Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா எதிரொலி : குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு! பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து அறிக்கையை நிலைக்குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குறித்த அறிக்கையில், “பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழுந்தைகள் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமூக ரீதியாக பெண் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது அதிகரித்துள்ளது. ஆகையால் விரைவாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசிபோடும் திட்டங்களை விரைவாக கொண்டுவர வேண்டும…

  2. ஏர் இந்தியாவின்... கடன் தொகையை, ஏற்றது மத்திய அரசு! ஏர் இந்தியாவின் 16 ஆயிரம் கோடி கடன் நிலுவைத் தொகையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் முக்கியப் பங்குகள் 100 சதவீதமும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதர சொத்துக்கள் குறித்து தீர்மானிக்க Air India asset holding company Ltd என்ற நிறுவனத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான கட்டடங்கள், நிலம் போன்றவற்றை விற்பனை செய்து, கிடைக்கும் தொகையை பயன்டுத்தி கடன்களை அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244194

  3. இலங்கை- காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு கிரண்பேடி தடை- நாராயணசாமி இலங்கை- காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு தடை விதிக்க ஆளுநர் கிரண்பெடி நடவடிக்கை எடுத்து வருகிறாரென முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது, “புதுவை மாநில வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தால், ஆளுநர் கிரண்பெடி அதனை செயற்படுத்த விடாமல் தொடர்ந்து தடையாக இருந்து வருகிறார். இலங்கை- காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் கிரண்பெடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர…

  4. பட மூலாதாரம், Shambala Devi படக்குறிப்பு, ஷம்பாலா தேவி 2014-ல் அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார். கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர், தெலங்கானா 19 செப்டெம்பர் 2025 ஷம்பாலா தேவி தனது பழைய புகைப்படங்களில் ஒன்றைக் காட்டுகிறார். அதில் அவர் அடர் பச்சை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்துள்ளார். அவரது கையில் AK-47 ரக துப்பாக்கி உள்ளது, மணிக்கட்டில் கடிகாரம் மற்றும் இடுப்பில் வாக்கி-டாக்கி உள்ளது. அவரிடம் இதுபோன்ற இரண்டு புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. இவை 25 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்தியாவின் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் முதல் பெண் 'ராணுவ' கமாண்டராக மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 25 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அவர் ஆயுதங…

  5. பட மூலாதாரம், ANI 14 நவம்பர் 2025, 01:29 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பகல் 12 மணி நிலவரப்படி, பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. மகா கூட்டணி 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் ம…

  6. ஐ.நா அமைதிப் படைக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரும் வலிமை இந்தியாவிற்கு உள்ளது – ஜீன் பியரி ஐ.நா அமைதிப் படைக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரும் வலிமை இந்தியாவிற்கு உள்ளது என ஐ.நா அமைதிப் பணிகள் பிரிவின் சார்நிலை செயல் தலைவர் ஜீன் பியரி லக்ராய்க்ஸ் தெரிவித்துள்ளார். உள்நாட்டு போர் நடக்கும் நாடுகளில் மக்களை காக்கும் பணியில் ஐ.நா அமைதிப் படை ஈடுபட்டு வருகிறது. இது குறித்து ஐ.நா அமைதிப் பணிகள் பிரிவின் சார்நிலை செயல் தலைவர் ஜீன் பியரி லக்ராய்கஸ் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.நா அமைதிப் படைக்கு அதிக அளவில் இராணுவத்தினரை அனுப்பும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு நன்றி எதிர்பார்ப்பு என்ற இரு செய்திகளை சொல்ல விரும்புகிறேன். அரசியலிலும், அமைதிப் பட…

  7. இந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக தகவல்! இந்தியாவில், 2018 ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரமொன்று வெளியாகி உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தினாலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைக்கு இணங்க, 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2017 ஆம் ஆண்டில், ‘போக்சோ’ சட்டத்தின்கீழ், 32 ஆயிரத்து 608 குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில். இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் …

