Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ம.ந.கூ., ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியதாவது: தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மக்களுக்கு பணம் வழங்கின. ம.ந.கூ., மட்டுமே வாக்காளர்களுக்கு பணம் அளிக்காமல் தேர்தலை சந்தித்தது. ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க ம.ந.கூ., தொடர்ந்து போராடும். http://election.dinamalar.com/detail.php?id=11674

    • 0 replies
    • 479 views
  2. திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை... புதுவையில்! புதுவை: புதுவை சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள 930 வாக்குச்சாவடிகளில் இறுதி நிலவரத்தின்படி 84.08 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தம் உள்ள 9 லட்சத்து 41 ஆயிரத்து 395 வாக்காளர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 68 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 22 ஆயிரம் பேரும் அடங்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று …

  3. போயஸ் கார்டனில் பட்டாசு, லட்டு... அறிவாலயத்தில் பட்டாசு...! - காத்திருக்கும் கழகங்கள் ஐந்தாண்டு அமைச்சரவையின் பதவிக்காலம், வருகிற மே 22 ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. ஆளுநர் அழைப்பின் பேரில், புதிய அமைச்சரவை 23 ம் தேதியில் இருந்து அவர்கள் விரும்புகிற ஏதாவதொரு சுபமுகூர்த்த நாளில் பதவியேற்கும். அந்த தேதியைச் சொல்லப் போவது, ஆளும் அதிமுகவா, ஆண்ட திமுகவா அல்லது மூன்றாவது அணியான மக்கள் நலக் கூட்டணியா என்பதும், ஒருவேளை இழுபறி நிலை ஏற்பட்டால் "குதிரை பேர" பேச்சு (?!) வார்த்தைகளின் முடிவுதான் தீர்மானிக்குமா என்பதும் நாளை காலை 12 மணிக்குள்ளாகவே தெரிந்துவிடும். இந்நிலையில், அறிவாலயத்தில் வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறத…

  4. ஓட்டு எண்ணிக்கைக்கு தடை இல்லை:டிராபிக் ராமசாமி உள்ளிட்டோரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட் சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது எனவும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தலையிட முடியாது என்று கூறி டிராபிக் ராமசாமி, செந்தில் ஆறுமுகம், தலித் பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். திருப்பூரில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் முடிவு தெரியும் வரை தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவரும், பிரபல சமூக சேவகருமான டிராபிக் ராமசாமி, தலித் பாண்டியன், சட்டப் பஞ்சாயத்து இயக…

  5. சென்னை: மே 18... இந்த உலகம் எத்தனை பாரபட்சமானது... கண்மூடித்தனமானது என்பதை நிரூபித்த நாள். மீண்டும் இலங்கை ஆகிவிட்ட ஈழத்தில் இந்த ஒரு நாளில் மட்டுமே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட நாள். 'நான் செத்துக் கொண்டிருக்கிறேன்... என் கண்ணெதிரே ஆயிரமாயிரமாய் பிணங்கள்... அந்தப் பிணங்களின் மீதே ராணுவ வண்டி ஒன்று ஏறிப் போவதைப் பார்த்தபடி என் உயிர் பிரிகிறது,' என ஒரு செய்தியாளர் போர் முனையிலிருந்து அனுப்பிய ஆடியோ இன்னும் கூட காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் பேர் கொல்லப்பட்ட சின்னச் சின்ன நாடுகளிலெல்லாம் பெரும் இனப்படுகொலை நடந்துவிட்டதாகக் கூறி, தனி நாடு பெற்றுத் தந்த சர்வதேசம், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்ட போ…

  6. ' விஜயகாந்த் தலைவர் என்றால், பிரபாகரன்?' -வைகோ கூடாரத்தின் அடுத்த விக்கெட் ம.தி.மு.கவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தன்னுடைய விலகல் கடிதத்தை வைகோவிடம் கொடுத்துவிட்டார். விரைவில், ' அவர் தி.மு.கவில் ஐக்கியமாக இருக்கிறார்' என்ற தகவலால் ம.தி.மு.க வட்டாரமே அதிர்ந்து போய்க் கிடக்கிறது. ' சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு, வைகோ இணைந்ததை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி வெல்லும் என்று எந்த நம்பிக்கையில் வைகோ சென்றார்? பிரபாகரனை தலைவர் என்று சொல்லிக் கொண்டவர், விஜயகாந்தை தலைவராக ஏற்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன்பிறகும் ம.தி.மு.கவில் நீடிப்பதை விரும்பவில்லை' என்கின்றனர் மணிமாறனின் ஆதரவாளர்கள். ஆனால…

  7. ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்.. வழக்கறிஞர் ரத்னம் - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தற்போதைய‌ சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு என வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இதனை ஜெயலலிதா எவ்வாறு எதிர்கொள்வார் என தமிழகம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியையும் எதிர்பார்க்காமல் சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே ஜெயலலிதா களமிறங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலை மாற…

