Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு! வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி 19 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு, ‘வேளாண் பெருமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வக…

  2. கொரோனா தொற்றின் காரணமாக... 40 இலட்சம், இந்தியர்கள்... உயிரிழப்பு! கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனை மத்திய அரசு மறைப்பதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை எனவும், இன்னமும் பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா காலத்தில் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்தது 5 இலட்சம் பேர் கிடையாது எனத் தெரிவித்த அவர், 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். …

  3. மாலத்தீவு-சீனா உறவுகள் நெருக்கமாகி வரும் நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் அந்நாட்டை விட்டு நாளை மறுநாள் (மே 10-ஆம்) வெளியேற உள்ளனர். படிப்படியாக நிகழும் இந்த வெளியேற்றம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் முழுமையடைய வேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கருதப்படும் மாலத்தீவு அதிபர் முய்சு விதித்துள்ள மே மாதக் காலக்கெடுவை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் படிப்படியாக திரும்பப் பெறப்படுவர். மாலத்தீவில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மீட்பு மற்றும் உளவு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு சிறிய விமானத்தை பராமரிக்கவும், இயக்கவும் தனது ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளதாக இந்தியா கூறியுள்ளது…

  4. நல்லாதான் போய்ட்டிருந்துச்சு.... திடீர்னு செருப்பால, அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இது பாஜக கலாட்டா! நல்லாதான் பேசிட்டு இருந்தாங்க.. திடீர்னு செருப்பு எடுத்து பாய்ந்து பாய்ந்து அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி அடித்து கொண்டவர்கள் பாஜக எம்பியும், எம்எல்ஏவும்தான் என்பதுதான் விஷயமே! உத்திரபிரதேசம் சந்த் கபிர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இதில், பாஜக எம்பி சரத் திரிபாதி மற்றும் பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எல்லோருமே சேரில் உட்கார்ந்து அமைதியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையில் பேனரில் பெயர் சேர்க்கப்படாதது குறித்து காரசார விவாதம் எழுந்தது.திடீரென…

  5. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மி…

  6. காஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம் - உச்ச நீதிமன்றத்தால் உடைக்க முடியுமா? 18 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTAUSEEF MUSTAFA இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 3…

  7. படத்தின் காப்புரிமைPAKISTAN FOREIGN MINISTRY Image captionகுல்பூஷன் ஜாதவ் குடும்பத்துடன் சந்திப்பு. (கோப்புப் படம்) பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்திய தூதர அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான். இது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட தகவல்: "இந்திய உளவாளியும், பணியில் உள்ள இந்திய கடற்படை அதிகாரியும், இந்திய உளவு நிறுவனமான 'ரா' வுக்காக செயல்பட்டவருமான கமாண்டர் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிக்கு சர்வதேச நீதிமன்ற உத்தரவுப்படி வாய்ப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையர் அலுவலக பொறுப்பு அதிகாரியான கௌரவ் அலுவாலியா,…

    • 0 replies
    • 492 views
  8. தென் இந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். குஜராத் அருகே சர் கிரீக் பகுதியில் இருந்து ஆளில்லாத சில படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்றதாக போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் விமான நி…

    • 0 replies
    • 214 views
  9. 2020-2021 மத்திய பட்ஜெட்டின் முழுமையான விபரம்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் முழுமையான விபரங்கள் தரப்பட்டுள்ளன. விபரம் வருமாறு: 1. தனிநபர்களுக்கு புதிய வருமானவரி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சில விலக்குகளுடன் வரிச்சலுகை பெறலாம். 2. புதிய வரிவிதிப்பின்படி, ஆண்டுக்கு ரூ.5-7.5 இலட்சம் வரை 10 சதவீதம் வரி, ரூ.7.5-ரூ.10 இலட்சம்வரை 15 சதவீதம் வரி, ரூ.10-12.5 இலட்சம் வரை 20 சதவீதம் வரி, ரூ.12.5 முதல் 15 இலட்சம் வரை 25 சதவீதம் வரி, ரூ.15 இலட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி 3. ரூ.5 இலட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு 4. வங்கியில் வைப்புச் செய்துள்ள பண…

  10. இலங்கையின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்- இந்திய முப்படைகளின் பிரதானி நேபாளத்திற்கு அறிவுரை நேபாளம் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட, இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்கவேண்டும் என இந்திய முப்படைகளின் பிரதானி ஜெனரல் பிபின் ராவட் தெரிவித்துள்ளார். நேபாளம் சர்வதேச விவகாரங்களில் சுதந்திரமாக செயற்படலாம் ஆனால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்கவேண்டும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவு இமயமலை போன்று உயர்ந்தது என தெரிவித்துள்ள பி…

  11. கொரோனா அச்சுறுத்தல்- இந்திய விமானங்களுக்கான தடையை மேலும் நீடித்தது கனடா கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருகின்றமையினால் இந்திய விமானங்களுக்கான தடையை கனடா மேலும் நீடித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை இந்திய விமானங்களுக்கான தடையை நீடித்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதேபோன்று இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இதேவேளை அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பின்னர் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும…

  12. சைரஸ் மிஸ்திரி மரணம்: சாலை விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் கூறுவது என்ன? 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சைரஸ் மிஸ்திரி மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மரணம் சாலை விபத்துகள் பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவரது கார் சாலை டிவைடர் மீது மோதியதில் விபத்து நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி முகமை பிடிஐ தெரிவித்துள்ளது. சைரஸ் மிஸ்திரி தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்…

