தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10269 topics in this forum
-
சென்னை: இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும், ஸ்டாலினுக்கே முதல்வராக விருப்பமில்லை என்றும், தனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வராக முடியும் என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரிதும் விரும்புகின்றனர். ஸ்டாலினுக்கும் அந்த விருப்பம் இருந்தாலும், தேர்தல் களத்தில் தன்னை முதல்வராக முன்னிறுத்துவது வாக்குகளை பெற்று தருமா என்ற அச்சத்தில் அவரே முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ரொம்பவும் வலியுத்தவில்லை. கருணாநிதிக்கும் அந்த அச்சம் உள்ளது. மேலும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் …
-
- 0 replies
- 339 views
-
-
'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி! போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி. அந்த வகையில் அத்தனை தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்று, பிரசார களத்தை சூடாக்கியவர் அவர். வயது, உடல்நிலை காரணமாக கடந்த 2 தேர்தல்களில் தனது பிரசார பணியில் கொஞ்சம் சுணக்கம் காட்டினார் அவர். அந்த இரு தேர்தல்களிலும் இது தனது கடைசி தேர்தலாக இருக்கலாம் என்று 'அரசியல்' செய்தாலும், உடல்நிலையை பொறுத்தவரை அதுதான் உண்மையான நிலவரமாக இருந்தது. ஆனால் ஆச்சர்யம், அந்த தேர்தல்களையெல்லாம் கடந்து இப்போது 2016 தேர்தலில், முன்னெப்போதையும் விட உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் கருணாநிதி. வயது, உடல் நிலையை மீறி இந்த முறை அவரை உற்சாகமாக…
-
- 0 replies
- 665 views
-
-
‘ஆம்.. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம்!’- ஸ்டாலின் 'கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம். இனிமேல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று அனைத்து இடங்களிலும் நானே சொல்லி வந்திருக்கிறேன்' என்று என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் கூறினார். என்டிடிவி தொலைகாட்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், திமுகவின் திட்டங்கள், பலம் குறித்து பேசினார். நீங்கள் தவறு செய்துவிட்டதாக ஊழல் விவகாரத்தில் தொழிற்துறையினரிடம் சொன்னீர்கள். ஊழல் என்பது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டா…
-
- 0 replies
- 502 views
-
-
அ.தி.மு.கவா... தி.மு.கவா..? - புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு! Share வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்குமா?, போட்டியில் இருக்கும் கட்சிகளில் எந்த கட்சிக்கு நிறைகள் அதிகம்? குறைகள் குறைவு?, அ.தி.மு.க…
-
- 0 replies
- 719 views
-
-
’I am hero... My Villain Kalaignar... My Villie Jayalalitha..!' -விஜயகாந்தின் செம ஸ்டைல் இங்கிலீஷ் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் தொடர்பாக என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிரணாய் ராயின் கேள்விகளுக்கு சரமாரி ஆங்கிலம், நடுநடுவே தமிழ் என ஏக உற்சாகத்துடன் பதில் அளித்திருக்கிறார் விஜயகாந்த். எடுத்த எடுப்பில், "அரசியல் ஒரு சினிமா என்றால்... ஐ யம் ஹீரோ! மை வில்லன் இஸ் கலைஞர்... மை வில்லி இஸ் ஜெயலலிதா. good ah..?" என்று கேட்டு கெத்து ரியாக்ஷன் காட்டி, லைக் எதிர்பார்க்கிறார் விஜயகாந்த். அதேபோல், ’கருணாநிதி 90 அபோவ், ஜெயலலிதா 60 எபோவ், மை ஏஜ் ஐ டோன்ட் நோ. ஹார்ட் இஸ் மை ஏஜ். இட் இஸ் வெரி யங்!’ என்றெல்லாம் அமர்த்தலாக பதிலளித்திரு…
-
- 0 replies
- 433 views
-
-
திருச்செந்தூர்: சரத்குமார் காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 9 லட்சம் பணம் பறிமுதல்! திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் காரில் ரூ.9 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவையனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். Read more at: …
-
- 5 replies
- 790 views
- 1 follower
-
-
இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களைக் காப்பாற்றினேன். இலங்கை அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான் என்றும் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டது என்றும் அவர் கூறினார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 3 replies
- 795 views
-
-
