Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அந்தமான் தீவுகள்: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலி பீடமாக உருவானது எப்படி? வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 14 ஜூலை 2022 பட மூலாதாரம்,SUMRAN PREET 1857-ல் பஞ்சாபில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய அகமது கான் கரல் கொல்லப்பட்டு, அவரது தோழர்கள் சிலர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் 'காலா பானி' என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டனர். 'காலா பானி' என்பது பொதுவாக இந்தியத் துணைக் கண்டத்தில் தொலைதூரத்தில் உள்ள இடங்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்லாகும். நெடுந்தொலைவைக் குறிக்க 'கலா கோஸ்'…

  2. காஷ்மீரி பண்டிட் சுனில் குமார் கொலை - கிராம முஸ்லிம்கள் சொல்வது என்ன? மாஜித் ஜஹாங்கீர் ஸ்ரீநகரில் இருந்து பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,IMRAN ALI படக்குறிப்பு, சுனில் குமார் "எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இப்போது அவர்களை யார் வளர்ப்பார்கள்? என் கணவரை கொன்றவர்களுக்கும் இதே கதி ஏற்பட வேண்டும். என் கணவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். வீட்டை விட்டுச்சென்ற 10 நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அவரை கொன்று விட்டார்கள் என்று நான் அலறினேன். என் அம்மாவும் மகள்களும் பட்டாசு சத்தம் என்று சொன்னார்கள. நாங்கள் பின்னர் அங்கு சென்ற…

  3. சுதந்திர தின உரையில் பிரதமர் மோதி பட்டியலிட்ட 5 உறுதிமொழிகள் என்னென்ன? 15 ஆகஸ்ட் 2022, 02:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோதி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா, வளர்ந்த நாடாக வேண்டும் என்றும் அதற்கு மக்கள் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்றும…

  4. ராஜஸ்தான்: பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இன்று (14.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். குடிநீர் பானையை தொட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார் என்று தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். சிறுவன், கடந்த மாதம் 20-ம் தேதி வகுப்பறையில…

  5. "விடுதலைப் புலிகளுக்கு" புத்துயிர் அளிக்க... ஆயுதங்கள், போதைப் பொருள் மூலம் நிதி திரட்டியதாக... என்.ஐ.ஏ. குற்றச்சாட்டு. இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க நிதி திரட்டியதாக இந்தியாவின் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மீன்பிடி படகுகளில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் மற்றும் ஏராளமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியும், இலங்கையைச் சேர்ந்தவருமான ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையின்போது கேரள உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. விசாரணை அமைப்பு அறிக்கை தாக்கல் செய்தது. 2021 மார…

  6. பிராந்தியத்தில் சீனா... அமைதியை சீர்குலைத்தால், உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் – ஜெய்சங்கர். பிராந்தியத்தில் சீனா, அமைதியை சீர்குலைத்தால், அது உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லையில் இணக்கமற்ற சூழல் நிலவும் வரையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இயல்பாக இருக்காது என்றும் அவர் கூறினார். சீனா உடனான இந்தியாவின் உறவு சீராக இல்லாதமைக்கு, எல்லை பிரச்னைதான் காரணம் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். இதவேளை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக ஒரு நாடு செயற்பட்டு வருகிறது என ஜெய்ச…

  7. சுதந்திர தினம்: 'காந்தி பாகிஸ்தானின் பாபு' என்று கோட்சே அளித்த வாக்குமூலத்தின் பின்னணி என்ன? வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், லாகூர் 12 ஆகஸ்ட் 2022, 01:10 GMT பட மூலாதாரம்,HULTON ARCHIVE சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய துணைக் கண்டம், பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாகப் பிரிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. ரத்தம் தோய்ந்த இந்தப் பிரிவினையால் இரு நாடுகளும் புண்பட்டிருந்தன. இருப்பினும் இரு நாட்டு தலைவர்களின் பேச்சில் கசப்பு இருக்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளின் சுதந்திர வரலாற்றில் தவிர்க்க முடியாமல் பேசப்படும் பிரிவினை மற்றும் ஜின்னா, கா…