  8. ஆந்திரா முழுவதும் மணல் எடுக்க தடை.. மணலை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம்.. அரசு எச்சரிக்கை ஆந்திராவில் மணல் எடுக்க விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அம்மாநில சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி அறிவித்துள்ளார். முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியில் இருந்த போது இலவசமாக மணல் அள்ளலாம் என உத்தரவிடப்பட்டு இருந்ததது. ஆந்திராவில் தெலுங்குதேசம் ஆட்சி இருருந்த போது எடுத்த பல முடிவுகளை புதிதாக வந்த ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் முழுவதும் எந்த கட்டணமும் இன்றி இலவசமாக மணல் எடுத்து செல்லலாம் என முந்தைய தெலுங்குதேசம் அரசு அறிவித்து இருந்தது. இதனால் மிகப்பெரிய அளவில்மணல் முறைகேடு ஆந்திர…

  9. இந்தியாவில்... மீண்டும் அதிகரிக்கும், கொரோனா தொற்று! இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. தொற்றுநோய் பரவுவதைக் தொடந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும், திறமையாகவும், நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தடுப்பூசி …

  10. கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போக்சோ வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்ட இளைஞரை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்துள்ளது. மே 23 அன்று உச்ச நீதிமன்றத்தின், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு போக்சோ குற்றவாளி ஒருவரை விடுதலை செய்து அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. போக்சோ வழக்கின் தன்மை, அதன் நிலை, குழந்தை திருமணங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நிகழ் நேர (real time dash board) கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று…

  11. மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துகளை செலுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1316896

  12. எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர். எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர். பங்கதுனி தீவில் இருந்து இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 வங்கதேச படகுகளை ரோந்து பணியில் ஈடுபட்ட வீரர்கள் கைப்பற்றிய நிலையில், படகில் இருந்த சுமார் 360 கிலோகிராம் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் 88 வங்கதேச மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ச்சியாக வி…

  13. பிரபல தொழிலதிபர்களின் சொத்துக்கள்... பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு! பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட 9 ஆயிரத்து 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாக அமுலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து அமுலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 18 ஆயிரத்து 170 கோடியே 2 இலட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதில் 329 கோடியே 67 இலட்சம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 9,041.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பொதுத்துறை வழங்கிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விஜய்மல்லையா வழக்கில் 25 ஆம் திகதிக்…

  14. நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால், நாளை அதிகாலை 5.30 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் இறுதியாகத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங் ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்…

  15. நரேந்திர மோதி பிறந்தநாள்: 'சீட்டா' சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்து இந்தியா வந்தன நிதின் ஸ்ரீவாஸ்தவ் பிபிசி செய்தியாளர் 17 செப்டெம்பர் 2022, 05:13 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHEETAH CONSERVATION FUND படக்குறிப்பு, சாட்லைட் காலருடன் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை ஒவ்வோர் ஆண்டும் குஜராத்தில் தன் தாயாரைச் சந்தித்தோ, எல்லையில் ராணுவ வீரர்களுடனோ, சில சமயம் குழந்தைகளுடனோ தன் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளைக் கொண்டுவரும் விவகாரத்தில் கவன…

  16. சாவர்க்கர் வரலாறு: இந்தியாவில் சிலருக்கு அவர் ஹீரோ, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 3 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM படக்குறிப்பு, சாவர்க்கர் 1906, அக்டோபர் மாதம், லண்டனில் ஒரு குளிர் மாலை. சித்பாவன பிராமணரான விநாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியா ஹவுஸில் உள்ள தனது அறையில் இறால்களை வறுத்துக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக லண்டன் வந்திருந்த அந்த கு…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 19 ஜூன் 2024 திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திப்பதற்காக, அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் குழு ஒன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஏழு பேர் கொண்ட இந்தக் குழு வியாழக்கிழமை (ஜூன் 20) புத்த மதகுரு தலாய் லாமாவைச் சந்திக்கவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, சீனா-திபெத் பிரச்னை தொடர்பாகச் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டச் சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பிற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சீனா, திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்கும் உறுதிமொழியை அமெரிக்கா மதிக்க…

  18. அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி! அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர். இதன்போது பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்…

  19. உத்தரகாண்டில் ஒரு நகரமே தரைமட்டமாகும் அபாயம் - அச்சத்தில் வீடுகளை விட்டு ஓடும் மக்கள் பட மூலாதாரம்,ANI 3 மணி நேரங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் பகுதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், தங்கள் வீட்டிற்கு வெளியே வானமே கூரையாகத் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வியாழக்கிழமையன்று பத்ரிநாத் நெடுஞ்சாலையைப் பொதுமக்கள் மறித்து மாலையில் எரியும் தீப்பந்தங்களுடன் ஊர்வலம் செல்லும் அளவுக்கு மாநில அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். ஜோஷிமட்டில் மக்கள் வீடுகளிலிருந்து வெளிய…

