உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26625 topics in this forum
-
இந்தோனேசியாவில் மருத்துவ சிரப்பினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 133ஆக உயர்வு! இந்தோனேசியாவில் மருத்துவ சிரப்பில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் தொடர்புடைய கடுமையான சிறுநீரக காயத்தால் (AKI) இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, முன்னர் அறிவிக்கப்பட்ட 99 இறப்புகளில் இருந்து 133ஆக உயர்ந்துள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சர் குணாடி சாதிகின் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய சுகாதார அதிகாரிகள் இந்த வாரம் கடுமையான சிறுநீரக காயத்திலிருந்து குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில் ஜனவரி முதல் விபரிக்க முடியாத அதிகரிப்பு குறித்து விசாரித்து வருவதாகவும், அனைத்து சிரப் அடிப்படையிலான மருந்துகளின் விற்பனை மற்றும் பரிந்துரைகளை தற்காலிகமாக தடை செய்துள்ளதாகவும் தெரிவ…
-
- 0 replies
- 178 views
-
-
அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவினால் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ஆப்கான் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ள உத்தரவு அமெரிக்காவினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஆப்கான் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதை டொனால்ட் டிரம்ப் காலவரையறையின்றி இடைநிறுத்தியுள்ளார். இந்த தீர்மானம் ஆப்கான் அகதிகள் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்கள் மத்தியில் பெரும் குழப்…
-
- 0 replies
- 178 views
-
-
இரண்டாம் எலிசபெத்: குதிரைகள் மீது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் கொண்டிருந்த ராணி ஃபிராங்க் கியோக் பிபிசி விளையாட்டு 9 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,UK PRESS VIA GETTY படக்குறிப்பு, பந்தயத்தின்போது ராயல் பாக்ஸில் தன் பந்தய மேலாளர் ஜான் வாரன் உடன் அமர்ந்திருந்த ராணி, மகிழ்ச்சியில் புன்னகைத்தபோது படம்பிடிக்கப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் விடுமுறை மாளிகைக்கு செல்லும்போது நீங்கள் கவனிக்கக் கூடிய முதல் விஷயம், அவருடைய 'எஸ்டிமேட்' என்ற பந்தய குதிரையின் முழு உருவச் சிலை. சாண்ட்ரிங்காமில் அமைந்துள்ள இச்சிலை, கிரீடம் தரித்த ஒருவரால் அரிதாக ஈடுபடக்கூடிய விளை…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
Published By: VISHNU 25 JUL, 2023 | 04:43 PM ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரக்கு இடையிலான அண்மைய சந்திப்பு பலதரப்பட்ட முக்கிய கூட்டு முயற்சிகள் குறித்து அவதானம் செலுத்தியது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் போக்கை வடிவமைக்க அமெரிக்காவும் இந்தியா உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆரத்தி பிரபாகர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளிலும் பணியாற்றி வருகிறோம், செயற்கை நுண்ணறிவின் தீங்குகளை சமாளிக்கும் திறனை அதிகரிக்கவும், அதை நன்மைக்காகப் பயன்படுத்தத் தொடங…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
ரஷ்யாவின் படையெடுப்புக்கு... எதிரான போராட்டத்தில், உக்ரைன் தனியாக இல்லை: பிரித்தானியா ஆதரவு! ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘விளாடிமிர் புடின் உக்ரைன் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது பிரித்தானியா அதை வேடிக்கை பார்க்காது. நாங்கள் கைவ், மரியுபோல், லிவிவ் மற்றும் டொனெட்ஸ்க் மக்களுடன் நிற்கிறோம். உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை அதிகரிக்க வேலை செய்யும் …
-
- 0 replies
- 178 views
-
-
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 11:00 AM காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பெனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 21 மாதங்களாக …
-
-
- 2 replies
- 178 views
-
-
தென்னாபிரிக்காவில் எரிவாயு கொள்கலன் லொறி வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு : பலர் காயம் 25 DEC, 2022 | 03:15 PM தென்னாபிரிக்காவில் எரிவாயு கொள்கலன் லொறி வெடித்துச் சிதறிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அரச அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் சென்று கொண்டிருந்த எரிவாயு கொள்கலன் லொறி ஒன்று, பாலம் ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த லொறியை நகர்த்த முயன்றபோது அது பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் பலியானோர் எ…
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
உக்ரைனின்... வான் பாதுகாப்பு அமைப்புகளை, அழித்துள்ளதாக... ரஷ்யா அறிவிப்பு! உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தங்களது தரைப் படையினருக்கு வான்வழியாகப் பாதுகாப்பு கொடுப்பதில் ஏற்பட்ட தோல்வியையடுத்து இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு ஸ்லோவேகியா அளித்ததாகத் தெரியவந்துள்ள நிலையில், அந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என அந்த நாடு தெரிவித்துள்ளது. டினிப்ரோ என்ற இடத்தில் இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை மிகோலாய், கார்கிவ் பிராந்தியங்களிலும் அழித…
-
- 0 replies
- 178 views
-
-
