உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது. பொறுமையை முடித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை குறி வைத்து இலங்கை அரசு வெறித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 65 அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். வீடுகளை இழந்து மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தவர்கள் இவர்கள். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியும் இச்செயலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில மாதங்களுக்கு …
-
- 11 replies
- 2.3k views
-
-
காஞ்சிபுரம்: தமிழகத்தில் ரௌடிகள் வேட்டை தொடர்கிறது. காஞ்சிபுரம் அருகே பயங்கர ரௌடியான கொர கிருஷ்ணா என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். கொலை, கொள்ளை வழிப்பறி, ஆள் கடத்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கந்து வட்டி, மாமூல் வசூல் என பல வகையான ரௌடித்தனங்கள் செய்து வந்தவன் இந்த கொர கிருஷ்ணா. 40 வயதான இவனுக்கு கள்ளச்சாரயம் மூலம் பணம் குவிந்தது. இதனால் காஞ்சியில் மிகப் பெரிய பங்களாவைக் கட்டி வாழ்ந்து வந்தான். இவனுக்கு காட்பாடியிலும் நெமிலியிலும் பெரிய பங்களாக்கள் உள்ளன. காஞ்சியிலும் காட்பாடியிலுமாக தனது ரௌடி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தான். 24 மணி நேரமும் குண்டர் படையோடு பல கார்களில் சுற்றுவது கொர கிருஷ்ணாவின் ஸ்டைல். இவன் மீது காஞ்சிபுரம் மாவட்டம் தவிர வேலூர், திருவண்ணாமல…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்னை: பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து வருவதாக 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் 8ம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களது கணக்கு ஆசிரியரான சுப்புராஜ் (45) தினமும் எங்களிடம் தவறாக நடக்கிறார். வகுப்பு முடிந்ததும் மாணவர்களை போகச் செச்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்கச் சொல்வார். நாங்கள் மட்டும் இருக்கும்போது எங்களிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கமாக பேசுவார்…
-
- 0 replies
- 1k views
-
-
டெல்லி: ஜனாதிபதி அப்துல் கலாமே மீண்டும் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என 'த வீக்' நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். த வீக் ஆங்கில இதழும், சிஓட்டர் என்ற பிரபல கருத்துக் கணிப்பு நிறுவன¬ம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தின. ஜூன் மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் கலாமுக்கு மீண்டும் அப்பொறுப்பை வழங்கலாமா, இப்பொறுப்புக்கு வரத் தகுதியான பிற தலைவர்கள் யார் என்பதுதான் கருத்துக் கணிப்பின் முக்கிய கேள்விகள். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கருத…
-
- 0 replies
- 745 views
-
-
சேலம்: பள்ளியில் மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதையடுத்து பொது மக்கள் அந்தப் பள்ளியை சூறையாடினர். சேலம் அருகே ஓமலூரில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த பெண்ணாகரத்தை சேர்ந்த சண்முகம்வெண்ணிலா தம்பதியின் மகளான சுகன்யா (வயது 17) கடந்த 16ம் தேதி முதல் காணாமல் போனார். விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி காணாமல் போனதையடுத்து பரபரப்பு நிலவியது. அந்த மாணவியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் பலனில்லை. இந் நிலையில் இன்று காலை அந்த பள்ளியில் இருக்கும் கிணற்றில் அந்த மாணவியின் பிணம் மிதந்தது. அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அந்த மாணவி அங்குள்ள கிறிஸ்தவ சாமியார்களால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி அப் பகுதி பொது மக்கள் ப…
-
- 0 replies
