அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3340 topics in this forum
-
இமயமலையில் பனிச்சரிவு : 26 பேர் உயிரிழப்பு ! By DIGITAL DESK 5 08 OCT, 2022 | 07:48 PM இமயமலையில் ஏறுபவர்களை பனிச்சரிவில் சிக்கியதில் குறைந்தது 26 பேர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமான வானிலை காரணமாக நான்காவது நாளாகவும் குறித்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. 41 மலையுறும் பயிற்சியாளர்களைக் கொண்ட குழு, செவ்வாய்க்கிழமை இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகாண்டில் உள்ள திரௌபதி கா தண்டா II மலையின் உச்சிக்கு அருகே ஏற்பட்ட பாரிய பனிச்சரிவில் சிக்கிக் கொண்டது. "நாங்கள் இதுவரை 26 உடல்களை மீட்டுள்ளோம் - அவர்களில் 24 பேர் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இரண்டு உடல்கள் பயிற்றுவ…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
இந்தியாவில் ஓராண்டில் 14 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொலை – அதிர்ச்சியளிக்கும் குளோபல் விட்னஸ் அறிக்கை க. சுபகுணம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "ஒவ்வொரு வாரமும் உலகளவில் மூன்று பேராவது தங்களுடைய நிலத்தை, சுற்றுச்சூழலை, வெளிப்புற சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப் போராடியதற்காகக் கொலை செய்யப்படுகிறார்கள் என்று நான் சொல்லலாம். இது பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது, கடந்த ஓராண்டில் மட்டுமே 200 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் நான் சொல்லலாம். ஆனால், இந்த எண்கள் எல்லாம், உயிரிழந்தவர்களின் பெயர்களை…
-
- 3 replies
- 439 views
- 1 follower
-
-
பிரசண்டா - இந்தியாவிலேயே தயாரான இலகுரக போர் ஹெலிகாப்டரின் 15 சிறப்பம்சங்கள் ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,@RAJNATHSINGH உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான பிரசண்டாவின் முதல் தொகுப்பு, திங்கள்கிழமையன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் 'light combat helicopter' (எல்.சி.ஹெச்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு என்ஜின்கள் கொண்ட ஹெலிகாப்டர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்ள, 'தனுஷ்' என்று அழைக்கப்படும் '143 ஹெலிகாப்டர் யூனிட்'-இல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
5ஜி சேவை இந்தியாவில் இன்று தொடக்கம்: இனி மொபைல் சேவை எப்படி வேகம் பிடிக்கும்? 1 செப்டெம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடக்கி வைத்தார். இன்று முதல், நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 6வது இந்திய கைபேசி மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைக்கும் பிரதமர், 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தினார். 5ஜி சேவை அறிமுகமாகப் போகும் சூழலில், அது பற்றிய பல கேள்விகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மக்கள் மனங்கள…
-
- 8 replies
- 357 views
- 1 follower
-
-
ரஷ்யா - உக்ரைன் போர் : 'எங்கள் முதுகை உடைக்கிறது' - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் By VISHNU 30 SEP, 2022 | 01:47 PM ரஷ்யா-உக்ரைன் மோதலால் எண்ணெய் விலை உயர்வு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. மேலும் இநத விலையேற்றம் 'எங்கள் முதுகை உடைக்கிறது' என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர், வளரும் நாடுகளில் தங்கள் எரிசக்தி தேவைகள் எவ்வாறு நிவர்த்தி செய்யப்படுகின்றன என்பதில் மிகவும் ஆழ்ந்த கவலை உள்ளது என்றார். உக்ரைன் போரைப் பற்றி பேசுகையில், இந்த மோத…
-
- 1 reply
- 273 views
- 1 follower
-
-