  8. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு நிலவரம் Comment (5) · print · T+ சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்த முதன் முறை வாக்காளர்கள் | படம்: எல்.சீனிவாசன். காலில் காயம் காரணமாக சக்கர நாற்காலி வசதியைப் பயன்படுத்தி ஈரோடு நகரின் வாக்குச்சாவடியில் தன் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர். | படம்: எம்.கோவர்தன் போட்டோ கேலரி தேர்தல் 2016: வாக்களித்…

  9. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது: - நீதிமன்றில் வழக்கு தாக்கல் [Wednesday 2016-05-18 09:00] திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவர் டிராபிக் ராமசாமி. சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதில் 50 சதவீதம் முறையான கணக்கு இல்லாதவை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். திருப்பூரில் ப…

  10. ' கடைசி நிமிடத்தில் கண்டெய்னர் கடத்தல் ஏன்?' -எகிறும் 8 ரகசியங்கள் திருப்பூரில் 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட மூன்று கண்டெய்னர்கள் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. 'பிடிபட்ட அன்றே எஸ்.பி.ஐ வங்கியின் மூத்த அதிகாரிகள் வெளியூருக்கு தப்பிச் சென்றது ஏன்?' என அதிர வைக்கிறார்கள் வங்கி ஊழியர்கள் சிலர். கோவை, ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து மூன்று கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை, திருப்பூர் வடக்குத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தார். அதிகாரிகள் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள்? என்று தெரிந்ததும் மூன்று லாரிகளும் வேகமாகச் சென்றுள்ளன. அந்த வாகனத்தை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ' ரிசர்வ் வ…

  11. Posted Date : 07:44 (16/05/2016) ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், ரஜினி, கமல் உள்பட பிரபலங்கள் வாக்களிப்பு! முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரு தொகுதிகளை தவிர ஏனைய 232 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் சாரதா நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவ…

  12. தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி சென்னை: அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் தொகுதிக்கு மே-23ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி, கேரள மாநிலங்களுடன், தமிழகத்திலும் இன்று (மே 16) தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ…

  13. சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கருணாநிதிக்கு தடை சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை மேற்கொண்டதாகவும் அதற்காக கருணாநிதி சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.ஏற்கனவே அ.தி.மு.க., இது குறித்து புகார் அளித்திருந்தது. திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் விதிமுறைகளை மீறி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிடுவதாக அதிமுக ஐ.டி. பிரிவு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அதன் புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து பே…

  14. வெல்லப் போவது யார்? – சி. சரவணன் 1967-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி அரசியல் உருவானது. 1977-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி உறுதி செய்யப்பட்டது. 1991-ல் திமுகவும், 1996-ல் அஇஅதிமுகவும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்தாலும், தங்களின் வாக்குவங்கியை இழக்கவில்லை. தமிழகத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை கொள்கைகள், கோட்பாடுகள், தேர்தல் அறிக்கைகள், அலைகள் எதுவும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. திமுக மற்றும் அஇஅதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சிகளின் வாக்குவங்கி, இரண்டு கட்சிகளுக்கும் சமநிலையை ஏற்பட…

  15. அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் எவை...?- JV Breaks வீடியோ தேர்தல் களம் சூடுப்பிடித்து விட்டது. ஒரு அணி தேர்தல் பிரச்சாரத்திற்கே கிளம்பி விட்டது. இன்னொரு அணி, எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம் என வெட்கத்தை விட்டு சொல்லியே விட்டது... இந்த தருணத்தில் அ.தி.மு.க வின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் போல் தனித்தே தேர்தலை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறதா....? இல்லை வேல்முருகன், செ.கு. தமிழிரசனை மட்டும் அழைத்துக் கொண்டு கப்பலை செலுத்த தயாராகிவிட்டதா...?. பி.ஜே.பியில் ஒரு அணி மற்றும் த.மா.கா, அ.தி.மு.கவுடன் கூட்டு சேர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டும் நினைத்தால் போதுமா...?. ஜெ என்ன நினைக்கி…

  16. அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு -------------------------------------------------------------------------- தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி, திங்கட்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மே 16ஆம் தேதிக்குப் பதிலாக, மே 23ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்குமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் துவக்க நாட்களிலிருந்தே, அரவக்குறிச்சி தொகுதியில் பெருமளவில் பணவிநியோகமும் பரிசுப்பொருட்களின் விநியோகமும் நடந்ததாக தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் த…

  17. அதிமுக ஆதரவு அழகிரி... அதிர்ச்சியில் தி.மு.க. மதுரை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த தகவலால் பரபரத்துக்கிடக்கிறது திமுக தலைமை. திமுக - அழகிரி முட்டல் மோதல்கள் முடிவுக்கு வராதநிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர அழகிரியின் துாதுவராக நின்று அவரது சகோதரி செல்வி முயன்றார். மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சு வார்த்தை நீண்டுக்கொண்டே வந்தது. அதற்கேற்றவாறு அழகிரியும் நெடு நாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு குறித்து' அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள் இதில் அரசியல் எதுவ…