- 895 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு 7 ஆயிரம் டன் உணவுப் பொருள் கருணாநிதி கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுப்புகிறது சென்னை, நவ. 17: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு 5200 டன் அரிசி, 1500 டன் சர்க்கரை மற்றும் 300 டன் பால்பவுடரை இந்திய அரசு அனுப்பி வைக்கும் என்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் 45 பேரை இலங்கை ராணுவம் குண்டு வீசி படுகொலை செய்தது. அப் போது, Ôஇனிமேலும் மத்திய அரசு பொறுமை கடைப்பிடிக்க வேண்டுமாÕ என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார். முதல்வரின் அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கொடுத்தார். யாழ்பாணத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடிவிட்டது. அதனால் உணவு…
-
- 5 replies
- 1.8k views
-
-
டெல்லி: அருணாச்சல் பிரதேசம் மாநிலம் சீனாவுக்குச் சொந்தமானது என்று இந்தியாவுக்கான சீன தூதர் சூன் யூக்ஸி கூறியிருப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுமையும் சீனாவுக்குச் சொந்தமான பகுதி என்று யூக்ஸி சீனத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல் பிரதேசம் என்பதில் எந்தவித சந்தேக¬ம் சீனாவுக்குத் தேவையில்லை. அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம். சீன தூதரின் பேச்சு கண்டனத்துக்குரியது. இது தேவையற்ற பேச்சு என்றார் முகர்ஜ…
-
- 2 replies
- 984 views
-
-
புலிகளுக்கு இந்தியா உதவுகிறது: இலங்கை நவம்பர் 17, 2006 கொழும்பு: விடுதலைப் புலிகள் ஆயுதம் கடந்த இந்திய மீன் பிடிக்கும் படகுகளை இந்தியா கொடுத்து உதவுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜெனீவா பேச்சு வார்த்தை தேல்விக்கு பின் இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகளின் படகுகளை நாங்கள் மூழ்கடித்து வருகிறோம். விடுதலைப் புலிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகளை கொடுத்து ஆயுதம் கடத்த இந்தியா உதவி செய்து வருகிறது என்றார். மீண்டும் பேச்சுக்கு அழைப்பு: இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை அரசு …
-
- 3 replies
- 1.1k views
-
-
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்களின் என்ஜின்கள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ஜின்களின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். என்.இ.பி.சி. என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் சென்னை விமான நிலையத்தின் 8வது நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பல மாதங்களாக இந்த விமானங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கான வாடகையை என்.இ.பி.சி. நிறுவனம் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நான்கு விமானங்களையும் விமான நிலைய குழுமம் பறிமுதல் செய்தது. இதேபோல தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான 3 விமானங்களும் இதே காரணத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டன. வாடகையைக் கட்டினால் விமானங்கள் திருப…
-
- 3 replies
- 1.4k views
-
-
http://www.alaikal.com/index.php?option=co...9&Itemid=34 ஜப்பான் கடலில் மிக பயங்கர பூகம்பம்சுனாமி எச்சரிக்கைமக்கள் வெளியேற்றம் புதன், 15 நவம்பர் 2006 14:26 டோக்கியோ: ஜப்பானின் குரில் தீவுப் பகுதியில் இன்று மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.1 என்ற அளவுக்கு இந்த பூகம்பம் பதிவானது. இதையடுத்து ஜப்பானின் கிழக்குப் பகுதியையயும் ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதியையும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் இருந்து 1,700 கி.மீ. தொலைவில் வட மேற்கே இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது. ரஷ்யாவை ஒட்டிய ஹோகாய்டோ மாகாணத்தின் அருகே உள்ளது இந்த குரில் தீவுக் கூட்டம். இந்திய நேரப்படி இன்று மாலை…
-
- 2 replies
- 1.1k views
-
-
