தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு சிறீதரன் கடிதம் - சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டுகோள் Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 08:55 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைத்தண்டனையின் பி…
-
- 0 replies
- 505 views
- 1 follower
-
-
ஓய்வு பெற்றார் நீதிபதி குமாரசாமி: அரை மணி நேரத்தில் முடிந்தது பிரிவு உபச்சார விழா நீதிபதி சி.ஆர்.குமாரசாமி| கோப்புப் படம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி இன்று (திங்கள்கிழமை) ஓய்வு பெற்றார். இதனையொட்டி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் உள்ள 1-ம் எண் அரங்கில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர். 'அரை மணி நேரத்தில் முடிந்தது' நீதிபதி சி.ஆர். குமாரசாமியின் பிரிவு உபச்சார விழா அரை மணி நேரத்திலேயே முடிவுற்றது. மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சி தொடங…
-
- 0 replies
- 343 views
-
-
28 ஜூலை 2024, 03:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், ஒருவரே பல தனியார் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியதாகக் காட்டப்பட்டு மோசடி நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது எப்படி நடந்தது? தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்கள் பணியாற்றாத நிலையில், ஒரு சிலரே பல கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றுவதாகக் காட்டி தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகள் அனுமதி பெற்றிருப்பதாக தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் தன்னார்வ அமைப்பான 'அறப்போர் இயக்கம்' குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த விவகாரம் ப…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
"பால் பாக்கெட்" கவரை.. திரும்ப கொடுத்தால் காசு.. ஆவின் அறிவிப்பு.. குப்பையில் வீசுவதை தடுக்க திட்டம். ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.இந்நிலையில் சுற்றுப்புற சூழலை பாதுக…
-
- 0 replies
- 590 views
-
-
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில்…
-
- 0 replies
- 677 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில் போர் நடத்தியதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், இன்று தங்களை தமிழ் தேசியவாதிகள் என்றே கூறிக்கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று சிங்கள ஆட்சியாளர்களுடனும், பேரினவாதிகளுடனும் கைகோர்த்து நிற்கின்றனர். இந்நிலையில், சர்வதேசத்தையும், தமிழ் மக்களையும் அவர்கள் காட்டிக்கொடுகின்றனர்” எனவும் அவர் கூறியுள்ளார். https://www.tamilwin.com/special…
-
- 0 replies
- 435 views
-
-
விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா! சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை ஏன் தெரியுமா..? என்று தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டத்தில் விளக்கினார் பிரேமலதா. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் தினத்தை ஒட்டி, தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கவிருந்த கூட்டம், மாலை 5 மணி வரை தள்ளிப் போனது. அதுவரை, விஜயகாந்த் நடித்த படங்களின் பாடல்களுக்கு மேடையில் நடனக் கலைஞர்கள் ஆட்டம்போட்டனர். தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்து வந்திருந்த மகளிர் அணி உறுப்பினர்கள், நிகழ்ச்சி தொடங்கியவுடன் அனைத்துக் கட்சிகளையும் விளாசத் தொடங்கினர். ''அன்புமணிக்கு என்ன…
-
- 0 replies
- 665 views
-
-
ஒருசில குறிப்பிட்ட கடைகளில் தயாராகும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலப்படம் செய்வதாகவும் இதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களின் மக்கள் தொகையை குறைக்க சதி செய்திருப்பதாகவும் வாட்ஸ்அப்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திக்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்பதை கூட அறியாமல் பலர் இதனை ஃபார்வேர்டு செய்வதால் சில சமயம் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது சமீபத்தில் கூட சிஏஏ போராட்டத்தின்போது இயற்கையாக மரணம் அடைந்த ஒருவரை போராட்டத்தின் காரணமாக மரணமடைந்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. அதேபோல் திமுக எம்பி செந்தில்கு…
-
- 0 replies
- 503 views
-
-
Posted Date : 07:44 (16/05/2016) ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், ரஜினி, கமல் உள்பட பிரபலங்கள் வாக்களிப்பு! முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரு தொகுதிகளை தவிர ஏனைய 232 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் சாரதா நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவ…
-
- 0 replies
- 577 views
-
-
அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றம்... -மாஜிக்களின் கட்சி பதவியை பறித்த ஜெயலலிதா! சென்னை: அ.தி.மு.க.வில் இன்று ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்களை செய்தும், பல மாஜி அமைச்சர்களின் கட்சி பதவிகளை பறித்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா. இது குறித்து அ.தி.மு.க. கட்சி தலைமை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. அதன்படி, புதிய நிர்வாகிகள்... அ.தி.மு.க. அவைத்தலைவர் - மதுசூதனன் பொருளாளர் - ஓ.பன்னீர்செல்வம் கொள்கை பரப்புச் செயலாளர் - தம்பிதுரை அமைப்பு செயலாளர்கள் - வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செ…
-
- 0 replies
- 368 views
-
-
இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழக சிறைகளுக்கும் பரவியது! [saturday, 2013-03-16 09:06:54] இலங்கைக்கு எதிராக, ஐ.நா., வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி, கோவை மத்திய சிறையில், நேற்று கைதிகள், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த போரில், இனப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்ஷேவை, சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, தண்டிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கை மீது, இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம், மறியல், முற்றுகை, பேரணி, மனிதசங்கிலி உட்பட, பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில…
-
- 0 replies
- 536 views
-
-
அண்ணா... எம்.ஜி.ஆர்... ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்தது என்ன? நாற்காலியில் வெற்றிடம் விழுந்ததும், அதை வசப்படுத்த அசுர வேகத்தில் அரண்மனை சதி நிகழ்வதே வரலாறு நெடுக பாடங்களாக இருக்கின்றன. ஜனநாயக வெளிச்சத்திலும் இந்த வரலாறு மாறவில்லை. பதவி வெறி என்றால் என்ன? அதிகார போதை எப்படி இருக்கும்? அதை அடைய என்னவெல்லாம் செய்வார்கள்? அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் மரணத்துக்குப் பிறகு அதற்கான அர்த்தங்களை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இவர்களின் மரணத்துக்குப் பிறகு நடந்தவை என்ன? அவை சொல்லும் உண்மைகள் என்ன? இதோ ஓர் ஒப்பீடு: உடல்நலக் குறைவு! அண்ணா: 1968 செப்டம்பர் முதல் வாரம். சாப்பிட்டுக்கொண்டிருந்த அண்ணாவுக்குத் திடீரென தொண்டையில் வலி. மருத்…
-
- 0 replies
- 3k views
-
-
விடைபெறுகிறாரா ஜார்ஜ்... விசுவாசத்துக்கு கிடைக்கிறது டி.ஜி.பி பதவி உயர்வு! தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்து நிற்கிறது. அதன் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு எதிராக கொடிபிடித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலமான அதிமுகவை உடைத்தாலும், போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாதநிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. இந்நிலையில் போராட்டம், உண்ணாவிரதம் என சுறுசுறுப்பாக அரசியல்பணியாற்றத்துவங்கிவிட்டார் அவர். அதிமுக பிளவுபட்ட சமயம் காபந்து முதல்வராக அவர் இருந்தபோது தமிழகத்தின் சட்ட ஒழுங்குப் பிரச்னையில் ஒரு முதல்வராக இட்ட உத்தரவுகளை சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் செவிகொடுக்கவில்லை. அப்போது அவர் சசிகலா…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில் அடுத்த இலக்கு தி.மு.க.,'2 ஜி' தீர்ப்புக்காக காத்திருக்கும் பா.ஜ., அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிக்கும் நிலையில், அதற்கடுத்த முக்கிய கட்சியான, தி.மு.க.,வின் வீழ்ச்சியை எதிர்பார்த்து, பா.ஜ., காத்துஇருக்கிறது. மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டார். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரை அழைத்து, அரசியல் நிலவரம் பற்றியும் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், மத்திய அரசுக்கு, ஜெயலலிதா நீண்ட நாட்களாக முட்டுக்கட்டை போட்டு வந்த, உணவு பாதுகாப்பு சட்ட மசோதா போன்ற சில திட்டங்களுக்கு, தமிழக அரசு தலையாட்டியது. அப்போதே, தமிழக அரசை, மத்திய அரசு மறைமுகமாக இயக்குவதாக, எதிர்க் …
-
- 0 replies
- 416 views
-
-
கடலூர்: ஜெயலலிதா பிரதமர் ஆனால் இலங்கையில் தனி ஈழம் அமையும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட அண்ணா கிராமம் ஒன்றிய அதிமுக சார்பில் நல்லூர்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், 1967ம் ஆண்டு அண்ணா தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸை விரட்டி அக்கட்சிக்கு முடிவுரை எழுதினார். அண்ணா, புரட்சித் தலைவர் வழியில் வந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா விரைவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் இருந்தே காங்கிரஸை விரட்டி…
-
- 0 replies
- 533 views
-
-
ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்தது ஏன்? ஏ. ஆர். மெய்யம்மை பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN / TWITTER திமுக முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 'தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர்' என்ற பெயர் கிடைத்தது ஒருபுறமிருக்க, அவர் ஏன் பாப்பாபட்டி தேர்ந்தெடுத்தார் என்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மு. கருணாநிதி தலைமையில் முந்தைய திமுக அ…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
ராஜீவ் ஏன் கொல்லப்பட்டார் ? அதனால் ஆதாயம் அடைந்தவர்கள் யார் ?
