தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
500 டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அரசுக்கு எவ்வளவு இழப்பு? சென்னை: 6 வது முறையாகத் தமிழக முதல்வர் பொறுப்பில் ஜெயலலிதா அமர்ந்தவுடன்,தேர்தல் நேரத்தில் அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணியைத் தொடங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தில் 2 மணி நேரத்தைக் குறைக்கவும், மொத்தமுள்ள 6826 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகளை மூடவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் இலவசத் திட்டங்களுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானமே ஆதாரமாக இருக்கிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில்,500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் தமிழக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது…
-
- 5 replies
- 1.4k views
-
-
முன்வரிசையில் சரத்... பின்வரிசையில் ஸ்டாலின்: ஜெ. பதவியேற்பு விழாவில் அவமதித்ததாக கருணாநிதி குற்றச்சாட்டு திமுக தலைவர் கருணாநிதி. | படம்: ஜே.மனோகரன். முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழா நடந்தது. அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக…
-
- 7 replies
- 900 views
-
-
கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெ,. -பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெயலலிதா. அவர் செல்லும் வழியெங்கும் கட்அவுட், பேனர்கள் இல்லாமல் சாலைகள் மவுனமாக இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள். அ.தி.மு.க ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் உருவாவதற்கு பெரிதும் காரணமாக இருந்தது வரைமுறையின்றி வைக்கப்பட்ட கட் அவுட்டுகள்தான். தேர்தல் முடிவில் சென்னையின் பெரும்பாலான தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அ.தி.மு.கவின் தோல்விக்கு மழைவெள்ளம் உருவாக்கிய சேதம் பிரதான காரணமாக இருந்தாலும், மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்குக் கெட்ட பெயரை உருவாக்கிக் கொடுத்தது பேனர் கலாச்சாரம்…
-
- 4 replies
- 450 views
-
-
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் ஸ்டாலின்! சட்டமன்ற திமுக குழுத் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 89 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற திமுக குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற திமுக குழுத் துணைத் தலைவராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானார். மேலும், திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணை கொறடாவாக பிச…
-
- 0 replies
- 416 views
-
-
அரவக்குறிச்சி வேட்பாளர் மீது, காய்ச்சிய எண்ணெயை.... ஊற்றிய மனைவி. கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் வேட்பாளர் ராஜேஷ்குமார் மீது அவரது மனைவி காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள அரங்கப்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்குமார், பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சி சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலை சேர்ந்த ரேவதியை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராற…
-
- 0 replies
- 438 views
-
-
ஜெயலலிதா வெற்றி... திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா! (வீடியோ) திருமலை: அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார். பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்.அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார். இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி சென…
-
- 0 replies
- 622 views
-
-
500 டாஸ்மாக் கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி..! ஜெயலலிதா முதல் நாள் அதிரடி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார். முதலமைச்சர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலமை…
-
- 0 replies
- 396 views
-
-
ஜெ. பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு. சென்னை: ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் சட்டசபை திமுக எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன், சென்னை மேயர்ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர். கடந்தமுறை அவர் முதல்வரானபோது மேயராக இருந்த ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதைஸ்டாலினே நிருபர்களிடம் சுட்டிக் காட்டியிருந்தார். இந் நிலையில் இம்முறை பதவியேற்பு விழாவுக்கு அவருக்கு அரசின் சார்பில் முறைப்படி அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முக்கியப் பிரமுகர்கள் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்த ஸ்டாலினும் அன்பழகனும் யாருடனும் பேசவில்லை. ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்து வரும் ப.சிதம்பரத்தின் கட்சியில் உள்ள அவரது தீவிரம…
-
- 1 reply
- 464 views
-
-
நான் எதிர்பார்த்த தோல்விதான் இது..! வைகோ தடாலடி 'தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை எதிர்பார்த்து அதை முழுமையாக எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன்' என மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மக்கள் நலக்கூட்டணியின் தோல்வியை எதிர்பார்த்தேன். பிரசாரத்தின் கடைசி 3 நாட்களில் சில மாற்றங்கள் தென்பட்டன. பிரசாரத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த எழுச்சி, ஆர்வம் போன்றவை வாக்காளர்கள் மத்தியில் குறைந்து காணப்பட்டது. நான் கடந்த 1964ம் ஆண்டில் இருந்து பல்வேறு தேர்தல்களை சந்தித்து வருகிறேன். மக்கள் மனநிலையை என்னால் அறிய முடியும். அப்போதே எங்கள் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 437 views
