Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உக்ரைனுக்கு தேவையான... மனிதாபிமான உதவிபொருட்களை அனுப்பியது இந்தியா! இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு இரண்டாவது தவணையாக மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார். இதன்படி உணவு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படை விமானம் ருமேனியா சென்றடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகாரெஸ்ட் விமான நிலையம் வந்தடைந்த உதவிப் பொருட்களை ருமேனிய அதிகாரிகளிடம் வழங்க உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1271255 ################ ################ ############### ஸ்ரீலங்கா இன…

  2. இந்தியா- சீனா எல்லை விவகாரத்திற்கான... நிதி ஒதுக்கீடு, முந்தைய ஆண்டுகளை விட அதிகரிப்பு! இந்தியா- சீனா எல்லைக்கான நிதி முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் , வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்தோ-சீனா எல்லைப் பகுதிகளுக்கான நிதி 42 கோடி ரூபாயில் இருந்து தற்போது 249 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1…

  3. பதுங்கு குழிகளில் உணவும் தண்ணீரும் இல்லாமல் தவித்தோம் – உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் தகவல் March 6, 2022 உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், பதுங்கு குழிகளில் உணவும் தண்ணீரும் இல்லாமல் தவித்ததாகவும், அங்கிருந்து தப்பிக்க பூஜ்ஜிய வெப்பநிலையில் நடந்ததாகவும் கூறியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நூர் ஹாசன், “நான் இந்தியாவைச் சேர்ந்த 50 மாணவர்களுடன் இணைந்து, ருமேனிய எல்லையை அடைய மார்ச் 1 ஆம் தேதி கிவ் நகரில் உள்ள எனது கல்லூரியில் இருந்து பஸ்ஸை வாடகைக்கு எடுத்தோம். உக்ரேனிய இராணுவத்தின் பல சோதனைகளுக்குப் பிறகே நாங்கள் எல்லையை அடைந்தோம்” என்று தன் துயர் பயணத்தை ந…

  4. 13 பிப்ரவரி 2024 2019ஆம் ஆண்டு கொலம்பிய நாட்டைச் சேர்ந்த தன் காதலியான ஆன்னியை மணந்த ஹர்பால் சிங், மார்ச் 2021 வரை மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அவர் மார்ச் 5ஆம் தேதி ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்தார். இந்த விபத்து அவரது முழு வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது. "என்னால் கை, கால்களை அசைக்க முடியாது. என் மனைவி இல்லாவிட்டால் நான் உயிருடன் இருந்திருக்கவே வாய்ப்பில்லை. அவள் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்." என்கிறார் ஹர்பால் சிங். ஹர்பாலும் ஆன்னியும் 2018இல் பேஸ்புக் வாயிலாக சந்தித்துக் கொண்டனர். 2019இல் அவர்கள் திருமணம் செய்து க…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 பிப்ரவரி 2024 இந்தியாவின் தலைநகரான டெல்லி, அடுத்த இரண்டு நாட்களுக்கு இதுவரை பார்த்திடாத ஒன்றை பார்க்க இருக்கிறது. நாளை(புதன்கிழமை) முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் இந்தியாவில் உள்ள கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தின் முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கு பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அரசு இழைத்துள்ள அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர். அதேவேளையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கேரளாவின் அனைத்து அமைச்சர்கள், இ…

  6. கனிமொழி ஆவேசம்: குற்றம் செய்த பாஜக எம்.பியை அருகில் வைத்துகொண்டு, எங்களை சஸ்பெண்ட் செய்வது சரியா? குற்றம் செய்த பாஜக எம்.பியை அருகில் வைத்துகொண்டு, எங்களை சஸ்பெண்ட் செய்வது சரியா? இதுதான் ஜனநாயகமா? என தெரியவில்லை என்றும் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். …

  7. பாகிஸ்தானின்... புதிய பிரதமராக, ஷாபாஸ் ஷெரீப் தெரிவு! பாகிஸ்தானின் புதிய பிரதமராக, மூன்று முறை முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் 70 வயது இளைய சகோதரரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் ஷா மஹ்மூத் குரேஷியும் ஞாயிற்றுக்கிழமை அவரது வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தார். எனினும், பாகிஸ்தானுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, இம்ரான் கான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டத்தை தொடர்ந்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீ…

