Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘ ஜெயலலிதாவை பின்பற்றுவதில் என்ன தவறு?!’ -கருணாநிதியிடம் ஆதங்கப்பட்ட கனிமொழி #Vikatan Exclusive உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. ' அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தனித்துக் களமிறங்க வேண்டும். கூட்டணிகளை நம்புவதால் பலவீனப்பட்டே வந்திருக்கிறோம்' என கருணாநிதியிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உள்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொண்டு வருகிறார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர்களை ஒதுக்கி வைக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. அதேநேரம், அக்டோபரில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, கட்சியின் சீனியர…

  2. இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அந்தப் படகில் பல ஆயிரம் லீட்டர் டீசல் இருப்பது தெரியவந்ததால், பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அந்தப் படகு நிறுத…

  3. 'வைகோவை இப்போதுதான் புரிந்து கொண்டேன்!' - வீரலட்சுமியின் ஆதங்கம் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்திருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி. ' வைகோவிடம் கொள்கை முரண்பாடு ஏற்பட்டதால் விலகுகிறோம். அவரைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டோம்' என்கிறார் வீரலட்சுமி. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முயற்சியால், தமிழர் முன்னேற்றப்படையும் மக்கள் நலக் கூட்டணிக்குள் அங்கம் வகித்தது. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கினார் வைகோ. பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, 20 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில், ' மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' எ…

    • 1 reply
    • 919 views
  4. சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, 2016-2017ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது, ''டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் 500 மதுபானக் கடைகளை மூடியதால் வருவாய் ரூ.6,636.08 கோடி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மத்திய வரிகளில் மாநில அரசின் பங்குத் தொகை 23,018.12 கோடி ரூபாயாக குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது. 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான மானியங்கள…

  5. கணினி, டிவி முன் முழுநேரத்தையும் செலவிடுவதை விடுத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்த சிஷ்யா பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறினார். சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்களுடன் நேற்று புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர். தலைமைச் செயலக கட்டிடத்தின் தெற்கு பகுதியில், முதல்வர் வருகை தரும் வாசல் பகுதியில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். முதல்வரை பார்த்து சிஷ்யா பள்ளி மாணவர்கள் கையசைத்தனர். இதை கவனித்த முதல்வர், தன் அலுவலகத்துக்கு சென்றதும், பள்ளி மாணவர்கள் யார் என்பதை விசாரித்ததுடன், அவ…

    • 0 replies
    • 454 views
  6. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாககூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார். "தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன " என்று குமுறலுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, "என…

  7. நளினி விடயத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலூர் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்திருக்கும் மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்கலாம். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுத…

  8. போலி ஆவணம், 24 மணி நேர மௌனம், அதிகாரி மாற்றம்! - ரூ.570 கோடி கன்ட்டெய்னர் மர்மம் திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் கன்ட்டெய்னர் பணம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டது சி.பி.ஐ.' சட்டரீதியிலான பணம் என்றால், இவ்வளவு மர்மங்களோடு ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமா?' என கேள்வி எழுப்புகின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். 2016 சட்டமன்றத் தேர்தல் சமயம், மே 13-ம் தேதி அன்று திருப்பூர் அருகில் மூன்று கன்ட்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை.அந்த கன்ட்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் இருந்ததாகத் தகவல் வெளியானது. தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த லாரிகள் பறிமுதல் சம்பவத்தின் பின்னணியில்,உள்ள உண்மைகளை வ…

  9. தி.மு.கவில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அ.இ.அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா இன்று தி.மு.கவில் இணைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் அவர் தி.மு.க.வில் சேர்ந்தார். 2011-2016ல் நடந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை துறைமுகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கடந்த ஜனவரி மாதம் துக்ளக் வார விழாவில் பேசும்போது அரசின் மீது சில விமர்சனங்களை முன்வைத்ததையடுத்து, அவரைக் கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பழ. கருப்பையா, அரசின் செயல்பாடுகள் மீது பல புகார்களையும் குற்றச்சாட்டுகளையும்…

