அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
நேஷனல் ஹெரால்டு: சோனியா குடும்பத்தை சோதிக்கும் ஊழல் புகாரின் பின்னணி என்ன? சோயா மதீன் பிபிசி செய்திகள், டெல்லி 13 ஜூன் 2022, 05:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று, திங்கள்கிழமை அரசு முகமையான அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார். இதனையொட்டி, நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரித்துவரும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு குறித…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
26/11 மும்பை தாக்குதல்; அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா! 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா (Tahawwur Hussain Rana), புதன்கிழமை (9) அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் விரைவில் இந்தியா திரும்பவுள்ளார். 64 வயதான அவர் சிறப்பு தனி விமானம் மூலம் இந்தியாவின் டெல்லிக்கு அழைத்து வரப்படவுள்ளார். அவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே, அவரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) காவலில் எடுத்து விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய-அமெரிக்கரான தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் மற்றும் 166 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்…
-
- 2 replies
- 196 views
-
-
ஜாலியன்வாலா பாக் படுகொலை: 21 ஆண்டுகள் காத்திருந்து உதம் சிங் பழிவாங்கியது எப்படி? பட மூலாதாரம்,WWW.SHAHEEDKOSH.DELHI.GOV.IN கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 21 மார்ச் 2023, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 21 மார்ச் 2023, 05:01 GMT மாரியோ புஸோவின் The God Father என்ற ஆங்கில நாவலில், "ரிவென்ஜ் இஸ் எ டிஷ் தாட் டேஸ்ட்ஸ் பெஸ்ட் வென் இட் இஸ் கோல்ட்” என்ற ஒரு வசனம் வரும். 'பழிவாங்கல் என்பது ஆறவைத்து பரிமாறப்படும்போது மட்டுமே எல்லாவற்றையும் விட சுவையாக இருக்கும் ஒரு உணவு பதார்த்தம் போன்றது' என்பது அதன் பொருள். 1…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
இந்தியாவின் இரட்டை கோபுரங்கள் டெல்லியில் 12 விநாடிகளில் எப்படி இடிக்கப்படும்? இதனால் ஏற்படும் விளைவு என்ன? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விதிகளை மீறியுள்ளதாகக் கூறி இரண்டு கட்டடங்களையும் இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் இரண்டு வானளாவிய கட்டடங்கள் 12 விநாடிகளில் இடிக்கப்படும். ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர்டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டன. பிறகு அவை…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
புற்றுநோயை உண்டாக்கும் பாணிபூரிக்கு தடை. கர்நாடக சுகாதாரத்துறையினரால் மாநிலம் முழுவதிலும் உள்ள 250 பாணி பூரி மாதிரிகள் பெறப்பட்டு நடாத்திய பரிசோதனையில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் நீலம், Tartrazine போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோலி பிளவரை வைத்து செய்யப்படும் கோபி மஞ்சூரியன் மற்றும் சிக்கன் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது. இதனை தொடர்ந்து …
-
- 0 replies
- 194 views
-
-
யுக்ரேன் போர்: இந்தியா ஏன் ரஷ்யாவிடம் அதிகமாக எண்ணெய் வாங்குகிறது? ஷ்ருதி மேனன் பிபிசி உண்மைப் பரிசோதனைக் குழு 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யா மீதான யுக்ரேன் படையெடுப்பால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளன. இதனால் ரஷ்யா புதிய வணிக வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்தியா மலிவு விலையில் எண்ணையை வாங்குகிறது. இது குறித்து அமெரிக்கா இந்த எண்ணெய் இறக்குமதி சட்டத்திற்கு எதிரானது அ…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி போட்டி By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 02:19 PM இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடோவின் மனைவி, குஜராத் சட்டமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை தனது வேட்பாளர்களில் ஒருவராக களமிறக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தீர்மானித்துள்ளது. பாஜகவில் ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டு இணைந்தார். அவரை எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில், ஜம்னாநகர் வடக்கு தொகுதியில் போட்டியிடச் செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தர்மேந்திராசின் எம். ஜடேஜாவை நீக…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