  8. சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானம்? நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுவீட் செல்பி, பியூட்டி கேமரா உள்ளிட்ட செயிலிகளுக்கு தடை விதிக்க அரசு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. சீன நிறுவனங்களின் செயலிகளில் உளவு மென்பொருள் உள்ளதாகவும், பயனாளர்களின் தரவுகளைத் திருடும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1266867

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES 19 ஜூன் 2024 திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திப்பதற்காக, அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் குழு ஒன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஏழு பேர் கொண்ட இந்தக் குழு வியாழக்கிழமை (ஜூன் 20) புத்த மதகுரு தலாய் லாமாவைச் சந்திக்கவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, சீனா-திபெத் பிரச்னை தொடர்பாகச் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டச் சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பிற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சீனா, திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்கும் உறுதிமொழியை அமெரிக்கா மதிக்க…

  10. இந்தியா உள்ளிட்ட... 16 நாடுகளுக்கு, செல்ல தடை இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை வித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வர்கிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா, லெபன…

  11. அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து Published By: RAJEEBAN 16 MAR, 2023 | 02:35 PM அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:15 மணியளவில் விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. https://www.virakes…

  12. இந்திய குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா தனியுரிமைக்கு எதிரானதா? ஓர் அலசல் ஜோயா மடீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் பிபிசி நியூஸ், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்டோரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய காவல்துறைக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது இந்தியாவில் கொண்டு வரப்படும் ஒரு புதிய சட்டம், பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க, சட்ட அமலாக்க துறைகளுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குகிறது - இது தனியுரிமை குறித்த கவலையை எழுப்பியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அ…

  13. பாகிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு – டெல்லியிலும் அதிர்வு கிழக்கு பாகிஸ்தானில் உணரப்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதேவேளை, குறித்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் உள்ள மிர்பூருக்கு அருகே 10 கி.மீ. ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும், மிர்பூர் பிராந்தியம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் முதன்மை வானிலை அலுவலர் முகம்மது ஹனீஃப் தெரிவித்…

  14. சைரஸ் மிஸ்திரி மரணம்: சாலை விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் கூறுவது என்ன? 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சைரஸ் மிஸ்திரி மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மரணம் சாலை விபத்துகள் பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவரது கார் சாலை டிவைடர் மீது மோதியதில் விபத்து நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி முகமை பிடிஐ தெரிவித்துள்ளது. சைரஸ் மிஸ்திரி தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்…

  15. இந்தியா குறைந்தளவான அணுவாயுதங்களை கொண்டுள்ளது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம் தகவல்! இந்தியா குறைந்தளவிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக ஸ்வீடனை சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் இந்தியா, சீனா இரு நாடுகளும் 2019-ஆம் ஆண்டில் கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. 320 அதன் மூலம் சீனாவிடம் இப்போது அணு ஆயுதங்களும், இந்தியாவின் கையிருப்பில் 150 அணு ஆயுதங்கள் உள்ள அதேவேளை பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிறுவனத்தின் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிக்கையின்படி சீனாவிடம் 290 அணு ஆயுதங்களும் இந்தியாவிடம் 130 முதல் 140 எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களும் இருக்க …

  16. டெல்லியில்... பயங்கர தீ விபத்து : 27 பேர் பலி, 40 பேர் வைத்தியசாலையில் ! இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் புகையிரத நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 24 தீயணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டட…

  17. நேற்று வரை இருள்.. வேட்பாளரான பின் திரௌபதி முர்மு கிராமத்திற்கு திடீரென கிடைத்த மின்சாரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அவரது கிராமத்திற்கு முதன்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த கிராமமான உபர்பேடா கிராமத்திற்கு மின்சார வசதியில்லை என்ற செய்தி பரவத் துவங்கியது. பல தசாப்தங்களாக இருளில் வாழும் கிராமவாசிகளின் அவலநிலை பற்றிய புகார்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, ஒடிசா அரசாங்கம் மின்மயமாக்கத் தொடங்கியுள்ளது. 3,500 மக்கள்தொகை கொண்ட குசுமி தொகுதியில் உள்ள …

  18. கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம் - நரேந்திர மோதி, ஹாரிஸ் ஜெயரஜ் உள்ளிட்டோர் அஞ்சலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்னையால், சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 54 வயதான கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய சினிமா துறையில் குறி…

