தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
மிஸ்டர் கழுகு : காவிரி... ஜெயலலிதா... கள்ள மெளனம்! கழுகார் அனுப்பிய தலைப்பு வாசகங்கள் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. லே அவுட்டுக்குத் தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். 2011, 2015-ம் ஆண்டுகளுக்கான டைரிகளைக் கையோடு கொண்டுவந்த கழுகார் அதனைப் புரட்டிவிட்டு பேச ஆரம்பித்தார். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்ட களமிறங்கியது. இதை எதிர்த்து அப்போது விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட ‘பந்த்’தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றாகக் கைகோர்த்தன. பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் அந்த பந்தில் பங்கேற்கவில்லை. ‘பந்த்’தில் பங்கெடுக்காமல் போனால் தங்க…
-
- 0 replies
- 739 views
-
-
பேரறிவாளன் மீது தாக்குதல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. தாக்குதலில் காயமடைந்த அவர், காயமடைந்ததால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சிறையில் இருக்கின்ற, ஆயுள்தண்டனை கைதியான ராஜேஷ் என்பவர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/181749/ப-ரற-வ-ளன-ம-த-த-க-க-தல-#sthash.gZPu9yvQ.dpuf
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கை அகதி தீக்குளிக்க முயற்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (33) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தார். இவருக்கு நிரோஜா (22) என்ற மனைவியும், தைசிகா (5), சாய்ஷிகா (1) என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர், தான் வசிக்கும் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தாராம். ஏலத்தில் பணம் எடுத்தவர்களில் 16 பேர் பணம் தராமல் ஏமாற்றி விட்டனராம். பணத்தை திருப்பிக் கேட்டால் தாக்கினார்களாம். இது குறித்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும…
-
- 0 replies
- 490 views
-
-
சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் தீக்குளிப்பு: சென்னையில் அதிர்ச்சி கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நடந்த பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. ஒரு வாரத்திற்கும் மேல் நடந்த போராட்டத்தின் உச்சசட்டமாக சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிாிழந்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது…
-
- 12 replies
- 2.6k views
-
-
காய்கறி விற்று.. ரூ.3 லட்சம் கடன் வாங்கி.. தங்கவேலு தங்கம் வெல்ல உழைத்த தாய் சென்னை: ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய வீரர், சிறு வயதில் படாத கஷ்டங்களை பட்டுதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். 21 வயதாகும், மாரியப்பன், உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கான முதலாவது தங்கம் வென்றுள்ளார். 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி பதக்கத்தை பறித்துள்ளார் மாரியப்பன். இதே பிரிவில் இந்தியாவின், விகாஸ் சிங் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். மாரியப்பன் தங்கவேலுவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் என பல தரப்பில்…
-
- 6 replies
- 889 views
-
-
பிரபாகரன் 28 ஆண்டுக்கு முன் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் வைகோ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், திமுக தலைவரும் தமிழகத்தின் அப்போதைய முதல்வருமான கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிட்டிருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. 1989-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் அனுப்பிய ஐபிகேஎப் குழு அங்கு அநீதியை கட்டவிழ்த்துவிட்டதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் பிரபாகரன். கடிதத்தை தற்போது வெளியிட்டது குறித்து வைகோ 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, "இலங்கை வனப்பகுதியில் பிரபாகரனை நான்…
-
- 3 replies
- 1.7k views
-
-
70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை..! சென்னையை கண்கலங்க வைத்த சோகம் (வீடியோ) 'தென்னையப் பெத்தா இளநீரு.... பிள்ளையப் பெத்தா கண்ணீரு' என்ற வரி சென்னையில் நிரூபணமாகி இருக்கிறது. வயதான காலத்தில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து உதவிகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கடமையிலிருந்து பலர் தவறிவிடுகின்றனர். வசதி படைத்தவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். வறுமையில் வாடுபவர்களுக்கு வீதிகளே வீடுகளாகிறது. சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடக்க முடியாத முதியவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். பசியின் கொடுமையைவிட அவரது மனம் கடும் இறுக்கத்தில் இருந்தது. காரணம், பெற்ற மகனே தன்னை கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்…
-
- 0 replies
- 567 views
-
-
பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள் "உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இது சட்டத்தின் வழிப்பட்ட தீர்ப்பல்ல. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லாமல், குத்துமதிப்பாக, பஞ்சாயத்து செய்வது போல் இத்தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. கர்நாடகாவின் நீலிக்கண்ணீரை கண்டு மனம் உருகி, தமிழ்நாட்டிற்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் தந்தால் போதும் என்ற ரீதியில் உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பு," என தமிழக விவசாயிகள் கவலைப்பட்டுக்கொண்டிருக்க... அந்த தண்ணீரை கூட திறந்து விடக்கூடாது என அடம்பிடிக்கிறது கர…
-
- 49 replies
- 4.9k views
-
-
காவிரி விவகார காணொளிகள் டிஸ்கி : எல்லா அரசியல் கில்மாக்கலை எல்லாம் ஒரு சேர காண முடிகிறது.
