Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 12 மே 2023 மே 11, 1998இல், ஐந்து அணுகுண்டு சோதனைகள் இந்தியாவை அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தன்னிறைவு அடையும் அணுசக்தி திறன் கொண்ட நாடுகளின் குழுவில் இணைய வைத்தது. மே 11 மற்றும் 13, 1998க்கு இடையில், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான அரசாங்கம், முந்தைய ஆட்சிகளில் கட்டியெழுப்பப்பட்டு வந்த பல தசாப்த திட்டத்துக்கு உருவம் கொடுக்க முனைந்தது. ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான இந்திய ராணுவத்தின் போக்ரான் ஏவுகணை பரிசோதனை தளத்தில் ஐந்து அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியது. ஆனால், அந்த சாதனையை இந்தியா எட்டும் முன்பு பல சவால்களை எதிர்கொண்டத…

  2. செங்கல்பட்டு: செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் எதிரில், பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உழவர் சந்தை மற்றும் தூய கொலம்பா பள்ளி ஆகிய பகுதகிளில் சமூக இடைவெளியில் காய்கறி கடைகள் அமைக்க கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டார்.ஆனால், பள்ளி வளாகத்தில் மட்டும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், அருகில் உள்ள வேணுகோபால் கிளப்பில் காய்கறி கடை இயக்கப்படுகிறது. அங்கு கொரோனா பற்றி அச்சமில்லாமல் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு காய்கறி வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக, வியாபாரிகளும், பொதுமக்களும், முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி விடாமல் உள்ளனர்.அதேபோல், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் இட நெருக்கடியாக இர…

  3. தவறுகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை – இந்திய பிரதமர் மோடி! கடந்த கால தவறுகளில் இருந்து இன்னமும் பாகிஸ்தான் பாடங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என இந்திய பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார். கார்கில் போரில் வெற்றி பெற்று இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போரில் உயிர் நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் இந்தியாவில் ஏற்படுகின்ற பயங்க…

  4. இந்தியாவில் ஆதரவற்றோர் இல்லங்களில் ஆண் குழந்தைகளைவிட 38% அதிக பெண் குழந்தைகள்: பெண் தெய்வங்களின் நாட்டில் ஏன் இந்நிலை? அர்ஜுன் பார்மர் பிபிசி குஜராத்தி 14 நவம்பர் 2021, 11:46 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண் குழந்தைகள் இன்று (நவம்பர் 14) இந்தியா "குழந்தைகள் தினத்தை" கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று சூரத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அக்குழந்தை அக்டோபர் 28ம் தேதி சூரத்தில் பெஸ்தான் என்கிற பகுதியில் உள்ள குப்பை கிடங்…

  5. கும்பல் கொலைகளுக்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கூட்டு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்தியாவில் நடைபெற்று வரும் கும்பல் கொலைகள் குறித்து கவலை தெரிவித்து, இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட பலர் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அந்த கடிதத்தின் மூலம், 49 பிரபலங்கள் "நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்தியதுடன், பிரதமரின் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதுடன், பிரிவினைவாத போக்குகளை ஆதரித்ததற்காக" இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார்தாரரான வழக்கறிஞர் ச…

    • 0 replies
    • 204 views
  6. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துடனான கலவரம் – மோடிக்கு தொடர்பில்லை என அறிவிப்பு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல என நானாவதி குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கலவரத்தில், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு ஏதுமில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நானாவதி குழுவின் இறுதி அறிக்கை குஜராத் சட்டப் பேரவையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் அதனைத் தொடர்ந்து நடந்த கலவரமும் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஓ…

  7. "விடுதலைப் புலிகளுக்கு" புத்துயிர் அளிக்க... ஆயுதங்கள், போதைப் பொருள் மூலம் நிதி திரட்டியதாக... என்.ஐ.ஏ. குற்றச்சாட்டு. இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க நிதி திரட்டியதாக இந்தியாவின் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மீன்பிடி படகுகளில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் மற்றும் ஏராளமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியும், இலங்கையைச் சேர்ந்தவருமான ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையின்போது கேரள உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. விசாரணை அமைப்பு அறிக்கை தாக்கல் செய்தது. 2021 மார…

  8. இந்தியாவில் குடி நோய்க்கு ஆளாகும் பெண்களின் கதை: எப்படி சிகிச்சை பெறுகிறார்கள்? இம்ரான் குரேஷி பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரேர்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடிப் பழக்கத்திற்கு, போதைப் பொருளுக்கும் அடிமையாக இருப்பதை கண்டுப்பிடித்தபோது, அவருக்கு வயது 16 கூட இல்லை. ஒரு கட்டத்தில், அவர் பள்ளியில் போதையில் இருந்ததால், பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். அவர் போதையில் இருந்தபோது பல முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் குறித்து கவலையடைந்த அவரது பெற்றோர், அவரை பல்வேறு மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்து சென்றனர். …