10 ஆயிரம் கோடி இந்திய ரூபா செலவில் 3 ரயில் நிலையங்கள் By VISHNU 30 SEP, 2022 | 01:48 PM நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புது டில்லி, அகமதாபாத் மற்றும் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சிஎஸ்எம்டி) ரயில் நிலையங்களை ரூ.10,000 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே துறைக்கான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த ரயில் நிலையங்கள் எதிர்கால வடிவமைப்பு மற்றும் பயனீட்டாளர் வசதிக்காக மேம்படுத்தப்படும் என்றும், இந்த திட்டங்களுக்கான விலைமனுக்கோரல் அடுத்த பத்து நாட்களில் வெளியிடப்பட்டும் என்றும் கூறினார். இந்த நிலையங்களின் மறுமேம்பாட்டிற்கு 2-3.5 ஆண்டுகள் ஆகும். போக்குவர…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் முக்கியமான இறக்குமதி ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அல்லது இரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய விமானப்படை தற்போது ‘மேக் இன் இந்தியா’ பாதையின் கீழ் அதன் சீட்டா என்ற திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது. இலட்சிய திட்டமான சீட்டாவின் கீழ், இந்திய விமானப்படையானது இஸ்ரேலின் ‘ஹெரான்’ ஆளில்லா வான்வழி விமானங்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறந்த தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் நீண்ட தூரத்தில் இருந்து எதிரி நிலைகளை குறிவைக்கும் ஏவுகணைகளுடன் இந்த ட்ரோன் விமானங்களை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த தி…
-
- 0 replies
- 381 views
-
-
லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகான் இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஆகிறார் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்திய பாதுகாப்பு படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகானை நியமிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்களுக்கான துறைக்கும் இவர் செயலராக பொறுப்பு வகிப்பார் என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு இந்திய மாநிலங்களில் ஆயுத போராட்டக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைள் பலவற்றில் விரிவான அனுபவம் பெற்றவர் இவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
பகத் சிங்குக்கும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கும் என்ன தொடர்பு? சில கேள்விகளும், பதில்களும் தலிப் சிங் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இன்று பகத்சிங் பிறந்த நாள்) பகத் சிங்கின் உண்மையான பிறந்த இடம் எது? லாகூரில் தூக்கிலிடப்பட்ட அவரது இறுதிச்சடங்கு ஹுசைனிவாலாவில் ஏன் நடந்தது? இறுதியில் பகத்சிங் மதத்தின் பக்கம் சாய்ந்தாரா? இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் தொடர்பான பல கதைகள் உள்ளன. பகத் சிங்கைப் பற்றி முழுமையாகத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. பகத்சிங்கைப் பற்றி ஆராய்ச்சி செய்த…
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
பிஎஃப்ஐ ரெய்டு: 95 இடங்கள், 45 கைதுகள் - ஒரே நாளில் நடந்த என்ஐஏ சோதனை 22 செப்டெம்பர் 2022, 06:23 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ சோதனை நடத்தியது. என்ஐஏ வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நாளில் என்ஐஏ, இந்திய அமலாக்கத்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையினர், மாநில காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது குறித்து என்ஐஏ காவல் கண்காணிப்பாளர் ஜெயராய் கூறுகையில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான்,…
-
- 1 reply
- 438 views
- 1 follower
-
-
இந்திய எதிர்ப்பை மீறிய அமெரிக்கா - பாகிஸ்தான் போர் விமானங்களை பராமரிக்க ஒப்புதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA/OLIVIER HOSLET பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட எஃப்-16 போர் விமானங்களை பராமரிப்பதற்கான சிறப்பு திட்டத்திற்கு அமெரிக்காவின் பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் ஏற்கெனவே பாகிஸ்தான் அரசிடம் இருக்கும் எஃப்-16 விமானங்கள் பழுதுபார்க்கப்பட்டு உபகரணங்களும் வழங்கப்படும் என டிஃபன்ஸ் செக்யூரிட்டி ஒத்துழைப்பு கழகம் (டிஎஸ்சிஏ) அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், விமானத்தில் புதிய திறன்களை சேக்கும் திட்டம் எதுவும் இல்லை மற்றும் புதிய ஆயுதங்களும் வழங்கப்படாது. இது பாகிஸ்தானின் …
-
- 4 replies
- 349 views
- 1 follower
-
-
