Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உலக நீரிழிவு தினம்: இந்தியாவில் ஏழை நோயாளிகள் இன்சுலின் வாங்குவதில் உள்ள சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் இரு மகள்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வேலையை விட்டு இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. நீரிழிவு நோய் (வகை 1) இருப்பதால் அவர்களுக்கு இன்சுலினை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கமான செலவுகள் போக, இன்சுலின் ஊசிக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் செலவிடுகிறார்கள். மத்திய – மாநில அரசுகள் சில உதவிகளை வழங்கி வந்தாலும், இன்சுலின் தேவைப்படும் ஏராள…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியாக்கள் முதலில் வளர்கின்றன என்று மல மாதிரிகளில் இருந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யப்பட்டது. (சித்தரிப்புப்படம்) எழுதியவர், ஸ்மிதா முண்டாசாத் பதவி, சுகாதார செய்தியாளர், பிபிசி நியூஸ் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மல மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். இந்த மாதிரிகள் மூலம், பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியா முதலில் வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர். அந்த ஆய்வில், குழந்தைகளின் மலம் மூன்று வெவ்வேறு நுண்ணுயிரியல் வகைகளின் கீழ் வருவதை அறிந்து ஆச்சரியமடைந்ததாக ஆராய்ச்ச…

  3. பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES மைக்ரோக்லியா என்பது நம் மூளையில் நிரந்தரமாக இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள். நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து மூளையின் ரத்த நாளங்களைப் பாதுகாப்பதுதான் அவற்றின் வேலை. ஆனால், அந்த செல்களே மூளைக்குத் தீங்கு விளைவித்தால் என்ன ஆகும்? நோய் எதிர்ப்பு அமைப்பைப் பாதுகாக்கும் செல்களாகவே அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன. ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் முதல் வலியை ஏற்படுத்துதல் வரை பலவற்றில் மைக்ரோக்லியா முக்கியப் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தற்போது அதிகளவில் நம்புகின்றனர். அல்சைமர் நோய், மன அழுத்தம், மனப் பதற்றம், கோவிட் தாக்கம், நாள்பட்ட சோர்வு ( chronic fatigue syndrome) என அற…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? ஸ்வீட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், வெள்ளை அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். இப்போது அந்தப் பட்டியலில் கிரில் சிக்கன், பூரி போன்ற உணவுகளையும் சேர்க்க வேண்டியிருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. உணவை எப்படி சமைக்கிறோம் என்பது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. வேக வைத்த உணவுகளுடன் ஒப்பிடும்போது வறுத்த, பொரித்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை …

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெனைன் மச்சின் பதவி, பிபிசி நியூஸ், கேம்ப்ரிட்ஜ் 24 அக்டோபர் 2024, 04:41 GMT புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் இதயப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் இதயமுடுக்கி (pacemaker) முதல் செவிப்புலனை மேம்படுத்த உதவும் கோக்லியர் சாதனம்(cochlear) வரை சிறிய வகை மின்னணு சாதனங்களை உடலில் பொருத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்கெனவே மாறியுள்ளது. தற்போது, கேம்பிரிட்ஜில் உள்ள ஆரோக்கியம், அறிவியல் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த குழுவினருக்கு, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களை விரைவாகக் கண்டுபிட…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆம்பர் டான்ஸ் பதவி,‎ 1 அக்டோபர் 2024, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதர்களின் குடல் நாளம், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வைரஸ்கள் நம் உடலுக்குள் என்ன செய்கின்றன? நீங்கள், நம் குடலுக்குள் வசிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த பாக்டீரியாக்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் கோடிக்கணக்கான வைரஸ்கள் வாழ்கின்றன. அந்த பாக்டீரியாக்கள் மீதும் நம் மீதும் அவை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுதான் ஃபேஜியோம். அதாவது, பாக…

