தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்களுக்கு கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1978 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. பின்னர் 1988-ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றபோது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொலைதொடர்பு துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் செல்ப…
-
- 1 reply
- 541 views
-
-
(கோப்புப் படம்) முதல்வர் சித்தராமையா தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கன்னடர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது: கன்னடர்கள் தங்கள் தாய் மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது. தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர் கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய் மொழியை உயிரைவிட உயர் வாக நினைக்கிறார்கள். அவர் களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப் படுத்…
-
- 4 replies
- 618 views
-
-
நெல்லை: காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை! எக்ஸிட்போல் முடிவால் வேதனை!! நெல்லை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், மனமுடைந்த நெல்லை காங்கிரஸ் பிரமுகர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெல்லை அடுத்த பேட்டையை சேர்ந்தவர் அருணாசலம் வயது 40. இவருக்கு ஆறுமுக செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அருணாசலம், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் பொறுப்பாளராக உள்ளார். நேற்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை அருணாசலம் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும், ராகுல்காந்தியின் வெற்றி வாய…
-
- 7 replies
- 755 views
-
-
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விடம், தே.மு.தி.க., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பேரம் நடத்தி வருவதாக பரவியிருக்கும் செய்தி, அக்கட்சி தலைமையை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தே.மு.தி.க., தலைமையால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதலே, சில தொகுதிகளில் பிரச்னை எழுந்தது. நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநில மாணவரணி செயலர் மகேஸ்வரன், போட்டியில் இருந்து விலகி, பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கடலூர் தொகுதிக்கு பேராசிரியர் ராமானுஜம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் செலவுக்கு நிதி ஆதாரம் இல்லாததால், அவரை மாற்றி விட்டு ஜெயசங்கரை வேட்பாளராக விஜயகாந்த் அறிவித்தார். திருநெல்வேலி தொகுதிக்கு தமிழகத்தில் ஆள் கிடைக்காதத…
-
- 0 replies
- 600 views
-
-
மிஸ் கூவாகம் 2014: விஜயவாடா சாதனா தேர்வு – ராதிகா சரத்குமார் கிரீடம் சூட்டினர். விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் விஜயவாடாவை சேர்ந்த சாதனா ''மிஸ் கூவாகம் 2014" பட்டத்தை வென்றார். விழாவில் நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் பங்கேற்று கூவாகம் அழகிக்கு கிரீடம் சூட்டி பாராட்டினர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகள் வழிபடும் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. சித்திரை திருவிழா. உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் கூடுவது வழக்கம். 18 நாட்கள் திருவிழா. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்த…
-
- 0 replies
- 5k views
-
-
நெல்லை: பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இறங்கி விளையாடிய கலிங்கப்பட்டி வையாபுரியார் அணி வெற்றி பெற்றது. கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 ஆவது நாளாக நேற்று நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் 10 அணிகளும், லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் 4 அணிகளும் பங்கேற்றன. இப்போட்டியினை மதிமுக பொதுச்செயலரும், வையாபுரியார் நினைவு கைப்பந்துக் கழகத் தலைவருமான வைகோ தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் ஏர்வாடி எல்.வி. விளையாட்டுக் கழக அணியும், தச்சை ராயல் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் ஏர்வாடி எல்.வி. அணி வெற்றி பெற…
-
- 0 replies
- 1k views
-
-
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வரும் 14ம் தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி, கடலில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம் ஆவதை காணலாம். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் வரும் 14ம் தேதி (புதன்கிழமை) சித்ரா பவுர்ணமி அன்று மாலை சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அபூர்வம் நிகழ்கிறது. இந்த காட்சியை பார்ப்பதற்கு தமிழகம் மற்றும் பலவேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து குவிவார்கள். இந்த அபூர்வ காட்சி இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டுமே பார்க்க முடியும். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு சிறப்பு அப…
-
- 0 replies
- 701 views
-
-
