தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இசைப்பிரியாவுக்காக ஏன் மத்திய அரசு துடிக்கவில்லை என பதிலளித்திருந்தார். அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் �தேவயானி கோப்ரகடே� கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே? என பத்திரிகையாளர்கள் கேட்கையில், கருணாநிதி தெரிவிக்கையில், அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவுக்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது. தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவ…
-
- 3 replies
- 697 views
-
-
கேள்வி :- "காங்கிரசைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது" என்று ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கூறியிருக்கிறாரே? பதில் :- அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன? :d கேள்வி :- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், திரு. வாகனாவதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார் என்று சொல் கிறார்களே? பதில் :- அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், அலைக் கற்றை ஒதுக்கீடு குறித்து அமைச்சரவைக் குழுவின் தலைவர், அன்றைய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில், நிதித் துறை அமைச்சர் பிரணாப், முன்னாள் அமைச்சர் ஆ. இராசா, மற்றும் வழக்கறி…
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கை கடற்படைக்கு பயிற்சி கொடுப்பதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று சென்னையில் உள்ள இந்திய கப்பற்படை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது பேசிய அவர், இலங்கையில் நடந்த போரின்போது இந்திய அரசு 2009ம் ஆண்டு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. இதனை ராஜபக்ஷவே வெளிப்படையாக 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு இந்தியா உதவி செய்யவில்லை. போரை நடத்தியதே இந்திய அரசுதான்' என்று கூறினார். நேரு காலத்தில் இருந்தே தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்தான் இழைத்து வருகிறது. இதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்…
-
- 0 replies
- 440 views
-
-
சென்னை: திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இசைஞானி இளையராஜா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளையராஜா இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில், டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென அளவுக்கு அதிகமாக வியர்த்து கொட்டி, லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 'நலமுடன் உள்ளார்' இதனிடையே இளையராஜா மேனஜர் இதுகுறித்து கூறுகையில்," இளையராஜாவுக்கு இன்று காலை இலேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உட…
-
- 4 replies
- 1.3k views
-
-
'காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே களமிறங்குவார் என பெற்றோலியத் துறை மற்றும் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். கட்சிப் பணிகளை பார்க்கச் செல்கிறேன் என தனது சுற்றுச்சூழல்துறை அமைச்சுப் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்திருந்தார் ஜெயந்தி நடராஜன். ஆனால் சுற்றுச்சூழல்துறையை அவர் சரியாக கவனிக்கவில்லை. பல திட்டங்கள் கிடப்பில் போடபப்ட்டுள்ளன. இது குறித்து ராகுல் காந்தியே விமர்சித்தத்தால் தான் ஜெயந்தி நடராஜன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என சில ஊடகங்கள் குற்றம் சாட்டின. ஆனால் இதனை மறுத்துள்ள ஜெயந்தி நடராஜன், எந்தவித திட்டங்களும் கிடப்பில் போடப்படவில்லை என்றார். தற்போது வீரப்ப மொய்லிலும் அதே கருத்தைக் கூறியுள்ளார…
-
- 4 replies
- 603 views
-
-
வரும் 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு தமிழர் பிரதிநிதியாக மக்களால் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை இரு பெரும் திராவிடக் கட்சிகள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இடம் பிடிக்கின்றன. இதற்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று சிலர் எண்ணி தேசியக் கட்சியான பாஜக வுடன் மதிமுக பாமக போன்ற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளன. பாஜக காங்கிரஸ் ஆகிய இவ்விரண்டு கட்சிகளும் கொள்கை அளவிலும், ஊழல் அளவிலும், தமிழின விரோதப் போக்கின் அளவிலும் ஒரே நிலையில் இயங்கும் கட்சிகளாகும். இக்கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழர்களிடம் வாக்கு சேர்ப்பது தமிழினத்திற…
-
- 0 replies
- 271 views
-
-