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 70பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 70பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ தெரிவித்துள்ளார். இதன்படி கப்பலில் உள்ள மொத்தம் 355 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கப்பலில் முதலில் ஒருவருக்கு மட்டுமே இருந்த இந்த வைரஸ் தொற்று, தற்போது நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இந்த செயற்பாட்டுக்கு உலக நாடுகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இந்த கப்பலை ஜப்பானின் 8 துறைமுகங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. எங்கள் எல்லைக்குள் இந்த கப்பலை…
-
- 0 replies
- 177 views
-
-
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு ; இவ் ஆண்டில் 600 சம்பவங்கள் பதிவு By T. SARANYA 15 NOV, 2022 | 10:09 AM விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். அவர்கள் கால்பந்து வீரர்கள் என தெரிய வந்து உள்ளது. காயமடைந்த 2 பேரில் ஒருவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் பல்கலைக்கழக வளாக பகுதியில் தடையுத்தரவு விதிக்கப்பட்டது. இதில், சந்தேக நபரான கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் ஜூனியர் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் …
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
மியான்மர் தலைவர்கள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் பாயுமா? பிரிட்டனில் ஆண்டுதோறும் வீணடிக்கப்படும் 10 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கிறிஸ்துமஸுக்காக கருமை நிற பொம்மைகளை வாங்கும் ஆஃப்ரிக்கா முஸ்லிம்கள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 177 views
-
-
தாலிபன் தாக்குதலுக்கு ஆளானதால் பிரிட்டனில் தங்கியிருந்த பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மலாலா பாகிஸ்தான் திரும்பினார் - ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் வந்தவருக்கு பிரதமர் இல்லத்தில் வரவேற்பு எகிப்து அதிபராக இரண்டாவது முறையாக அப்தெல் ஃபடா அல் சீஸி வெற்றி பெற்றதாக அரசு ஊடகம் அறிவிப்பு - தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டு ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் வசிக்கும் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ராஜ வம்சாவளி குடும்பத்தினர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 177 views
-
-
Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 01:56 PM காசா மருத்துவமனையின் மகப்பேறு வோட்கள் ஐவிஎவ் சிகிச்சை நிலையங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் ஒரு இனப்படுகொலை செயல் என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது என தெரிவித்துள்ள ஐநா பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கை ஐநாவிடம் கையளிக்கப்…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
உக்ரைனிலுள்ள இரசாயன ஆலை மீது... ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அம்மோனியா கசிவினால் மக்கள் அச்சம்! உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமிக்கு அருகில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்ய ஏவுகணை தாக்கியதால் ரஷ்ய ஏவுகணை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், சுமிக்கு அருகில் உள்ள நோவோசெலிட்ச் வசிப்பவர்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் 50 டன் எடையுள்ள விஷ வாயு தொட்டி சேதமடைந்ததாக பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ ஸிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார். இது அம்மோனியா மேகத்தை உருவாக்கியது. மேகம் சுமார் 2.5 கிலோ மீற்றர் (1.5 மைல்) பகுதியை பாதித்தது. சுமிகிம்ப்ரோம் இரசாயன ஆலையில் அவசர பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். அ…
-
- 0 replies
- 176 views
-
-
எகிப்தியர்களுக்கு முன்பே 'மம்மி' செய்த தென்னமெரிக்காவின் பழங்கால சின்சோர்ரோ கலாசாரத்தினர் ஜுவான் ஃபிரான்சிஸ்கோ ரியுமல்லோ பிபிசி ஃப்யூச்சர் 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SERGIO DONOSO/EYEEM/GETTY IMAGES எகிப்தியர்களின் மம்மிகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கலாம். ஆனால், அவைதான் பழைமையானவை என்று கூறமுடியாது. சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் வாழ்ந்த சின்சோர்ரோ மக்கள்தான் முதன்முதலாக, 7,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடலை மம்மியாக செய்துள்ளனர். பூமியின் வறண்ட பகுதியான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில், எகிப்தியர்களின் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிகளை விடப் …
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 05:11 PM கனடாவின் வடக்கு நுனாவட் பகுதியிலுள்ள ஆர்க்டிக் ரேடார் தளத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர் இரண்டு பனிக் கரடிகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் பாஃபின் தீவின் தென்கிழக்கே உள்ள ப்ரெவூர்ட் தீவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கனேடிய அரசாங்கத்தின் சார்பாக ரேடார் பாதுகாப்பு தளங்களை இயக்கும் நிறுவனமான நாசிட்டுக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்தவராவார். தாக்குதல் நடத்திய கரடிகளில் ஒன்றை மற்றைய ஊழியர்கள் கொன்றுள்ளனர். இந்த பகுதிகளில் மனிதர்கள் மீது பனிக் கரடி தாக்கும் சம்பவம் மிகவும் அரிதாகவே நிகழும். இந்த சம்பவம் குறித்த…
-
-
- 1 reply
- 176 views
- 1 follower
-
-
கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு February 6, 2025 கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர். கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்றவேளை பெண்கைதிகளை தாக்கினார்கள் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி…
-
- 0 replies
- 176 views
-
-
