Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சல்மான் ரவி பதவி,பிபிசி செய்தியாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர் மே 10ஆம் தேதி வரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கடும் வெப்பம் இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மே மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும். வெப்ப அலை காரணமாக பல மாநிலங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும். இந்த செயல்முறை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. ஏப்ரல் முதல் மே மற்றும் ஜூன் வரை, சூரியன் முழு வீரியத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை வெப்ப அலை ஏப்ரல் 11 முதல் 20 வரை மட்டுமே இருந்துள்ள…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 49 நிமிடங்களுக்கு முன்னர் ”இந்திய அரசமைப்பு சட்டம் சொல்லக்கூடிய சமத்துவ கோட்பாட்டின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு பள்ளியில் இருக்கக்கூடிய வசதிகள் அனைத்தும், நாட்டின் ஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையிலேயே அத்தகைய சமமான வாய்ப்பு இருக்கிறதா?” தனியார் பள்ளிகளுக்கு இணையாக வரும் புதிய கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு …

  3. பட மூலாதாரம்,KANNAGI TEMPLE TRUST படக்குறிப்பு, கோயிலின் முகப்பு தோற்றம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு - கேரளா எல்யைில் உள்ள கண்ணகி கோவில், தமிழக பகுதியில் இருந்தாலும் அதன் பராமரிப்பை இன்றளவும் கேரளாவே மேற்கொண்டு வருகிறது. சேர, சோழ, பாண்டிய வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்த கோவின் பின்னணி, அதை ஏன் தமிழர்கள் மட்டுமின்றி கேரள மாநிலத்தவர்களும் வழிபடுகிறார்கள்? விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம். தமிழ்நாடு - கேரளா எல்லையில் குமுளி பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது.…

  4. ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 13 ஏப்ரல் 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MUDURAI MEENATCHIYAMMMAN TEMPL படக்குறிப்பு, மதுரை கோயில் தேரோட்டம் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் பொதுவாகக் கோயிலுக்கும் சமூகத்திற்குமான உறவைக் காத்து வளர்த்து வருவன. சில திருவிழாக்களுக்கே தொலைவில் உள்ள மக்களையும் ஈர்த்து சமூகத்திற்கும் கோயிலுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் ஆற்றல் அமைந்திருக்கிறது என்கிறார் தொ.பரமசிவன். அப்படி அவர் குறிப்பிடும் கோயில்தான் மதுரை கள்ளழகர் கோயில். மதுரை என்றதும் மீனாட்சியும் கள்ளழகரும் நினைவிற்…

  5. ‘மிஸ் கூவாகம்’ ஆக சென்னை நிரஞ்சனா தேர்வு; திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மிஸ் கூவாகம் ஆக தேர்வு செய்யப்பட்ட நிரஞ்சனா (நடுவில்). | படங்கள்: சாம்ராஜ் விழுப்புரம்: மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து திருநங்கைகள் வருகைபுரிவார்கள். இதனையொட்டி திருநங்கைகளுக்கான நடன நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள், மிஸ்கூவாகம் நடத்த…

  6. படக்குறிப்பு, பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர் 22 ஏப்ரல் 2023 அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ 'போலி' என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன். சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்றவாறு ஒருவர் பேசுகிறார். அந்த ஆடியோவில் பேசிய…

  7. ஜி ஸ்கொயர் ஐடி ரெய்டு: சபரீசனுக்கு ஸ்கெட்ச் - மோடி Vs ஸ்டாலின் சண்டையின் நீட்சியா? ஜி ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது. ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா, அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்திக் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பர்கள். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது சபரீசன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது கார்த்திக் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சபரீசனை நெருக்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 16 ஏப்ரல் 2023, 09:47 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சில நாட்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. மீனவர்களை கடல்பகுதியில் இருந்து நீக்கும் முயற்சி என்று இந்த நடவடிக்கைக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது. இத…

  9. தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தானியங்கி மூலம் மது விற்பனையை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் மால்கள் உள்பட 500 இற்கும் மேற்பட்ட இடங்களில் அந்த இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூ…

  10. ஆளுங்கட்சியின் ஊழல் - அதை எந்த கட்சி செய்தாலும் - ஒரு தனி பிரச்சினை. ஊழலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் - அது முதலீட்டிய சந்தையில் முறையற்று பெருகும் பணம் எனும் கொள்ளையை ஆட்சியாளர்கள் அனுமதிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு நன்றித்தொகை. நாம் தீவிர முதலீட்டிய விசுவாசிகள் என்பதால், இந்த பொருளாதார அமைப்பினால் பலனடைகிறவர்கள் என்று நம்புகிறவர்கள் எனபதால், இதில் முறையற்று கையூட்டை வழங்குவோர் அதே பணத்தை முறையற்று தானே சம்பாதிக்கிறார்கள் என்பதை ‘கவனிக்க’ தவறுகிறோம். ஒரு துறைமுக கட்டுமானம் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் அது ஏன்? நெடுஞ்சாலை பணிகள் ஒருவருக்கே கிடைக்கிறது என்றால் அது ஏன்? அதில் அபரிதமான பணம் முறையற்று வருகிறது என்பதாலே. உடனே நாம் ஊழல் இ…