-
- 4 replies
- 524 views
-
-
தமிழக பந்த் மறியல்... தலைவர்கள் கைது நிலவரம்! காவிரி பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணியாக சென்றனர். அங்கு, ரயில் மறியலில் ஈடுபட சென்ற ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக அவர்கள் அங்கு கோஷங்கள் எழுப்பினர். அதை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து அங்கு தயாராக நிறுத்…
-
- 7 replies
- 1.5k views
-
-
கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: பல லட்சம் கடைகள் மூடப்படும்; தனியார் பள்ளிகள் இயங்காது சென்னை : கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் கடைகள் அடைக்கப்படுகிறது. ஆம்னி பஸ், லாரி, வேன்கள் ஓடாது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழகம் முழுவதும் 1.18 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு மற்றும் ரயில் மறியல், சாலை மறி…
-
- 0 replies
- 447 views
-
-
காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள். நேற்றைய தினம் பெங்களுரில் நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் மௌனம் காக்காமலும், காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வழி ஏற்படுத்தவும் என அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். …
-
- 7 replies
- 863 views
-
-
போராட்டம் பெயரில் வன்முறை கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு புதுடில்லி: போராட்டம் என்ற பெயரில் வன்முறையை ஏற்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அமைதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட வேண்டும். போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவை அமை…
-
- 0 replies
- 483 views
-
-
பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு...! கர்நாடகாவுக்கு ஒற்றுமையை கற்பிக்கும் தமிழகம் ராமேஸ்வரம் : காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் தரிசனத்துக்கு வந்த கர்நாடகா பக்தர்களை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று, தரிசனத்து அழைத்து சென்று பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் கர்நாடகாவில் பெரும் கலவரம் வெடித்த நிலையில், தமிழகத்திலும் சில இடங்களில் கர்நாடக வாகனங்கள் தாக்கப்பட்டன. அதன்படி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீச…
-
- 5 replies
- 802 views
-
-
தமிழகத்தில், ஆட்சியை பிடிக்க நினைத்த, தே.மு.தி.க.,வின், 12வது ஆண்டு விழா பிசுபிசுத் தது. கொடியேற்றும் விழாவுக்கு, 50 பேர் கூட வராததால், கட்சித் தலைவர் விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால், நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆட்களை திரட்டி வரும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த, 2005 செப்., 14ல், மதுரையில், தே.மு.தி.க.,வை விஜயகாந்த் துவங்கியபோது, மிகுந்த எதிர்பார்ப்புடன், அவரது ரசிகர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், அவர் பின் அணிவகுத்தனர். தொடர்ந்து, 2006ல் சட்டசபை, உள்ளாட்சி, சில தொகுதிகளின் இடைத்தேர்தல்கள், 2009 லோக்சபா தேர்தல்களை தனித்தே சந்தித்த …
-
- 0 replies
- 547 views
-
-
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் திருநாவுக்கரசர் | கோப்புப் படம். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன துவிவேதி டெல்லியில் அறிவித்தார். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு 4 மாதங்களைக் கடந்தும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன துவிவேதி டெல்லியில் அறிவித்துள்ளார். இது குறித்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறு…
-
- 0 replies
- 559 views
-
-
சென்னை அண்ணாசாலையில் பொங்கி ஓடிய மணல் ஆறால் பரபரப்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மார்க்கம் அனைத்து சுரங்கப்பாதையாகும். இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை டிவிஎஸ் நிறுவனம் அருகே மெட்ராரோ ரயில் பணி இன்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணல் பொங்கி சாலையில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. http://www.vikatan.com/news/tamilnadu/68287-sand-overflowed-in-chennai-mount-road.art
-
- 1 reply
- 983 views
-
-
