அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3316 topics in this forum
-
கொரோனா பாதித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் தம்பதிக்கு வைரஸ் பாதிப்பில்லாமல் ஆரோக்கியமுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பதிவு: ஏப்ரல் 04, 2020 16:12 PM புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் புதிய தனி வார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவசரகால பணிக்காக, அதே மருத்துவமனையில் மருத்துவரின் 9 மாத கர்ப்பிணி மனைவி பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணிநேரத்தில், மனைவிக்கும…
-
- 0 replies
- 213 views
-
-
கொரோனா பாதிப்பில் ரஷியாவை நெருங்குகிறது, இந்தியா ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கொரோனா பாதிப்பில் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது. ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது. பதிவு: ஜூலை 06, 2020 04:48 AM புதுடெல்லி, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆகும். இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. மராட்டியத்தில் ஒரே நாளில் 7,074 பேருக்க…
-
- 2 replies
- 406 views
-
-
கொரோனா பாதிப்பு தீவிரம்; டெல்லி சுகாதார மந்திரிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு டெல்லி சுகாதார மந்திரிக்கு கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 16:47 PM புதுடெல்லி, டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டிய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். டெல்லி முத…
-
- 0 replies
- 241 views
-
-
கொரோனா பாதிப்பு: மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பால் மணமகன் மரணம் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 08:34 AM பாட்னா பீகார் மாநில தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென்று மரணமடைந்தார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை…
-
- 0 replies
- 248 views
-
-
கொரோனா பாதிப்பு: மும்பை அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை மும்பை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 71,105 ஆக உயர்ந்துள்ளது. 89,987 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. ''மராட்டிய மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,982 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 960 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 321 ஆகவும் அதிகரித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,616 ஆக உயர்ந்துள…
-
- 0 replies
- 689 views
-
-
கொரோனா பாதிப்பு:கடந்த 24 மணி நேரத்தில் 357 பேர் மரணம்; அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பு கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 357 ஆக உள்ளது. இது அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பாகும். பதிவு: ஜூன் 11, 2020 11:08 AM புதுடெல்லி இந்தியாவில் கடந்த24 மணி நேரத்தில் 9,996 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.8 லட்சமாக அதிகரித்து உள்ளது. 357 நோயாளிகள் மரணம் அடைந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு இறப்பில் இந்தியா தனது மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் இதுவரை தொற்று நோய் காரணமாக மொத்தம் 8,102 நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த இறப்புகளில் பெரும்பாலானவை நாட்டின் மிகப்ப…
-
- 0 replies
- 227 views
-
-
கொரோனா பொது முடக்கம்: மே 31 க்குப் பிறகு இந்தியாவில் என்ன நடக்கும்? - விரிவான தகவல்கள் சரோஜ் சிங், பிபிசி இந்தி Getty Images கோவிட் -19 பாதிப்பின் வேகத்தையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டு பொது முடக்கநிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். "உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தேன், முடக்க நிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற எனது கருத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார். எது எவ்வாறாயினும், 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவகங்களை திறக்க அனுமதிக்கலாம் போன்ற சில தளர்வுகளையும், இந்த முடக்க நிலையின்போது அறிவிக்க வேண்டுமென்று நாங்கள…
-
- 0 replies
- 270 views
-
-
கொரோனா மருந்து: பதஞ்சலிக்கு மத்திய அரசு தடை! மின்னம்பலம் கொரோனாவுக்கு ஆயுர்வேத முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் சில நாட்களில் அது ஆதாரங்களுடன் வெளியிடப்படும் என்றும், பாபா ராம்தேவால் அறியப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஆச்சாரிய பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா கிட் எனப்படும் மருந்தை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா மருந்து தொடர்பான விளம்பரங்களையும், அறிவிப்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு பதஞ்சலி நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று (ஜூன் 23) மாலை 5.39 மணிக்கு மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சில நாட்களாகவே பதஞ்சலி நிறுவனம் …
-
- 0 replies
- 440 views
-
-