மாற்றம்காணுமா இந்தியாவின் அணுகுமுறை? "...........இலங்கை அரசாங்கம் ஒரு அதிகாரப்பகிர்வு திட்டத்துக்கு இணங்காமல் இந்தியாவினால் எதையும் செய்யமுடியாது. எனவே கொழும்பை இணங்க வைத்தல் என்பதே இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கையின் முக்கியமான சவாலாக இருக்கும். அரசியல் தீர்வு ஒன்றுக்கு, அதிகாரப்பகிர்வு ஒன்றுக்கு கொழும்பு இணங்கி விட்டால், அடுத்து இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கைகளை சுலபமாகவே கையாண்டு விடலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால், அடுத்தகட்டத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் செல்வாக்கிழந்து விடக்கூடும். எனவே இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கை என்பது, இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை அடிப்படையாக கொண்டதாகவே அமைய முடியும். அதனை விலத்தியதான ஒரு கொள்கையை இந்தியா வகுக்…
-
- 1 reply
- 442 views
-
-
பாறையில் கண்டறியப்பட்ட ஓவியங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர். விழுப்புரத்தை அடுத்த சிறுவாலை என்ற கிராமத்தில் 5000 ஆண்டு களுக்கு முந்தைய தொல் பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் வரலாற்றுக்கு முந்திய கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் வாழ்க்கை முறையையும் சித்தரிக்கும் இம்மாதிரியான தொல்பழங்கால ஓவியங்கள் தமிழகம் முழுதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை போன்ற இடங்களில் கிடைத்த ஓவியங்கள் தனிச் சிறப்புக்குரியவை. அவற்றின் காலம் கி.மு 3000 முதல் கி.மு 7000 வரை என அறிஞர்கள் கருது கின்றனர். அதைப்போன்ற த…
-
- 0 replies
- 546 views
-
-
வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்த 5 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஆன்லைன் மூலம் சில புரோக்கர்கள் பாலியல் தொழில் செய்து வருவதாகவும், இதற்காக வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து பெரும் பணம் சம்பாதிப்பதாகவும் காவல்துறைக்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் பாலியல் தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணையில் இறங்கினர். நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி…
-
- 0 replies
- 900 views
-
-
சென்னை: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கைது வழக்கில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேரது பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கடந்த 30ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து அவனை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டான். மேலும், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின…
-
- 0 replies
- 194 views
-
-
சென்னை: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கைது வழக்கில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேரது பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கடந்த 30ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து அவனை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டான். மேலும், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின…
-
- 0 replies
- 362 views
-
-
து. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையத்தில் பின்பற்றப்படவில்லை" எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, கூடங்குளம் அணு உலையில் தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதாடினார். மேலும், கூடங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய …
-
- 0 replies
- 283 views
-
-
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை, உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் என்று ஜாகீர்உசேன் கூறியுள்ளார். சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளியான ஜாகீர் உசேனிடம் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக ஜாகீர் உசேனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை ஜாகீர்உசேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள ஜாகீர்உசேன், உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வாக்குமூலம் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தான் என்னை மூளைச் சலவை செய்து இதற…
-
- 1 reply
- 638 views
-
-
புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஜல்லிகட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள், ஜல்லிக்கட்டு பேரவை, விலங்குகள் நல வாரியம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும், காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் தமிழக அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது. அதேபோல், விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகின்றன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றதா? என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் ந…
-
- 21 replies
- 2.1k views
-
-
புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையத்தில் பின்பற்றவில்லை எனவும் மனுதாரர் சார்பில் குற்றச்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நா…
-
- 0 replies
- 315 views
-
-
சென்னை: சென்னையில் மேம்பால சுவற்றில் மாநகர பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். ஐயப்பன்தாங்கலில் இருந்து வள்ளலார்நகருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு 37ஜி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேவராஜன் என்பவர் ஓட்டி வந்தார். கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றி்ல் மோதியது. இதில், பயணிகள் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மோதிய வேகத்தில் பயணி ஒருவரின் கால் முறிந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் செல்…
-
- 0 replies
- 559 views
-
-
