Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆர்.மணி மூத்த பத்திரிகையாளர் படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஸ்டாலின்-ராகுல் (இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் ) …

  2. புதிதாக உருவான கட்சிக்கு இது பெரிய சாதனைதான் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: "14 மாதங்களே ஆன குழந்தையை எழுந்து மக்கள் ஓட விடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை நம்பி நேர்மையாக மக்கள் வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்களுக்கும், எங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நான் வெற்றி வேட்பாளர்களாகவே பார்க்கிறேன். இவர்களுக்கு அற்புதமான ஒத்திகையையும், வரவேற்பையும் தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம் . எல்லோரும் எங்களை கொக்க…

  3. உள்ளாட்சித் தேர்தல்: கட்சிகள் கைப்பற்றிய இடங்கள்! மின்னம்பலம் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது மூன்றாவது நாளாக இன்னும் சில இடங்களில் நடைபெற்றுவருகிறது. தேர்தலில் ஆளும் அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் முழுமையான முடிவுகள் வெளிவராத நிலையில் இன்று (ஜனவரி 4) காலை 6.30 மணி நிலவரம் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். மாவட்டக் கவுன்சிலர் பதவியிடங்களில் மொத்தமுள்ள 515 இடங்களில் 454 இடங்களுக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திமுக கூட்டணி 241 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 211 இடங்களில் வென்றுள்ளது. கட்சிகள் அடிப்படையில் திமுக 217 இட…

  4. இன்னும் எத்தனை நாடகங்கள்? ப.திருமாவேலன்படம்: பா.காளிமுத்து, ஓவியம்: கார்த்திகேயன் மேடி ஒரே ‘அரிச்சந்திர மயான காண்டம்’ நாடகத்தை, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி நடித்துக் காட்டுவதைக் காணச் சகிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் அரசியல் நடத்த ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. போயும் போயும் சாவிலுமா தனது சதிகார அரசியலைப் பாய்ச்ச வேண்டும்? ஈழத் தமிழர் விவகாரத்தில் இனப்பற்றுடன் சில முழக்கங்களை கருணாநிதி எழுப்பினால், உடனே ஜெயலலிதாவுக்கு நாட்டுப் பற்று பொங்கி வழியும். ‘தேசத் தாயாக’ தன்னை உருவகப்படுத்திக் கொள்வார். கருணாநிதி தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பதுங்க ஆரம்பித்தால், ஜெயலலிதா ‘தனி நாடு’ எனப் பாய ஆரம்பிப்பார். நளினியின் தண்டனைய…

  5. தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்! 4 Jul 2025, 4:17 PM தமிழக வெற்றிக் கழக மாநிலச் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், சென்னை பனையூரில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு காவல் நிலைய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1. பரந்தூர் விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத தமிழக அரசுக்குக் கடும் கண்டனம்: வாழ்வாதாரங்களாக விளங்கும் விவசாய நிலங்கள், மக்கள் வாழும் வீடுகள், இயற்கை நீர்நிலைகளை அழித்து உருவாக்கப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருடக் கணக்கில் போராடும் விவசாயிகளின் கோரிக்…

  6. தலைநகர் சென்னையை ஏன் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர வைத்த செய்தி சுவாதி கொலை சம்பவம். காலை நேரத்தில் பயணிகள் கூடியிருந்த ரயில் நிலையத்தில் அனைவரும் பார்க்கும்படி ஓர் இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞன் யார் என்ற செய்திதான் அனைத்து ஊடகங்களிலும் கடந்த 24-ம் தேதி முதல் செய்தியாக இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. கொலையாளி நெல்லை மாவட்டம் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) எனத் தெரியவந்துள்ளது. சுவாதி வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், படுகொலை ஏற்படுத்திய பேரதிர்ச்சி முதல் இதுவரை நடந்த சம்பவங்களின் சிறு தொகுப்பு: 1. ஜூன் 24 காலை 6.35 மணி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடை மேடையில் நின்றிருந…