  10. தமிழக மருத்துவ மாணவன் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. திருப்பூர் சேர்ந்தவர் சரவணன். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த அவர் கடந்த 10ம் தேதி சந்தேகத்திற்கு உரிய வகையில் மரணமடைந்தார். இதுகுறித்து கடும் சர்ச்சை எழுந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் உ‌டற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடலில் நச்சுப்பொருள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அது சில மாதங்களுக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் அவர…

  11. சென்ற ஆண்டின் பிற்பகுதி, வடதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த நேரம். வேலூர் மாவட்ட ஆட்சியர், டெங்கு காய்ச்சலுக்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக, பள்ளிகொண்டா பகுதியில் இருந்த அகரம் கிராமத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கிருந்த சிறிய மருத்துவமனையைப் பார்த்தவருக்கு சந்தேகம் உண்டாகிறது. உடன் வந்த அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறார். அதிகாரிகள், தன் மருத்துமனைக்கு வருவதைக் கண்ட மருத்துவர், அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தபோதுதான் தெரிகிறது, அந்தச் சிறிய மருத்துவமனையைப் பல ஆண்டுகளாக இயக்கியது ஒரு போலி மருத்துவர் என்று. அது போல், தருமபுரியில் பிக்கிலி மலைப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷிற்க…

  12. சுவாதி கொலை வழக்கில் பிலால் மாலிக்கை விசாரிக்க வேண்டிய தேவை என்ன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனப் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்தனர்.சுவாதி கொலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிலால் மாலிக் சொன்ன வாக்குமூலங்களை ஏன் வெளியிடவில்ல…

  13. காசி, ராமேஸ்வரம் புனித யாத்திரை என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு வாழ்நாள் கனவு. கங்கை நதியிலும், ராமேஸ்வரம் தீர்த்தத்திலும் புனித நீராடி பாவங்கள் நீங்கி புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.கங்கை நீராடல் பலருக்கு கனவாகவே முடிந்து போவதால் எல்லோருக்கும் கங்கை நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ள கங்கைநீர் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டருகிலேயே கங்கை நீர் கிடைப்பது ‘வரப்பிரசாதம்‘ என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் கங்கைநீர் அசுத்தமானது. அதை தபால் நிலையங்களில் விற்…

  14. ராஜீவ் காந்தி கொலை கைதிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.அதன்படி, நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் முருகன், சாந்தன், பேர…

  15. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்து காட்டிய ராம்குமார்! சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் கடந்த 13-ம் தேதி மாலை முதல் 15-ம் தேதி மாலை வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. ராம்குமாரிடம் போலீஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் , "எங்கள் விசாரணையில் ராம்குமார் இருந்தபோது 13-ம் தேதி நள்ளிரவில் ரயில் போக்குவரத்து இல்லாத சமயத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றோம். பயணிகள், பொதுமக்கள் இல்லாத நேரத்தில் எந்த மீடியாக்களுக்கும் தகவல் கசியாத வகையில் ராம்கு…

  16. டெல்லியில் முதல்- அமைச்சர்கள் மாநாடு இன்று நடந்தது. மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:–வலிமையான மாநிலங்களால்தான் வலிமையான மத்திய அரசு அமையும். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் பழைய போக்குகளை மாற்றியாக வேண்டும்.அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருந்து மாறி வரும் காலம் இது. மாநிலக் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கோஆப்ரேடிவ் கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. அந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. நாட்டின் வளர்ச்சிக்கு மாநில அரசுகள் சரிசமமாக பங்குதாரர்கள் என்ற கருத்தை நான் எப்போதும் வர…

  17. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் தினமும் ஒவ்வொரு தகவலாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் பிராமண பெண்ணான சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற இருந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முஸ்லீம் ஒருவர் தான் இந்த கொலையை செய்திருப்பார் என ஒரு சில கூறி பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. பின்னர் ராம்குமார் கைது செய்யப்பட்டதும் முஸ்லீம் குறித்த தகவல்கள் மங்கிப்போனது. ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தலித் அமைப்புகள் ர…