சென்னை: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் 2 நபர்கள் நடமாடுவதாக மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 1ஆம் தேதி காலை சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுவாதி என்ற ஆந்திர இளம்பெண் பலியானதோடு, 14 பேர் படுகாயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து மறுநாள் (2ஆம் தேதி) ஆவடி ரயில் நிலையத்திற்கும், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ வணிக வளாகம் உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (6ஆம் தேதி) சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் 2 நபர்கள் நடமாடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்ட்ரல் ரயில் நிலைய உதவி மையத்துக்கு ஒரு தொலை…
-
- 0 replies
- 270 views
-
-
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. முல்லை பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே, அதன் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என கேரள அரசு தடை விதித்தது. இந்நிலையில் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதை தவிர்க்க அணை பாதுகாப்பு சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது. மேலும், முல்லை பெரியாறு அணை கேரளாவுக்கு சொந்தம் எனவும் கூறியது. இதையடுத்து, கேரள அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழகத்துக்கும் சொந்தமான இடங்களில் உள்ளது. எனவே, கேரளா மட்டும் அணைக்கு சொ…
-
- 0 replies
- 255 views
-
-
வேலூர்: ஈழத்தமிழர் செந்தூரனுக்கு வேலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து செங்கல்பட்டு முகாமில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்றார். கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர் செந்தூரன், தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து 22 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த செந்தூரனுக்கு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால், செந்தூரனை சிறைத்துறை அதிகாரிகள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பார்க்க வந்த அவரது மனைவி மங்கையர்க்கரசியை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அதையடுத்து மங்கையர்கரசி தனது கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்…
-
- 3 replies
- 649 views
-
-
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து, கார் மற்றும் லாரி மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென பிரேக் போட்டதால் அதன் பின்னால் வந்த கார் பேருந்து மீது மோதியிருக்கிறது. அதே நேரத்தில் காரின் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று காரின் மீது மோதி இருக்கிறது. தனியார் பேருந்து, கார், லாரி அடுத்தடுத்து மோதிக் கொண்ட இந்த விபத்தில், ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள, செஞ்சியில் இருந்து தாம்பரத்துக்கு காரில் வந்த 6 பேரும் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர். http://news.vikatan.com/article.php?module…
-
- 0 replies
- 429 views
-
-
சென்னை: சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் தொடங்குகிறது. தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில வாரங்களாக வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உக்கிரம் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த ஆண்டில் பல மாவட்டங்களில் கடந்த மாதம் தொடக்கத்திலேயே வெயில் 100 டிகிரியை எட்டியது. கடந்த மாதம் இறுதியில் வெயில் 107 டிகிரி பதிவானது. எனவே, மே மாதத்தில் வெயில் 112 டிகிரி வரை உயர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 526 views
-
-
புதுடெல்லி: 2ஜி வழக்கு வழக்கில் வரும் 26ஆம் தேதி ஆஜராகுமாறு ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடியை தந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து அமலாக்கத்துறை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட 10 பேர் மீதும் மற்றும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா, …
-
- 0 replies
- 333 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 11-வது நாளாக அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் இறுதி வாதம் புதன்கிழமையும் தொடர்ந்தது. அப்போது சுதாகரன் திருமணத்திற்கு பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலத்தை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் புதன்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஆஜராகவில்லை. ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் தனது இறுதிவாதத்தை தொடர்ந்த பவானி சிங், சென்…
-
- 0 replies
- 685 views
-
-
சென்ட்ரல் குண்டுவெடிப்பு..தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை ஏற்க ஜெ. மறுப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி! சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத இயக்கங்களின் தாக்குதலாக இருக்கலாமோ என்ற கோணத்தில் மத்திய அரசு பார்த்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அந்த கூற்றை தமிழக அரசு நிராகரித்து விட்டதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீஸார் யாரையும் இதுவரை பிடித்து வைக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தீவிரவாத தாக்குதலாக பார்த்தால் அதிமுக அரசின் மீதான இமேஜ் போய் விடும் என்ற பயத்தால் தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கில் மேம்போக்காக செயல்பட்டு வருவ…
-
- 3 replies
- 691 views
-