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில், விஞ்ஞானிகள் உள்ளிட்ட 150 பேரை போலீஸ் உடையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் கடத்திச் சென்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. தலைநகர் பாக்தாதின் மையப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான அறிவியல் ஆய்வுக் கழகம் உள்ளது. இங்கு ஏராளமான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், துப்பாக்கிகள் ஏந்தியபடி அதிரடிப் போலீஸ் சீருடையில் ஏராளமானோர் இந்த அலுவலகத்திற்கு ஏகப்பட்ட கார்களில் வந்தனர். ஆய்வுக் கழகத்திற்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த விஞ்ஞானிகள் உள்பட 150க்கும் மேற்பட்டோரை கார்களில் கடத்திக் கொண்டு பறந்தனர். இது ஒரு கடத்தல் என்பது சில நிமிடங்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. இதனால் பாக்தாத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட…
-
- 0 replies
- 739 views
-
-
சென்னை: விலை உயர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றை விற்றும், உதிரிபாகங்களை கழற்றி விற்றும் மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் ஓபுல் ரெட்டியின் மகள் மீனாட்சி ரெட்டியை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் அதிபர் பிரதாப் ரெட்டியின் சம்பந்தி தான் இந்த ஓபுல் ரெட்டி. நிப்போ பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார் ஓபுல் ரெட்டி. இவரது மகள் மீனாட்சி ரெட்டி. இவரது கணவர் விஜயவர்த்தன் ரெட்டி. இவர் கொடுங்கையூரில் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வருடமாக மீனாட்சி ரெட்டி தமிழகத்தைச் சேர்ந்த பல டிராவல் ஏஜென்சிகளிடம் வாடகைக்கு கார்களை எடுத்து வந்துள்ளார். சென்னையில் மட்டும் 7…
-
- 0 replies
- 904 views
-
-
லண்டன்: அணுகுண்டுகள் தாயரிக்கும் முயற்சிகளில் அல்கொய்தா ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இங்கிலாந்தின் புலனாய்வு துறை (எம்ஐ 15) வெளியிட்டுள்ள தகவலில், சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தயாரிக்கும் தொழில் நுட்பங்களை கற்று அணுகுண்டு தயாரித்து இங்கிலாந்து மற்றும் அமெ>க்கா போன்ற நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்த பின்லேடனின் அல்கொய்தா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சில முக்கியமான ரகசிய தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. கொடிய நோய்களை பரப்பும் உயிரியல் ஆயுதங்களை தயாரிப்பதிலும் அல்கொய்தா முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது http://thatstamil.oneindia.in/news/2006/11/15/alqueda.html
-
- 0 replies
- 701 views
-
-
இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி சண்டிகார்இ நவ.14- இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி இலங்கை விமானப்படையை சேர்ந்த வீரர்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகார் நகரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்குள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் கடந்த மாதம்(அக்டோபர்) 14-ந்தேதி தொடங்கிய இந்த பயிற்சிஇ ஜனவரி மாதம் 5-ந்தேதி முடிவடைகிறது. ஹஹமிக்-27'' ரக விமானங்களை இயக்குவது பற்றி இலங்கை விமானப்படை வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். ரஷிய விமானம் இது பற்றி இலங்கை விமானப்படை வீரர் பெரேரா கூறுகையில்இ ஹஹநாங்கள் 6 பேர் கொண்ட குழுக்களாக பயிற்சி பெற்று வருகிறோம்.'' என்று தெரிவித்தார். ஹஹஇலங்கையில…
-
- 3 replies
- 1.2k views
-
-
சரத்குமாரின் அரசியல் களத்தில் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் இப்போது நடந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தி.மு.க.வில் உறுப்பினாரக இணைந்த சரத்குமாருக்கு எம்.பி. பதவி கொடுத்து அழகு பார்த்தது தி.மு.க. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மனக்கசப்புகளால் அதிருப்தியில் இருந்த சரத்குமார், தி.மு.க.வில் இருந்து விலகியதோடு எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் மனைவி ராதிகாவுடன் ஜெயலலிதாவை சந்தித்து அ.திமு.க.வில் இணைந்த சரத்குமார் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பல கூட்டங்களிலும் பேசினார். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழி போல அ.தி.மு.க.விலும் சரத்குமாருக்கு தகுந்த மரியாதை கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார…
