தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
உலக தமிழ் மாநாடு, செம்மொழி அந்தஸ்து என்ன பயன்? நீதிபதிகள் சரமாரி கேள்வி பாரம்பரியமிக்க தமிழை இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்காமல், பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், செம்மொழி தமிழ் என்று கூறிக்கொள்வதாலும் என்ன பயன் ஏற்படப்போகிறது? என்று தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்.லட்சுமிநாராயணன் என்பவர் தாக்கல் செய்தார். அதில், ‘இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ரூ.50 முதல் ரூ.200 வரை வசூலித்து தொலைதூர இந்தி மொழிப் படிப்பை சொல்லிக் கொடுக்கிறது. அதுபோல, தமிழ் தெரியாத பிற மாநில மக்களுக்கும், வெளிநாட்டவருக்கும்…
-
- 3 replies
- 798 views
- 1 follower
-
-
'அரசியல் உலகை விட்டுப் போகிறேன்':தமிழருவி மணியன் உருக்கம்! சென்னை: அரசியலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து,காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அரசியல் உலகைவிட்டும் பொதுவாழ்வை விட்டும் போகிறேன் என்றும் தெரிவித்து உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம், சங்கீத மொழி பேசி சலசலத்து ஓடுவதற்குத் தண்ணீரின்றிக் காய்ந்து கிடக்கும் ஓடை, இலைகள் உதிர்ந்து கிளைகளோடு மட்டும் காட்சிதரும் ஒற்றை மரம் ஆகியவற்றைப் போன்றதுதான் என் அரசியல் வாழ்வும். உண்மை பேசினால் உயரமுடியாது என்று உணர்ந்த பின்பும், பொய்யை விலை பேசி விற்பவருக்குத் தான் பதவியும் …
-
- 0 replies
- 672 views
-
-
ஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் இரு இலங்கையர் உட்பட நால்வர் இந்தியாவில் கைது அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச்செல்ல பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் இலங்கை அகதி உட்பட நான்கு பேரை இந்தியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் நால்வரையும் தமிழ்நாடு கோயம்புத்தூர் பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொத்தூர் அகதி முகாமைச் சேர்ந்த எடிசன் எலியஸ் ராஜா ( 48), இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த விமலன் (31), தமிழ்நாடு வலசரவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் பெட்ரிக் (27) நேசப்பாக்கம் சென்னையைச் சேர்ந்த விஜிதா (34) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 281 views
-
-
மோடிக்கு ஜெ. எழுதும் கடிதங்கள் எல்லாம் குப்பைதொட்டிக்கே.! பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்குத்தான் செல்கின்றன என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் தெரியபடுத்தி அது தொடர்பில் தீர்வு காணவேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றமை வழமையான விடயம். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆனால், அவரது எண்ணப்படி அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பைக்குதான் செல்கின்றன. …
-
- 0 replies
- 550 views
-
-
நச்சு கலப்பு? தமிழகத்தில் விற்பனையாகும் 'பிரெட்'டிலும் மாவட்டம் தோறும் மாதிரி ஆய்வு நடத்த முடிவு டில்லியில் நடத்திய ஆய்வில், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 'தமிழகத்திலும், உணவு பாதுகாப்புத்துறை இது குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும்' என, நுகர்வோர் அமைப்புக்கள் வலியுறுத்தி உள்ளன. டில்லியில் விற்பனையாகும், 'பிராண்டட்' வகை, 'பிரெட்'களை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் ஆய்வு செய்ததில், புற்றுநோயை உருவாக்க அதிகம் வாய்ப்புள்ள, 'பொட்டாசியம் புரோமேட்' என்ற, ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு வேதிப்பொருளான பொட்டாசியம் அயோடேட், தைராய்டு பிரச்னையை ஏற்படுத்தும் என, தெரிய வந்துள்ளத…
-
- 0 replies
- 574 views
-
-
6வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார் ..! (படங்கள்) 6வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. சென்னையில் கடந்த 20ம் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அ…
-
- 1 reply
- 791 views
-
-
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் : தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் துவங்கியது. சென்னை அண்ணா பல்கலை, மதுரை, சேலம், ஆத்தூர் தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்து வாக்குகளும் எண்ணும் பணி துவங்க உள்ளது. சென்னையில் 16 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் 9,621 பணியாளர்கள…
-
- 161 replies
- 24.4k views
- 1 follower
-
-
'இனி மக்கள் நலக் கூட்டணி வேண்டாம்!' -கேப்டனை மடைமாற்றும் தொண்டர்கள் சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை. 'உள்ளாட்சித் தேர்தலில் கௌரவ வெற்றி கிடைக்காவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்' எனக் கட்சிக் கூட்டத்தில் வேதனைப்பட்டிருக்கிறார் அவர். தே.மு.தி.க.வைத் தொடங்கிய நாள்முதலாக சந்தித்து வரும் தேர்தல்களிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது இந்த சட்டமன்றத் தேர்தலில்தான். அதிலும், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வாங்கிய வாக்குகளும், கிடைத்த மூன்றாவது இடமும் தே.மு.தி.க தலைமையை அதிர வைத்தன. தேர்தல் முடிவில் அதிலும், கட்சியின் வாக்கு சதவீதம் இரண்டரை சதவீதம் அளவுக்குக் குறைந்…
-
- 0 replies
- 638 views
-
-
'ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?' -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. 'நிகழ்ச்சியின் நோக்கம் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்' என வேதனைப்படுகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவனால் எழுதப்பட்ட, 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இனி என்ன செய்யலாம்?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடக்க இருக்கிறது. இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி,கெளதமன், காசி …
-
- 12 replies
- 3.2k views
- 1 follower
-
-
500 டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அரசுக்கு எவ்வளவு இழப்பு? சென்னை: 6 வது முறையாகத் தமிழக முதல்வர் பொறுப்பில் ஜெயலலிதா அமர்ந்தவுடன்,தேர்தல் நேரத்தில் அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணியைத் தொடங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தில் 2 மணி நேரத்தைக் குறைக்கவும், மொத்தமுள்ள 6826 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகளை மூடவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் இலவசத் திட்டங்களுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானமே ஆதாரமாக இருக்கிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில்,500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் தமிழக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது…
-
- 5 replies
- 1.4k views
-
-
முன்வரிசையில் சரத்... பின்வரிசையில் ஸ்டாலின்: ஜெ. பதவியேற்பு விழாவில் அவமதித்ததாக கருணாநிதி குற்றச்சாட்டு திமுக தலைவர் கருணாநிதி. | படம்: ஜே.மனோகரன். முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழா நடந்தது. அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக…
-
- 7 replies
- 912 views
-
-
கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெ,. -பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெயலலிதா. அவர் செல்லும் வழியெங்கும் கட்அவுட், பேனர்கள் இல்லாமல் சாலைகள் மவுனமாக இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள். அ.தி.மு.க ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் உருவாவதற்கு பெரிதும் காரணமாக இருந்தது வரைமுறையின்றி வைக்கப்பட்ட கட் அவுட்டுகள்தான். தேர்தல் முடிவில் சென்னையின் பெரும்பாலான தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அ.தி.மு.கவின் தோல்விக்கு மழைவெள்ளம் உருவாக்கிய சேதம் பிரதான காரணமாக இருந்தாலும், மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்குக் கெட்ட பெயரை உருவாக்கிக் கொடுத்தது பேனர் கலாச்சாரம்…
-
- 4 replies
- 455 views
-
-
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் ஸ்டாலின்! சட்டமன்ற திமுக குழுத் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 89 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற திமுக குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற திமுக குழுத் துணைத் தலைவராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானார். மேலும், திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணை கொறடாவாக பிச…
-
- 0 replies
- 422 views
-
-
அரவக்குறிச்சி வேட்பாளர் மீது, காய்ச்சிய எண்ணெயை.... ஊற்றிய மனைவி. கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் வேட்பாளர் ராஜேஷ்குமார் மீது அவரது மனைவி காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள அரங்கப்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்குமார், பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சி சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலை சேர்ந்த ரேவதியை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராற…
-
- 0 replies
- 444 views
-
-
ஜெயலலிதா வெற்றி... திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா! (வீடியோ) திருமலை: அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார். பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்.அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார். இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி சென…
-
- 0 replies
- 629 views
-
-
500 டாஸ்மாக் கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி..! ஜெயலலிதா முதல் நாள் அதிரடி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார். முதலமைச்சர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலமை…
-
- 0 replies
- 401 views
-
-
ஜெ. பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு. சென்னை: ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் சட்டசபை திமுக எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன், சென்னை மேயர்ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர். கடந்தமுறை அவர் முதல்வரானபோது மேயராக இருந்த ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதைஸ்டாலினே நிருபர்களிடம் சுட்டிக் காட்டியிருந்தார். இந் நிலையில் இம்முறை பதவியேற்பு விழாவுக்கு அவருக்கு அரசின் சார்பில் முறைப்படி அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முக்கியப் பிரமுகர்கள் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்த ஸ்டாலினும் அன்பழகனும் யாருடனும் பேசவில்லை. ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்து வரும் ப.சிதம்பரத்தின் கட்சியில் உள்ள அவரது தீவிரம…
-
- 1 reply
- 470 views
-
-
