அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
மேகாலயாவில்... உயிரிழந்த, 877 பச்சிளம் குழந்தைகள் குறித்து மாநில அரசு விளக்கம்! கொரோனா உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் மேகாலயாவில் 877 பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பெற்றெடுத்த 61 பெண்கள் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசிடம் தேசிய மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியது. இது குறித்து அம்மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. குறித்த அறிக்கையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. பாதிப்பு இல்லாதோருக்கான பிரிவில் சேர்க்க பரிசோதனை அவசியம். ஆனால் கர்ப்பிணியர் பலரும் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர். தடுப்பூசியையும் ஏற்கவில்லை. பிரசவ திகதிக்கு இரண்டு வா…
-
- 0 replies
- 150 views
-
-
ராணுவத்தில் ஆள் பலத்தைக் குறைக்கத் திட்டமிடுகிறதா இந்தியா? இதனால் என்ன ஆகும்? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள, வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டிலிருந்து தலைநகர் டெல்லி வரை ஓடியிருக்கிறார், 23 வயதான இளைஞர் சுரேஷ் பிச்சார். இந்த 350 கி.மீ. தூர ஓட்டத்தின்போது அவர் தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். ராணுவத்தில் சேர்வது தான் தன்னுடைய "விருப்பம்" எனக் கூறும் அவர், ஆனால், ராணுவத்தில் ஆட்சேர்ப்பு கடந்த இரண்ட…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
இந்தியா – சீனா புவிசார் அரசியல் பொறியிலிருந்து விலகி புதிய பாதையை கண்டுபிடிக்க வேண்டும் - சீன தூதர் By NANTHINI 27 OCT, 2022 | 03:04 PM சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள ஆழமான உறவுகளையும், பொதுவான நிலையையும் எடுத்துரைத்த இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங், தனது பிரியாவிடை அறிக்கையில், புவிசார் அரசியல் பொறியிலிருந்து நாம் வெளியேறி, வித்தியாசமான புதிய பாதையை கண்டறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவும் இந்தியாவும் ஒன்றாக வளர்ச்சியடைய உலகில் போதுமான இடமுள்ளது. மேலும், இரு நாடுகளும் மக்களும் அமைதியுடன் வாழ்வதற்கான வழியை கண்டுபிடிப்…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
சத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 62 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் : November 6, 2018 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினரால் தேடப்பட்டு வந்தவர்களில் 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களுடன் காவற்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் புரட்சியின்மூலம் தமது கோரிக்கைகளை அடைத்ந்த விட முடியும் எனக் கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை கைதுசெய்வதற்கும், அழிப்பதற்கும் காவற்துறையின் தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு எதிர்வரும் 12ஆம், 20ஆம் திகதிகள…
-
- 0 replies
- 368 views
-
-
இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7.35 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் வாகனங்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து சாலைகளும் நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, மதுபோதையில் வாகனங்களை இயக்குவது, மொபைல் போன்களில் பேசிக்கொண்டு செல்கின்றனர். இதுபோன்ற செயல்களால் விபத்துகள் நடக்கிறது. இதைத்தடுக்க ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களை விற்பனை ெசய்யும் நிறுவனங்களிடத்தில் ெஹல்மெட்டும் சேர்த்து விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் சாலைகளில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சால…
-
- 0 replies
- 298 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு தான் மாலத்தீவு. உலக அளவில் பூகோள ரீதியாக மிகவும் சிதறுண்ட நாடாக மாலத்தீவு உள்ளது. வெறும் 5.21 லட்சம் மக்கள் தொகையே கொண்ட மாலத்தீவில், ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 1965ஆம் ஆண்டு மாலத்தீவு பிரிட்டனிடமிருந்து முழுமையாக சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மாலத்தீவு அரசியலமைப்பு ரீதியான இஸ்லாமியக் குடியரசாக மாறியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, மாலத்தீவின் அரசியலிலும் மக்களின் வாழ்க்கையிலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலத்தீவில் இஸ்லாம்…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம் 06 Dec, 2025 | 11:20 AM பாகிஸ்தானில் இதுவரை இல்லாத புதிய உயர்பதவியாக “ முப்படைகளின் பிரதானி” (Chief of Defence Forces – CDF) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை உருவாக்க, பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 ஆவது பிரிவில் 27வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் எதிர்கொண்ட கடும் பின்னடைவை அடுத்து, பாதுகாப்பு அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப…
-
- 0 replies
- 39 views
- 1 follower
-
-