-
-
சத்துணவுத் திட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... ஜெயலலிதாவின் அரசியல் பயணம்! தமிழக சட்டமன்ற தேர்தலில், 134 இடங்களை பிடித்து 6 வது முறையாக அரியணை ஏறுகிறார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தை ஆளும் பெருமையையும் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அவர் பெற்றிருக்கிறார். 1984 தேர்தலில் அவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் இச்சாதனையை நிகழ்த்தினார். துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு தலைவர்களுக்கும் அன்றும் இன்றும் ஒரே போட்டியாளர் கருணாநிதி. திரைப்பட நடிகையாக தன் வாழ்க்கையை துவக்கிய ஜெயலலிதா, பின்னாளில் தமிழக முதல்வராகவும் இந்திய அளவில் அசைக்க முடியாத ஒரு அரசியல்வாதியாகவும் உருவெடுப்பார் என அந்த காலத்தில் அவரிடமே யாராவது சொல்லியிருந்தால் பலமாக சிரித்திருப்பார். ஆனால் அதுதான் …
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு வெறும் 24,383 ஓட்டு வித்தியாசத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக கிடைத்துள்ளனர். அக்கட்சி ஆட்சி அமைக்க இதுவே முக்கிய காரணமாக இருந்துள்ளது. அந்த தொகுதிகள் இவை தான்: 1) ராதாபுரம் - 49 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி. 2) கோவில்பட்டி - 428 3) கரூர் - 441 4) தென்காசி - 462 5) ஒட்டப்பிடாரம் - 493 6) பெரம்பூர் - 579 7) திருப்போரூர் - 950 8) பர்கூர் - 963 9) பேராவூரணி - 964 10) கிணத்துக்கடவு - 1332 11) ஆவடி - 1395 12) அரியலூர் - 1753 13) சிதம்பரம் - 1945 14) மொடக்குறிச்சி - 2222 15) விருகம்பாக்கம் - 2333 16) ஊத்தாங்கரை - 2613 17) கெங்கவள்ளி - 2622 18) அறந்தாங்கி - 2837 http://www.dinamalar.…
-
- 0 replies
- 439 views
-
-
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; ஓ.பன்னீர் செல்வம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட 29 பேருக்கு பதவி! சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அமைச்சரவை பட்டியல் 01. முதலமைச்சர் - ஜெயலலிதா - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை 02. நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம் 03. வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன் 04. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை 05. செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை 06. தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை 07. வேலுமணி - உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் 08. ஜெய…
-
- 1 reply
- 724 views
-
-
ஜெயா டிவியை ஒளிபரப்பும் அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை! நாகர்கோவில்: தமிழக அரசின் சாதனைகளை விளக்குவதற்காக தொடங்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் திரை வாகனத்தில், ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின்போது ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் பொருட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நவீன வசதிகள் கொண்ட டிஜிட்டல் திரை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு நகரம், கிராமங்களில் அரசின் சாதனைகள் குறித்து டிஜிட்டல் காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவை ஒளிபரப்பு…
-
- 1 reply
- 541 views
-
-
மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்தது திமுக சென்னை; மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ. நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல், ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 24 ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர்களாக யார் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி…
-
- 0 replies
- 438 views
-
-
ராஜீவ் படுகொலை: பதற வைக்கும் 10 மர்மங்கள் -அதிர வைக்குமா ஆவணப்படம்? ' ராஜீவ் காந்தி படுகொலையின் நேரடி சாட்சியான 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்' என விகடன்.காம் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அவர் 'உயிரோடு இருக்க வாய்ப்பில்லை' என மறுப்பு தெரிவித்து பலரும் கருத்துக்களைப் பதிவிட்டனர். இதையே, ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மற்றும் தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று காலையில், ஈரோட்டில் வைத்து ராஜீவ் படுகொலை தொடர்பான மர்மங்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது ஆவணப்படக் குழு. ராஜீவ் காந்தி படுகொலையின் மர்மங்கள் குறித்து 'பைபாஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்ற…
-
- 0 replies
- 586 views
-
-
தேர்தல் ஒத்திவைப்பு... உயர் நீதிமன்றத்தை நாடியது தி.மு.க.! சென்னை: தமிழகத்தில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாலும், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளின் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்த இரண்டு தொகுதிகளிலும் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அதனை எதிர்த்து பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்க…
-
- 0 replies
- 451 views
-
-
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் கோப்புப் படம்: ஆர்.எம்.ராஜரத்தினம் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 2.4% வாக்குகள் பெற்றதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஒட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மாநில கட…
-
- 0 replies
- 403 views
-
-
