தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டடத்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையை மாற்றியது ஏன் என்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்திடம் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மா.சுப்பிரமணியன் பேசும்போது, "வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பேரவையில் நடுநாயமாக அமர்ந்துள்ளீர்கள் என்று பேரவைத் தலைவர் ப.தனபாலைப் பார்த்துக் கூறி, ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதனை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசியது:- வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பேரவை என்று குறிப்பிட்டுத் திமுக எம்எல்ஏ பேசினார். இந்த அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்…
-
- 0 replies
- 277 views
-
-
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடியைச் சேர்ந்த ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதற்காக நாகர்கோவிலில் சிகிச்சை பெற முடிவு செய்த அவர் தனியார் ஆம்புலன்சை ஏற்பாடு செய்து அங்கிருந்து புறப்பட்டு வந்தார். அவருடன் உதவிக்கு 2 பேர் வந்தனர். ஆம்புலன்சை களக்காடு சாலைப்புதூரைச் சேர்ந்த சேர்மத்துரை (வயது 40) என்பவர் ஓட்டினார். நேற்று இரவு 8.30 மணிக்கு ஆம்புலன்சு தோவாளை ஆற்றுப்பாலத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த அரசு பஸ் ஒன்றை உரசியபடி ஆம்புலன்சு வேகமாக வந்தது. அப்போது தோவாளை புதூரைச் சேர்ந்த சுரேந்திர குமார் என்பவரது மனைவி முத்துப்பேச்சி (35) என்பவர் ரோட்டில் நடந்து வந்தார். தறிகெட்டு ஓடி வந்த ஆம்புலன்சு முத்துப்பேச்சி மீது மோதியது. பின…
-
- 0 replies
- 415 views
-
-
சென்னையில் உள்ள பல்வேறு மதுபான விடுதிகளில் மது விநியோகம் செய்யவும், நடனமாடவும் சிறுமிகளை உட்படுத்துவது தெரியவந்துள்ளது.போதை தலைக்கேறிய ஆசாமிகள் சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது."கண்கவர் நடனம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்", மதுப்பிரியர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக சென்னையில் உள்ள மதுபான விடுதிகள் அறிமுகப்படுத்தியுள்ள யுக்தி இது.மதுபான விடுதிகளில் நடனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், பொலிசாரின் ஒத்துழைப்புடன் இதுபோன்ற தவறுகள் நடந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் எந்தெந்த இடங்களில் உள்ள மதுபான விடுதிகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுகின்றன என்பதையும் அவர…
-
- 0 replies
- 557 views
-
-
பிரபாகரனைச் சந்திக்க சென்றபோதே ராணுவம் என்னைச் சுட்டுக்கொன்றிருந்தால்... - வைகோ 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த மதிமுக, மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை முன்னிறுத்தித் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நேற்று(வெள்ளி) கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்டங்களுக்கான மதிமுக செயல் வீரர்கள் கூட்டம், தருமபுரியில் நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய வைகோ, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நான் பார்க்க சென்றபோதே, இந்திய ராணுவம் என்னைச் சுட்டுக் கொன்றிருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்க…
-
- 0 replies
- 407 views
-
-
சென்னை, ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் பல முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தை பார்ப்பதற்கு ஆசைப்பட்டார். அதற்கான ஏற்பாடுகளை செய்து, அவர் கபாலி படத்தை பார்த்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோ தற்போது நலமுடன்…
-
- 6 replies
- 729 views
-
-
தமிழகம்: 570 கோடி ரூபாய் பணம் விவகாரம், சிபிஐ-யிடம் தி.மு.க மனு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சோதனையின்போது பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ள தி.மு.க., அவற்றை விசாரிக்கும்படி மத்தியப் புலனாய்வுத் துறையைக் கோரியுள்ளது. இது தொடர்பாக தி.மு.கவின் மாநிலங்களவை எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன், மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குனரைச் சந்தித்து அளித்த மனுவில் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். இந்தப் பணம் தொடர்பாக தன்னிடம் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால், தன்னை அழைத்து விசாரிக்க வேண்டுமென்றும் இளங்கோவன் கூறியிருக்கிறார். பாரத ஸ்டேட் வங்கியின் விசாகப்பட…
-
- 0 replies
- 446 views
-
-
நிர்க்கதியான இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து படகில் எற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான 3 இந்திய மீனவர்களை மீட்டு இந்திய கடலோர காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான குறித்த மீனவர்களை மீட்டதுடன், குறித்த தகவலை இந்திய கடலோர காவற்படையினரிடம் அறிவித்து, குறித்த மீனவர்களையும் அவர்களுடைய படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைத்தள்ளனர். http://www.virakesari.lk/article/9836
-
- 1 reply