    • 0 replies
    • 570 views
  7. உறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்? மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளலாகின்றன சென்னையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும். ஊரடங்கு எனும் சொல்லுக்குப் பின் மக்கள் கொடுக்கும் விலை என்னவென்பதை மிகச் சுலபமாக எண்ணிவிடுகிறதோ அரசு என்கிற கேள்வியே பிரதானமாக எழுகிறது. கிருமித் தொற்றைக் குறைப்பதற்கான தவிர்க்க முடியாத வியூகம் என்று அரசு இதற்கான காரணத்தைச் சொல்லுமானால், முன்னதாக அமலாக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் அரசு இயந்திரம் சாதித்தது என்ன என்ற பதில் கேள்வி தவிர்க்கவே முடியாதது. சென்னையில் முந்தைய ஊரடங்குக்குப் பிறகு, மே 25 முதலாகவே தொழிற்பேட்டைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஜூன் 1 முதலாகக் கடைகளைத்…

  8. தூய்மையான மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம் சிக்கிம் மாநிலம் | படம்: ரிது ராஜ் கோன்வார். நாட்டிலேயே தூய்மை மிகுந்த மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 39.2% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) கணித்துள்ள தூய்மையான மாநிலங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை வெளியிட்டார். இதில் நாட்டிலேயே தூய்மையான மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. மொத்தம் 26 மாநிலங்களின் தரவரிசை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிக்கிமைத் தொடர்ந்து கேரளா இரண்டாவது இடத்த…

  9. மு.ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக வீரப்பன் தொடர்பான இரு வேறு வழக்குகளில் கைது செய்யபட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை மனித நேய அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. கோவை மத்திய சிறையில் மூவரும், மைசூர் சிறையில் நான்கு பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மற்றவர்களுக்கும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் இருப்பதால், எஞ்சியிருக்கும் காலத்தை அவர்களது குடும்பத்தினரோடு கழிக்க, மனித நேய அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என சிறைவாசிகள…

  10. ‘அமைச்சர் பதவியில்தான் இருக்கிறாரா ஓ.பி.எஸ்?!’ -கடுகடு கார்டன்; கதிகலக்கும் கோட்டை அப்போலோ மருத்துவமனையில் 62 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘முதல்வருக்கான அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தாலும், அமைச்சரவையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒருவராகத்தான் ஓ.பி.எஸ் நடத்தப்படுகிறார்’ என அதிர வைக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக, நல்லமுறையில் குணமடைந்து வருகிறார். அவர் எப்போது கார்டன் திரும்ப வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார் என அப்போலோ நிர்வாகம் அறிவித்துவிட்டது. அதற்கேற்ப, மருத்துவமனையில் தங்கியிருந்து பிஸியோதெரபி சிகிச்சை பெற்று வர…

  11. சசிகலா பக்கம் சாயும் ஓ.பி.எஸ்... எதிர்கொள்ளத் தயாராகும் இ.பி.எஸ் - அ.தி.மு.க-வில் நடப்பது என்ன? த.கதிரவன் சசிகலா - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சசிகலா விடுதலை, அ.தி.மு.க-வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், ஓ.பி.எஸ்., அண்மைக்காலமாக சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் திருப்பத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் சசிகலா விடுதலைக்கும் இன்னும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த இரண்டு செய்திகளை முன்வைத்து தமிழக அரசியல் களம் தடதடத்துக்கொண்டே இருக்கிறது. வருகிற ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாக…

  12. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்: டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி பிரத்யேக பேட்டி சுப்பிரமணியன் சுவாமி. | கோப்புப் படம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார். ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து? மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த ப…

  13. அதிமுக இனி: எம்ஜிஆர் வழியா, ஜெயலலிதா வழியா? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்துவிட்டதால், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வருவார் என்பதுதான் ஆரம்ப நாட்களில் நிலவிய சூழல். அதை உறுதிசெய்யும் வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று சசிகலாவுக்கு ஆதரவளித்தனர். ஆனால், கடந்த ஒருவார காலமாக அவர்களுடைய குரலில் ஒரு பெருமாற்றம் தெரிகிறது. பொதுச்செயலாளராக மட்டுமல்ல, நாட்டின் முதல்வராகவும் சசிகலா வர வேண்டும் என்ற குரல் கேட்கத் தொடங்கியிருக்கிறது. சட்டபூர்வமாக ஒரு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலை…