இலங்கை யுவதி தீக்குளிப்பு! தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்பாணம் - குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகள் சரோன் கருண்சி (வயது 27). இவருக்கும், இலங்கையை சேர்ந்த டாக்டர் நவனீதராஜ் (31) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். சரோன் கருண்சி, தற்போது குடும்பத்தோடு கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் வரண்டாவில் சரோன் கருண்சி திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரச வைத்தியசாலையில் அ…
-
- 2 replies
- 697 views
-
-
காவிரி விவகாரம்: கர்நாடகா மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி புதுடில்லி: காவிரி விவகாரத்தில், உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக மாநில அரசு மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. காவிரியில் 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில், 13 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட பிறப்பித்த உத்தரவை திருத்தம் செய்ய வேண்டும் எனக்கூறி, கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த…
-
- 1 reply
- 621 views
-
-
சென்னையின் இந்த ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் நாற்பது சதவீதம் சரிவைச் சந்தித்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்டு’ (Cushman and Wakefield) ஆய்வின்படி 3,350 குடியிருப்புப் பகுதிகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டின் வெள்ள பாதிப்பும், இந்த ஆண்டின் சட்டமன்ற தேர்தலும் ரியால்டி சந்தையைப் பெரியளவில் பாதித்திருக்கிறது. அத்துடன், உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடையாமல் இருப்பதும் இந்தச் சரிவுக்கான இன்னொரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இதனால், புறநகர்ப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விலை, நடுத்தரக் குடியிருப்புத் திட்டங்களும் குறைவான வெற்றி விகிதத்தையே அடைந்திருக்கின்றன. …
-
- 0 replies
- 688 views
-
-
15-வது உலக தமிழ் இணைய மாநாடு தொடக்கம்: தமிழ் கற்க வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம் - ஜெர்மன் பேராசிரியர் தகவல் தமிழ் கற்க வெளிநாட்டு மாணவர்களும் ஆர்வமாக உள்ளனர் என 15-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் ஜெர்மனியின் கோலென் பல்கலைக்கழக பேரா சிரியர் உல்ரிக் நிக்லசு பேசினார். உலக தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 15-வது உலக தமிழ் இணைய மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகித்தார். மாநாட்டு அமைப்புக்குழு தலைவர் பேராசிரியர் பத்மநாபா வரவேற்ற…
-
- 0 replies
- 495 views
-
-
100 வயதுடைய அரியவகை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ( வீடியோ இணைப்பு) ராமநாதபுரம் அருகே கடற்கரைப்பகுதியில் அரியவகை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். ராமநாதபுரம் அருகே கீழக்கரை பாரதிநகர் கடற்கரைப்பகுதியில் அரியவகையான 100 வயதுடைய பெருந்தலை ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய ஆமை சுமார் 250 கிலோ எடை கொண்டதும் 150 சென்ரி மீற்றர் நீளமும் 200 சென்ரி மீற்றர் சுற்றளவும் கொண்டது. இதனையடைத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் இதனை தொடர்ந்து வனத்துறையினர் கால நடை மருத்துவர் மூலம் உடல்கூறு சோதனை செய்து அப்பகுதியிலுள்ள மணல் பகுதியில் குறித்த ஆமையினை…
-
- 3 replies
- 712 views
-
-
தூய்மையான மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம் சிக்கிம் மாநிலம் | படம்: ரிது ராஜ் கோன்வார். நாட்டிலேயே தூய்மை மிகுந்த மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 39.2% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) கணித்துள்ள தூய்மையான மாநிலங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை வெளியிட்டார். இதில் நாட்டிலேயே தூய்மையான மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. மொத்தம் 26 மாநிலங்களின் தரவரிசை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிக்கிமைத் தொடர்ந்து கேரளா இரண்டாவது இடத்த…
-
- 0 replies
- 478 views
-
-
-
- 8 replies
- 1.5k views
-
-
திரைபடத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம். | கோப்புப் படம் திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக் கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில், “16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல் செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர். என் மீது பொய்வழக்…
-
- 3 replies
- 579 views
-