  18. ராணுவப் புரட்சி நடந்துள்ள துருக்கியில், 20 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். அங்கிருந்து 'எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும்' என்று துருக்கியிலிருந்து தமிழக வீராங்கனைகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். உலக பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 200 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அஜித்குமார், தமிழ்ச்செல்வி, பிரியதர்ஷினி உள்பட 20 பேரும் அடக்கம். இந்த நிலையில், துருக்கில் நேற்று ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்காரா பகுதியில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் டிராப்சோன் நகரில் இந்திய வீரர், வீரா…

  19. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் வாதத்தை முன்வைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரும் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது தொடர்பாக அனுமதி கேட்டு, அண்மையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்நிலையில், ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பண்ட், ஏ.எ…

  20. ''எங்களை தாக்கிய காவலர்கள் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்யாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்'' பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ராஜா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோக்கவாடி பகுதியை சேர்ந்த ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை செங்கம்- போளூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதோடு, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள் நம்மாழ்வார் அந்த வழியாக வந்தார். அவர் தகராறு குறித்து ராஜாவிடம் கேட்டுள்ளார். இது குடும்ப தகராறு இதில் போலீசார் தலையிட வேண்டாம் என்று ராஜா கூறியுள்ளார்.இதனால் ராஜ…

    • 2 replies
    • 338 views
  21. 600 சிம்கார்டுகள், 25 மேன்சன்கள், தென்காசி அரிவாள்..!' -ஆந்திரா வரை நீளும் சுவாதி கொலை வழக்கு சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ' ராம்குமார்தான் கொலையில் ஈடுபட்டார் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ராம்குமாரை, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்தது போலீஸ். நெல்லை மருத்துவமனையில் சி…

  22. இனிப்பு ஹெரோய்ன் விற்க முயன்ற இலங்கை அகதிகள் கைது ராமநாதபுரத்தில் சீனியை ஹெரோய்ன் போதைப் பொருள் எனக் கூறி விற்க முயன்ற இலங்கை அகதிகள் 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான முறையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கியூ பிரிவு பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். இதன்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை தெரிவித்தனர். அவர்களிடம் 850 கிராம் எடையுள்ள சீனி இருந்தது. இது போதைப் பொருள் எனவும், அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தனர். சீனியை ஹெராயின் போதைப் பொருள் எனக் கூறி அதிக விலைக்கு விற்க முயன்றதாக அந…

  23. சுவாதியை பார்த்தது முதல் கொலை வரை..! ராம்குமாரிடம் போலீஸ் அடுக்கிய கேள்விகள் சுவாதி கொலை வழக்கு பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு அசைவுகளையும் பொது மக்கள் கவனித்து வருகின்றனர். ராம்குமார் மட்டுமா குற்றவாளி, இல்லை வேறு யாரும் இருக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு எல்லாம் விடையளிக்கும் வகையில் போலீஸார், ராம்குமாரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ராம்குமாரை போலீஸார் கைது செய்ய முயன்ற போது அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் அப்போது எந்த விசாரணையும் போலீஸாரால் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் மூன்று நாள் போலீஸ் காவலில் முழு விவரங்களையும் பெற போலீஸார் முனைப்புடன் செயல்பட்டு …

  24. நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன் தன்னை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி இலங்கை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியமானதென தெரியவில்லை. எனினும் அவரது உணர்வை மதிக்க வேண்டும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜல்லிக் கட்டு நடத்த தனி மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி , வழிபாட்டு தலங்களின் அருகே அரசு மதுபானக் கடைகள் இயங்கவில்லை என்று கூறி வந்த அ.தி.மு.க. அரசு , தற்போது பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 1000 கடைகளை மூடப்போவதாக…

  25. எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவியுடன் விஜயன் குடும்பத்தினர் ஆயுள் தண்டனை பெற்றுள்ள 7 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008ல் நடந்த இந்த கொலை சம்பவத்தில் விஜயன் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.