-
- 1 reply
- 1.4k views
-
-
மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
-
- 6 replies
- 1.4k views
-
-
சியா முஸ்லீம்களை அதிகமாகக் கொண்டிருந்த ஈராக்கிய நகரான Dujail இல் 1982 இலி 148 பொதுமக்களைக் கொன்ற நிகழ்வில் மறைமுகமாக தொடர்பு கொண்டிருந்ததற்காக ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் குசைனுக்கு இன்று தூக்குத்தண்டனைத் தீர்வு அளிக்கப்பட்டது. இவர் ஈராக் மீதான 2003 அமெரிக்க பிரித்தானிய கூட்டுப்படையெடுப்பின் பின் சிறைபிடிக்கப்பட்டு நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டி
-
- 16 replies
- 2.7k views
-
-
அமெரிக்கா காங்கிரஸ் மற்றும் செனட் தேர்தலில் புஸ்ஸின் கட்சி தோல்விகளை சந்தித்து கொண்டிருகிறது காங்கிரசை democrats கைப்பற்றிவிட்டார்கள் வெளிவந்த முடிவுகளின் படி 227 ஆசனங்களை பெற்று democrats முன்னணியில் இருகிரார்கள் புஸ்சின் கட்சிக்கு 192 ஆசங்கள் கிடைத்துள்ளன இன்னும் 19 ஆசங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டி இருந்தாலும் புஸ்ஸினால் பெரும்பான்மையை பெறமுடியாது செனட்டை பொறுத்தவரையில் 49 ஆசனங்களை இருகட்சிகளும் பெற்றிருக்கின்றன இன்னும் 2 ஆசனங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டியுள்ளது governor பொறுத்தவரையில் 8 ஆசங்களி மேலதிகமாக பெற்று முன்னிலை வகிக்கின்றனர் democrats இன்னும் 2 ஆசனங்களின் முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது இத்தேர்தலானது புஸ்ஸின் கொள்கைக்கு கிடைத்த பேர…
-
- 1 reply
- 868 views
-
-
சிங்களக் கொலைகாரர்களுக்கு ஆயுதம் வழங்க இந்தியா முடிவு தமிழர்களே உங்கள் முடிவு என்ன? இலங்கை அரசுக்குத் தாக்குதல் ஆயுதங்களை வழங்குவது இல்லை என்ற கொள்கை உள்ளது. ஆனால் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிரதேசப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாம் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் - என்று அரசிடம் இருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்துடன் பேச்சு நடத்தினோம். சோனார்கள், இராடார்கள், இலத்திரனியல் தளவாடங்கள், கடற்படையினருக்கான துப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க அவற்றை அனுப்ப உள்ளோம்" என்று இந்தியக் கடற்படைத் தளபதி அருண்பிரகாஷ் கூறியுள்ளார். இலங்கைக்கு இராணுவ உத…
-
- 2 replies
- 1.2k views
-
-
40 ஆபிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த வாரம் சீனாவில் ஒன்று கூடியிருக்கிறார்கள் சீனா - ஆபிரிக்க கூட்டுறவு மகாநாட்டிற்காக. சீனாவின் தலைவர் பல அபிவிருத்தி திட்டங்களை இலவச பாடசாலை வைத்தியசாலை கட்டுதல், தொழிநுட்ப உதவிகள், ஆபிரிக்க மாணவர்களிற்கு சீனாவில் படிக்க புலமைப்பரிசில் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. மேற்குலகத்தோடு (பிரித்தானியாவோடு) முரண்பாட்டில் உள்ள சிம்பாவே ஜனாதிபதி போன்றோரும் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஆபிரிக்காவின் பெரும்பாலான நாடுகள் அனைத்தையும் நோக்கிய பாரிய ஆழமான அகலமான உதவித்திட்டங்கள் சினாவின் தற்போதைய பொருளாதார பலத்தையும் எதிர்கால திட்டங்களிற்கும் எடுத்துக்காட்டு. பொருளாதார இராஜதந்திர இராணுவ ரீதிகளில் மேற்குலகிற்கும் அவர்களத…
-
- 0 replies
- 784 views
-
-