மகாராஜா ஹரி சிங் வரலாறு: தலித்துகளுக்கு கோவில் கதவுகளை திறந்த ஜம்மு - காஷ்மீரின் கடைசி டோக்ரா மன்னர் அஷோக் குமார் பாண்டே பிபிசி ஹிந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KEYSTONE-FRANCE/GAMMA-KEYSTONE VIA GETTY IMAGES) படக்குறிப்பு, மகாராஜா ஹரி சிங் (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 56ஆவது கட்டுரை இது.) மகாராஜா ஹரி சிங்கின் பிறந்ததினத்தை விடுமுறையாக அறிவிக…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டுக்கு அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்: அவை உங்களை பாதிக்குமா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள 'டோக்கனைசேஷன்' எனும் புதிய விதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ஆன்லைன் பண பரிவர்த்தனையில் மாற்றங்கள் அமலாகவுள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷனுக்கான விதிகளை உருவாக்குவதற்கான காலக்கெடு ஜூலை 1ஆம் தேதி என வகுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல பெரிய வணிக நிறுவனங்கள் 'கார்டு-ஆன்-ஃபைல்' எனும் டோக…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் திருமணம் ஆகாத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2022, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியச் சமூகத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. ஆனால் இயற்கையாக எல்லோருக்கும் இது அமையாத சூழலில் செயற்கையான சிகிச்சை மற்றும் வழிமுறைகளை இவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது. திருமணம் செய்து கொள்பவர்கள் உடல் நலக் காரணங்களுக்காக குழந்தை பெறுவதற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வது போல, கணவரைப் பிரிந்த, திருமணமாகாத பெண்களும், ம…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
நேபாளத்தின் இமயமலையில் உள்ள குழந்தைகளின் கதைதான் இந்த 'சில்ட்ரன் ஆஃப் தி ஸ்னோலாண்ட்' ஆவணப்படத்தின் பின்னணி. நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க, குழந்தைகளை தங்களிடம் வைத்திருப்பதா அல்லது அவர்களைத் தங்களிடமிருந்து தூரப்படுத்துவதா என்பதை பெற்றோர்கள் தேர்வு செய்ய வேண்டும். இவர்களில் சில குழந்தைகள் நான்கு வயதில் காத்மாண்டுவில் உள்ள பாடசாலைக்கு வந்து அதன் பின்னர் பெற்றோரைக் கூட பார்க்க முடியாமல் உள்ளனர். இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தக் குழந்தைகளில் சிலர் தங்கள் குடும்பங்களை சந்திக்கப் போகிறார்கள். அவரது பயணம் மிகவும் உற்சாகமானது. நகர வாழ்க்கை ஒரு பக்கம், இமயமலையில் உள்ள கிராம வாழ்க்கை மறுபக்கம். இந்த ஆவணப்படம் உங்களை மிக அழகான இடங்களுக்கு அ…
-
- 0 replies
- 617 views
- 1 follower
-
-
சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி: போராட்டம் வெடித்தது 18 Sep, 2022 | 12:40 PM பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்கள் மத்தியில், பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்டவை என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் அங்கு ப…
-
- 1 reply
- 242 views
- 1 follower
-
-
மகாராஷ்டிர குகையில் கிடைத்த தனித்துவமான கற்கால சிற்பங்கள், கருவிகள்: சிறப்பு என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PARTH CHAUHAN/BBC படக்குறிப்பு, அகழ்வாராய்ச்சியின் போது பல சிறிய பெரிய கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன மகாராஷ்டிராவில் இதுவரை அறியப்படாத நாகரீகத்தை சேர்ந்த பாறைச் சிற்பங்கள் சில ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு குகை இந்த வரலாற்றுக்கு முந்தைய கலைப்படைப்புகளை உருவாக்கியவர்கள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை குறித்தும் சில புரிதலைகளை நமக்கு அளிக்கிறது. இதுகுறித்து பிபிசி மராத்தியின் மயூரேஷ் கொன்னூர் செய்தி அளிக்கிறார். மேற்கு மகாராஷ்டிராவ…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
56 வகை உணவு.. ரூ. 8.5 லட்சம் பரிசு- பிரதமர் மோடியின் பிறந்தநாளில் வித்தியாசமான உணவுப் போட்டி பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாளை (செப்டெம்பர் 17-ம் திகதி) கொண்டாடப்படுகிறது. மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லி கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கிற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட பிரத்யேக உணவு தட்டு வழங்கப்படுகிறது. இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இதுகுறித்து உணவக உரிமையாளர் சுமித் கல்ரா பேசியதாவது:- பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் நம் நாட்டின் பெருமைக்குரியவர். அவருடைய …
