Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கேரள அரசியல்வாதிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுத்து கஸ்தூரி இரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு வழங்கிய ஒப்புதலை இரத்து செய்து சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் பதவி விலகி இருக்கிறார். தமிழகத்திற்கு இப்படியொரு அப்பட்டமான துரோகத்தைச் செய்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்? கேரளாவில் இருந்து கிடைக்கும் வாக்குகள் எங்களுக்குப் போதும். தமிழகத்தில் இருந்து எங்களுக்கு உறுப்பினர்கள் தேவையில்லை என்பதாகத்தானே இருக்க முடியும்? தமிழகத்தைச் சேர்ந்த பிற காங்கிரஸ் அமைச்சர்களும், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள நினைக்கும் கட்சிகளும் வேடிக…

  2. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி, அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடிபோலச் செயல்பட்ட இந்திய அரசு, இந்தப் பிரச்னையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளியானபோதுகூட, இந்திய அரசு அடக்கியே வாசித்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டித்தபோதும் இந்தியா, 'உளவு எல்லாம் இல்லை. சும்மா கம்ப்யூட்டர் ஆய்வுதான்’ என்று சொன்னபோது உலகமே நகைத்தது. இத்தனைக்கும் உளவுத் தகவல்கள் அதிகம் சேகரிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும…

  3. சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார். கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அப்படிப்பட்ட நிஜம். அந்த துயரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த நிமிடம் வரையில், புதிய விவரங்கள் அந்த வழக்கில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அதில் சமீபத்திய புதுவரவு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக…

  4. தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப்பெற முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளதை இந்தியா ஏற்க மறுத்துள்ளது. அமெரிக்காவில் தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை நிபந்தனை இல்லாமல் உடனடியாக கைவிட இந்தியாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். தொடர்புடைய விடயங்கள் காங்கிரஸ், மன்மோகன் சிங் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் வெளியுறவுத்துறைச் செயலாளர் சுஜாதா சிங்கை புதுடில்லியில் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்காவின் பிடிவாதம் குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளிப்பட…

  5. நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்கிறார். இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப்பை தவறு என உணர்கிறேன் என்று சொல்கிறார். இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜெபமணி மோகன்ராஜ் தவறு செய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இவ் மூவருக்கும் தூக…

  6. தமிழர்கள் நாட்டை ஆட்சி செய்ய வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இந்தியாவை தமிழர் ஆட்சி செய்ய வேண்டிய நேரம் உதயமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தர் பிரதேசதம், கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே இந்திய பிரதமர்களாக பதவி வகித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி செயற்குழுக் கூட்டத்தில், தமிழர் ஒருவர் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னர் தமது கட்சி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை ஆட்சி செய்யக் கூடிய …

  7. அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயாணி கேப்ரகடே கைது செய்யப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவில் அமெரிக்க தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் சலுகைகளையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது. …

  8. நிரபராதி தமிழர்களின் வேதனையை படம் பிடிக்கும் "உயிர்வலி" ஆவணப்படம் திரையிடல் வருகின்ற 07/01/2014 அன்று பாளையங்கோட்டை ADMS அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வினை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் நடத்துகின்றது. வாய்ப்பிருக்கும் தோழர்களையும், மாணவர்களையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.. (facebook)

  9. http://naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4

  10. வெள்ளிக்கிழமை , 20-12-13 புது டில்லி சீக்கிய மற்றும் இதர அரசியல் சிறைவாசிகள் தொடர்பான பத்திரிக்கையாளார் சந்திப்பில், 2009இல் ப.சிதம்பரத்தின் மீது செருப்பு வீசிய சீக்கிய பத்திரிக்கையாளர் மரியாதைக்குரிய திரு. ஜர்னாயில் சிங் அவர்களுடன் உடன் பங்கேற்கிறோம். வாய்ப்பிருக்கும் தில்லி வாழ் தமிழ்த் தோழர்கள் பங்கேற்கும் படி வேண்டுகிறோம். இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் SDPI தேசிய செயலாளர் ரஃபி முல்லா அவர்களும் பங்கேற்கிறார். Thirumurugan Gandhi (facebook)