  13. காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை தலைவராக்க முடியுமா? பிரதமர் மோடி சவால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு தலைவராக்கும் துணிவு இருக்கின்றதா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். சட்டீஸ்கர் சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி அங்கு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தவிர வேறு ஒருவரை நியமித்தால், ஜவகர்லால் நேரு உருவாக்கியது ஒரு ஜனநாயக அமைப்பு என்பதை நா…

  14. ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்திற்கு தடை March 1, 2019 இந்தியாவில் இருந்த பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்வதாக, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. புல்வாமாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதனையயடுத்து காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ள மத்திய அரசாங்கம் இவ்வாறு ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, இந்திய அரசாங்கம் நேற்று (28) விடுத்துள்ளது. 1941இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், அரசியல் சார்ந்த இயக்கமென்றும் அபுல் அலா என்பவர் மூல…

  15. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். டாக்காவில் பனானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புபொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த 5 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில…

  16. 28 APR, 2025 | 04:50 PM புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ என பிபிசி தனது கட்டுரையில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. “காஷ்மீர் மீதான கொடிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பிலான கட்டுரையில் பயங்கரவாதத் தாக்குதலை “போராளித் தாக்குதல்” என்று பிபிசி குறிப்பிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளி விளம்பரம் மற்றும் பொது ராஜதந்திரப் பிரிவு பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்டினுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பிபிசியின் கட்டுரையில் “இந்திய நிர்வாகத்துக்கு உ…

  17. பட மூலாதாரம்,INDIAN NAVY கட்டுரை தகவல் ஜுஹல் ப்ரோஹித் பிபிசி செய்தியாளர், விசாகப்பட்டினத்தில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அர்னாலா கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த கப்பல் நீருக்கடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் திறன் கொண்டது. இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது இக்கப்பல். இந்த கப்பல் குறித்து செய்தி சேகரிக்க பிபிசி இந்திக்கு அனுமதி கிடைத்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கப்பலின் சில பகுதிகளுக்குள் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்திய கடற்பாதுகாப்பு அமைப்பில் இந்த கப்பல் எத்தகைய பங்காற்றப் போகிறது என்பதை அறிந்து கொள்ள பிபிசி முயன்றது. இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 95% கட…

  18. கொரோனா பாதித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் தம்பதிக்கு வைரஸ் பாதிப்பில்லாமல் ஆரோக்கியமுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பதிவு: ஏப்ரல் 04, 2020 16:12 PM புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் புதிய தனி வார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவசரகால பணிக்காக, அதே மருத்துவமனையில் மருத்துவரின் 9 மாத கர்ப்பிணி மனைவி பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணிநேரத்தில், மனைவிக்கும…

  19. இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையிலும் நேபாளத்திலும் எங்களது கட்சி…

  20. உத்தரகண்ட் பனிச்சரிவு: `15 அணுகுண்டின் வேகத்தில் இருந்தது` - ஆய்வில் தகவல் பட மூலாதாரம், Getty Images கடந்த பிப்ரவரி மாதம் உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், இமய மலையில் இருந்து ஒரு பெரிய பனி படர்ந்த பாறை பெயர்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த பனிச்சரிவால் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், மேலும் அப்பகுதியில் கட்டுமானத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நீர் மின் நிலையமும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பேரழிவை சில காணொளிகள் மூலம் நீங்கள் கண்டிருக்கலாம். 50 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு சர்வதேச குழு, இந்த பனிச்சரிவை முழுமையாக மதிப்பீடு செய்து என்ன நடந்தது என விரிவான விவரங்க…

  21. கொரோனா எதிரொலி : குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு! பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து அறிக்கையை நிலைக்குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குறித்த அறிக்கையில், “பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழுந்தைகள் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமூக ரீதியாக பெண் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது அதிகரித்துள்ளது. ஆகையால் விரைவாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசிபோடும் திட்டங்களை விரைவாக கொண்டுவர வேண்டும…

  22. புற்றுநோயின்... தலைநகராகும் வடக்கு, கிழக்கு மாநிலங்கள்! இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலங்கள் புற்றுநோயின் தலைநகரமாக மாறி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், நோய் தொடர்பான தேசிய தகவல் மற்றும் ஆய்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் மேற்படி கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் கலிங் ஜிராங், கடந்த 2020 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாநிலங்களில் புற்றுநோயால் 50 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் 27 ஆயிரத்து 503 ஆண்களும், 22 ஆயிரத்து 814 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாதிப்பு 2025 ஆம் ஆண்டுவரை அங்கு தொடரும் எனக் கருதப்படுவதாக தெரிவ…

  23. அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு! கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா அருகில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO வடிவமைத்துள்ள இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமக்கக் கூடியவையாகும். அருணாச்சல் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் சீன இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில், குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1247151

  24. இந்தியாவிற்கு... அழுத்தம் கொடுக்க, உலகில் எந்த சக்தியும்... இல்லை – பியுஷ் கோயல் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், கொரோனா காலத்தில் ஏழை நாடுகளை காக்க உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் இதனால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை மீனவர்களுக்கான மானியத்தை குறைப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் முன்மொழிவுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பும் வெளியிட்டார். https://athavannews.…

  25. உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் இன்று ஆரம்பம்! உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் ‘கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா’வை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் கூடார நகரத்தையும் திறந்துவைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடையும். மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும். வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.