பின்லேடனை போல் ஜார்ஜ்புஷ் ஆபத்தான தீவிரவாதி: கருத்துக்கணிப்பில் தகவல் இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ, இஸ்ரேல் ஆகிய நாடுகளை சேர்ந்த பத்திரிகைகள் இணைந்து இந்த நாட்டு மக்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. உலக அமைதிக்கு ஆபத்தாக இருக்கும் நாடு எது என்ற கேள்விக்கு அமெரிக்கா வினால் தான் உலக அமைதிக்கு ஆபத்து என்று அவர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். இங்கிலாந்தில் 69 சதவிதம் பேரும் கனடாவில் 62 சதவிதம் பேரும், மெக்சி கோவில் 53 சதவிதம் பேரும் அமெரிக்காவால் உலக அமைதி கெடுகிறது என்று கருத்து கூறி உள்ளனர். பின்லேடனை போல சர்வதேச தீவிரவாதிகள் பட்டி யலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்சையும் அவர்கள் சேர்த்துள்ளனர். ஆபத்தான மனிதர் பின்லேடன் என்று இங்கிலாந்தில் 87 சதவிதத் தினர…
-
- 0 replies
- 882 views
-
-
நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது நவம்பர் 03, 2006 மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தன்னைப் பார்த்து குரைத்த நாயை துப்பாக்கிõயல் சுட்டவரை போலீஸார் கைது செய்தனர். மயிலாடுதுறை, பட்டமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன். இவரது மகன் செல்வம். அவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்கள். செல்வத்தின் வீட்டு வழியாக முருகேசன் என்பவர் நடந்து சென்றபோது நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தனது கையில் இருந்த குருவி சுடும் துப்பாக்கியால் நாயை சுட்டார். இதனால் நாயின் முதுகுப் பகுதியில் 2 குண்டுகள் பாய்ந்து அது துடித்தது. நாய் சத்தம் கேட்டு செல்வத்தின் மனைவி சாவித்திரி வெளியே வந்தார். நாயை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவரது கையி…
-
- 0 replies
- 792 views
-
-
சிறுமியை சீரழித்த 'சாமி'க்கு 10 வருடம் சிறை! அக்டோபர் 30, 2006 வேலூர்: 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆற்காடு கங்காபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. சாமியாராக தன்னை அறிவித்துக் கொண்ட இந்த தண்டபாணி அப்பகுதியில் தன்னை நாடி வருவோரின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு வலிப்பு நோய்க்கு இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திவ்யா என்ற 8 வயது சிறுமியை அழைத்து வந்தனர். அப்போது அந்த சிறுமியை சாமியார் தண்டபாணி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு தண்டபாணி கைது செய்யப்பட்டார். அவர் மீது வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக…
-
- 2 replies
- 1.1k views
-
-
வைகோ மீதான தேச துரோக வழக்கு தள்ளுபடி சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. சென்னை அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகர் பால். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மீது வழக்கு தொடர்ந்தார். அதில், ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் வைகோஇ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினார். வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினார். பிரபாகரனை ஆதரித்துப் பேசினார். அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யமாறு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸார் புகாரைப் பெற மறுத்து விட்டனர். எனவே வைகோ மீ…
-
- 0 replies
- 969 views
-
-
வெறி நாய்களிடம் சிக்கி சிறுவன் படுகாயம்! அக்டோபர் 30, 2006 குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெறி நாய்களிடம் சிக்கி 7 வயது சிறுவன் படுகாயமடைந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அருகே குட்டபெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் நாகராஜ். 7 வயதாகும் நாகராஜன் 2ம் வகுப்பு படித்து வருகிறான். கன மழை காரணமாக சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தனது நண்பர்களுடன் நாகராஜ் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பந்து ஓடியதால் அதைப் பிடிக்க பின்னாலேயே ஓடியுள்ளான் நாகராஜ். அப்போது தெருவில் இருந்த ஒரு நாய் நாகராஜை விரட்டியுள்ளது. அந்த நாய் விரட்ட…
-
- 3 replies
- 1.2k views
-