  11. சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான ஈழ தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளார் பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி முள்ளிவாய்க்கால் முற்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக அனுப்ப…

  12. 2013ல் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட அரசியல்வாதி யார். thatsTamil - Oneindia.in மேற்கொள்ளும் வாக்கெடுப்பு. கருணாநிதி ஜெயலலிதா வைகோ விஜயகாந்த் தா. பாண்டியன் வாக்களிக்க இந்த இணைப்பிற்கு செல்லுங்கள். http://polls.oneindia.in/view/7/4753/poll-statistics.html

  13. இலங்கை அமைச்சகத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக கண்டன அறிக்கையும், இலங்கை அதிபருக்கு பிரதமர் நேரடியாக தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் நிலை குறித்தும், இலங்கை கடற்படையினர் செய்து வரும் அட்டூழியம் குறித்தும், உங்களுக்கு பல முறை வலியுறுத்தி கடிதங்களை எழுதியுள்ளேன். தமிழக அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்கவும், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லையில் இருக்கும் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்…

  14. சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பீதியில் உறைந்து போயுள்ளனர். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மதிமுக, பாமகவை இணைவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் திமுகவோ அதிரடியாக காங்கிரஸை கழற்றிவிட்டு பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திமுக, பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கதவுகளை திறந்து வைத்து காத்திருந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸுக்கான கதவை அடைத்துவிட்டது திமுக. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் சந்தேகம் என்ற தொனியையும் திமுக உருவாக்கியிருக்கிறது.இதேபோல் திமுக அல்லது அதிமுகவின் தோளில் சவாரி ஏறலாம் என்று காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது திமுகவின் கதவு மூடப…

  15. குடிக்கிறது பெரிய தப்பா... அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள்? - விஜயகாந்த் - சென்னை: குடிக்கிறேன் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். யாருமே இங்கு குடிக்கவில்லையா? குடிக்கிறது பெரிய தப்பா என்ன? அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுவதும் கடையை திறந்து வச்சிருக்கீங்க", என்று கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் விஜயகாந்த் வீட்டில் நடந்தது. இந்த விழாவில் மகனை அறிமுகப்படுத்திவிட்டு விஜயகாந்த் பேசியதாவது: இது அரசியல் விழா அல்ல; இருந்தாலும் சொல்கிறேன், சில பேர் ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு இங்கு வராமல் இருக்கிறார்கள். வாழ்த்தியவர்களுக்கு என் நன்றியை த…

  16. 14/12/2013 சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு, அனைத்திந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என ஒவ்வொரு கட்சி தலைமையும் ஆலோசித்து வருகிறது. இதேபோன்று தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உ…

  17. இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. மேலும், விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம், மீனவர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்தும், மத்திய அரசும், மாநில அரசும், இதுவரையிலும் உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. இரு நாட்டு மீனவப் பி…

  18. பாஜக தலைமையில் புதிய கூட்டணி- திமுக, அதிமுகவுக்கு இடம் கிடையாது: இல.கணேசன். சென்னை: திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணி பாஜக தலைமையில் அமைக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். இல்லம்தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை என்ற வாசகத்துடன் கூடிய கிராம யாத்திரை பாஜக சார்பில் நடத்தப்பட்டது. சென்னை மேடவாக்கத்தில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கடந்த 1ம் தேதி யாத்திரையை துவக்கினார். இந்நிலையில் நேற்று யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் இல. கணேசன் பேசுகையில், தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணியை பாஜக தலைமையில் உருவாக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த புதிய கூட்டணியில் மதிமுக உள்ள…

  19. இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்கிறார். இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப்பை தவறு என உணர்கிறேன் என்று சொல்கிறார். இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜெபமணி மோகன்ராஜ் தவறு செய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இவ் மூவருக்கும் தூக்கு தண்டணை கொடுத்தது தவறு என முன்னாள் நீதிபதிளே பல முறை சொன்ன பின்னும் 22ஆண்டுகள் தனிமை சிறைக்கு பின்னும் இவர்களை தூக்கில் க…