  7. மனித சதை உண்ணும் பாக்டீரியாவால் காலை இழந்த ஆந்திர சிறுவன் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, காலை இழந்த சிறுவன் கட்டுரை தகவல் எழுதியவர், கரிகிபட்டி உமாகாந்த் பதவி, பிபிசிக்காக 30 செப்டெம்பர் 2024, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குறிப்பு: இந்த கட்டுரையின் விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆந்திர மாநிலம் பெஜவாடா சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகளையும், நூற்றுக்கணக்கான காலனிகளை…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி பதவி, பிபிசி செய்தியாளர் 23 செப்டெம்பர் 2024, 10:58 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் நம் தோலின் மேற்பரப்பில் பல நூறு கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்கள் வாழ்கின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நலனில் அவை வகிக்கும் முக்கிய பங்கை சமீப காலமாக தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம். நமது தோலின் மேற்பரப்பின் ஒரு சதுர சென்டிமீட்டரை எங்கு ஸூம் செய்து பார்த்தாலும் அங்கு 10,000 முதல் 10 லட்சம் பாக்டீரியாக்கள் வரை இருக்கும். உங்கள் உடல் முழுவதும் ஒரு செழிப்பான நு…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 13 செப்டெம்பர் 2024, 04:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அப்போது கல்லூரி மாணவியாக இருந்த சாருலாதவிற்கு கண்ணில் மை இட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். தினமும் அவர் கண் இமையின் விளிம்பான வாட்டர்லைனில் (waterline) மை இட்டுக்கொள்வார். சில காலத்திற்குப் பிறகு, அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் கண்ணின் உள்ளே உருண்டையாக கட்டி போல ஒன்று இருப்பது போலத் தோன்றியது. இதற்காக வீட்டிலே கை வைத்தியம் செய்து வந்தார். ஆனால் ஆறு மாத காலமாகியும் அது குணமாகாத காரணத்தால், கண் மருத்துவரிடம் சென்று, அறுவை சிகிச்…

  10. ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம். ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட ‘ஏ.பி.என்.எம்.’ மருந்து, ரத்த சோகை உள்ள வளர் இளம் பருவத்துப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் அதனுடன் கூடிய சத்துக்களின் அளவை மேம்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆய…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வார நாட்களில் வேலைப் பளுவைக் காரணம் காட்டி அல்லது இணையத்தில் மூழ்கி 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதை நம்மில் சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் மனதில் நினைப்பது என்னவென்றால், இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என்பது தான். இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர், அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும் போது (இது வயதிற்கு ஏற்றாற் போல மாறுபடும்), அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டு…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிசியோதெரபி. இந்த வார்த்தையைக் கேட்டவுடன், உடற்பயிற்சி, உடல் அசைவுகள், மசாஜ், ஆகியவற்றுடன் கூடிய ஒரு குழப்பமான பிம்பம்தான் பலரது மனங்களில் தோன்றும். ஆனால், பல ஆண்டுகளாக, உடல் இயக்கம் சார்ந்த குறைபாடுகளைச் சரி செய்வதற்காக அடிப்படை மருத்துவத்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் பிசியோதெரபி என்றால் என்ன? அது எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன? இதுகுறித்து அறிந்துகொள்ள, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பிசியோதெரபி நிபுணரான எழில்வாணனிடம் பிபிசி தமிழ் பேசியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விபத்தினாலோ, பக்…

  13. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர் காற்று மாசுபாட்டில் இருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிந்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், ஒனூர் எரம் பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நம்மை கொல்லும் ஒரு ஆபத்து சத்தமில்லாமல் தெருக்களில் உலாவிக்கொண்டிருக்கிறது. அதை நம்மால் பிடிக்க முடியாது. அதிலிருந்து நாம் ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நாற்பது லட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் மற்றும் உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதத்தினரை பாதிக்கும் காற்று மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாசுபடுத்திகளா…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஒனூர் எரெம் பதவி, பிபிசி உலக சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களது குடல் ஆரோக்கியம், உங்களது கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநோய் வரை அனைத்துடனும் சம்பந்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நமது உடல்நலத்தில் குடலின் பங்கு என்ன என்பது பற்றிய நமது அறிவு விரிவடைந்து வருவதால், குடல் ஆரோக்கியத்தின் மீது நமது கவனமும் அதிகரித்து வருகிறது. 2021-இல் உலகளாவிய புரோபயாடிக்ஸ் சந்தை ஆண்டுக்கு 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இது 2030-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 7%-க்கும் அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான போல…