- 412 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, 2ஜி விவகாரம் தொடர்பாக எடுத்த முடிவுகளுக்குத் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா கைது செய்யப்பட்டு சுமார் 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கும் புத்தகத்தை வரும் நவம்பரில் வெளியிட இருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு ‘இன் மை டிபன்ஸ்' என ராஜா பெயரிடப்பட்டுள்ளார்.இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. எனவே, அதே கால …
-
- 0 replies
- 332 views
-
-
படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி பயன்படுத்திய 14 சிம் கார்டுகள் மற்றும் மடிக்கணணி குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என கைது செய்யப்பட்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராம்குமார் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் இன்று சென்னையில் நிருபர்களுடன் பேசினார். அப்போது, சுவாதி கொலை வழக்கை விரைந்து முடிக்க நீதித் துறையையும் காவல்துறை துணைக்கு அழைப்பதாக ராமராஜ் குற்றம்சாட்டினார். மேலும், ராம்குமார் தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய தான் தேவையான தகவல்களை திரட்டி வருவதாகவும் வழக்கறிஞர் ராமராஜ் தெ…
-
- 1 reply
- 608 views
-
-
பிரபல செருப்பு நிறுவனத்தின் செருப்பில் கறுப்பினத்தவரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி புதுரோட்டை சேர்ந்தவர் ஏ.தெ.சுப்பையன். இவர் கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் என கூறப்படுகிறது.இவர் அதே பகுதியை சேர்ந்த செருப்பு கடையில் செருப்பு ஒன்று வாங்க சென்றுள்ளார். கேரளாவில் தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் பிரபல செருப்பு நிறுவனமான வி.கே.சி நிறுவனத்தின் செருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.செருப்பை வாங்கி அதன் உள்பகுதியை கவனித்த போது, அதில் கறுப்பினத்தவரின் புகைப்படம் அச்சிடப்பட்டு, அதன் மேல் ஒரு ஆங்கில கவிதை ஒன்று இடம் பெற்றிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், செருப்பை வாங்கிய கடையில் தி…
-
- 0 replies
- 710 views
-
-
' ராஜீவ் கொலை சதியோடு இந்தியா வரவில்லை என்பதை சொல்வீர்களா?' -சி.பி.ஐ அதிகாரிக்கு சாந்தனின் கண்ணீர் கோரிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சாந்தன். ' வெளிநாட்டு வேலைக்காத்தான் இந்தியா வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஒருமுறையேனும் பகிரங்கமாக வெளியில் சொல்வீர்களா' என தன்னைக் கைது செய்த காவல்துறை உயர் அதிகாரிக்கு வேண்டுகோள் வைக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளன…
-
- 0 replies
- 596 views
-
-
சென்னையில் வேகமாகப் பரவும் அரேபிய உணவு கலாசாரம் (காணொளி) அரபு உணவுக்கூடங்கள் என்பது இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் முன்னதாகவே அறிமுகமான ஒன்றுதான். நூற்றுக்கணக்கான பிரத்யேக அரேபிய உணவுக்கூடங்கள் மாநிலம் முழுவதும் இயங்கி வந்திருக்கின்றன. ஆனாலும், தமிழகத் தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் அவற்றின் வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஷவர்மா என அழைக்கப்படும் உணவு வகைகள் விற்கப்படும் துரித உணவு கூடங்கள் சென்னையில் பெருகி வருகின்றன. துரித உணவு கலாச்சாரத்திற்கு மாறி வரும் இளைய தலைமுறையினர் பலர் தற்போது இந்த உணவை அதிகம…
-
- 1 reply
- 847 views
-
-
தமிழ்நாட்டை சேர்ந்த ராமர்பிள்ளை என்பவருடைய கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1996ஆம் ஆண்டு ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து பரபரப்பை உண்டாக்கினார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சோதனைக்கு ஆளானார் ராமர்பிள்ளை. சரியான கல்வி அறிவு இல்லாத அவரால், இந்த பெட்ரோலை கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் கண்டுபிடித்துள்ள பெட்ரோலில் கலப்படம் இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த எதிர்ப்புகளுக்கு பின்னால் கார்ப்பரேட் கம்பெனிகளும், அரசியல்வாதிகளும் இருந்ததாக அப…
-
- 1 reply
- 918 views
-
-
இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க கோரியும் இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி ஒன்றை நேற்று நடத்தினர். சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலாளர் ஞானராஜ…
-
- 0 replies
- 590 views
-
-
அதிமுகவிலிருந்து சர்ச்சை எம்.பி., சசிகலா புஷ்பா நீக்கம்... ஜெயலலிதா அதிரடி! சென்னை: டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் தகராறு செய்ததாக சர்ச்சைக்குள்ளாகிய அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்ப, தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் நேற்று பிற்பகல் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் அப்போது ஒருமையில் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்த…
-
- 9 replies
- 1.8k views
-
-
தமிழனின் வீரத்தையும் மாண்பையும் உலகம் முழுவதும் பறைசாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் கட்டவேண்டும் என அரசியல் கட்சி அமைப்பினர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மற்றும் அரியணை ஏறிய, ஆயிரத்து இரண்டாவது ஆண்டை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை (நேற்று) விழா நடைபெற்றது. இதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியுள்ள பிரகதீஸ்வரருக்கு மகாபிஷேகம் நிகழ்ந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வால் ஜெயங்கொண்டம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநக…