"கொரோனா வைரஸ் இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. அது சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது" என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆங்கில தொலைக்காட்சியான என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். "இது இயற்கையாக உருவான வைரஸ் இல்லை என்பதால், இதனுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பல நாடுகள் இதற்கான தடுப்பூசி தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன" என்றும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். கொரோனா தொற்று தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இவ்வாறு முதன்முறையாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டு வைக்கப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், கொரோனா வைரஸ் சீன ஆய்…
-
- 0 replies
- 391 views
-
-
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவும் உள்ளடக்கம் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளதுடன், ஜூன் முதலாம் திகதி முதல் ரயில் சேவையும் தொடங்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 139,237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4024 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,745 பேர் கொரோனா ப…
-
- 0 replies
- 257 views
-
-
கொரோனா வைரஸ்: ‘’பொறுமை இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றனர்’’ - நரேந்திர சிங் தோமர் ஜுகல் புரோஹித் பிபிசி செய்தியாளர் Getty Images இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பொறுமையில்லாததால் சாலைகளில் நடந்தும், கூட்டமான ரயில்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் என மத்திய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முதல் கட்ட பொது முடக்கநிலையை அரசு திட்டமிடும் போது, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு கணித்ததா என கேட்டதற்கு,'' சிறந்த பொருளாதார வாய்ப்புகளுக்காக மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் புலம் பெயர்ந்து செல்கின்றனர். பொது முடக்கம் அறிவிக்கப்படும் போது புலம்பெ…
-
- 0 replies
- 293 views
-
-
இரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா? 5 Views 1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்துள்ளது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நி…
-
- 0 replies
- 275 views
-
-
மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு! மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடந்த குழப்பத்தின்போது மத்திய துணை இராணுவ வீரர்களே வாக்காளர்களைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளைய தினம், முதல்வ…
-
- 0 replies
- 176 views
-
-
ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் பரிசோதனை கருவி Posted on December 12, 2021 by தென்னவள் 17 0 ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செ…
-
- 0 replies
- 184 views
-
-
அமித்ஷாவின்... வருகைக்கு எதிராக, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவித்த மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரச நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2022/1278247
-
- 0 replies
- 129 views
-
-
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் இந்திய விஜயம் By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 01:59 PM இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவும் சவுதி அரேபியாவும் வரலாற்று ரீதியான உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளன. எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் நீண்ட காலமாக வலுப்பெற்றுள்ளது. காலனித்துவ காலத்திற்கு முன்பே, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாலியில் நடக்க இருக்கும் ஜீ 20 உச்சிமாநாட்டிற்கு செல்லும் போது, நவம்பர் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு ஒரு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜவஹர்லால…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
நிரவ் மோடியின் 56 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம் November 7, 2018 பஞ்சாப் நஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய், பண மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி ஓடிய மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடியின் 56 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நிரவ் மோடியும் இவரும், இவரது உறவினர் மெ{ஹல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றதனையடுத்து இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமுலாக்கதுறையினர் விசாரித்து வருகின்றனர். நிரவ் மோடியை விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு அமுலாக்க துறை பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவர் முன்னிலையாகாத க…
-
- 0 replies
- 268 views
-
-