  9. கொரோனா வைரஸ் : இந்தியாவிற்கு உதவி செய்யும் சர்வதேச நாடுகள்! இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய நாடுகள் அனுப்பிவைத்துள்ள மருத்துவ உதவி பொருட்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. இதன்படி 120 ஒக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உதவி பொருட்களுடன் பிரித்தானிய விமானம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவை வந்தடைந்துள்ளது. குறித்த மருத்துவ பொருட்கள் டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதுவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்களும் இந்தியாவிடம் அளி…

  10. உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகளின் உடல்கள்; 6 பேர் கைது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIDEO GRAB/TWITTER படக்குறிப்பு, சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் இந்த அறிக்கையில் உள்ள சில விவரங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடும். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்…

  11. இமாச்சல பிரதேசத்தில்... பெய்த கனமழை காரணமாக, 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு! இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் சுற்றுலாப் பணிகள் மலைப்பகுதிகளுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இமாச்சல பிரதேசத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1228336

  12. பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி பாராட்டு! இந்திய பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ரஷ்யாவிடம் இதற்குமுன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் இல்லை ஆனால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த மெர்சிடிஸ், அவுடி கார்களை விட அவை மிகவும் சிறப்பானவையாக இருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும்…

  13. கொரோனா சிகிச்சைக்காக 40 ஆயிரம் படுக்கைகளை இந்திய ரெயில்வே முதற்கட்டத்தில் தயார்படுத்தி உள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 15:01 PM புதுடெல்லி, கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமுடன் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது. நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து டெல்லி மற்றும் கேரளா இந்த வரிசையில் உள்ளன. இந்த பாதிப்பு எண்ணிக்கை மராட்டியத்தில் 690 ஆகவும், தமிழகத்தில் 571 ஆகவும் நேற்று உயர்ந்து உள்ளது. இந்நிலையில், மராட்டியத்தில் கொர…

  14. நரேந்திர மோதியுடன் தேசிய அரசியலில் மோத நினைக்கும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஜி.எஸ். ராம் மோகன் ஆசிரியர், பிபிசி தெலுங்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே. சந்திரசேகர் ராவ் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் படங்களுடன் செய்திகள் வெளியாவதை மும்பை மக்கள் சமீப நாட்களில் பார்க்க முடிந்தது. கே சந்திரசேகர் ராவ் பற்றிய மராத்தி மொழி விளம்பரங்கள் மற்றும் அவரது புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாகியிருந்தன. மராத்தியர்கள் மட்டும…

  15. உலகளவில் இந்தியா சரியான இடத்தைப் பிடிக்கும்: குடியரசுத் தலைவர் மின்னம்பலம்2022-01-26 இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று உலகளவில் சரியான இடத்தைப் பிடிக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாட்டின் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என்று தெரிவித்த அவர், இரு நாட்களுக்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்ததினத்தை நாம் கொண்டாடினோம். இவர்தான் ‘ஜெய்-ஹிந்த்’ என்ற உற்சாகமான வணக்கத்தைப் பின்பற்றியவர். சுதந்திரத்துக்கான இவரது தாகம், இந்தியாவைக் கவுரமான நாடாக்க…

  16. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி விவகாரம்: சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு முக்கிய அறிவுறுத்தல்! by : Jeyachandran Vithushan எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவை கைது செய்ய சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவருடைய மனைவி பிரியங்க நியோமலி விஜயநாயக்கவையும் கைது செய்யவும் அவர்களுக்கான பிடியாணையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு இன்று (திங்கட்கிழமை) அறிவுறுத்தியுள்ளார். விமானக் கொள்வனவு தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் ஏயார்பஸ் நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்…

    • 0 replies
    • 202 views
  17. காளான் வளர்ப்பு: வீட்டுக்குள் இருந்தபடி வியாபாரம் செய்யும் பெண்கள் பிரீத்தி குப்தா & பென் மோரிஸ் பிபிசி மும்பை 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANIRBAN NANDY படக்குறிப்பு, ஃபுல்ரிடா எக்காவுக்கு காளான் வளர்ப்பு பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய உதவியது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்திலுள்ள சிலிகுரி அருகே வசிக்கும் ஃபுல்ரிடா எக்கா, தான் ஒரு புதிய வருமான ஆதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார். அவருடைய கணவர் இறந்துவிட்டார். அவருடைய பருவாகல் வேலையான தேயிலை பறிக்கும் வேலை, குடும்பத்தை நடத்தப் போதுமான வருமானத்தை வழங்கவில்லை. …