50 நிமிடங்களுக்கு முன்னர் இன்று (ஜூலை 1) அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார். விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர். விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு வந்துகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்தது. பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அருகில் இரு…
-
- 1 reply
- 194 views
- 1 follower
-
-
நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை? சட்டம் என்ன சொல்கிறது? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் 29 ஜூன் 2022 பட மூலாதாரம்,TWITTER/GETTY IMAGES படக்குறிப்பு, முகமது ஜுபைர், நூபுர் ஷர்மா (இடமிருந்து வலம்) நூபுர் ஷர்மா மீதும் முகமது ஜுபைர் மீதும் ஒரே பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றாலும் நடவடிக்கைகள் வெவ்வேறாக இருப்பது ஏன் என்று சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? ஆல்ட் நியூஸ் (Alt News) என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர், திங்கள்கிழமை இரவு டெல்லி…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
தனியார் மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்! இந்தியாவில் ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. 2021-2022 நிதி ஆண்டில் 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கலுக்கு அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த நான்கு விமான நிலையங்களின் பங்குகளையும் இந்திய விமான நிலைய ஒழுங்காற்று ஆணையம் விற்கவுள்ளது. இதேவேளை மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்திருக்கும் நிலையில் மீதம் 26 பங்குகளை ஏஏஐ வைத்திருக்கிற…
-
- 0 replies
- 194 views
-
-
கொரோனாவை தடுக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா?: முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 12 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார்.எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத…
-
- 0 replies
- 194 views
-
-
ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க இந்தியா முயற்சி! சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதேபோன்று ரயில்வே நிர்வாகமும் 2030ஆம் ஆண்டுக்குள், கார்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அதாவது, இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில், குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த திட்டத்தின் ஊடாக வ…
-
- 0 replies
- 194 views
-
-
இலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் : இந்தியாவின் நிலைப்பாடு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு! ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என அதிமுக ராஜ்சபா உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநா…
-
- 0 replies
- 193 views
-
-
காலாவதியுள்ள 100 மில்லியன் அளவு கொவிட்-19 தடுப்பூசிகள் அழிப்பு! காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது. குறைந்த தேவை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிஷீல்ட் உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா, அஸ்ட்ராஸெனெகாவின் வக்ஸெவ்ரியா உள்ளூர் தடுப்பூசி அளவை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் டோஸ்களில் 90 சதவீதத் க்கும் அதிகமானவை கோவிஷீல்ட் ஆகும். இந்தியா இரண்டு பில்லியனுக்கும் அ…
-
- 0 replies
- 193 views
-
-
கொரோனாவுக்கு எதிரான நீண்ட காலப் போர் இது. நாம் சோர்வடையவோ, ஓய்வு பெறவோ கூடாது என தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் வித்துள்ளார். பதிவு: ஏப்ரல் 06, 2020 15:07 PM புதுடெல்லி பாரதீய ஜனதா கட்சியின் 40-வது தொடக்க தின விழாவில் இன்று அக்கட்சி தொண்டர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் இந்தியா வேகமாக பணியாற்றுகிறது. கொரோனாவுக்கு எதிரான பணியில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். இந்தியாவில் ஊரடங்கை மக்கள் தீவிரமாக கடைபி…
-
- 0 replies
- 193 views
-
-
குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பாஜக வெற்றிபெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்து வந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் பாஜக வேட்பாளர்கள் ஆயிரக்கணக்கான வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தனர். இந்நிலையில், குஜராத்தில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 182…
-
- 0 replies
- 193 views
-
-
அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம். முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. …
-
-
- 2 replies
- 193 views