  15. குரங்கு அம்மை: புதிய அச்சுறுத்தல்! ஆப்பிரிக்காவில் தற்போது வேகமாகப் பரவிவரும் ‘குரங்கு அம்மை’ (Monkey pox) எனும் வைரஸ் தொற்றுப் பரவலை, உலக அளவில் கவலை அளிக்கக்கூடிய பொதுச் சுகாதார அவசரநிலையாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்ததை ஒட்டி, உலக நாடுகள் பலவும் மீண்டும் கரோனா தொற்று பரவியதுபோல் பீதியில் உறைந்து கிடக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் 2023 ஜனவரியிலிருந்து இது பரவிவருகிறது. இதுவரை 27,000 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் காங்கோ நாட்டில் மட்டும் 13,700 பேருக்குத் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 4,50 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது இந்தத் தொற்று பாகிஸ்தான் மற்றும் சுவீடன் நாட்டுக்கும் பரவிவிட்டத…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், லக்ஷ்மி படேல் பதவி, பிபிசி குஜராத்தி 26 ஆகஸ்ட் 2024, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பலரும் பல்வேறு காரணங்களுக்காக விரதம் இருப்பார்கள். சிலர் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் விரதம் இருப்பார்கள். சிலர் தொடர்ந்து மாதம் முழுவதும் விரதம் இருப்பார்கள். வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து. விரத நாட்களில் வறுத்த மற்றும் இனிப்பான தின்பண்டங்களைச் சாப்பிடுவது, உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் சாத்த…

  17. பெண்ணுறுப்பின் கருமை நிறம் ஆபத்தா?- பெண்களை ஆபத்துக்குள்ளாக்கும் சமூக ஊடக பதிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்ணுறுப்பின் வாசனை மற்றும் தோற்றத்தை மாற்றுவதற்கு அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை அதிக எண்ணிக்கையிலான ஆன்லைன் பதிவுகள் பரிந்துரைக்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஓஸ்ஜ் ஓஸ்டெமிர் பதவி, பிபிசி துருக்கி 23 ஆகஸ்ட் 2024 சமூக ஊடகங்களில் பெண்ணுறுப்பு பற்றி நடந்து வரும் விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள பல பெண்களின் மனதில் தேவையற்ற அச்ச உணர்வை விதைத்துள்ளது. பெண்ணுறுப்பின் உள்புறம் ‘யோனிக் குழல்’ (vagina) எனப்படும். கருப்பையை வெளிப்புற உடலுடன் இணைக்கின்ற தசைக்குழாய் இது. பெண்ணுறுப்பின் …