-
- 0 replies
- 530 views
-
-
கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி! கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிப்பது என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்பவர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி கார்த்திக் மற்றும் கடற்படை கடலோர காவல்படை மீன்துறை, சுங்கத்துறை, உளவுத்துறை, அதிகாரிகளும் மீனவர் ச…
-
- 0 replies
- 181 views
-
-
மெர்சல் சர்ச்சையில் சிக்கியதன் உண்மை பின்னணி ! | Socio Talk மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனங்கள் பூகம்பம் போல் வெடித்தது. இதற்கான காரணங்களும், இதற்கு முன்பு எப்போதெல்லாம் இது போன்ற பிரச்சனைகள் வந்தது என்பதை பற்றி இந்த வீடியோ பதிவில் காணலாம்.
-
- 0 replies
- 484 views
-
-
மேலவளவு கிராமத்தில் "25 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை" - கொல்லப்பட்ட முருகேசன் மனைவி பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முருகேசனின் மனைவி மணிமேகலை "ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக எனது கணவர் முருகேசனை கொன்றுவிட்டார்கள். அன்றிலிருந்து தற்போது வரை எங்கள் காலனி பகுதிக்கு எந்தவிதமான சலுகையும் செய்து கொடுக்கவில்லை" என்கிறார் படுகொலை செய்யப்பட்ட மேலளவு முருகேசன் மனைவி. ஆனால், சுடுகாட்டுப் பாதை போன்ற பிரச்சனையில் சிக்கல் இருந்தாலும், எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை என்பதை ஊராட்சித…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் புதியக் கட்சி தொடங்குகிறார் தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி தேனி: ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் டி.டி.வி. தினகரன் அணியில் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கிளை கழகங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். தேனியில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தேனி மாவட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக…
-
- 0 replies
- 381 views
-
-
அதிமுக அரசை வீழ்த்த தயாராகிவிட்டதா பாஜக?- எதிர்க்கும் ஓபிஎஸ்.. வலுக்கும் மோதல் அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப் படம் அதிமுக அரசை வீழ்த்த பாஜக தயாராகிவிட்டதை தெரிந்து கொண்டுதான் அக்கட்சிக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை சோதனை, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்…
-
- 0 replies
- 471 views
-
-
மிஸ்டர் கழுகு: “முதல்வர் பதவியைக் கொடுங்கள்!” - எடப்பாடிக்கு பன்னீர் கெடு மோடி சமாதான விசிட்! ‘‘இது காமெடி அல்ல... நிஜம்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘சொல்லும்’’ என்றோம். ‘‘அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம். முடித்துவிட்டு விடுவிடுவென கீழே இறங்கி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஏதோ சிந்தனைகளோடு அவசரமாகக் காரில் ஏறப்போகிறார். பின்னால் ஓடிவந்த செக்யூரிட்டி அதிகாரி, ‘சார்... இது முதல்வரின் கார்’ என்று நினைவுபடுத்த, சட்டென சுதாரித்துக்கொண்டு, சற்று முன்னால் இருந்த தன்னுடைய காரில் ஏறினார். ‘இந்தக் காட்சி தற்செயலானது அல்ல. பன்னீரின் அடிமனதில் முதல்வர் பதவி நினைப்பு கிடந்து அல்லாடுகிறது. அதன் வெளிப்பாடுதான் இது’ என்கிறார் எடப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழர்களுக்குள்ள பாதுகாப்பு என்ன? - பண்ருட்டி இராமச்சந்திரன் விசேட செவ்வி இலங்கை இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் பணியாற்றியவரும் முழுநேர அரசியலுக்கு விடைகொடுத்துள்ள போதும் அ.தி.மு.க.வில் தற்போதும் செயற்பட்டு வருகின்றவரும் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருப்பவருமான மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழகம் மற்றும் இலங்கையில் நிலவும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டுள்ளமையை உணர்கின்றீர்களா? கமல், ரஜினியை வருகையை எப்படி பார்க…
-
- 0 replies
- 541 views
-
-
தூத்துக்குடியில் மீண்டும் கைது நடவடிக்கை......
-
- 0 replies
- 500 views
-