கிற எங்க ஐடி ஆபீஸ்ல இருந்து வெளியில போன ரெண்டு கேப் (வாடகைக் கார்கள்) திரும்பி வந்துடுச்சு. வெளியில நிலைமை சரியில்ல. போரூர்ல வேற ரெண்டு பஸ்ஸை எரிச்சுட்டாங்களாம். என்ன நடந்திட்டிருக்குனு கொஞ்சம் சொல்ல முடியுமா? நைட் ஷிப்டுன…

  21. ‘‘முதல்வரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!” - சசிகலா புஷ்பா பேட்டி ஒரு சசிகலா, ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக இருக்க... இன்னொரு சசிகலா, ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக வாள் சுழற்றத் தொடங்கிவிட்டார். ‘அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சசிகலா புஷ்பா அமைதியாகிவிடுவார்’ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் மாறாமல் இருக்கிறார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க-வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்.பி-யான சசிகலா புஷ்பா, இப்போது நாடார் சமூக விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளில், அவரது நினை விடத்துக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர், ‘ஜெயலலிதா சொன்னால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய…

  22. அறை எண் 2008-ல் ஜெயலலிதா! ப.திருமாவேலன், படங்கள்: ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன் தமிழ்நாட்டு அரசியலோடு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட சம்பந்தம் அப்போலோவுக்கு உண்டு. முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போலோவில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது நடந்த தேர்தலில் (1984), அவருக்குப் பதிலாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்றவர்தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு அடுத்து இவர்தான் என்ற முத்திரையே அவருக்கு விழுந்தது. டெல்லியில் இருந்து வந்த பத்திரிகையாளர் ‘சண்டே’ அனிதா பிரதாப், ‘`நீங்கள் சென்ற இடம் எல்லாம் ஏன் இவ்வளவு கூட்டம் திரண்டது?” என்று ஜெயலலிதாவிடம் கேட்டார். ‘`என்னை ஜெயலலிதாவாக மக்கள் பார்க்கவில்லை. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள…

  23. பிரேத பரிசோதனை : ராம்குமார் தந்தை மனு தள்ளுபடி புதுடில்லி : சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் இரு விதமான முடிவுகளை தெரிவித்தனர். இதையடுத்து 3-வது நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்தார். அவர், எய்ம்ஸ் மருத்துவர் ஒருவரின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தவும் 27-ந் தேதிக்குள…

  24. ஜெயலலிதாவின் மெடிக்கல் ரிப்போர்ட்! அப்போலோ மருத்துவமனையின் 2-வது தளத்தில் உள்ள அறை எண் 2008. ‘எமர்ஜென்சி வார்டு’. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இதயநோய் நிபுணர் டாக்டர் ஒய்.வி.சி.ரெட்டி, டாக்டர் சத்யமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. 22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 23-ம் தேதி பகல் 1.50 மணி அளவில், அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டியும், அவரது மகள் ப்ரீத்தா ரெட்டியும் ஜெயலலிதா சிகிச்சைபெற்று வரும் அறைக்குச் சென்று, அவரது மருத்துவ அறிக்கையைப் படித்துப் பார்த்து நோய்த் தீவிரம் பற்றி சிறப்பு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ஏற்கெனவே முதல்வருக்கு…

  25. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வியாழக்கிழமை இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இந்த தகவலைத்தொடர்ந்து சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.