Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னையில் நதிகள் என்ற பெயரில் இரண்டு சாக்கடை ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பெய்த மழையால் அடையாற்றை கண்டு சைதாப்பேட்டை அரண்டு போனதென்றால், மறுபுறத்தில் கூவத்தின் வேகம் அமைந்தகரை,சிந்தாதரிப்பேட்டையை மிரட்டி எடுத்தது. சென்னையின் மக்கள் பெருக்கம் கூவம் என்ற நதியை கழிவுநீர் சுமந்து செல்லும் ஆறாக மாற்றி விட்டது. ஆனால் இந்த நதிக் கென்று பெருமை மிக்க வரலாறு உண்டு. நதிகள் என்பது அந்த பகுதி மக்களின் வாழ்க்கையுடன் பிண்ணி பிணைந்தவை. காவேரி இல்லாத டெல்டா மாவட்டங்களை யோசித்து பார்க்க முடியாது. தாமிரபரணி இல்லாத நெல்லை சீமை கிடையாது. நதிகளின் ஓட்டத்துடன்தான் அந்த அந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறை செழுமையுடன் அமைந்திருந்தது. ஆற்றையொட்டி கோவில்கள் எழுந்தன.…

  2. இப்படித்தான் வந்தது வெள்ளம்.. ஒவ்வொரு சென்னைவாசியும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ Wednesday, December 9, 2015, 17:28 [IST] சென்னை: இன்னும் கூட அந்த படபடப்பு மாறாமல்தான் உள்ளனர் ஒவ்வொரு சென்னைவாசியும். அப்படி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது சென்னையையும், அதன் சுற்றுப் பகுதிகளையும் புரட்டிப் போட்ட பெரு வெள்ளம். இப்படிப்பட்ட வெள்ளத்திற்கு என்ன காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு ஏன் இப்படி ஒரு பேயாட்டம் போட்டது மழை என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதில் அலை மோதியபடி, மீண்டும் அப்படி ஒரு வெள்ளம் வருமா என்ற அச்சத்தில் தவித்துப் போய் உள்ளனர் சென்னை மக்கள். இந்த நிலையில் இந்த வீடியோ கண்ணில் பட்டது.. ஒவ்வொரு சென்னைவாசியும் பார்க்க வேண்டிய வீடியோ இது.. பாருங்கள் Re…

  3. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (07-12-15) பார்வையிட்டு, அவர்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். அரிசி, ரொட்டி, போர்வை உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினர். அங்குச் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, அரைநூற்றாண்டு காலமாகத் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் இலட்சணத்தை மழை இப்போது வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. செ…

  4. டி.எல்.எஃப். ஐ.டி. வளாகத்தில் என்ன நடக்கிறது? - மறைக்கப்படும் மர்மம்! சென்னையை புரட்டிப் போட்டிருக்கும் பெருவெள்ளம் கண்ணாடி மாளிகைகளாக காட்சியளித்துக் கொண்டிருந்த ஐ.டி. கம்பெனிகளையும் விட்டு வைக்கவில்லை. சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கும் போரூர் சிக்னலுக்கும் நடுவே அமைந்திருக்கிறது டி.எல்.எஃப். ஐ.டி. பார்க். புறநகரில் பெய்து முடித்த மழையின் பெரும்பகுதி, டி.எல்.எஃப்.பின் சரிபாதியை மூழ்கடித்துள்ளது. புஃட் கோர்ட், கேன்டீன், இணைய வழி நிறுவனங்கள்... குறிப்பாக நூற்றுக்கணக்கான கால் சென்டர்கள் என்று தரை தளத்தில் இயங்குகின்றன. ஐநூறை தாண்டிய ஐ.டி.நிறுவனங்கள் மிச்சமிருக்கும் 7 மாடியிலும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வரையில் பாதுகாப்பாகத்தான் இயங்கிக் …