-
- 0 replies
- 472 views
-
-
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் காரில் சென்றபோது சென்னை கிண்டியில் கார் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த கார் பழ.நெடுமாறன் சென்ற காரின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. கார் மோதியதில் லேசான காயங்களுடன் நெடுமாறன் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=162638&category=IndianNews&language=tamil
-
- 4 replies
- 1.4k views
-
-
சென்னை, மாயமான ராணுவ விமானம் விசாகப்பட்டினம் காட்டுப்பகுதியில் விழுந்ததாக கூறப்படுவதால் அங்கு விமானப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 9-வது நாளாக தேடும் பணி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. அது, வங்கக் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் மாயமான விமானத்தை தேடும்பணியில் போர்க்கப்பல்கள், போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் விமானத்தை கண்டு பிடிக்க ம…
-
- 0 replies
- 441 views
-
-
நேபாளத்தில் சிக்கியுள்ள 10 தமிழர்களை ஹெலிகாப்டரில் மீட்பதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலுக்கு ஜுலை 20-இல் பக்திச் சுற்றுலா சென்றனர். அங்கு அற்பட்ட கடும் மழை-நிலச்சரிவு காரணமாக, அவர்களில் 10 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைந்தகரையைச் சேர்ந்த ப.கணேஷ் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன்பேரில், அவர்களை உடனடியாக மீட்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினர். இதன்படி, 10 பேரும் ஜா…
-
- 0 replies
- 331 views
-
-
திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்த அதிமுக எம்பி: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி சிவாவை அதிமுக எம்பி சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வார விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு, மீண்டும் டெல்லி செல்வது வழக்கம். அதன்படி நேற்று சனிக்கிழமை என்பதால் திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீ ரென வாய்தகராறு ஏற…
-
- 2 replies
- 618 views
-
-
ஈழத்தமிழ் அகதிகளின் கண்ணீர்க் கதை ஒரே மொழி, ஒரே இனம், இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்ததால் அவர்கள் அகதிகள். இலங்கையில் யுத்தம் ஓய்ந்து விட்டது. காற்றில் கலந்த கந்தக வாசனை இப்போது இல்லை. முள்வேலிகள் இன்னும் திறக்கப்படவில்லை. சொந்த நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்ட கைதிகளைப் போல் ஒரு பரிதாப வாழ்க்கை. தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள், உளவுப் பிரிவின் கண்காணிப்பு, கியூ பிராஞ்சின் கிடுக்குப் பிடி, ஈழத்தமிழர் முகாமை விட்டு வெளியே போகவர என எந்த நடமாட்டமும் பதிவேடுகளில் பதிவு, இரை தேடிப்போன பறவை கூட்டிற்கு வருவதுபோல சாயங்காலம் ஆறு மணிக்குள் கூட்டிற்கு திரும்பவேண்டிய இக்கட்டான ஒரு வாழ்க்கை. எந்த ஒரு தேவைக்கும் மற்றவர்களின் கையை எதிர்பார்த்து நிற்கும் நிலை…
-
- 0 replies
- 889 views
-
-
முக்கிய செய்திகள் : இந்தியா : நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நரேந்திர மோடி மறந்துவிட்டார்: மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு. தமிழகம் : சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே மோதல்: மாணவரின் கழுத்து கத்தியால் கிழிக்கப்பட்டதால் அதிர்ச்சி. தமிழகம் : செங்கத்தில் காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தாக்கப்பட்ட சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலர்கள் நேரில் விசாரணை. …
-
- 0 replies
- 532 views
-
-
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 22ம்தேதி மதியம் பள்ளி தொடங்கிய நிலையில் பிளஸ் 2 வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆசிரியர் அருகில் சென்று விசாரித்தபோது, அம்மாணவர்கள் போதையில் இருந்தது தெரிய வந்தது. இந்த தகவல் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் விசாரித்துள்ளார். அதில் அந்த மாணவர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாள் என்பதும் இதையடுத்து அந்த குறிப்பிட்ட மாணவன், பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கட்டிடத்தில் தன்னுடன் படிக்கும் 11 மாணவர்களை அ…
-
- 0 replies
- 681 views
-
-
தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார் ஞானக்கூத்தன் | கோப்புப் படம். தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை, திருமந்திரம் நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஞானக்கூத்தன் என்று பெயர் மாற்றிக் கொண்டார். இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ’கசடதபற’ இதழைத் துவக்கினார். ’ழ’, ’கவனம்’ ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 'அன்று வேறு கிழமை', 'சூரியனுக்குப் பின் பக்கம்', 'கடற்கரையில் ஒரு ஆலமரம்' போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்…
-
- 0 replies
- 535 views
-
-
தமிழகம் இந்தியா உலகம் அரசியல் விளையாட்டு சினிமா வணிகம் தொழில்நுட்பம் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அப்துல்கலாமின் சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு …
-
- 0 replies
- 702 views
-