தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
போலீஸ் ஸ்டேஷனில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கடமலைக் குண்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேனி பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் ரமா (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக கடமலைகுண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட் டார். அன்று இரவில் ஸ்டேஷனில் ரமாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார், எஸ்ஐ அமுதன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. பின்னர் திருட்டு வழக்கில் போலீசார் ரமாவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ரமா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக…
-
- 0 replies
- 616 views
-
-
புதன், 22 மே 2013 மரக்காணம் கலவரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக செயல்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை, உணரவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது கூறினார். மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக கருணாநிதி கண்டன அறிக்கை எதுவும் விடாதது விடுதலை சிறுத்தைகள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது. இது குறித்து திருமாவளவன் கூறுகையில்: ஆளுங்கட்சியை விமர்சிப்பது எதிர்கட்சியின் கடமை. அந்த அடிப்படையில…
-
- 3 replies
- 804 views
-
-
புதன், 22 மே 2013 கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. காவிரிப் பிரச்சனையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. கர்நாடகத்தில் புதிய முதல்வராகப் பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவைச் செயல்படுத்த, பாஜக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித…
-
- 0 replies
- 423 views
-
-
காஞ்சிபுரம்: கல்பாக்கத்தில் இனிமேல் புதிய அணுஉலை திறக்கக்கூடாது என ஏற்படுத்தப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று கையெழுத்திட்டார். சுமார் 30 வருடமாக கல்பாக்கத்தில் அணுஉலை இயங்கி வருகிறது. 2 அணுஉலைகள் இயங்கி வரும் நிலையில் தற்போது மேலும் 'பாவினி' என்ற ஒரு அணுஉலையை கட்டி வருகிறார்கள். இந்த அணுஉலையைத் தொடர்ந்து, மேலும் புதிய அணுஉலைகள் கட்டக்கூடாது எனக்கூறியும், கல்பாக்கத்தைச் சுற்றி சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், வெங்கம்பாக்கம், குன்னத்தூர், மனமை, நல்லாத்தூர், வாயலூர், கொக்கிலமேடு போன்ற சுமார் 16 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். அணுஉலைக்கு சொந்தமான பள்ளிகளில் இடம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் சுற்றுவட்டா…
-
- 0 replies
- 456 views
-
-
மதுரை ரயில்வே நிலையம் அருகே விக்டோரியா ராணியால் உருவாக்கப்பட்ட எட்வர்டு மன்றத்தில், அரசு ஊழியர் மற்றும் வழக்கறிஞர்களும் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மன்றத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியர். கடந்த சில ஆண்டு சில ஆண்டுகளாக இந்த மன்றத்தில் சிலர் மதுபானம் அருந்துவதாக மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு புகார்கள் குவிந்தன. இந்த நிலையில் 22.05.2013 புதன்கிழமை இரவு 50க்கும் மேற்பட்ட போலீசார் மன்றத்தை சுற்றி வளைத்தனர். உள்ளே மது அருந்தியதாகவும், மது அருந்தும் கூடம் அனுமதியின்றி வைத்திருந்தாகவும் 41 பேரை பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவருமே மத்திய மாநில அரசு ஊழியர்கள், வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகளாவர். முன்னாள் மதுரை காவல்துறை உதவி கண்காண…
-
- 0 replies
- 396 views
-
-
இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்ட நிகழ்ச்சி குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமார் என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார். அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு ஒரு சிறிய ஜாமின் தொகை கட்டி பிணையில் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகை கட்டப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். விஜய் குமார் இதற்கிடைய…
-
- 0 replies
- 323 views
-
-
அரக்கோணம்: திருவாலங்காடு ரயில் நிலையத்தில், சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்ற அரக்கோணம் மின்சார ரயில் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பகல் அரக்கோணம் சென்ற மின்சார ரயில், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதில் இருந்த பயணிகள் இறங்கினர். அந்த சமயத்தில் அங்கு சிவப்பு சிக்னல் இருந்துள்ளது. ஆனால் இதனை கவனிக்காத ஓட்டுனர், பயணிகள் இறங்கியதும் வழக்கம்போல் ரயிலை இயக்கி கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து பதறிப்போன அந்த ரயில் நிலைய கார்ட் தகவல் அளித்ததும், ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பாதையில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே இது தொடர்பாக அந்த ரயில் ஓட்டுந…
-
- 1 reply
- 544 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே, மைசூரில் அவரை கொல்ல சதி முயற்சி நடந்ததாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22ம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மைசூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பேசியதாவது:- 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக மைசூரிலேயே அவரை கொல்ல சதி நடந்தது. பாராளுமன்ற தேர்தலுக்காக மைசூரில் அவர் பிரசாரம் செய்ய வந்தார். லலித் மஹால் பகுதியில் அவரது கார் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரு…
-
- 0 replies
- 675 views
-
-