  18. பெட்ரோல் ரூ. 9.50, டீசல் ரூ.7, சிலிண்டர் ரூ.200 வரை குறைந்தது - நரேந்திர மோதி அரசின் புதிய அறிவிப்புகள் - பின்னணி என்ன? 21 மே 2022, 14:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 வரை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் இந்த அறிவிப்பு சாத்தியமாகியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அளவிலான மதிப்புக் கூட்டு வ…

  19. எல்லையில் பாக்- தலிபான் மோதல் -முழுமையான யுத்தம் குறித்து அச்சம் Published By: Rajeeban இ01 Jan, 2025 | 02:20 PM https://www.telegraph.co.uk/ பாக்கிஸ்தானிய படையினரை இலக்குவைத்து ஆப்கானின் தலிபான்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக முழுமையான யுத்தம் குறித்து அச்சநிலையேற்பட்டுள்ளது. பாக்ஆப்கான் எல்லையில் உள்ள பாக்கிஸ்தானின் பலநிலைகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ள தலிபான் பாக்கிஸ்தான் பதில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்த்து எல்லைக்கு தனது ஆயுதமேந்திய உறுப்பினர்களை அனுப்பிவைத்துள்ளது. ஆப்கானின் தலிபானிற்கு நெருக்கமான தெஹ்கீர…

  20. பணமதிப்பு நீக்கத்தின் போது நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானி வங்கி வாசலில் கியூவில் நின்றனரா?- ராகுல் காந்தி Published : 03 Apr 2019 19:29 IST Updated : 03 Apr 2019 19:29 IST பிரதமர் மோடி, ராகுல் காந்தி பணமதிப்பு நீக்கத்தின் போது மக்கள் தங்கள் பணத்துக்காக வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள், நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானியா நின்றனர் என்று ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி மீது தன் விமர்சனத்தைத் தொடர்ந்தார். அசாம் மாநிலம் லக்மிபூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: மெஹுல் சோக்சி, நிரவ் மோடி, அனில் அம்பானியா பணமதிப்பு நீக்கத்தின் போது வங்கியி…

  21. இரண்டே நாட்களில் 718 பேர் மியான்மரில் இருந்து மணிப்பூர் வந்தது எப்படி? - அசாம் ரைஃபில்ஸ் படையிடம் விளக்கம் கோரிய மாநில அரசு 25 Jul, 2023 | 10:21 AM மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ் படையிடம் மணிப்பூர் மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது. ஜூலை 23 மற்று 24 தேதிகளில் 301 குழந்தைகள் உள்பட 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளனர். முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் இத்தனை பேர் எப்படி நுழைந்தனர் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி இது தொ…

  22. 10 ஆயிரம் கோடி இந்திய ரூபா செலவில் 3 ரயில் நிலையங்கள் By VISHNU 30 SEP, 2022 | 01:48 PM நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புது டில்லி, அகமதாபாத் மற்றும் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சிஎஸ்எம்டி) ரயில் நிலையங்களை ரூ.10,000 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே துறைக்கான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த ரயில் நிலையங்கள் எதிர்கால வடிவமைப்பு மற்றும் பயனீட்டாளர் வசதிக்காக மேம்படுத்தப்படும் என்றும், இந்த திட்டங்களுக்கான விலைமனுக்கோரல் அடுத்த பத்து நாட்களில் வெளியிடப்பட்டும் என்றும் கூறினார். இந்த நிலையங்களின் மறுமேம்பாட்டிற்கு 2-3.5 ஆண்டுகள் ஆகும். போக்குவர…

  23. காஷ்மீர் விவகாரம்: இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானில் பேரணி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. ஜமாத், இஸ்லாமி என்ற கட்சியின் ஏற்பாட்டில் கராச்சி நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்றவர்கள் காஷ்மீரை இந்தியாவில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். குறித்த பேரணியில் 1000க்கும் மேற்கொண்டோர் பங்பேற்றிருந்தனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரத்தை கடந்த மாதம் 5ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்தது. இதற்கு …

  24. ஒடிசாவில் வெற்றிகரமாக நிறைவடைந்த பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணையின் முதல் சோதனை By NANTHINI 04 NOV, 2022 | 04:47 PM நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் விமானங்களை நடுநிலையாக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை (ballistic) எனும் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணையின் முதல் சோதனை அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணையான பாதுகாப்பு இடைமறிக்கும் ஏடி1 ஏவுகணையின் முதல் விமான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தியது. வெவ்வேறு புவியியல் ந…

  25. Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 04:37 PM பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளின் போது அரசியல் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஆசிய சமூகத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தவேளை நாங்கள் உதவ முன்வந்தோம். வெளிப்படையாக சொல்வதென்றால் யாரும் உதவ முன்வராதபோது நாங்கள் உதவமுன்வந்தோம் என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இதனை செய்தோம் என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். தக்க தருணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் உதவினோம் 4.5 மி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.