  14. சீனாவுக்கு 3 தீவுகளை தாரைவார்த்த இலங்கை; இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?: ராமதாஸ் கேள்வி 32 Views இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும், எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: “இலங்கையில் என்ன நடக்கக்கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அது கடைசியாக நடந்தே விட்டது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 3 தீவுகளை சீனாவுக்கு எழுதிக் கொடு…

  15. ஸ்ட்ரெச்சரில் ஜெயலலிதா... வழி நெடுக ரத்தம்! தொடரும் அப்போலோ மர்மங்கள் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு என்ன நடந்தது, அதற்கடுத்து அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களிலும் என்ன நடந்தது என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களில் 73 நாட்கள், அங்கேயே இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். இவர் இப்போது அதிரடியான பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கு முன்பாக, அந்த இரவில், அவருடைய வீட்டில் ஏதோ வாக்குவாதம் நடந்துள்ளது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் கீழே விழுந்துள்ளார். தூக்கிவ…

  16. பழனிச்சாமிக்கு ஓட்டளித்தது ஏன்? யதார்த்தத்தை சொன்னார் எம்.எல்.ஏ., மிகுந்த பரபரப்புக்கு இடையில், தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிச்சாமி, தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருப்பதாக, சட்டசபை சபாநாயகர் அறிவித்திருக்கிறார். இதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 பேர் ஓட்டளித்துள்ளதாகவும்; எதிர்ப்பாக 11 பேர் ஓட்டளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்திருக்கிறார். சபையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பழனிச்சாமிக்கு ஓட்டளித்தவர்களாக காட்டப்படும் எம்.எல்.ஏ.,க்களில் பாதிக்கும் அதிகமானோர், மனது மயக்கப்பட்ட நிலையில் சபைக்கு வந்து ஓட்டளித்ததாகக் …

  17. 'ஏமாற்றங்களுக்கிடையிலும் முஸ்லீம்களின் தொடரும் திராவிட ஆதரவு' களந்தை பீர்முகமதுஎழுத்தாளர் முஸ்லிம்களுக்கும் தி.மு.கழகத்திற்குமான உறவு சில தொன்மங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதுபோல தோன்றுவது. படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKARAFP/GETTY IMAGES இஸ்லாமிய விழாக்களில் பங்கேற்பு தமிழகத்து முஸ்லிம்கள் மீலாது விழாக்களைச் சிறப்புற நடத்திய காலத்தில் கழகத் தலைவர்கள் அதில் பங்கேற்று நபிகள் நாயகத்தின் புகழ்பாடியது உறவின் உரமாக அமைந்தது. திமுகவினர், கடவுள் மறுப்புக்கொள்கையாளர்கள் என்ற எண்ணம் நிலவிய காலத்தில் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை உளமாறப் போற்றினார்கள். இதர சமூகத்தினருடன் உறவு முறைக…

  18. "நான் ராஜீவ் காந்தி மகன் வந்திருக்கேன்!" - கருணாநிதியிடம் நெகிழ்ந்த ராகுல்! பொதுவாகத் தலைவர்களைப்போலவே அவர்களின் மகன்களும் நெருக்கமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், ராஜீவ் காந்தி, சோனியா காந்தியுடன் கருணாநிதிக்கு இருந்த சகோதரத்துவம், அவர்களின் மகன்களான ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் இடையே இருந்ததில்லை. அவர்களுக்கிடையே பகையுமில்லை, உறவுமில்லை என்பதான அணுகுமுறையே காணப்பட்டன. ஆனால், இவையனைத்தும் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்துக்கு முந்தைய காட்சிகளே. வைரவிழா கொண்டாட்டத்திலோ ராகுலும், ஸ்டாலினும் காட்டிய நட்பின் நெருக்கம் 'ஹாய் ரமேஷ், ஹாய் சுரேஷ்' என 'முஸ்தபா முஸ்தபா' பாடுமளவுக்குத் தீவிரமாக இருந்தது. ஸ்டாலின் என்ற…