தமிழக தேர்தல் பற்றி உறவுகள் எல்லாம் ஒவ்வொரு பக்கமாக விமர்சனங்களும் ஆதரவுகளும் தொடரும் இவ்வேளையில்.... ஒரு விடயத்தை பதியலாம் என நினைக்கின்றேன். ரொம்ப சுயநலமான ஈழத்தமிழன் நான். எமக்காக எவர் பேசினாலும் எமக்காக எவர் உழைத்தாலும் அவரை ஆதரிப்பதே எமது இன்றையநிலை. தேவை. எல்லோருக்கும் காலம் கொடுத்துப்பார்த்தாச்சு ஒன்றுமே நடக்கல. ஏமாற்றமும் துரோகமும் தான் மிச்சம். இந்த முறை சீமானுக்கு கொடுத்துப்பார்க்கலாம். சீமானும் ஏமாற்றினா? ஏன் இருப்பவர்களில் எவராவது திறமா? அவர்களைவிட சீமானால் ஏமாற்றமுடியுமா என்ன? இன்னும் 50 வருடம் போனாலும் அந்த திறமை சீமானுக்கு வராது. ஒன்றுமட்டும் நிச்சயம். தமிழகம் தமிழரின் கைக்கு வரணும் அல்லது இந்தியா உடையணும் இல்லாது விட்டால் ஈழத்தமிழினம் இனி ந…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 வெல்லும்: நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள் சென்னை: நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு சம வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றது. நியூஸ் 7 தொலைக்காட்சியும், தினமலர் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்புகளை மண்டலவாரியாக வெளியிட்டு வருகின்றனர். முதலில் மேற்கு மண்டல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து தெற்கு மண்டல முடிவுகள் வெளியாகின…
-
- 0 replies
- 614 views
-
-
இனி எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்: - வைகோ அதிரடி அறிவிப்பு [Friday 2016-05-06 15:00] இனி வாழ்நாளில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று வைகோ கூறினார்.ஆயிரம் விளக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் சி.அம்பிகாபதியை ஆதரித்து, மாதிரி பள்ளி பகுதியில் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது, பிரசார பேச்சை வைகோ நிறைவு செய்தபோது மதிமுக தொண்டர் ஒருவர், ""நீங்கள் முதல்வராகத் தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே'' என்று கேட்டார். அதற்கு, வைகோ அளித்த பதில்: ""அண்ணாவின் கொள்கைகளுக்காக, சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வதற்காக, மதுக் கடைகளை-ஊழலை ஒழிக்க, தமிழக மக்களைக் காக்க வாழ்கிறேன். எனக்கென சுயநலம் இல்லை. நாடு கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக பேசுகிறேன். …
-
- 1 reply
- 637 views
-
-
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரயில் திருவள்ளூர் அருகே பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் காயமடைந்தனர். இதனால் இந்த தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து, திருவனந்தபுரதிற்கு திருவனந்தபுரம் மெயில் (12623) சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பட்டாபிராம் ரயில் நிலையம் சென்று கொண்டு இருந்தது. அப்போது, மின்சார ரயில் வந்துள்ளது. இரு ரயில்களும் ஒரு ரயில் தண்டவாளத்தில் வந்ததால்,இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பயணிகளை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ச…
-
- 0 replies
- 644 views
-
-
மீம்ஸ் விஜயகாந்த் சி.எம். விஜயகாந்த் ஆவாரா? முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ் ''தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்!" - என்பது பழமொழி. இதை நம்பித்தான் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறார். ஏனென்றால் இந்த மகாபாரத யுத்தத்தில் அவர்தான் தர்மர். அப்படித்தான் சொல்கிறார்கள். விஜயகாந்தை தர்மராகவும் வைகோவை அர்ஜுனனாகவும், திருமாவளவனை பீமனாகவும், ஜி.ராமகிருஷ்ணனை நகுலனாகவும், முத்தரசனை சகாதேவனாகவும் உருவகப்படுத்திக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூடு கிளம்பியது. அடுப்புக்கு வெளியேயும் சூடு பரவியது தான் சிக்கலே! இந்தக் கூட்டணி அழகாகத்தான் ஆரம்பம் ஆனது.…
-
- 0 replies
- 1.4k views
-
-
அதிமுக தேர்தல் அறிக்கையில் சில இலவசங்கள், பல வாக்குறுதிகள் தமிழகத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மீனவர்கள் ஆகியோரின் நலன்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்படும் என்று இன்று மாலை வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. தேர்தல் அறிக்கை குறித்து பெருந்துறை பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார் “மாநிலத்தின் நீராதாரங்களை மேம்படுத்தவும் கூடுதல் நடவடிக்கள் எடுக்கப்படும், உழவர் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” எனவும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மாணவர்கள் மேலும் பயனடையும் வகையில், அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினிக்கான இணைய வசதியும் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்துகொடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலர…
-