கொரோனா மீண்டும் மே மாதம் உச்சம் பெற்று பின் படிப்படியாக குறைவடையும் என்கிறது ஆய்வு! இந்தியாவில் கொரோனா மீண்டும் மே மாதம் உச்சம் பெற்று பின் படிப்படியாக குறைவடையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மே 3ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தற்போது கொரோனா பரவும் வேகமும் சற்று குறைந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு இருமடங்காக ஆவதற்கு, முன்பு 3.4 நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது அது 7.5 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இத்தாலியில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாக கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, மே 22ஆம் திகதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மே 15ம்…
-
- 0 replies
- 359 views
-
-
கொரோனா விவகாரம் : இந்தியாவின் உதவியை நாடும் பிரான்ஸ்! கொரோனா தடுப்பு சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து என்பவற்றில் இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேற்கு வங்கம், மற்றும் ஒடிசாவில் பேரழிவை ஏற்படுத்திய அம்பான் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் அரசு தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா மருந்து மற்றும் சிகிச்சை அனை…
-
- 0 replies
- 263 views
-
-
கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன. முதியவர் திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது. இந்தநிலையில் அங்குள்ள பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88) தம்பதியருக்கும் கொரோனா வைரஸ் பாதித்தது. கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய மகன், மருமகள், பேரன் மூலம்தான் தாமஸ் ஆபிரகாம், மரியம்மா தம்பதியருக்கு கொரோனா வைரஸ் ப…
-
- 0 replies
- 366 views
-
-
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே – மோடி கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பேசிய மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதற்கமைய, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று இடம்பெற்றது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையி…
-
- 0 replies
- 265 views
-
-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த யோசனை மற்றும் சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சீனாவின் வூகான் நகரத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாதது மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கிடையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்ற…
-
- 1 reply
- 255 views
-
-
கொரோனா வைரஸைத் தடுக்க இந்திய மக்களின் ஒத்துழைப்பு எம். காசிநாதன் / 2020 மார்ச் 31 நான்கு பிரிவுகளைக் கொண்ட 1897 ஆம் வருட ‘தொற்று நோய்ச் சட்டம்’ தற்போது இந்தியாவின் ‘பாதுகாப்புக் கவசமாக’ மாறியிருக்கிறது. மனித குலத்துக்கு மாபெரும் பேரிடராக, மறக்க முடியாத பேரிடராக மாறியிருக்கும் கொரோனா வைரஸால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த இரண்டாவது சுற்றில் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. முதற்சுற்றில், தாக்குதலுக்கு உள்ளான சீனா, மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கையை நோக்கி நகருகின்றது. இந்தியா சகஜ வாழ்க்கையை ஒத்தி வைத்து விட்டு, 21 நாள் ஊரடங்கில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ‘மார்ச் 22 ஆம் திகதி ‘சுய ஊரடங்கு’ ஜனநாயக நாடான இந்தியா என்பதை பறைசாற…
-
- 1 reply
- 304 views
-
-
கொரோனா வைரஸ் : அமெரிக்காவை அடுத்து இந்தியாவிலேயே அதிக நோயாளர்கள் பதிவு! by : Krushnamoorthy Dushanthini அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தீவிர நோயாளிகள் உள்ளதாக பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்டுள்ளதாக இந்துஸ்தான் புள்ளிவிபர பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. இதன்படி “அமெரிக்காவில் 16, 923 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ள அதேவேளை இந்தியாவில் 8, 944 பேர் உள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்க…
-
- 0 replies
- 247 views
-
-
கொரோனா வைரஸ் : இந்தியாவிற்கு உதவி செய்யும் சர்வதேச நாடுகள்! இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய நாடுகள் அனுப்பிவைத்துள்ள மருத்துவ உதவி பொருட்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. இதன்படி 120 ஒக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உதவி பொருட்களுடன் பிரித்தானிய விமானம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவை வந்தடைந்துள்ளது. குறித்த மருத்துவ பொருட்கள் டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதுவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்களும் இந்தியாவிடம் அளி…
-
- 0 replies
- 207 views
-
-
கொரோனா வைரஸ் : பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி! கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 72 ஆய்வகங்கள் செயற்பட்டு வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் பயோ-டெக்னாலஜி துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி கழகம் மேலும் 49 ஆய்வகங்கள் செயற்படும். அதே போல் தனியார் ஆய்வகங்களும் கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக செய்ய கேட்டு கொள்ளப்படுவார்கள். 51 தனியார் ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதிக…
-
- 0 replies
- 555 views
-
-