  8. நெகிழ்ச்சிக் கதை: மகன் இறந்த பிறகு மருமகளின் மறுமணத்துக்காக புதிய மகனைத் தத்தெடுத்த பெண் 37 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சச்சின் - மித்தல் மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வரும் கடுவா பட்டிடார் சமூகத்தை சேர்ந்த ஈஷ்வர்பாய் பிமானியின் மகன் சச்சின். 35 வயதாகும் இவர், தன் மனைவி, 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள், பால் கறக்கும் மின்கருவி மூலம் இவர், தன் வீட்டு தொழுவத்தில் பால் கறந்துகொண்டிருந்தபோது மின்சாரம் த…

  9. ஐஇஎல்டிஎஸ் மோசடி: அமெரிக்காவில் சிக்கிய குஜராத்தி மாணவர்கள் - வெளிச்சத்துக்கு வந்த ஊழல் பார்கவ பரிக் பிபிசி குஜராத்திக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIPA SIDANA படக்குறிப்பு, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த இளைஞர்கள் அனைவரும் IELTS தேர்வில் எட்டு பேண்ட் நிலையை பெற்றதற்கான சான்றிதழ்களை வைத்துள்ளனர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் "ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களுடன்" அமெரிக்க நீதிபதி முன்பு அந்நாட்டு காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி ஆங்கிலத்தில் விசாரித்தபோது, "நோ இங்க்லீஷ், ஒன்ல…

  10. பிகாரில் தோல்வியடைந்ததா பாஜகவின் 'மகாராஷ்டிரா உத்தி'? - என்ன நடந்தது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2022, 10:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ்குமார், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பாகு செளஹானை சந்தித்து தமது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பதவி விலகிய கையோடு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது வீட்டுக்கே …

  11. இந்திய குடியுரிமையை கைவிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் - என்ன காரணம்? சுபம் கிஷோர் பிபிசி செய்தியாளர் 26 ஜூலை 2022, 01:51 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES 2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 370 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இவர்கள் "சொந்த காரணங்களுக்காக" குடியுரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 78,284 பேர் அமெரிக்க குடியுரிமைக்காக இந்திய குடியுரிமையை விட்டுள்ளனர். 23,533 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 21,597 பேர் கனடாவின் குடியுரிமையும் பெற்ற…

  12. சோனியா, ராகுல் கைது நடந்தால் ப.சிதம்பரம் அடுத்த காங்கிரஸ் தலைவரா? தீவிரமாகும் விவாதம் பரணிதரன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அழைப்பு விடுக்கப்படும் நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் தர்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள். நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாக இந்திய அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனி…

  13. 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன? ஆ. ராசா குற்றம்சாட்டுவது ஏன்? 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவைத் துறைக்கான 5 ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்திருக்கிறது. ஆனால், அரசு எதிர்பார்த்ததைவிட குறைவான தொகையே கிடைத்திருப்பதால் முறைகேடு நடந்திருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா. இந்திய தொலைத்தொடர்பு சேவைக்கான 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த வாரம் துவங்கி இந்த வாரம் திங்கட்கிழமையன்று நிறைவடைந்தது. ஏழு நாட்களாக நடந்த ஏலத்தில் 40 சுற்றுகளில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு 1.5 லட்சம் கோடி …

  14. ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மனு - விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA (இன்று 04/08/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.) ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோ…

  15. வெளிநாடுகளுக்கு தகவல் திருடிய செல்போன் செயலிகள்! – அதிரடியாக தடை செய்த மத்திய அரசு! இந்திய செல்போன் பயனாளர்களின் தகவல்களை திருடி வெளிநாடுகளுக்கு வழங்கியதாக 300க்கும் மேற்பட்ட செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்படும் ஒவ்வொரு செயலியும் பயனாளர்களின் தனிநபர் தகவல்களை சேமித்துக் கொள்கிறது. இப்படியாக சேமித்த தனிநபர் தகவல்களை பல செயலி நிறுவனங்கள் வேறு நாடுகளின் சர்வர்களுக்கு கடத்துவதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 348 செல்போன் செயலிகளை தடை செய்…

  16. என்டிஆரின் மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுப்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் இளைய மகள் காந்தாமனேனி உமா மகேஸ்வரி இறந்த நிலையில், அவரது ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான மறைந்த என்டிஆரின் 12 பிள்ளைகளில் இளையவர்தான் உமா மகேஸ்வரி. ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் தங்கை ஆவார். அவரது இறப்பு செய்து குறித்து அவரது சகோதரரும், நடிகருமான பாலகிர…