- 1 reply
- 744 views
-
-
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இறுதிக் களத்தில் 3,794 வேட்பாளர்கள் - 339 பேர் வாபஸ் பெற்றனர் கோப்பு படம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு இறுதி நாளான நேற்று 339 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டி யிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிந்தது. இறுதி நாள் நிலவரப்படி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 6 ஆயிரத்து 352 ஆண்கள், 795 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என 7 ஆயிரத்து 151 பேர் மனு…
-
- 0 replies
- 385 views
-
-
திராவிடம் செய்த துரோகம்…… தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போதிய பணபலத்தோடும் ஊடகங்களின் உதவியுடனான பிரச்சார பலத்தோடும் பெருந்தலைவர்கள் வரும் தங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு பணங்கொடுத்து ஆட்களைத் திரட்டி சனநெரிசலை ஏற்படுத்தி, தங்களுக்கிருக்கும் ஆதரவை பிரமாண்டப்படுத்தி மக்கள்முன் காட்டுகிறார்கள். தலைவர்களைப் பார்க்கவும், கூட்டத்தில் பங்குபற்றும் சினிமாப் பிரபலங்களைப் பார்க்கவும், பணத்திற்காகவும், சாப்பாட்டுப் பார்சலுக்காகவும், கொடுக்கப்படும் பல அன்பளிப்புகளுக்காகவும் என்று, பல்வேறுபட்ட நோக்கங்களோடு சனங்கள் இந்தப் பணபலமிக்க கட்சிகளின் கூட்டங்களுக்கு முண்டியடித்துக்கொண்டு திரள்கிறார்கள். அதே வ…
-
- 0 replies
- 2.4k views
-
-
தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பேன்: ட்விட்டரில் விஜயகாந்த் தில்! சென்னை:'தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பது என் பழக்கம்.சினிமாவில் மட்டுமல்ல, நேரிலும்.' என்று ட்விட்டர் வலைத்தளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார். பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் விஜயகாந்த் தனது ஃபாலோயர்ஸூடன் உரையாடினார்.தமிழகம் முழுக்க தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல கட்டமாக வாக்குச் சேகரித்து வரும் விஜயகாந்த், முதல்முறையாக ட்விட்டரில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களில் விஜயகாந்த் மட்டுமே ட்விட்டர் பிரசாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்ததக்கது. இதற்கெ…
-
- 2 replies
- 638 views
-
-
தேர்தலுக்குப் பிறகு கட்சி என்னைத் தேடி வரும்...! -'சஸ்பென்ஸ்' அழகிரி சட்டமன்றத் தேர்தலில் எந்த வேலையும் பார்க்காமல் முடங்கிக் கிடக்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். 'தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியே என்னைத் தேடி வரும்' என அதிர வைக்கிறார் அழகிரி. தி.மு.கவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக ஒருகாலத்தில் கோலோச்சிய அழகிரி, தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராகக் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கட்சியில் அதிரடியாக நீக்கப்பட்டார். இதன்பின்னரும் தலைமைக்கு எதிரான சீண்டல்களில் ஈடுபட்டு வந்தார். 'சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்கும்', 'ஸ்டாலின் பயணம் ஒரு காமெடி' என மைக்கை நீட்டும் மீடியாக்களிடம் ஏதோ ஒன…
-
- 1 reply
- 549 views
-
-
சாணக்கியமற்ற அரசியல் போராளியா வைகோ ! அரசியலில் அவ்வப்போது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது வைகோவுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால் இம்முறை வைகோ ஒரு புரட்சியை நடத்தியிருக்கிறார். இதில் ஆடிப்போயிருப்பது. ம.தி.மு.க.வினரும் அவரது கூட்டணி கட்சிகளும் மட்டும் அல்ல. முழு தமிழக அரசியல் வட்டாரமும்தான். தமிழகத்தை பொறுத்தவரையில் கட்சித் தலைவர்கள் தமது வேட்பாளர் பட்டியலை மாற்றுவது வழமையான ஒரு விடயம். இத்தேர்தலில் கூட ஆளும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளின் தலைமைகள் தாம் முன்னர் அறிவித்த வேட்பாளர்களை மாற்றி புதிய வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஆனால் தமிழக வரலாற்றில் முதல்மு…
-
- 0 replies
- 727 views
-
-
தமிழகத்தில் புதிதாக 2.86 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்: வாக்காளர் எண்ணிக்கை 5.82 கோடியை தாண்டியது - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 பேர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 138 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலி…
-
- 0 replies
- 248 views
-
-