இந்தியாவின் தமிழக மாநிலத்தில், இலங்கையர் ஒருவர் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை கொலை செய்து, தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய், மனைவி மற்றும் மகளை இவ்வாறு குறித்த இலங்கையர் கொடூராமன முறையில் படுகொலை செய்துள்ளார். மூன்று பெண்களும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 48 வயதான சீ.சுந்தரேசன் என்பவரே இவ்வாறு மூன்று பேரைக் கொலை செய்து தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த நபர் சென்னைக்கு சென்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 1 reply
- 495 views
-
-
கடலூரில் தடையை மீறி கருத்தரங்கம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை மீறி தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் போட்டு டிஜிட்டல் பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் வைத்ததால் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலையில் நடந்தது. ஆனால…
-
- 1 reply
- 793 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று மேலும் 3 பேரை கைது செய்தனர். அவர்களில் அஜித் சண்டிலாவுடன் நெருங்கிய தொடர்புள்ள மணிஷ் குதேவாவும் ஒருவர். மணிஷ் குதேவா, 2003-2005ல் ரஞ்சி கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர். நாக்பூரை சேர்ந்த சுனில் பாட்டியா, கிரண்டோலே ஆகிய தரகர்களும் இவர்களுடன் கைதாகினர். அஜித் சண்டிலா ஒரே நேரத்தில் 4 தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக டெல்லி போலீசார் கூறினர். சூதாட்ட தரகர்களுடன் ஐ.பி.எல். வீரர்கள் நடத்திய சுமார் 100 மணிநேர செல்போன் உரையாடல்களை இடைமறித்து ஒட்டு கேட்டதன் மூலமாக இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் போலீசார் கூறினர். மேலும், மும்பை, சண்டிகர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள ஓட்டல்களில…
-
- 0 replies
- 442 views
-
-
நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவு தின கருத்தரங்கு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கடலூரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதிய கடலூர் புதுநகர் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பேரணிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் கடலூர் நகரின் முக்கிய இடங்களில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் மறைந்த பிரபாகரன் மற்றும் சீமான் ஆகியோர் படத்தை அச்சிட்டு 20 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். இதை அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்த…
-
- 13 replies
- 910 views
-
-
கடலூரில் சீமான் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் இன எழுச்சி கருத்தரங்கம், பேரணி-பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக்கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. இந்த நிலையில் நேற்று காலை கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் அதே இடத்திலேயே திட்டமிட்டபடி இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடக்கும் என்று கூறினார். ஆனால் கூட்டத்தை விரைந்து முடித்துவிட வேண்டும் என்று போலீசார் கூறினார்கள். அதையடுத்து …
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கை இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டு நினைவு: சேலம் மாணவர்கள் அனுசரிப்பு சேலம்: இலங்கை, முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இன்று சேலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அரசு கலைக்கல்லூரி நுழைவாயிலில் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள். சேலம் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவினர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இலங்கை, முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், சேலம் கலைக்கல்லூரியிலிருந்து, போஸ் மைதானம் வரை ஊர்வலமாக வருவதற்காக சேலம் மாநகர காவல்துறையில் அனுமதி பெற்று அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால், திடீரென்று நேற்று காவல்துறை அனுமதியை ரத்து …
-
- 0 replies
- 447 views
-
-
16th May 2013 சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடந்தது. சென்னை தங்கசாலை அருகில் நடந்த கூட்டத்துக்கு தி.மு.க. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:- சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற இந்த எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கிலே குழுமி உள்ள உங்களை காண்பதிலும், நீங்கள் அளிக்கின்ற உற்சாகமான ஆதரவை காண்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெறுகின்றேன். சேது சமுத்திர திட்டம் வருவதால் யாருக்கு என்ன பயன், திட்டத்தின் பலன் என்ன? பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும். இப்படி நடந்தால…
-
- 1 reply
- 361 views
-
-
15th May 2013 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கிச்சநாயக்கன்பட்டி. இங்கு மீனாட்சி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு சுற்று பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் தொழிலாளர்கள் பென்சில் வெடிக்கு முனை மருந்து தடவி கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று பட்டாசில் தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ அருகில் இருந்த மேலும் 2 அறைகளுக்கும் பரவியது. அங்கு குவிக்கப்பட்டு இருந்த பட்டாசுகளும் வெடித்தன. பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் 3 அறைகளிலும் தீ கொளுந்து விட்டு எரிகிறது. …
-
- 0 replies
- 474 views
-
-
13th May 2013 திருவாரூர் கொரடாச்சேரி பகுதியில் உள்ள பிஎம்எச் காலனியைச் சேர்ந்தவர்களான மதன் (23). ராஜா ஸ்ரீதர் (19) ஆகிய சகோதரர்கள் இருவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியை சேர்ந்த ஹாஜி முகம்மது தலைமையிலான கும்பல் கொடூரமாக வெட்டியது. இருசக்கர வாகன பழுது பார்ப்பில் ஏற்பட்ட சண்டை காரணமாக விரோதம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் திருவாரூர் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நள்ளிரவு ஒரு மணி அளவில் நடந்துள்ளது. இந்த இச்சம்பவம் குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் இறந்த ஒருவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவார். h…