  5. கழிவு நீர், கரன்ட் கட், கெடுபிடி! - பழிவாங்கப்படுகிறாரா கமல்?! கமலின், ’என் வரிப்பணம் என்ன ஆச்சு?’ என்ற அறிக்கைக்கும் ‘களத்தில் இறங்கி வேலை செய்யும் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள்!’ என்ற அறிக்கைக்கும் இடையில் என்ன நடந்தது? என்ன நடந்ததோ தெரியவில்லை... ஆனால், கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் அருகே சில வேலைகள் நடக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. மழை வெள்ளம் காரணமாக சென்னையே பாதிக்கப்பட்டு நிவாரண, மீட்புப் பணிகள் நடைபெற்றன. ஆனால், கமல் அலுவலகம் அமைந்திருக்கும் எல்டாம்ஸ் ரோடு பகுதி மட்டும் கடந்த ஒருவார காலமாக அரசாங்கத்தால் கைவிட்டப்பட்ட பகுதியாக இருந்தது. காரணம், என்னவென்று தெரியவில்லை. ஆனால், அந்த காலகட்டத்தில்தான் கமலின் ‘வரி…

    • 8 replies
    • 1.4k views
  6. 'அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும்...!'- சத்தியம் வாங்கி நிவாரணம் வழங்கும் அ.தி.மு.க.வினர் அராஜகம்! கடலூர்: 'அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடணும்!' என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அ.தி.மு.க.வினர் அராஜக போக்குடன் நிவாரணம் வழங்குவதால், கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் ஆல்பேட்டையில், சேட்டு நகர், சேகர் நகர், முத்தையா நகர் போன்ற பல பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், வெள்ள நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-பாண்டி சாலையில் வெகு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து…

  7. அக்டோபரில் சூடேறி கன மழை தந்த தமிழக கடல் பகுதி: காரணம், எல் நினோ! Wednesday, December 9, 2015, 11:01 [IST] சென்னையில் பெய்த கன மழைக்கும் எல் நினோவுக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், நேரடியாக எல் நினோ தாக்கம் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் வானிலையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை எல் நினோவின் பாதிப்பு மேலும் அதிகரித்துவிட்டதாக நாஸா தெரிவித்துள்ளது. அது என்ன எல் நினோ: பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niண்o-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழி…

  8. காத்திருக்கும் கப்பல்... கைகள் கட்டப்பட்ட சென்னை மேயர்! - 'ரண' களமாகும் நிவா'ரணம்'! சென்னை மீது இரக்கம் கொண்டு மழையே வெறித்துவிட்டது. ஆனால், அரசு இயந்திரத்துக்கு அந்த இரக்கம் ஏனோ தோன்றவில்லை. சென்னை ரிப்பன் மாளிகையில் குவிந்து கிடக்கும் வெள்ள நிவாரணத்துக்கான உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் ஏக குழப்பம் நிலவுகிறதாம். ஒருபுறம், சென்னை துறைமுகத்தில் மக்களின் தேவைக்கான பொருட்களுடன் மூன்று பிரமாண்ட போர்க்கப்பல்கள் ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் வந்து இறங்கியிருக்கிறது. ஆனால், போதுமான ஆட்கள் இல்லாததால் கப்பல்களில் வந்த பொருட்களை இன்னும் முழுமையாக இறக்காமலே இருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கும் மேல் காத்திருந்த பிறகே, இர…

  9. சென்னை, சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்ததற்கான காரணம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. வரலாறு காணாத மழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழைப்பொழிவை பெறுகிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 44 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால் இதுவரை சுமார் 65 செ.மீ. மழை பெய்து உள்ளது. சென்னை மாவட்டத்தில் இந்த பருவ காலத்தில் 79 செ.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 158 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 1-ந்தேதி ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு 49 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத மழை அளவாகும். அதற்கு 2 நாட்கள் கழித்து 4-ந்தேதி 40 செ.மீ. மழை பதிவானது. இதுவும் ஒரு சாதனை எ…

  10. நிவாரண உதவி செய்பவர்கள் மீது தாக்குதலா?: தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு! சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும்,வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்தும் தமிழக அரசு 3 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருமழை பேரிடரிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு உதவவும், நிவாரண பொருட்களை வழங்கவும் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை கொண்ட குழுக்களை தமிழகம் முழுவதும் அமைக்கக் கோரி, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(திங்கள்) வழக்குத் தொடர்ந்தார். …

  11. மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்... குலைநடுங்க வைக்கும் பி.பி.சி. லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்.. மழையளவு 50 செ.மீ. இருக்கும் என்றது... இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, நீங்க போய் பி.பி.சி.காரங்ககிட்ட கேளுங்க என்று எகத்தாளமாக பேசினார்... BBC Weather Verifizierter Account ‏@bbcwe…