  17. இந்து ராஷ்டிரா: இந்தியா இந்து தேசமாக மாறுகிறதா? அதில் சிறுபான்மையினரின் நிலை என்ன? ஜுபைர் அஹ்மத் பிபிசி செய்தியாளர் 1 ஆகஸ்ட் 2022, 03:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, கி.பி.712ஆம் ஆண்டில் நடந்த ஒரு கடுமையான போரில், பதின்பருவ முஸ்லிம் ஜெனரல் ஒருவர், அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்தை கைப்பற்றினார். இழந்த பிரதேசம் சிறியது, ஆனால் பின்விளைவுகள் பெரிதாக இருந்தன. இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் இதுவொரு பெரிய திருப்புமுனை என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். அவரது…

  18. காந்தி போல பிரம்மச்சரியம் பூண்ட ஜெயபிரகாஷ் நாராயண் மனைவி பிரபாவதி; விஜயாவுடன் ஜெ.பி.க்கு மலர்ந்த நட்பு ரெஹான் ஃபசல் பிபிசி நிருபர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEHRU LIBRARY படக்குறிப்பு, ஜெயபிரகாஷ் நாராயண் - பிரபாவதி (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 51ஆவது கட்டுரை இது.) ஜெயப்பிரகாஷ் நாராயண் பிரபாவதி என்பவரை 1920 அக்டோபர் 14 அன்று மணந்தார். அப்போது பிரபா…

  19. இலங்கைக்கு உதவ... இந்தியா, உறுதி பூண்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்திய குடியரசுத் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பொருளாதார சிக்கலால் ஏற்படும் சவால்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா துணை நிற்கும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார். https://atha…

  20. இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் விபத்து: 2 விமானிகள் பலி 29 ஜூலை 2022, 01:42 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் நேற்று இரவு 9.10 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மெர் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில், இரண்டு போர் விமானிகளும் மோசமான நிலையில் காயமடைந்தததால் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. நேற்றிரவு 10.51 மணிக்கு இந்திய விமானப்படை, விபத்தில் காயமடைந்த இரண்டு போர் விமானிகளும் உயிரிழந்ததாகத் தெரிவித்தது. ரஷ்ய ஆயுதங்களை இந்தியா சார்ந்த…

  21. சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: இதுவரை நேரில் பார்க்காத கோபம் - என்ன நடந்தது? சரோஜ் சிங் பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV/ MAGNUM PHOTOS பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதற்கு முன் பல முறை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் தலைவர்களை குறிப்பாக, ராகுல் காந்தி, சோனியா காந்தியை ஆக்ரோஷமாக விமர்சித்திருக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் எல்லாம் நாடாளுமன்றத்தில் இருக்கும் தலைவர்களும், சில செய்தியாளர்களும் பார்த்த சோனியா காந்தியின் பாணியும், அவர் வழக்கமாக கடைப்பிடிக்கும் அமையான இயல்பும் இம்முறை முரணாக இருந்ததாக…

  22. குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 26 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SACHIN PITHHVA குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிறன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் பின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் போடாட் மற்றும் அதன் அருகாமை மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்…

  23. கார்கில் போர் தோல்வியை எப்படி பார்த்தது பாகிஸ்தான் ராணுவம்? ஷுமைலா ஜாஃப்ரி பிபிசி செய்திகள் இஸ்லாமாபாத் 29 ஜூலை 2019 புதுப்பிக்கப்பட்டது 26 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்று கார்கில் தினம் என்பதால் இந்த கட்டுரை பகிரப்படுகிறது) கார்கில் சண்டை தொடர்பாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தச் சண்டையில் வெளிவராத தகவல்கள் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ``கார்கில் தொடங்கி ஆட்சி மாற்றம் வரை - பாகிஸ்தானை உலுக்கிய நிகழ்வுகள்'' என்ற தலைப்பில் நசீம் ஜாஹ்ரா எழுதிய புத்தகமும் அவற்றில் ஒன்று. பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜெப்ரி, புத்தக…

  24. நிர்மலா சீதாராமன்: ஸ்விஸ் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல - இந்திய நிதியமைச்சர் 26 ஜூலை 2022, 02:11 GMT பட மூலாதாரம்,ANI இன்று (26.07.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியான நாளிதழ்கள் மற்றும் இணையதள செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ''அண்மையில் வெளியான ச…

  25. குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெற்றார் திரெளபதி முர்மூ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர். திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.