கொரோனா வைரஸ் : பாகிஸ்தான் மாணவர்களை மீட்க இந்தியா நடவடிக்கை! கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்களை மனிதநேயத்தின் அடிப்படையில் மீட்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திரமோடி சார்பில் வெளியுறவு அமைச்சகம் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு இதற்கு எவ்வித பதிலும் வழங்காத நிலையில், குறித்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், வூஹான் நகரில் ஏராளமான பாகிஸ்தான் மாணவர்களும் தங்கியிருந்தனர். மனிதநேய அடிப்படையில் அவர்களை மீட்டு வருகிறோம் என பிரதமர் மோடியின் அறிவு…
-
- 0 replies
- 247 views
-
-
கொரோனா வைரஸ் ‘இந்தியத் திரிபு’ என்பதை உடனே நீக்குங்கள்: சமூக ஊடகங்களுக்கு இந்திய அரசு உத்தரவு 16 Views இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபை ‘இந்தியத் திரிபு’ (Indian variant) என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பால் இந்த திரிபுக்கு ‘B.1.617’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை ‘இந்தியத் திரிபு’ என்று குறிப்பிடுவது தவறானது என்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது. பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட திரிபுகளுக்கு அந்தந்த நாடுகளின் பெயர்களே வைக்கப்பட்டு அவை பிரிட்ட…
-
- 3 replies
- 403 views
-
-
கொரோனா வைரஸ் ஊரடங்கால் அதிகரிக்கும் குற்றங்கள்: புதிய நெருக்கடியை சமாளிக்குமா இந்தியா? எம் ஏ பரணிதரன் பிபிசி தமிழ் Getty Images கொரோனா வைரஸ் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், அதன் விளைவாக பல மாநிலங்களில் சில வகை குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்றன. இந்தியாவில் பொது முடக்க கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது தொழில்கள் முடக்கம், நிறுவனங்கள் மூடல், மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் நீங்கலாக, பெரும்பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் திருட்டு, வழிப்பறி கொள்ளை போன்ற செயல்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலையை நாடு எதிர்கொண்டது. த…
-
- 0 replies
- 267 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு முடக்க நிலையால் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வருமா? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி Getty Images மார்ச் 31-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை அமைதியில் உறைந்தது. மகாராஷ்டிர மாநிலம் லசங்காவ்ன் என்ற இடத்தில் உள்ள அந்த சந்தையில் எப்போதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சந்தடி நிறைந்திருக்கும். இந்தியர்களின் உணவில் முக்கியப் பாத்திரம் வகிக்கும் வெங்காயத்தை ஏற்றுவது, இறக்குவது, வகை பிரிக்கும் பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தொழிலாளர்கள் அந்த சந்தையில் அப்போது இல்லை. இந்தியாவில் உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு வெங்காயத்தை வாங்கி விற்கும் இந்த சந்தை, மூன்றுவார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஒரு வாரத்துக்கு எப்படியோ சமாளித்துக் …
-
- 0 replies
- 247 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு மையத்தில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி சிறுமி சித்தரிக்கும் படம் மட்டுமே டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அதே தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும், அந்த சம்பவத்தை படம் பிடித்ததாக கூறப்படும் இன்னொரு நபரும் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்…
-
- 0 replies
- 384 views
-
-
கொரோனா வைரஸ் தீவிரம் – முக்கிய நாட்டவர்களுக்கான விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு! கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதையடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3 ஆம் திகதிக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறதுடன் உலகம் முழுவதும் 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் சீனாவி…
-
- 0 replies
- 243 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து இந்தியாவில் புதிதாக பரவும் வைரஸ்! கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் தற்போது புதியவகை வைரஸ் தொற்றும் இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி கேட் கியூ வைரஸ் (cat que virus) என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐ.சி.எம்.ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் இருந்து பெறப்பட்ட 833 இரத்த மாதிரிகளில் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு பேரின் மாதிரியில் இந்த வைரசுக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் சீனா மற்றும் வியட்நாமில் பெருமளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பன்றிகளிடமும் மைனா போன்ற பறவைகளிடமும் இது காணப்படுவதால் சமூக பரவல் ஏற்படலாம் எனக் க…
-
- 0 replies
- 508 views
-
-
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தீவிர திட்டங்களை அறிவித்தது மத்திய அரசு! கொரோனா தொற்று உள்ளவர்கள் இதுவரை 274 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு மேலும் தீவிரமாகாமல் தடுப்பதற்கு மத்திய அரசு பல திட்டங்களைக் கொண்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது. H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சலோடு ஒப்பிடும்போது கொரோனா தொற்று அதிகம்பேரை பாதித்திருந்தாலும், பரவிய பகுதிகள் இரண்டிற்கும் ஒரேமாதிரியாக இருப்பதாகவும், எனவே கொரோனா நாடு முழுவதும் சீராகப் பரவ வாய்ப்பில்லை என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த …
-
- 0 replies
- 230 views
-