  12. இலங்கை கடலில் மிதப்பது இந்தியர்களின் சடலங்களா? இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களையடுத்து அந்நாட்டு கடற்படை அப்பகுதியில் திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் தேடுதலில் ஈடுபட்டுள்ளது. இந்த சடலங்கள் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ள இராமேஸ்வரம் மீனவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. திருகோணமலை கடலில் 10 மைல்களுக்கு அப்பால் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக உள்ளுர் மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸார…

  13. தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம் நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம், மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம் என்று உருக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அல்ல. மின் அ…

  14. உணவு பாக்கெட்டுகளில் பங்கு கேட்டு அதிமுகவினர் அடாவடி: தீயாக பரவும் வீடியோ- இவர்களை என்ன செய்யலாம்? சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றில் மக்களுக்கு அளிக்க தன்னார்வலர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களில் 2 ஆயிரம் பொட்டலங்களை கேட்டு அதிமுக கவுன்சிலரின் கணவர் செய்யும் அடாவடி காட்சி அடங்கிய வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு பிரபலங்களும், தொண்டு நிறுவனங்களும், கல்லூரி மாணவர்களும், தன்னார்வலர்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். அதிமுக அரசு எதையுமே செய்யவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் வீடி…

    • 1 reply
    • 735 views
  15. ஜெயலலிதா கலந்து கொள்ள இயலாததால் 4 அமைச்சர்கள் இல்ல திருமணம் ரத்து! சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சர்களான வைத்திலிங்கம், காமராஜ், முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சண்முகநாதன் ஆகிய நால்வரும், தங்களின் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி வைக்க ஜெயலலிதாவிடம் தேதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து முதல்வர் அமைச்சர்களின் இல்ல திருமணங்களில் பங்கேற்பதாகக் கூறி டிசம்பர் 6 ம் தேதியை முகூர்த்த நாளாகவும் நிர்ணயித்து,திருமண ஏற்பாடுகளை நடத்த அனுமதியளித்துள்ளார்.இதனையடுத்து திருமண வேலைகள் தடபுடலாக நடந்து வந்தது. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்க…

  16. வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு சென்னையில் சூழ்ந்த மழை மேகங்கள். | படம்: வீ.கணேசன் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிதீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் மட்டுமே வங்கக்கடலில் உருவானது. இதனால், குறைவான மழையே தமிழகத்துக்கு கிடைத்தது. ஆனால், இந…

  17. விக்கிரமன் கடந்த 1-ம் தேதி பிரபல எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் பிரீசர் பாக்ஸ் கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4-ம் தேதி மதியம் எரியூட்டப்பட்டது. ‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘ராஜராஜன் சபதம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவர் பிரபல எழுத்தாளர் விக்கிரமன். ‘அமுதசுரபி’ மாத இதழின் முன் னாள் ஆசிரியரான இவர், கடந்த 1-ம்தேதி மதியம் தனது 88 வயதில் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் காலமானார். கழுத் தளவு தண்ணீர் சூழ்ந்த சென்னை - மாம்பலத்தில் இருந்த இவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் விக்கிரமனின் மீது அன்புகொ…

  18. சென்னையில் அதிகாலை முதல் மீண்டும் கச்சேரியை தொடங்கிய மழை: மீட்புப்பணிகள் முடங்கும் அபாயம் சென்னை: சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தேங்கியுள்ள வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை எப்போது திரும்புமோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் சென்னைவாசிகள். சென்னையில் காலை 6 மணியளவில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பகுதிகளில் கனமழை பெய்தது. எழும்பூர், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி ,பட்டினப்பாக்கத்தில் மழை கொட்டுகிறது புறநகரிலும் மழை பெய்வதால் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சூளைமேடு, தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், மந்தைவெளி, புழுதிவாக்கம், மேடவா…

  19. சென்னையை மீட்கும் ரியல் ஹீரோக்கள்! இப்படியெல்லாம் மழை பெய்யும் என கனவுல கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் தமிழக மக்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை கபளீகரம் செய்து விட்டது இப்பெருமழை. உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீரின்றி, அழும் குழந்தைக்கு பால் வாங்க முடியாமல், ஈரமான துணியுடன் உயிரை கையில் பிடித்து யாராவது காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கிகொண்டிருந்த மக்களுக்கு இத்தகைய மோசமான சூழ்நிலையில் உடனடி உதவி செய்து, பல மக்களை மீட்டெடுத்து, சென்னையின் அவலங்களை உலகறியச் செய்து பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் பலர். அரசாங்க நிர்வாகம் ஸ்தம்பித்து எந்த இடத்தில் எந்த மக்களை காப்பாற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும், என்னென்ன உதவிகள…