நான் எதிர்பார்த்த தோல்விதான் இது..! வைகோ தடாலடி 'தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை எதிர்பார்த்து அதை முழுமையாக எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன்' என மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மக்கள் நலக்கூட்டணியின் தோல்வியை எதிர்பார்த்தேன். பிரசாரத்தின் கடைசி 3 நாட்களில் சில மாற்றங்கள் தென்பட்டன. பிரசாரத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த எழுச்சி, ஆர்வம் போன்றவை வாக்காளர்கள் மத்தியில் குறைந்து காணப்பட்டது. நான் கடந்த 1964ம் ஆண்டில் இருந்து பல்வேறு தேர்தல்களை சந்தித்து வருகிறேன். மக்கள் மனநிலையை என்னால் அறிய முடியும். அப்போதே எங்கள் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 446 views
-
-
சத்துணவுத் திட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... ஜெயலலிதாவின் அரசியல் பயணம்! தமிழக சட்டமன்ற தேர்தலில், 134 இடங்களை பிடித்து 6 வது முறையாக அரியணை ஏறுகிறார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தை ஆளும் பெருமையையும் எம்.ஜி.ஆருக்குப்பிறகு அவர் பெற்றிருக்கிறார். 1984 தேர்தலில் அவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் இச்சாதனையை நிகழ்த்தினார். துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு தலைவர்களுக்கும் அன்றும் இன்றும் ஒரே போட்டியாளர் கருணாநிதி. திரைப்பட நடிகையாக தன் வாழ்க்கையை துவக்கிய ஜெயலலிதா, பின்னாளில் தமிழக முதல்வராகவும் இந்திய அளவில் அசைக்க முடியாத ஒரு அரசியல்வாதியாகவும் உருவெடுப்பார் என அந்த காலத்தில் அவரிடமே யாராவது சொல்லியிருந்தால் பலமாக சிரித்திருப்பார். ஆனால் அதுதான் …
-
- 0 replies
- 1.5k views
-
-
சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு வெறும் 24,383 ஓட்டு வித்தியாசத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக கிடைத்துள்ளனர். அக்கட்சி ஆட்சி அமைக்க இதுவே முக்கிய காரணமாக இருந்துள்ளது. அந்த தொகுதிகள் இவை தான்: 1) ராதாபுரம் - 49 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி. 2) கோவில்பட்டி - 428 3) கரூர் - 441 4) தென்காசி - 462 5) ஒட்டப்பிடாரம் - 493 6) பெரம்பூர் - 579 7) திருப்போரூர் - 950 8) பர்கூர் - 963 9) பேராவூரணி - 964 10) கிணத்துக்கடவு - 1332 11) ஆவடி - 1395 12) அரியலூர் - 1753 13) சிதம்பரம் - 1945 14) மொடக்குறிச்சி - 2222 15) விருகம்பாக்கம் - 2333 16) ஊத்தாங்கரை - 2613 17) கெங்கவள்ளி - 2622 18) அறந்தாங்கி - 2837 http://www.dinamalar.…
-
- 0 replies
- 443 views
-
-
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; ஓ.பன்னீர் செல்வம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட 29 பேருக்கு பதவி! சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அமைச்சரவை பட்டியல் 01. முதலமைச்சர் - ஜெயலலிதா - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை 02. நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம் 03. வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன் 04. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை 05. செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை 06. தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை 07. வேலுமணி - உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் 08. ஜெய…
-
- 1 reply
- 736 views
-
-
ஜெயா டிவியை ஒளிபரப்பும் அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை! நாகர்கோவில்: தமிழக அரசின் சாதனைகளை விளக்குவதற்காக தொடங்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் திரை வாகனத்தில், ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின்போது ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் பொருட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நவீன வசதிகள் கொண்ட டிஜிட்டல் திரை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு நகரம், கிராமங்களில் அரசின் சாதனைகள் குறித்து டிஜிட்டல் காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவை ஒளிபரப்பு…
-
- 1 reply
- 554 views
-
-
மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்தது திமுக சென்னை; மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ. நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல், ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 24 ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர்களாக யார் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி…
-
- 0 replies
- 444 views
-
-
ராஜீவ் படுகொலை: பதற வைக்கும் 10 மர்மங்கள் -அதிர வைக்குமா ஆவணப்படம்? ' ராஜீவ் காந்தி படுகொலையின் நேரடி சாட்சியான 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்' என விகடன்.காம் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அவர் 'உயிரோடு இருக்க வாய்ப்பில்லை' என மறுப்பு தெரிவித்து பலரும் கருத்துக்களைப் பதிவிட்டனர். இதையே, ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மற்றும் தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று காலையில், ஈரோட்டில் வைத்து ராஜீவ் படுகொலை தொடர்பான மர்மங்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது ஆவணப்படக் குழு. ராஜீவ் காந்தி படுகொலையின் மர்மங்கள் குறித்து 'பைபாஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்ற…
-
- 0 replies
- 590 views
-
-
தேர்தல் ஒத்திவைப்பு... உயர் நீதிமன்றத்தை நாடியது தி.மு.க.! சென்னை: தமிழகத்தில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாலும், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளின் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்த இரண்டு தொகுதிகளிலும் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அதனை எதிர்த்து பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்க…
-
- 0 replies
- 460 views
-