Morgan Freeman mistaken for Mandela on billboard Actor's face next to Gandhi, Martin Luther King and Mother Teresa. By Ben Arnold Yahoo UK Movies News - Freeman... or is it Nelson Mandela? (Copyright: Twitter) Morgan Freeman's turn in the movie 'Invictus' was clearly a little too convincing. A billboard spotted in Coimbatore, southern India, mistakenly has the Hollywood star's face emblazoned on it in a tribute to the late Nelson Mandela. [Idris Elba: Mandela's death 'surreal'] Clothing merchant Chandrashekhar paid for the billboard, one of many across India paying tribute to the South African leader, but says that the …
-
- 0 replies
- 717 views
-
-
எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கனவு காண்பதாக நடிகை குஷ்பு குற்றஞ்சாட்டினார். திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அந்தக் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வாக்குகளே உண்மையான வாக்குகள். அந்தத் தேர்தலில் மனசாட்சிப்படி திமுகதான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் மட்டும் திமுகவைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனவேதான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். ஆனால், நாங்கள் காங்…
-
- 1 reply
- 1.2k views
-
-
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு : மதுரை மாவட்ட நிகழ்வுகள் : 20-12-13 அன்று காலை உயர்நீதி மன்றத்தில் ' அணு உலைக்கு எதிரான வழக்குரைஞர் கூட்டமைப்பு ' ஆர்ப்பாட்டம். மாலை 6 மணிக்கு திருமங்கலம்- ராஜாஜி சிலையருகில் தெருமுனைக் கூட்டம் ஏற்பாடு : கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு. 21-12-13 அன்று தெருமுனைக் கூட்டங்கள் : காலை 10 மணிக்கு கோரிப்பாளையம்- ஜம்புரோபுரம் மார்க்கெட் - ஏற்பாடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் இயக்கம். மதியம் 3 மணிக்கு செல்லூர் சரஸ்வதி திரையரங்கம் அருகில், மாலை 5 மணிக்கு செல்லூர் தாகூர் நகர், ஏற்பாடு: தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி. இரவு 7 மணிக்கு மீனாட்சிபுரம் - ஏற்பாடு : தமிழ்நாடு மக்கள் கட்சி…
-
- 2 replies
- 444 views
-
-
December 13, 2013 டெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் லோக்சபா தேர்தல் பாஜக-மதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகள் இந்த முறை அதே கூட்டணி அமைக்குமா? அல்லது கூட்டணிகள் இடம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான்கு தேர்தலில் பாரதீய ஜனதா பெற்றுள்ள இமாலய வெற்றியும் பல அரசியல் கட்சிகளை யோசிக்கச் செய்துள்ளது. தமிழ் நாட்டிலும் பாரதீய ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங…
-
- 7 replies
- 2.3k views
-
-
டிச.27-எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு.. திருவாரூர் ஓட்டல் செல்வீ'ஸ் காசி அரங்கில்- "உயிர்வலி" - ஆவணப்படம் வெளியீடு. பேராசிரியர் செயராமன்-மருத்துவர் பாரதிசெல்வன்-அம்மா அற்புதம் குயில்தாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். வாருங்கள் உறவுகளே. (facebook)
-
- 0 replies
- 431 views
-
-
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 'உயிர் வலி' ஆவணப்படம் நாளை (22.12.2013) மாலை 5மணிக்கு கோவையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. கோவையில் உள்ள அனைத்து இளைஞர்களும் மாணவர்களும் 'உயிர் வலி' ஆவணப்பட அறிமுக விழாவிற்கு வருமாறு கேட்டுக்கொள்ள படுகின்றனர்.. இடம்: குஜராத்தி சமாஜம், கோவை நேரம்: மாலை 5மணி தேதி: ஞாயிறு (22.12.2013) (facebook)
-
- 0 replies
- 491 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் அமைச்சர்கள் முச்சந்திகளில் நின்று பேசுவது ஏமாற்று வேலை என்று உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை தலைவரான பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, இலங்கையில் மீதமுள்ள தமிழர்களையும் ஒழிப்பதற்காக அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் தைரியமாகச் சென்று தமிழர்களைச் சந்தித்துப் பேசியதுடன் அதுகுறித்து பொதுநலவாய மாநாட்டிலும் கண்டனம் தெரிவித்தார். இத்தனையும் நடைபெற்ற பிறகும் இலங்கைக்கு அருகில் உள்ள இந்திய அரசோ, தொடர்ந்து மெளனம் சாதித்து வருகி…
-
- 0 replies
- 540 views
-
-
கேரள அரசியல்வாதிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுத்து கஸ்தூரி இரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு வழங்கிய ஒப்புதலை இரத்து செய்து சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் பதவி விலகி இருக்கிறார். தமிழகத்திற்கு இப்படியொரு அப்பட்டமான துரோகத்தைச் செய்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்? கேரளாவில் இருந்து கிடைக்கும் வாக்குகள் எங்களுக்குப் போதும். தமிழகத்தில் இருந்து எங்களுக்கு உறுப்பினர்கள் தேவையில்லை என்பதாகத்தானே இருக்க முடியும்? தமிழகத்தைச் சேர்ந்த பிற காங்கிரஸ் அமைச்சர்களும், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள நினைக்கும் கட்சிகளும் வேடிக…
-
- 0 replies