அமெரிக்க அதிபா் தோ்தலில் விண்வெளியிலிருந்தே வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ். சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் , நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் அங்கிருந்தே அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளா்களிடம் சுனிதா வில்லியம்ஸ் , ‘தோ்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். எனவே, நான் விண்வெளியில் இருந்தபடியே அதிபா் தோ்தலில் வாக்களிக்கவிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, பட்ச் வில்மோரும், அதிபா் தோ்தல் வாக்குச் சீட்டுக்காகவிண்ணப்பத்துள்ளதாகத் தெரிவித்து…
-
- 0 replies
- 176 views
-
-
அமெரிக்காவில் 50 மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்: 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவின், 50 மாகாணங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8700ஆக உயர்ந்துள்ளதுடன், 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றினால் முதல் உயிரிழப்பு பதிவானது. ஒரு மாதத்துக்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 100ஐத் எட்டியுள்ளது. நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், பாடசாலை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 176 views
-
-
பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. Trevor T McBride படக்குறிப்பு, எரிபொருள் நிரப்பிய பிறகு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம். இந்த புகைப்படம் அமெரிக்க விமானப்படை ஆவண காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. கட்டுரை தகவல் ரெஸா செஃபாரி பிபிசி பெர்ஷியன் சேவை 28 நிமிடங்களுக்கு முன்னர் அன்று ஏப்ரல் 13, 2024- இரவு நேரம். பல தசாப்தங்கள் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது. அந்த ஆண்டு ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியிருந்தது. இதில் இரான் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். டமாஸ்கஸ் தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏப்ரல் 13-ஆம் தேதி இஸ்ரேல் மீது டிரோன் ம…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை... சோதனை செய்தது, வடகொரியா! வடகொரியா மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் ஏவுகணைகள் நேற்று (புதன்கிழமை) ஏவப்பட்டதாக சியோலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்த ஒரு பயணத்தைத் தொடர்ந்து, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. குறைந்தது இரண்டு ஏவுதல்கள் நடந்ததாக ஜப்பான் உறுதிப்படுத்தியது, ஆனால் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் எ…
-
- 0 replies
- 176 views
-
-
இந்தியாவில் வீசும் கடுமையான வெப்பக்காற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தொட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது நாட்டின் பல பகுதிகளில் வீசி வரும் இந்த வெப்பக்காற்று காரணமாக சில பகுதிகளில் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸைத் எட்டியுள்ளது. தென் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவிலேயே வெயிலின் தாக்கம் காரணமாக பெரும்பாலானோர் இறந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த இரு மாநிலங்களில் 750 பேர் வரை வெயிலின் உக்கிரத்தால் பலியாகியுள்ளனர். வெப்பக்காற்றின் காரணமாக மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும், வெளியே செல்வதானால் குடிநீர் எடுத்துச் செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு…
-
- 0 replies
- 176 views
-
-
உக்ரைன் தலைநகரிலுள்ள... பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும்... திறக்கப்படும்: பிரதமர் பொரிஸ்! உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், டெல்லியில் இந்தியத் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அடுத்த ஆண்டு இறுதி வரை தொடரும் சாத்தியம் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதால், போலந்துக்கு ஆதரவாக இராணுவ டாங்கிகளை அனுப்புவதை பிரித்தானியா கவனித்து வருவதாகவும்…
-
- 0 replies
- 176 views
-
-
சிரிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 77 பேர் உயிரிழப்பு By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 12:29 PM லெபனானில் இருந்து குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 77 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (22) அன்று சிரிய நாட்டவர்கள் மற்றும் லெபனான் நாட்டவர்கள் உள்ளடங்கலாக 150 பேரை ஏற்றிக்கொண்டு குறித்த படகு பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு மத்தியதரைக் கடலில் கவிழ்ந்ததையடுத்து, சிரியாவின் தெற்கு துறைமுக நகரமான டார்டஸ் கடற்கரையில் வித்துக்குள்ளானவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் மீட்…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, பிரான்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு பிரான்சுக்கு போய்ச் சேர்ந்த மோடிக்கு நேற்று முன்தினம் எலிசி அரண்மனையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், பிரான்ஸ் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, டவ்லவுசில் உள்ள பிரெஞ்சு விண்வெளி நிறுவனத்தை அவர் பார்வையிட்டார். அப்போது தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இந்திய மாணவர்கள் “மோடி”…”மோடி” என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தபடி பிரதமர் நரேந்திர மோடியை சூழ்ந்து கொண்டனர். மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களுடன் புன்ன…
-
- 0 replies
- 176 views
-