  11. பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக சட்டப் போராட்டம்: சீமான் monishaApr 29, 2023 10:25AM மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய நிபுணர் குழு அனுமதி வழங்கியதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு 234 அடி உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் இருந்து கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருந்தது. மேலும் இதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது. அதோடு பேனா நினைவுச் சின்னத்திற்கான சுற்றுச்ச…

  12. 40 நிமிடங்களுக்கு முன்னர் கர்நாடகாவின் ஷிவமோகா பகுதியில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பாஜக வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் மும்முரம் காட்டுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இதில், பாஜகவின் தேர்தல் இணைப் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளார். தேர்தலையொட்டி கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். …

  13. பட மூலாதாரம்,TNDIPR கட்டுரை தகவல் எழுதியவர்,கவியரசு வி பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதா மூலம் நீர்நிலைகளை அரசு தனியாருக்கு தாரைவார்ப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவகாரம் சமீபத்திய சர்ச்சையாக கருதப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளான 21.04.2023 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் வகையிலான, `தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட மசோதாவை’ (Tamil …

  14. மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம்: திருப்பூர் துரைசாமி christopherApr 29, 2023 09:41AM மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் இன்று (ஏப்ரல் 29) எழுதியுள்ள கடிதத்தில், “மதிமுகவை தொடங்கியபோது, வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் சமீபகாலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்துவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், “கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகை…

  15. படக்குறிப்பு, அரவிந்தசாமி கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடந்த 13வது பட்டமளிப்பு விழாவில் 'ஆளுநருக்கு பாதுகாப்பு' என்ற பெயரில் பாதுகாப்பு பணியில் இருந்த சில காவலர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவரும் பட்டம் பெற வந்தவருமான அரவிந்தசாமியின் ஆடைகளை களைந்து அறையில் பூட்டி வைத்து அவமானப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த இட…

  16. பட மூலாதாரம்,TWITTER@CMOTAMILNADU கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் என்று கூறி வினோத் பாபு என்பவர் பலரிடமும் மோசடியில் ஈடுபட்டதாக புகார் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தினேஷ் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? ராமநாதபுரம் மாவட்டம் கீழசெல்வனூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத் திறனாளியான இவர், அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 சக்க…

  17. கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத மணல் மாஃபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலையில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு பேர் அரிவாளால் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகே இருந்தவர்கள் திருநெல்…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதாவால் எழுந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு அரசு அடுத்த சிக்கலை எதிர்கொண்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் மது பரிமாற அனுமதி என்று தமிழ்நாடு அரசிதழில் வெளியான அறிவிப்பு பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்த பிறகும் கூட சந்தேகங்கள் தீரவில்லை. எதிர்க்கட்சிகள் பலவும் தமிழ்நாடு அரசைக் கண்டித்திருப்பதுடன் பல கேள்விகளையும் முன்வைத்துள்ளன. தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி என்று காட்சி ஊடகங்களில் வெளியான செ…

  19. பட மூலாதாரம்,M.K.STALIN கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொழிலாளர் நிலையை மேலும் மோசமாக்கும் என தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கா…

  20. ஆணவ படுகொலை: பெற்ற தாயையும், மகனையும் கொடூரமாக கொன்ற தந்தை! monishaApr 15, 2023 18:55PM கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தையே மகனை கொடூரமாக வெட்டி ஆணவக் கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (45). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இவருடைய மகன் சுபாஷ் (25) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபோது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுஷா என்பவரை காதலித்துள்ளார். ஆனால், சுபாஷ் மற்றும் அனுஷா இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். பட்டியலினத்தோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்த அரசிய…

  22. கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் யானை - மனித மோதல்களால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து செய்தி வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு மத்தியில் யானைக்கு வைக்கப்பட்ட பெயர் ஒன்று தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வந்த கருப்பன் என்கிற ஆண் யானை வனத்துறையால் பிடிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதிகளில் கருப்பன் என்கிற ஆண் யானை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ச…

  23. தமிழ்நாட்டையும் – தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் – மோடியிடம் கோரிக்கை! தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பத…

  24. படக்குறிப்பு, மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் துவங்கப்படுவதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியதாக மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஆளுநர் மாளிகை அதை மறுக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அந்தத் துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும் போது ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது, "கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சித்த மருத்துவப் பல்கலைக்…

  25. பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை காவல்துறை தலைமைக் காவலர் ஒருவர், தனது மகளுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அந்தக் குழந்தைக்கு உறுப்புக் குறைபாடு ஏற்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார். இதற்குக் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 13) அன்று தலைமைச் செயலக வாசலில் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால்தான், அவரது புகாரை மருத்துவத்துறை மற்றும் காவல்துறை ஏற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.