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த ஓட்டுக்களைப் பார்க்கும் போது தான் அவற்றின் உண்மையான பலம் தெரிய வருகிறது. * 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவுக்கு 1,76,17,060 ஓட்டுக்கள் கிடைத்தது. இது 40.8 சதவீதம் ஆகும். இந்த தேர்தலில் அக்கட்சி 134 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. * 176 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., 1,36,70,511 ஓட்டுக்கள் கிடைத்தது. இது 31.6 சதவீதம் ஆகும். 89 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. * 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸிற்கு, 27,74,075 ஓட்டுக்கள் கிடைத்தது. இது 6.4 சதவீதம் ஆகும். அக்கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது * 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3,13,…
-
- 0 replies
- 652 views
-
-
சென்னை: மே 23ம் தேதி, 6வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். இவ்விழாவில் கலந்து கொள்ள தேசிய தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தேசிய மற்றும் மாநில அளவில் காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளது. நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மே 23ம் தேதி அவர் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். கடந்த முறை பதவியேற்பு விழா நடந்த சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் இம்முறையும் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்…
-
- 0 replies
- 571 views
-
-
தமிழக சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 134 தொகுதிகளில் வென்றது. திராவிட முன்னேற்றக் கழகம் - காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான கடந்த (2011-2015) ஆட்சியில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்கள், இப்போதைய தேர்தலில் தோற்றுப்போயினர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மையுடன், 6-வது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்க உள்ளார். தவிர, எம்ஜிஆருக்குப் பிறகு, ஆளுங்கட்சியாக இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார். தேர்தலில் வெற்றிப…
-
- 1 reply
- 520 views
-
-
சென்னை: நாங்கள் விதைத்த மாற்று அரசியல் விதை ஓர் ஆண்டில் விளையும் பயிர் அல்ல என்பதை தேர்தல் உணர்த்தியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், மக்கள் நலக் கூட்டணி முன் வைத்த மாற்று அரசியலுக்கு ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சியாகவே உள்ளது. நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும், இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும், இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம். அதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் பணத்தை வாரி இறைத்ததையும் மீறி எனக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்…
-
- 0 replies
- 337 views
-
-
சென்னை: தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று சக்தி என்று கூறி வந்த விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு மாநில கட்சி என்ற அந்தஸ்து பறிபோகவுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அறிவித்த நாள் முதல் அவர் யாருடன் கூட்டணி சேருவார் என்ற பரவலான பேச்சுக்கு அவர் சினிமா கிளைமாக்ஸ் போல் எந்த பிடியும் கொடுக்காமல் சஸ்பென்ஸ் வைத்து மவுனம் காத்தார். தனித்து போட்டி என்றும் பின்னர் பழமாக திமுக எனும் பாலில் விழும் என்றும் நிலவிய சூழலில் அவர் மதிமுக, இடதுசாரி, விடுதலைசிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி என அறிவித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. மேலும் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் விஜயகாந்துக்கு பல ஆயிரம் கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என்ற வைகோவின் பேச்சும் மக்களை …
-
- 0 replies
- 321 views
-
-
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு அரவக்குறிச்சி. | படம்: ஏ.முரளிதரன் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பாஸ்கரன், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம், திருச்சியைச் சேர்ந்த விவசாயி அய்யாகண்ணு, சுய ஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பாஜகவைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோர் தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். …
-
- 0 replies
- 241 views
-
-
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், சி.ஆர்.சரஸ்வதி தோல்வியடைந்து இருக்கிறார்கள். முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பதிவான வாக்குகளில் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி 131 தொகுதிகளிலும் திமுக 100 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக 13 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் திமுக 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. விஜயகாந…
-
- 0 replies
- 509 views
-
-
கிருஷ்ணசாமி (பு.த.) தொகுதி : ஓட்டப்பிடாரம் (தனி) தோல்வி கோகுல இந்திரா (அ.தி.மு.க.) தொகுதி : அண்ணா நகர் தோல்வி வைத்திலிங்கம் (அ.தி.மு.க.) தொகுதி : ஒரத்தநாடு தோல்வி சுந்தரராஜ் (அ.தி.மு.க.) தொகுதி : ஓட்டப்பிடாரம் (தனி) தோல்வி கராத்தே தியாகராஜன் (காங்.,) தொகுதி : மயிலாப்பூர் தோல்வி விஜயகாந்த் (தே.மு.தி.க.,) தொகுதி : உளுந்தூர்பேட்டை தோல்வி திருமாவளவன் (விசி) தொகுதி : காட்டுமன்னார் கோயில் (தனி) தோல்வி தமிழிசை சவுந்திரராஜன் (பா.ஜ.,) தொகுதி : விருகம்பாக்கம் தோல்வி வானதி சீனிவாசன் (பா.ஜ.,) தொகுதி : கோயம்புத்தூர் (தெற்கு) தோல்வி …
-
- 0 replies
- 740 views
-