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கடக்நாத் கோழி அல்லது கருங்கோழி என அறியப்படும் ஒரு வகை நாட்டுக்கோழி வகை பற்றிக் கடந்த சில ஆண்டுகளில் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது போன்ற கருத்துகளையும் சமூக ஊடகங்களில் படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்பட்ட இந்தக் கோழி இனம், இப்போது இந்தியா முழுக்கப் பரவலாக காணப்படுகிறது. மத்தி…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓரோபோச் வைரஸ் இயற்கையாகவே வன்மக்கரடி, குரங்குகள் போன்ற விலங்குகளிலும் காணப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரே பீயர்நத் பதவி, பிபிசி நியூஸ், பிரேசில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபகாலமாக, தொடர்ந்து அதிகரிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள், இதைத் தடுக்க தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் இல்லாத நிலை, வைரஸ் குறித்த போதிய தரவுகள் இல்லாதது என ஓரோபோச் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாத இறுதியில் பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான பஹியாவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் ஓ…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2024, 10:37 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்று உடல்நலத்தைப் பற்றிப் பேசுகையில், பெரும்பாலும் பலரும் கேட்கும், அல்லது எதிர்கொள்ளும் கேள்விகள், ‘எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறீர்கள்?’, ‘ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு உட்கொள்வது ஆரோக்கியமானது?’ ஆகியவைதான். இன்று பொதுவாக, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற வாழ்க்கை முறை நோய்களுடன் உப்பு தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. அதேபோல், கல் உப்பு, பொடி உப்பு என்று பொதுப் புழக்கத்தில் இருக்கும் இருவகை உப்புகளைப் பற்றியும் ப…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அமண்டா ருகேரி பதவி, பிபிசி 11 ஆகஸ்ட் 2024, 05:56 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாக ஒரு பெண் கருவுறும்போது அவர் என்ன சாப்பிடுகிறார், அருந்துகிறார் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவது வழக்கம். எனவே கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு புதிய ஆராய்ச்சி, தந்தையின் மதுப்பழக்கமும் கருவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்னும் கருத்தை முன் வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 ஆகஸ்ட் 2024 ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகத் தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகத் தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம், இந்த வாரத்தின் கருப்பொருள் ‘Closing the Gap - Support for All’. தாய்ப் பால் ஊட்டுதல் மற்றும் குழந்தையின் நலன் குறித்து உலகம் முழுக்க அனைவரும் அறிய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஆகஸ்ட் 1 - 7 தேதி வரையில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், தாய்ப்பால் ஊட்டும் போது தாய்மார்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிவை, பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள், தவிர்க்க வேண்டிய பழக்கங்கள், தாய்மார்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன ரீதியான சவால்கள…

  23. பட மூலாதாரம்,SIDDIQUI படக்குறிப்பு,பெற்றோருடன் அஃப்னான் ஜாசிம் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூருவில் இருந்து 28 ஜூலை 2024 சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட ஒரு பொது விழிப்புணர்வுப் பிரசாரத்தால், கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மூளையை உண்ணும் அமீபா தாக்கத்திலிருந்து தப்பியுள்ளார். அஃப்னான் ஜாசிம் என்ற அந்த மாணவர் இந்தக் கிருமியிடமிருந்து உயிர் பிழைத்த ஒன்பதாவது நபர் ஆவார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் இருந்து 22 நாட்களுக்குப் பிறகு அஃப்னான் ஜாசிம் வீடு திரும்பியுள்ளார். அவர் உயிர் பிழைக்க காரணம், இந்தக் கிருமித் தொற்று இருந்தது ஆரம்பத்திலேயே க…

  24. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 26 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் தமிழர் உணவு மரபில் ‘பழைய சோற்றுக்கு’ எப்போதும் தனித்த இடம் உண்டு. சர்வதேச அளவில் பழைய சோறு விளைவிக்கும் நன்மைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளதை அண்மைக் காலமாகக் காண முடிகிறது. பழைய சோறு உள்ளிட்ட நொதித்த உணவுகள் நம் உடலுக்கு வழங்கும் நன்மைகள் என்ன? அவை எப்படி நம் உடலுக்குள் செயலாற்றுகின்றன? நொதித்த உணவுகள் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை …

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மெட்டில்டா கென்னல்ஸ், மெர்சிடிஸ் ஜிமினெஸ், நூரியா காம்பிலோ பதவி, பிபிசி 24 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 25 ஜூலை 2024 மழைக் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு அடிக்கடி சளி பிரச்னை உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், மூக்கு அடைத்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இதன் பிறகு, மூக்கு மூலம் சுவாசிப்பது கடினமாகி சில சமயம் நாம் வாய் மூலம் மூச்சு விடுவோம். இப்படி வாய் மூலம் சுவாசிப்பது ஆரோக்கியமானதா? இப்படி சுவாசிக்கும் போது உடலுக்கு என்ன நடக்கும்? இதுகுறித்து நிபுணர்கள் கூறுவது என்ன? ஒரு நாளில் சுமார் 10,000 முதல் 12,000 லிட்டர் வரையிலான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.