-
- 0 replies
- 518 views
-
-
கோவை: வணிக வளாகம் கட்ட ரூ20 லட்சம் செலவில் 35 அடி தூரம் செயற்கையாக நகர்த்தப்பட்ட வீடு. கோவை: கோவையில் பெரிய பங்களா வீட்டை பாதியாக பிரித்து, அதில் ஒரு பாதியை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. கோவை, சாய்பாபா காலனியில் உள்ள மூன்று தலைமுறை பழமையான மாடி வீடொன்று அதன் உள்ளே உள்ள அனைத்து பொருட்களுடனும் 35 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது. வீட்டை நகர்த்தும் இம்முயற்சியை ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமானக் கம்பெனி ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இது குறித்து அவ்வீட்டின் உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியதாவது, ‘ கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. கடந…
-
- 1 reply
- 683 views
-
-
சென்னை: "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும், மொழிக்கு மட்டுமல்லாமல் வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், அதனை உலகெங்கும் பரப்புவதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், …
-
- 8 replies
- 871 views
-
-
முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த மலிவு விலை உணவக திட்டத்தில், கூடுதலாக பொங்கல் சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும், மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட சபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது, வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் வயிறார உணவு உண்ணும் வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்களை நான் திறந்து வைத்துள்ளேன் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.…
-
- 0 replies
- 520 views
-
-
இந்தியப் பெருங்கடலின் மீதான மூலோபாய கவனிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் தனது அதிசக்தி வாய்ந்த சுகோய் போர் விமானங்களை நிறுத்தும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 27ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில், புதிய விமானத்தளத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி திறந்து வைக்கவுள்ளார். சுகோய் போர் விமான அணி ஒன்றின் (ஸ்குவாட்ரன்) உறைவிடமாக அமையவுள்ள இந்தத் தளத்தில், விமானத் தரிப்பிடங்கள், எரிபொருள் குதங்கள், உள்ளிட்ட எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும் அடுத்த சில ஆண்டுகளில் செய்யப்படவுள்ளன. இந்த அணியில் சுமார் 16 தொடக்கம் 18 வரையான சுகோய் போர் விமானங்கள் இடம்பெறவுள்ளன. தஞ்சாவூர் ஓடுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து வழக்கமான போர் விமானங்கள் ம…
-
- 6 replies
- 839 views
-
-
2000வது ஆண்டில் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரியில் வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் பேருந்துக்கு தீவைத்து 3 மாணவிகளை உயிருடன் எரித்துக் கொன்றனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அடக்குமுறைகள் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு ஆகும். எதிர்க்கட்சிகள், அரசு ஊழியர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரும் இத்தகைய அடக்கு முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, பா.ம.க. மீது பழிபோட்டு, அது ஒரு வன்முறைக்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 14.05.2013 செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைய…
-
- 1 reply
- 541 views
-
-
தமிழ்நாடு என்றதும் அதன் வரலாறு, பழமையான கோயில்கள், வானளாவிய கோபுரங்கள், மசூதிகள், தேவாலயங்கள் அரண்மனைகள், கோட்டைகள் என அதன் பழமையும் பெருமையும் நினைவுக்கு வந்தாலும், அவற்றை எல்லாம் விட்டு,தமிழ்நாட்டைக் கேலி செய்ய விரும்புகிறவர்கள், அதிலும் குறிப்பாக சிங்களவர்கள் தமது கையில் எடுக்கும் ஆயுதம் இந்திய நகரங்கள் எல்லாவற்றிலும் காணப்படும் அழுக்கு, குப்பை, கண்ட இடத்திலும் காணப்படும் மலம், சிறுநீர் கழிவுகளைத் தான். தமிழ்நாட்டின் நவீன கட்டிடங்கள் கூட துப்புரவாக இருப்பதில்லை, கட்டப்பட்டு முதல் சில மாதங்கள் துப்புரவாக அழகாக இருக்கும் அதன் பின்னால் பழைய குருடி கதவைத் திறவடி தான். அதற்கென்று துப்ப…
-
- 8 replies
- 1.9k views
-
-
இந்தியாவில் எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு, அரசுகளுக்கு அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பொது அமைதியைக் காக்கவேண்டி பாமகவைத் தடை செய்யவும் தனது அரசு தயங்காது என எச்சரித்திருந்தார், ராமதாஸின் கைதிற்குப் பின்னர் பாமக பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராமதாஸ், பேருந்துகள் மீதான கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச் சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்தல், மரங்களை வெட்டிச் சாய்த்தல் …
-
- 0 replies
- 325 views
-
-
மே -17, 2009 : இன அழிப்புப் போரில் உயிர் நீத்த அனைத்து ஈழத் தமிழருக்கும் எமது நினைவஞ்சலி! இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவாக எதையும் ஏற்க மறுப்போம்! மே 17, 2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் சென்னையில் இடம்: வள்ளுவர்கோட்டம், நேரம் : காலை 11 மணி மாணவர்களே அணிதிரண்டு வாரீர்! அன்பார்ந்த மாணவர்களே – உழைக்கும் மக்களே! 2009 மே 17 -ல் ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிகட்டப்போரில் மே 17-ம் தேதி விடுதலைப்புலிகளின் அமைப்பு ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டது. இதோடு சேர்த்து மே-18,19 தேதிகளில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும்…
-
- 0 replies
- 1k views
-