  19. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைக் காட்டும் 5 வரைபடங்கள் கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பெண்களை குறித்த மனப்பான்மை மாற்றத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, பெண்கள் மீதான வெறுப்புக்கு எதிராக நாட்டு மக்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். "நமது நடத்தையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. சில வேளைகளில் பெண்களை அவமதிக்கிறோம். இத்தகைய நடத்தையில் இருந்து விடுபடுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற…

  20. இந்த ஆண்டின் முதல் ரொக்கெட்டினை விண்ணில் செலுத்த தயாராகின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்! இந்த ஆண்டின் முதல் ரொக்கெட் எதிர்வரும் 14ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 6 மணியளவில் PSLV-C52 ரொக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 1710 கிலோ எடை கொண்ட Risat-1A செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 529 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும். வேளாண்மை காடுகள் வளம், தாவரங்கள், பயிர்கள், மண்ணின் ஈரப்பதம், வெள்ளம் குறித்த துல்லியமான விவரங்களையும் படங்களையும் இந்த செயற்கைக் கோள் அனுப்பி வைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒகஸ்ட் மாதத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்ப…

  21. Published By: RAJEEBAN 30 SEP, 2024 | 02:35 PM நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். மழைவெள்ளம் தலைநகரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகள பெருக்கெடுத்துள்ளதால் தலைநகரின் பல நகரங்கள் நீரின் கீழ் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம் மண்சரிவு காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன, நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன, மின்கோபுரங்கள் வீழ்ந்துள்ளன என நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன. காலநிலை நெருக்கடி காரணமாகவே நேபாளம் மிக அதிகளவான ஆபத்தான மழையையும் வெள்ளத்தையு…

  22. பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா கோலா கட்டுரை தகவல் ராக்ஸி காக்டேகர் பிபிசி செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025, 05:11 GMT நூர் ஜஹான் ஒரு மருத்துவ பரிசோதனையிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவர் மூன்று நாட்களை ஒரு ஆய்வகத்தில் கழித்துள்ளார், அங்கு ஆராய்ச்சியாளர்களும் மருந்து நிறுவனங்களும் அவர் மீது புதிய மருந்துகளை பரிசோதித்துள்ளன. நூர் ஜஹான் தனது சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது குழந்தைகளும் கணவரும் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். நூர் ஜஹானின் வீட்டில் ஒரு சிறிய சமையலறை, ஒரு படுக்கை மற்றும் சில பெட்டிகள் உள்ளன. நூர் ஜஹான் தனது மகளின் திருமணத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்து வருகிறார். தனது குடும்பச் செலவுகள் மற்றும் மகளின் திருமணத்திற்காக சிறிது பணத்தை …

  23. மனித உரிமைகள் பேரவையின், உறுப்பினராக... இந்தியா மீண்டும் தெரிவு ! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நடைபெற்றது. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்த நிலையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தெரிவாகியுள்ளது. இதேவேளை மூன்று ஆண்டுகளின் ப…

  24. நாடு கடத்தினால்... நிரவ்மோடி, தற்கொலை செய்துகொள்வார் – வழக்கறிஞர் தெரிவிப்பு! தொழிலதிபர் நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நாடுகடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ‘நிரவ் மோடியின் சிறுவயதில், அவரது தாய், தற்கொலை செய்துள்ளார். அதிலிருந்து நிரவ்மோடி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மனநல ஆலோசனைகளையும் அவர் முறையாக பெறவில்லை. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்வார்’ எனத் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான நிரவ்மோடி மற்றும் மெஹுல் சோக்சி, ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இர…

  25. உலகின் மிகப்பெரிய.. 12 கிலோ, தங்க நாணயத்தை... தேடும் பணியில் மத்திய அரசு 12 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நாணயத்தை தேடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முகலாய மன்னர் ஜஹாங்கீரால் உருவாக்கப்பட்ட அந்த தங்க நாணயம், இறுதியாக ஐதராபாத் நிஜாம்கள் வசம் இருந்த நிலையில், அதனை சிலர் சுவிஸ் வங்கியில் ஏலம் விட முயன்றதாக கூறப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் அந்த தங்க நாணயத்தை ஜெனிவாவில் ஏலம் விடுவது குறித்து இந்திய அதிகாரிகள், அரசிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பின் அந்த நாணயம் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை எனவும் வரலாற்று ஆய்வாளர் சல்மா கூறியுள்ளார். https://athavannews.com/2022/1288806

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.