  18. தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா? - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு! | A Practical Solution for TN Election 2016 தேர்தல் - 2016 (பகுதி - 4) தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனச் சொல்லி நான் தனிப்பதிவு ஏதும் எழுத வேண்டியதில்லை. தலைப்பை மட்டும் கொடுத்துக் கீழே வெறுமையாக விட்டுவிட்டால் போதும்; மக்களே வந்து எழுதிக் குவித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுக்கத் திறப்பு விழா நடத்தியது தி.மு.க என்றால், மாநிலமே அந்தப் பேரலையில் மூழ்க …

  19. இலவச அறிவிப்புகள் : அயர்லாந்து பத்திரிகை விமர்சனம் டப்ளின்: தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள இலவச திட்டங்களை அயர்லாந்து பத்திரிகை ( தி ஐரிஷ் டைம்ஸ்) கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை உலக அனைத்து வாக்குறுதிகளுக்கும் தாயாக திகழ்கிறது என்று விமர்சித்துள்ளது. மேலும் தங்கம், இலவச செல்போன், இருசக்கர வாகனத்திற்கு மானியம், என அதிமுக வாரி இறைத்துள்ளது. இந்த திட்டங்கள் போல் அயர்லாந்தில் யாராவது பார்க்க முடியுமா என்றும் கிண்டலடித்துள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1521500

  20. 234 தொகுதிகள் மெகா ரிசல்ட்!ஓவியங்கள்: ராஜா அக்னி நட்சத்திர வெயிலில் தமிழகம் தகிக்கிறதா அல்லது அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியில் தமிழகம் தவிக்கிறதா என்றால், தமிழ்நாட்டு மக்கள் இரண்டாவது கேள்வியை டிக் செய்வார்கள். ஏனென்றால், பருவகாலத் தட்பவெப்பம் மாதந்தோறும் மாறும். ஆனால், இரண்டாவது கேள்விக்கான விடையில் தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது. வின்னர் யார்... சி.எம். யார்... அடுத்து ஆளப்போவது யார்? என்று யார் எந்த மாதிரியாகக் கேட்டாலும் ஜெயலலிதாவா, கருணாநிதியா, விஜயகாந்த்தா, அன்புமணியா (பி.ஜே.பி., நாம் தமிழர் கட்சி போன்ற பிற கூட்டணிகள் தங்களது முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.) என்ற பளிச் கேள்வியே அனைவர் ம…

    • 4 replies
    • 2.1k views
  21. 'ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!' -ஆவணப்பட அதிர்ச்சி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. " ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டால…

  22. தேவாலயத்தின் பெயரால் கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கிறது இலங்கை?: மத்திய அரசு கடும் அதிருப்தி! டெல்லி: கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்க முன்திட்டமாக தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரிடம் மத்திய அரசு அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை மத்திய அரசு கடந்த 1974ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்களின் வலைகளை உலர்த்த, அங்கு நடக்கும் அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. காலப்போக்கில் தமிழக மீனவர்களை கச்சத்தீவு பக்கம் வரவிடாமல் தடுத்து வருகிறது இலங்கை கடற்படை. இந்நிலையில் கச்சத்தீவில் ரூ.1 கோடி செல…

  23. தமிழகத்தில் 100 கோடி ரூபாய் பறிமுதல் சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இது நாள் வரையி்ல 100கோடி ரூபாய் வரையி்ல் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பறக்கும் படையினர் சார்பில் 34.83 கோடியும், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் 32.64 கோடி ரூபாய், மற்றும் வருமானவரித்துறை சார்பில் 30.60 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1520845

  24. ஈரோடு அருகே வருமான வரித்துறை ரெய்டில் அதிமுக பிரமுகர் வீட்டில் 1 கோடி பறிமுதல் ஈரோடு: ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் சுமார் 1 கோடி ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரெய்டு நடத்திய அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது. ஈரோடு அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சோர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மாலை அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடு்த்து ஆத்திரமடைந்த அதிமுகவினர். ரெய்டு நடத்திய அதிகாரிகள் வாகனத்தின் மீது தாக்குல் நடத்தியதாகவும் அதை தடுக்க வந்த போலீசாரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதி…

  25. ‘கருணாநிதி’ என்ற பெயரைக் கேட்கும்போது ஜெயலலிதாவும், ‘ஜெயலலிதா’ என்ற பெயரை உச்சரிக்கும்போது கருணாநிதியும் தமிழர்களின் நினைவுக்கு வருவது தற்செயல் நிகழ்வல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழகத்தின் தலையெழுத்தை, அரசியலைத் தீர்மானிக்கும் இவர்கள், அரசியல் செய்வது, அறிவிப்பு வெளியிடுவது என எதிரெதிர் துருவங்களாகக் காட்சியளிக்கின்றனர். ஆனால், ஊழல், தனி மனிதத் துதி, குடும்ப அரசியல், சர்வாதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இருவரும் ஒருவரே. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.