மனித கடத்தல் ; தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் ; பிரான்ஸில் சிக்கி தவித்த 276 இந்தியர்கள் நாடு திரும்பினர் Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 10:22 AM மனித கடத்தல் முறைப்பாடு காரணமாக விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரான்ஸில் சிக்கித் தவித்த 276 இந்தியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மும்பையைச் சென்றடைந்துள்ளனர். இந்நிலையில், 27 பேர் பிரான்ஸில் தங்க அனுமதி கோரி உள்ளனர். லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 சிறுவர்கள் (தனியாக) உட்பட 303 பேருடன் கடந்த வாரம் நிக்கரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸின் வாட்ரிவிமான நிலையத்தில் தரையிறங்கிஉள்ளது. …
-
- 0 replies
- 125 views
-
-
புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு தடைவிதித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பாடகர்கள் பாடிய பாடல்களை இந்திய படங்களில் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹிந்தி திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வந்த நிலையில் இனிமேல் …
-
- 0 replies
- 710 views
-
-
பீகாரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரிப்பு! பீகார் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்துள்ளது. குறித்த மாநிலத்தில் வெயிலின் தாக்கம் வரலாறு காணாதவகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! பீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவத…
-
- 0 replies
- 842 views
-
-
ஆப்கானிஸ்தான் அரச அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அரச அலுவலகம் ஒன்றின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேகரிக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மரோப் மாவட்டத்தில் அரச அலுவலகத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்றிரவு கார்குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்த அலுவலகத்துக்குள் இருந…
-
- 0 replies
- 187 views
-
-
கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன கட்டுரை தகவல் எழுதியவர்,சஞ்சயா தகல் பதவி,பிபிசி நியூஸ் நேபாளி 21 டிசம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,Sanjaya Dhakal/BBC படக்குறிப்பு,காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன இருபத்தி ஐந்து…
-
- 0 replies
- 209 views
-
-
Published By: Vishnu 01 Sep, 2025 | 06:21 PM (நா.தனுஜா) பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட திங்கட்கிழமை (1) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் அண்மைக்காலத்தில் நடாத்திவரும் சந்திப்புக்களின் ஓரங்கமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனான சந்திப்பு திங்கட்கிழமை (1) புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது சமகாலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்திவரும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றின் விளைவாக எதிர்வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விசேடமாகக் கலந்துரைய…
-
- 0 replies
- 74 views
- 1 follower
-
-
புதுடில்லி சிறுமியின் மரணத்திற்கு பொறுப்புக்கூறல் கோரும் அடையாளங்களை வைத்தே போராட்டக்காரர்கள் அணிவகுத்தனர். "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர், அதில் "இந்தியாவின் மகளுக்கு நீதி" என்று எழுதப்பட்டிருந்தது. 9 வயது சிறுமியின் பெற்றோர் தங்கள் கிராமத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் தற்காலிக மேடையில் அமர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். சிறுமியின் தாயார் கதறி அழுதார், சில சமயங்களில் தனது மகள் "திரும்பி வா" என்று அழைத்தார். அதிகாலையில், சுமார் 80 எதிர்ப்பாளர்கள் இருந்ததாக போலீசார் மதிப்பிட்டனர். எவ்வாறாயினும், கூட்டம் விரைவில் பெருகியது, சிஎன்என் குழு தரையில் மதிப்பீட்டை 300 க்கு அருகில் வைத்தது. போராட்ட இடத்திற்கு 200 பாதுகாப்புப் படையினர் நியமிக்கப…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்! இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நாடாளுமன்ற கூட்டத்தொரில் சுமார் 26 சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வங்கி சீர்த்திருத்தச் சட்டத்தின் கீழ் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1251934
-
- 0 replies
- 133 views
-
-
பட மூலாதாரம்,TIFR கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1966 ஜனவரி 23 ஆம் தேதி ஹோமி பாபா, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) அலுவலகத்தின் நான்காவது மாடியில் நாள் முழுவதும் வேலை செய்துகொண்டிருந்தார். "அன்று பாபா என்னிடம் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். நான்கு நாட்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்க இருந்த இந்திரா காந்தியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் என்னிடம் கூறினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று அவர் பாபாவிடம் கூறினார். அவர் இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட…
-
- 0 replies
- 444 views
- 1 follower
-