  20. ஸ்டிக்கர் ஒட்டுவதும் கமலுக்குப் பதில் சொல்வதுதான் அரசின் கடமையா? - மருதன் “சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மக்கள் சகஜமாகத் தங்கள் பணிகளை மேற்கொள்ள தொடங்கி விட்டனர். சாலைகள் துடைத்து வைத்ததைப் போல் பளிச்சென்று இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சி பெருமளவில் எதிர்கொண்டு சமாளித்துவிட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான நிவாரண உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சீர்மிகு செயல்பாடுகளால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்“ - கதவை நன்றாக மூடிவிட்டு, கட்டிலில் படுத்துக்கொண்டு வேளாவேளைக்கு ஃபில்டர் காபியும் மசாலா தேநீரும் பரு…

  21. எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.சென்னை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், 'மக்கள் வரிப்பணம் எங்கே போனது?' என கேள்வி எழுப்பியிருந்த நிலையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால…

  22. போட்டோஷாப்: மானம் கப்பல் ஏறிய பிறகு மன்னிப்பு கேட்கும் மத்திய அரசு டெல்லி: பிரதமர் மோடி சென்னையில் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டோஷாப் செய்ததற்கு மத்திய அரசு மன்னிப்பு கோரியுள்ளது. வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதன் பிறகு மத்திய அரசின் ஊடகப் பிரிவான பி.ஐ.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிடும் புகைப்படத்தை வெளியிட்டது. புகைப்படத்தை வெளியிட்ட வேகத்தில் அது போட்டோஷாப் செய்யப்பட்டதை கண்டுபிடித்த மக்கள் பி.ஐ.பி.ஐ விளாசித் தள்ளினர். அதன் பிறகே பி.ஐ.பி. உண்மையான புகைப…

  23. மழை வெள்ளத்தினால் சென்னை தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி! [Saturday 2015-12-05 09:00] சென்னை மணப்பாக்கத்தில் அடையாற்றின் கரையோரம் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில், பெரும் வெள்ளம் காரணமாக மின்தடை ஏற்பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால்,அங்கு சிகிச்சை பெற்று வந்த 18 நோயாளிகள் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களில் 14 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது; உயிரிழந்த எஞ்சிய 4 பேரின் உடல்களை அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக கடந்த செவ்வாய்க்க…

  24. 100 ஆண்டு பார்த்திராத சோகம்! நாட்டின் நான்காவது பெரிய நகரமான சென்னை, தன்னைவிட 3 பெரிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவைவிட பாதுகாப்பான நகரம் என பெயர் பெற்றிருந்தது. மும்பை, ஒடிசா, ஆந்திராவில் வெள்ளப் பாதிப்புகள் குறித்த செய்தி வரும்போதெல்லாம் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என சென்னை மக்கள் பெருமிதப்பட்டனர். இந்த வட கிழக்குப் பருவமழை அந்தப் பெருமிதத்தைச் சிதைத்துவிட்டது. 100 ஆண்டு சாதனையை முறியடித்த மழை! கடந்த 100 ஆண்டுகளில் சென்னை சந்தித்திராத மழை என்கின்றன புள்ளிவிவரங்கள். ‘வரலாறு காணாத மழை’ என்ற வாக்கியத்தை உண்மையாக்கி உள்ளது சென்னையில் இந்த மாதத்தில் கொட்டிய மழை. கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில…

  25. 'தூக்கிட்டுப் போயிருங்க... இங்கே இருந்தா செத்துருவேன்!' - என்னதான் நடந்தது மியாட் மருத்துவமனையில்? உலகதரச்சான்று பெற்ற மருத்துவமனை என்று பெயர் பெற்று இருந்த மியாட் மருத்துவமனையின் அவல முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது கொட்டித் தீர்த்த கனமழை. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுமார் 18 பேர் (20 முதல் 25 வரை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது) முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மரணமடைந்திருக்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்தான் இத்தனை உயிர்கள் பலியாகக் காரணம் என்கின்றனர் இறந்தவர்களின் உறவினர்கள். சென்னையில் கனமழை, வரலாறு காணாத வெள்ளம்... மக்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.