  20. மணலும் மண்ணும் வரும் தலைமுறைக்கும் வேணும் அள்ளிய மணலால் ஆறெல்லாம் மலடாக தீர்த்தவாரிக்கென வந்த கடவுள் திகைத்து நின்றார் தீர்த்தமற்ற ஆற்றைக் கண்டு. கொண்டுவந்த தண்ணீரால் குளித்துக் கரையேறி கருவறை புகுந்தார் அழிக்கும் மனித சக்தியின் அளவில்லா மகத்துவம் அறிந்து! ● கே. ஸ்டாலின் சித்திரை மாத வெயில் உக்கிரமாக இருக்கும் வேளையில், வேப்பமரத்து நிழல்போர்த்துள்ள ஓடையில் கையை தலைக்கு வைத்து மேலாடை இல்லாவெற்றுடம்பில் உறங்கிய அனுபவம் இருக்கிறதா? மணலின் சிறு துகள்உடம்பை மெதுவாக அக்குபிரசர் செய்யும். அந்தச் சுகத்தில் உறக்கம் கிறக்கம்கொள்ளும். குளு குளு அறைகள் கொடுக்காத சுகத்தை கிராமத்து ஓடைகள்கொடுத்தன. இன்றைய நவீன யுகம் அந்த ஓடைகளையெல்லாம் கெடுத்தன…

  21. மதுரைக்காரங்க பாசக்காரப் பயலுகய்யா... நெதர்லாந்து நாட்டுக்காரரின் சந்தோஷ வியப்பு! மானாமதுரை: இந்தியாவிலேயே தமிழகம்தான் மிகவும் பாதுகாப்பான மாநிலம், அதிலும் மதுரைக்காரரர்கள் மிகவும் பாசக்காரர்கள் என சைக்கிளிலேயே உலக சுற்றுப்பயணம் செய்யும் நெதர்லாந்து சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ராபர்ட் ஜான். 53 வயதாகும் ராபர்ட் ஜானிற்கு சைக்கிளில் உலகை வலம் வருவது மிகவும் பிடித்தமான ஒன்று. இதுதவிர நீச்சல், பனிச்சறுக்கு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் உள்ளவர். கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்துள்ளார். நாட்டின் முக்கிய இடங்களை சைக்கிளிலேயே வலம் வந்துள்ளார். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே சைக்கிளில் சென்று வழிபாட்டுத் தலங்க…

  22. 15/12/2013 திருப்பூர்: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் மீது துளி கூட அக்கறை இல்லை என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''பகை நாடாக உள்ள பாகிஸ்தான் கூட மீனவர்களை சுட்டுக் கொல்வது இல்லை. ஆனால் நட்பு நாடு என்று பெயர் கொண்ட இலங்கை, தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வது, சுட்டுக்கொல்வது போன்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசுக்கு போர்க்கப்பல்களை பரிசாக இந்தியா வழங்குகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை. வருகிற தேர்தலில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு காங்கிரசின் அதிகாரத்த…

  23. கேடு, கேடு தவிர வேறில்லை ***************************** மண மேடைக்கு மப்பில் வந்தார் மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண். வேனில் ரோந்து சென்றபோது போதையில் மட்டையான போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட். போதையில் துப்பாக்கி தூக்கிய தந்தையிடம் இருந்து தாயை மீட்க முயன்ற மகன் கொலை. மூன்றும் நேற்றைய தினகரன் இதழில் இடம்பெற்ற தலைப்புகள். சாத்தான்குளம், பென்னாகரம், செங்கம் ஆகிய சிற்றூர்களில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் இன்றைய சமூக நிலவரத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகின்றன. 10 பவுன் நகை, 25,000 ரொக்கம் வரதட்சணை வாங்கியவர்கள் மாப்பிள்ளையை அழைத்து வருகிறார்கள். சிறுநீர் கழிக்கப் போவதாக சொல்லி மது அருந்தி தாமதமாக வந்தவர் மேடையில் அமர முடியாமல் அப்படியே சர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.