  20. இந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த காலங்களை விட அதிகரிப்பு! இந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், ”கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி துறை பொருள்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டத்தை அடுத்து கடந்த ஒக்டோபரில் மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த பணவீக்கம் நடப்பாண்டு ஏப்ரலில் இருந்து தொடர்ந்து ஏழு மாதங்களாக இரட்டை இலக்க அளவிலேயே இருந்து வருகிறது. பொது பணவீக்கம் நடப்பாண்டு செப்டம்பரில் 10.66 சதவீதமாகவும், 2…

  21. இரண்டு குழந்தைகள்... கொள்கை, குறித்து அசாம் முதலமைச்சர் விளக்கம்! இரண்டு குழந்தைகள் கொள்கை மூலமே வறுமையையும், கல்வியறிவின்மையையும் போக்க முடியும் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 2 குழந்தைகள்வரை பெற்றவர்களே அரசு வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களைப் பெற முடியும் என்பதை படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அதற்கு சட்டம் இயற்ற உள்ளதாகவும் அசாம் மாநில முதலமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். முஸ்லிம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் மேற்படி விளக்கமளித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், இரு குழந்தைக் கொள்கைக்கு இஸ்லாமியர்களிடம் எந்த எதிர்ப்பு…

  22. இந்திய கடற்படையின் ட்ரோபெக்ஸ் பயிற்சியில் 70 கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள், 75க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்பு Published By: VISHNU 13 MAR, 2023 | 12:41 PM இந்தியக் கடற்படையின் மிகப் பெரிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சியான 'ட்ரோபெக்ஸில்' சுமார் 70 கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 75க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்கின்றன. மேலும் இந்த பயிற்சிக்கு 21 மில்லியன் சதுர கடல் மைல்களை உள்ளடக்கியுள்ளதாக கடற்படை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். கடற்படையின் கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களையும் உள்ளடக்கிய சிக்கலான பயிற்சிகள் மற்றும் சூழ்ச்சிகளின் தொடர் 'தியேட்டர் லெவல் ஆப்பரேஷனல் ரெட…

  23. இந்தியாவின், உணவு தானியங்கள் ஏற்றுமதியை... உலகமே எதிர்பார்த்து இருப்பதாக... பியூஷ் கோயல் தெரிவிப்பு இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்து இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பு அனுமதித்தால் உலகத்துக்கே உணவுப் பொருட்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை அடுத்து இதனை பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய சூழல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரைன் போரால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தானிய உற்பத்தியால் இந்தியா உணவுப் பொருள் ஏற்றுமதியை எதிர்நோக்குவதாகக் கூறிய பியூஷ் கோயல், கடந்த சில வாரங்களில் 20 முதல் 30 இலட்சம் தொன்கள்…

  24. மாயமான நேபாள விமானம்: மோசமான வானிலையால் திரும்பி வந்த தேடுதல் ஹெலிகாப்டர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது. டாரா ஏர்லைன்ஸின் ட்வின் ஓட்டர் ரக இரட்டை இஞ்சின் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை காற்று கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் உட்பட மொத்தம் 22 பேர் இருந்தனர். காத்மாண்டு போஸ்ட் செய்தியின்படி, இந்த விமானம் நேபாளத்தில் உள்ள பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9:55 மணிக்கு விமானத்துடனான தொடர்…

  25. கோவாக்சின் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக சிறப்பாக செயற்படுகிறது – பாராத் பயோடெக் தற்போது பரவி வருகின்ற டெல்டா, ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என பாராத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து குறித்த நிறுவனத்தின் தலைவர் டொக்டர் கிருஷ்ண இலா கூறுகையில், ஒரு முறை உருமாறியுள்ள கொரோனா வைரஸ் முதல், பலமுறை உருமாறியுள்ள கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி மிகச் சிறப்பாக செயல்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன், நோய் கிருமிகளுக்கு எதிராக போராடும் ஆன்டிபாடிஸ் எனப்படும் இரத்தம் உருவாக்கும் பொருள் உற்பத்தியை வேகப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.