-
- 0 replies
- 192 views
-
-
நரேந்திர மோதி பிறந்தநாள்: 'சீட்டா' சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்து இந்தியா வந்தன நிதின் ஸ்ரீவாஸ்தவ் பிபிசி செய்தியாளர் 17 செப்டெம்பர் 2022, 05:13 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHEETAH CONSERVATION FUND படக்குறிப்பு, சாட்லைட் காலருடன் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை ஒவ்வோர் ஆண்டும் குஜராத்தில் தன் தாயாரைச் சந்தித்தோ, எல்லையில் ராணுவ வீரர்களுடனோ, சில சமயம் குழந்தைகளுடனோ தன் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளைக் கொண்டுவரும் விவகாரத்தில் கவன…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகளின் உடல்கள்; 6 பேர் கைது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIDEO GRAB/TWITTER படக்குறிப்பு, சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் இந்த அறிக்கையில் உள்ள சில விவரங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடும். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
கலாசாரத்தை புரிந்துகொள்ள... தேசிய மொழியான, ஹிந்தியை... கற்க வேண்டும் – அமித் ஷா. நமது வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்துகொள்ள தேசிய மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்ற அகில இந்திய அதிகாரப்பூர்வ மொழி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் மொழிகளும், ஹிந்தி மொழியும் நமது கலாச்சாரத்தின் உயிரோட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழியும், உள்ளூர் மொழிகளும் இணைந்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை வேரோடு பிடுங்கி எறியும் நேரம் வந்துவிட்டது என்றும் உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித…
-
- 0 replies
- 95 views
-
-
இந்தி தினம்: நரேந்திர மோதி, அமித் ஷா, ராகுல் காந்தி வாழ்த்துச் செய்தி என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VECTOR GRAPHICS / GETTY IMAGES இந்தி தினம் செப்டம்பர் 14-ஆம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் தேர்வு செய்தது. அந்த நாளே 'இந்தி திவாஸ்' என்ற பெயரில் இந்திய அரசு, இந்தி மொழி பேசுவோர் உள்ளிட்டவர்களால் கொண்டாடப்படுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 43.62% பேரின் தாய்மொழியாக இந்தி உள்ளது. 2001இல் நடத்தப்பட்ட …
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைக் காட்டும் 5 வரைபடங்கள் கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பெண்களை குறித்த மனப்பான்மை மாற்றத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, பெண்கள் மீதான வெறுப்புக்கு எதிராக நாட்டு மக்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். "நமது நடத்தையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. சில வேளைகளில் பெண்களை அவமதிக்கிறோம். இத்தகைய நடத்தையில் இருந்து விடுபடுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
பெங்களூரூ வெள்ளம்: ஐ.டி. தலைநகர் நீரில் மூழ்கியபோது குடும்பங்கள் உதவிக்கு போராடியது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த வாரம் பெங்களூரூ நகரில் பெய்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்தியாவின் தகவல்தொழில்நுட்பத்துறையின் தலைநகரமாக விளங்கும் பெங்களூரூவில், சமீபத்தில் பெய்த பருவமழையால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்மட்டம் உயர்ந்ததால் வீடுகளில் சிக்குண்ட குடும்பங்கள் உதவிக்காக போராடியது குறித்து செய்தியாளர் ருத்ரனேல் சென்குப்தா விவரிக்கிறார். செப்டம்பர் 5 ஆம் தேதி மாலையில், ருச்சே மிட்டலும், அவரது கணவர் மனீஷும் மழை…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
உலகிலேயே... அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக, இந்தியா மாறி இருக்கிறது – மோடி. உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். ”இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 70 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக அவர்கள் தான் இருக்கிறார்கள். சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தி துறையில் இருந்து வேலை வாய்ப்பினை பெறுகின்றனர். இந்தியாவில் அதிக…
-
- 5 replies
- 303 views
-