  19. செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுக்க எடப்பாடிக்கு முழு அதிகாரம்: அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஅஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம். அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவே இறுதியானது என இன்று நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. …

  20. 'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை... அதன் விதை பயமிலாக் கேள்வி' - கமல் ட்வீட் பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, “இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்ற…

  21. அ.தி.மு.க.,வை அபகரிக்க நினைத்த, தினகரனின் கூடாரம் காலியாகிறது. ஆட்சி, அதிகாரம், கட்சி, சின்னம் என, எல்லாமே பறிபோனதால், ஆளும் தரப்பிடம் சரணடைய, அவரின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நம்பி வந்து, பதவி இழந்த, 18 எம்.எல்.ஏ.,க்களும், தங்களை நட்டாற்றில் விட்ட, சசிகலா கும்பல் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதனால், ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க, முடிவு செய்துள்ளனர். ஜெ., மறைந்த பின், அ.தி.மு.க.,வையும், ஆட்சி யையும் கைப்பற்ற, சசிகலா குடும்பத்தினர் முயற்சித்தனர். ஆனால், அவர்களால் முதல்வ ராக்கப்பட்ட பழனிசாமியும், அவர்களால் முதல்வர் பதவியை இழந்த பன்னீர் செல்வமும் கைகோர்த்து, சசி குடும்பத்தை அடியோடு ஓரங்கட்டினர். பன்னீரும், பழனிசாமியும் இணைய மாட்டார் கள…

  22. தொடரும் சசிகலாவின் மெளன விரதம்! - ஜெ., மரணம் தொடர்பான ஆணையத்தில் ஆஜராகவில்லை ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி முன்பு தீபா, தீபக் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இன்று இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது அவரை உடனிருந்து கவனித்து கொண்ட சசிகலாவுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராகமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறை…

  23. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய 4 அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொச்சியில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 4 அணைகளையும் தமிழகம் பராமரிக்கிறது. ஆனால் அந்த அணைகளை தமிழகம் உரிமை கோர முடியாது. 4 அணைகளும் கேரளாவுக்கே சொந்தம். இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்றார். 4 அணைகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் உம்மன்சாண்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். http://tamil.thehindu.com/tamilnadu/4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%…

    • 0 replies
    • 605 views
  24. கெரகம் தலைக்கு ஏறுனா, கெண்டை தோளுக்கு ஏறுதாம் என்கிற மாதிரியாகியிருக்கிறது விஜய் நிலைமை. கத்தி படத்தை தயாரித்தது ராஜபக்சேவின் நண்பர். அவரது தம்பிக்கு தொழில் பார்ட்னர் என்றெல்லாம் நாடு முழுக்க கொந்தளிப்பு. இந்த நேரத்தில் ஆளுங்கட்சியின் தயவும் அம்மாவும் கனிவும் இல்லாமல் கதை நடக்காது என்பதை புரிந்து கொண்ட விஜய் ஊருக்கு முன் முதல் ஆளாக வந்திருந்தார் இலங்கைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள. அவ்வளவு செய்தாலும் மேலிடம் டிக் செய்யுமா கத்தியை என்பதுதான் பெரும் சவலாக இருக்கிறது. ஏன்? படத்தில் இரண்டு விஜய்கள். ஒருவர் நல்லவர். இன்னொருவர் கெட்டவர். அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் நல்லவரை, யாரோ கடத்திக் கொண்டு போய்விட, யதார்த்தமாக அங்கு வருகிறாராம் கெட்டவர். பிறகு அந்த போர…

  25. தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக சீமானுடன் சிறீதரன் பேச்சு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், ந உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன் போது, உலக அரங்கின் சமகால அரசியல் நகர்வுகள், அதிகூடிய சமூக, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், வாழ்வுரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்களின் எதிர்கால நலன்கருதி முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலின் போது, நாம் தமிழர் கட்சியின் முதன்மை உறுப்பினரும் மூத்த சட்டத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.