-
-
முப்பதிற்கும் மேற்பட்ட... இந்திய மீனவர்களை, கைது செய்தது பாகிஸ்தான்! பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பாகிஸ்தான் சிறப்புப் பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடந்த 18 ஆம் திகதி ரோந்து சென்ற போது ஊடுருவிய 5 இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த 31 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தப் படகுகள் கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1268200
-
- 0 replies
- 193 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் காஸ்மீரில் காணப்படும் மனித உரிமை நிலவரம் குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார். பாக்கிஸ்தானின் வெளிவிவகார அலுவலக பேச்சாளர் முகமட் பைசல் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்முகாஸ்மீரில் காணப்படும் மோசமான நிலைமை மற்றும் மனித உரிமை நெருக்கடி குறித்து வெளிவிவகார அமைச்சர் சா மெஹ்மூட் குரேசி இலங்கை வெளிவிவகார அமைச்சரிற்கு எடுத்துரைத்தார் என பாக்கிஸ்தானின் வெளிவிவகார அலுவலக பேச்சாளர் முகமட் பைசல் குறிப்பிட்டுள்ளார். ஜம்முகாஸ்மீரில் 100 நாட்களாக காணப்படும் நிலைமை சர்வதேச சமூகத்தின் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என பாக்கிஸ்தான் …
-
- 0 replies
- 193 views
-
-
நோரோ வைரஸ்: கேரளாவை அச்சுறுத்தும் பாதிப்பு - அறிகுறிகள் என்ன? எப்படி தற்காத்துக் கொள்வது? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@THESAUDADEGUY கேரள மாநிலத்தில் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக நம்பப்படும் நோரோ வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள வயநாடு அருகே உள்ள பூக்கோடு என்ற கிராமத்தில் கால்நடை மாணவர்கள் 13 பேரை இந்த வைரஸ் தாக்கியிருப்பதை அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த வைரஸ் அறிகுறியுடன் மேலும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "இப்போதைக்கு இந்த வைரஸ் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்றாலும், மக்கள் …
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
படக்குறிப்பு,போலீசார் சங்கிலியை உடைத்து அந்த பெண்ணை மீட்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், முஷ்டாக் கான் பதவி, பிபிசி மராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவரே அவரை கட்டி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பாதிக்கப்பட்ட அந்த பெண், ஒரு பேப்பரில் எழுதி காட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்துள்ளார். அவரது ஆத…
-
- 1 reply
- 193 views
- 1 follower
-
-
இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் ISIS தாக்குதல் – உளவுத்துறையின் முக்கிய எச்சரிக்கை! இந்தியாவில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களை நடத்த ஜெய்ஸ் இ முகமது மற்றும் ISIS அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அஸார் திட்டமிட்டிருப்பதாகவும், சிரியாவின் ISIS அமைப்புடன் இணைந்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகள் குறித்து தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது பாதுகாப்பு பலப்பட…
-
- 0 replies
- 193 views
-
-
திருப்பதி காணிக்கை பணத்தில் 100 கோடி ரூபா மோசடி. திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஒருவர், தனது உள்ளாடைக்குள் மறைத்து உண்டியலிலிருந்த பணங்களை திருடியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் இது அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. சுமார் நூறு கோடி வரை இங்கு திருட்டு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று ம…
-
- 0 replies
- 192 views
-
-
மத்திய அரசுக்கு எதிராக... 20 கோடிக்கும் அதிகமான, தொழிலாளர்கள் போராட்டம்! மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து, ரெயில்வே மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய துறைகளின் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 192 views
-
-
இந்தியாவை எதிர்க்க பிலாவல் பூட்டோ பின்பற்றும் 'தாத்தா வழி அரசியல்' கட்டுரை தகவல் எழுதியவர்,இக்பால் அகமது பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் அறிக்கை ஒன்று சமீப நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. 2022 டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்திற்குப் பிறகு அவர் பிரதமர் நரேந்திர மோதியை 'குஜராத்தின் கசாப்புக்காரர்’ என்று அழைத்தார். முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானை 'பயங்கரவாதத்தின் மையம்' என்று குறிப்பிட்டி…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-