- 486 views
-
-
இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி, அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடிபோலச் செயல்பட்ட இந்திய அரசு, இந்தப் பிரச்னையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளியானபோதுகூட, இந்திய அரசு அடக்கியே வாசித்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டித்தபோதும் இந்தியா, 'உளவு எல்லாம் இல்லை. சும்மா கம்ப்யூட்டர் ஆய்வுதான்’ என்று சொன்னபோது உலகமே நகைத்தது. இத்தனைக்கும் உளவுத் தகவல்கள் அதிகம் சேகரிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும…
-
- 3 replies
- 679 views
-
-
சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார். கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அப்படிப்பட்ட நிஜம். அந்த துயரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த நிமிடம் வரையில், புதிய விவரங்கள் அந்த வழக்கில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அதில் சமீபத்திய புதுவரவு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக…
-
- 0 replies
- 362 views
-
-
தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப்பெற முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளதை இந்தியா ஏற்க மறுத்துள்ளது. அமெரிக்காவில் தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை நிபந்தனை இல்லாமல் உடனடியாக கைவிட இந்தியாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். தொடர்புடைய விடயங்கள் காங்கிரஸ், மன்மோகன் சிங் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் வெளியுறவுத்துறைச் செயலாளர் சுஜாதா சிங்கை புதுடில்லியில் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவின் பிடிவாதம் குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளிப்பட…
-
- 5 replies
- 621 views
-
-
நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்கிறார். இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப்பை தவறு என உணர்கிறேன் என்று சொல்கிறார். இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜெபமணி மோகன்ராஜ் தவறு செய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இவ் மூவருக்கும் தூக…
-
- 0 replies
- 385 views
-
-
தமிழர்கள் நாட்டை ஆட்சி செய்ய வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இந்தியாவை தமிழர் ஆட்சி செய்ய வேண்டிய நேரம் உதயமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தர் பிரதேசதம், கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே இந்திய பிரதமர்களாக பதவி வகித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி செயற்குழுக் கூட்டத்தில், தமிழர் ஒருவர் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னர் தமது கட்சி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை ஆட்சி செய்யக் கூடிய …
-
- 0 replies
- 297 views
-
-
அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயாணி கேப்ரகடே கைது செய்யப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவில் அமெரிக்க தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் சலுகைகளையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது. …
-
- 7 replies
- 1.2k views
-
-
நிரபராதி தமிழர்களின் வேதனையை படம் பிடிக்கும் "உயிர்வலி" ஆவணப்படம் திரையிடல் வருகின்ற 07/01/2014 அன்று பாளையங்கோட்டை ADMS அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வினை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் நடத்துகின்றது. வாய்ப்பிருக்கும் தோழர்களையும், மாணவர்களையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.. (facebook)
-
- 0 replies
- 327 views
-
-
http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4
-
- 1 reply
- 485 views
-
-
வெள்ளிக்கிழமை , 20-12-13 புது டில்லி சீக்கிய மற்றும் இதர அரசியல் சிறைவாசிகள் தொடர்பான பத்திரிக்கையாளார் சந்திப்பில், 2009இல் ப.சிதம்பரத்தின் மீது செருப்பு வீசிய சீக்கிய பத்திரிக்கையாளர் மரியாதைக்குரிய திரு. ஜர்னாயில் சிங் அவர்களுடன் உடன் பங்கேற்கிறோம். வாய்ப்பிருக்கும் தில்லி வாழ் தமிழ்த் தோழர்கள் பங்கேற்கும் படி வேண்டுகிறோம். இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் SDPI தேசிய செயலாளர் ரஃபி முல்லா அவர்களும் பங்கேற்கிறார். Thirumurugan Gandhi (facebook)
-
- 0 replies
- 416 views
-
-
-
- 0 replies
- 643 views
-
-
சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான ஈழ தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளார் பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி முள்ளிவாய்க்கால் முற்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக அனுப்ப…
-
- 0 replies
- 491 views
-