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை! ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் இருந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்பட 9 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது சென்னை நீதிமன்றம். கடந்த 2002 ம் ஆண்டில், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வீட்டில் புகுந்த மர்மக் கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பட்டினப்பாக்கம் காவல்துறையினர், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்ரமணியம், அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், சுந்தர் என்ற மீனாட்சி சுந்தரம், ஆனந்த் என்ற ஆனந்த…
-
- 0 replies
- 396 views
-
-
'அ.தி.மு.கவில் தா.பாண்டியன்!?' -கூட்டணியைக் குழப்பும் உளவுத்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன், அ.தி.மு.கவில் இணைவதாக வெளியாகும் தகவலால் கலவரப்படுகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். 'தேர்தல் நெருக்கத்தில் உளவுத்துறை இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதாக'வும் அவர்கள் கொந்தளிக்கின்றனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் இந்திய கம்யூனிஸ்ட்சியின் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியனின் நட்பு பற்றி அனைவரும் அறிந்ததுதான். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் தா.பாண்டியன் மகன் டேவிட் ஜவஹருக்கு பதிவாளர் பதவியில் அமர வைக்கப்பட்டார். ' மகனுக்கு வேலை வாங்கிவிட்டார் பாண்டியன்' என்றெல்லாம் அப்போது தகவல்கள் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
பா.ஜ.கவில் இணைந்தார் பவர் ஸ்டார் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அக்குபன்ஞ்சர் வைத்தியரான சீனிவாசன் சொந்த திரைப்படம் மூலம் பவர் ஸ்டார் சீனிவாசனாக சினிமாவுக்கு வந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகராக இருந்த அவர், நடிகர் ஆன பிறகு அரசியலுக்குள் நுழைய முயன்றார். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியில் சேர முயன்ற சீனிவாசன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் இருப்பதால் அந்த கட்சிகள் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. இறுதியாக பாரதிய ஜனதா கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார். அந்தக் கட்சியும் பச்சைக்கொடி காட்ட நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன…
-
- 1 reply
- 537 views
-
-
விஜயகாந்துக்கு ரூ.53.5 கோடி சொத்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் நடத்தும் அதிகாரி முகுந்தனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். படம்: டி.சிங்காரவேல் விஜயகாந்த் தனது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் மொத்த சொத்து மதிப்பு ரூ.53 கோடியே 56 லட்சத்து 86 ஆயிரத்து 351 என்று தெரிவித்துள்ளார். அதில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.14 கோடியே 29 லட்சத்து 12 ஆயிரத்து 251 என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ. 38 கோடியே 77 லட்சத்து 74 ஆயிரம் 100 என்றும் குறிப்பிட்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகள்: விஜயகாந்த் மீது மொத்தம் 30 வழக்குகள் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி…
-
- 0 replies
- 863 views
-
-
பொதுமக்களுக்கு சேவை செய்வதுதான் ஸ்டாலின் தொழிலாம்.. வேட்புமனுவில் சுவாரசியம். சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தொழில் சேவை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தனது தொழில், அரசியல் கட்சி தலைவராக இருப்பதை குறிப்பிட்டுள்ளார். இவ்விரு தலைவர்களும், முறையே, கொளத்தூர் மற்றும் காட்டுமன்னார்கோயில் தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். நேற்று இவர்கள் இருவரும், வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஸ்டாலின், சமூக சேவை செய்வதை தன் தொழிலாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் கட்சி தலைவராக இருப்பதை தொழிலாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டாலின் தனது மனைவி தொழில் நிறுவன இயக்குனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 511 views
-
-
'அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை!' -மிரட்டிய விஜயகாந்த் Share மதுரை: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'அமைதியாக இருங்கள் அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை' என்று தொண்டர்களை எச்சரித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது, ''இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் போர்.…
-
- 8 replies
- 1.5k views
-