Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அதிமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலகி உள்ளார். இன்று மாலை கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். திருமாவளவன் விலகி விடுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஜெயலலிதா விடுதலை சிறுத்தைகளுக்கு 4 வீதம் மட்டுமே ஒதுக்கியதால் கடும் அதிருப்தி அடைந்த திருமாவளவன் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளார்

  2. புதிய உலக ஒழுங்கு பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றது. சோவியத் சிதைந்து, வல்லாதிக்கப் பனிப்போர் முடிவுற்ற இந்தச் சூழ்நிலைப் பின்னணியில், உலக ஒழுங்கு இனி எப்படி அமையப் போகின்றது என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தபோது ஒரு புதிய உலக ஒழுங்கு உருவானது. உலகத்து மனிதர்கள் நாடுகள் தமக்குள் பேரழிவு தரும் கொடூரப் போரை இரண்டாவது தடவையாகப் புரிந்து, நினைத்துப் பார்க்க முடியாத நாசங்களைப் பூமிக்கோளத்துக்கு ஏற்படுத்தி, அடங்கியபோது அந்தச் சிதைவுகளிலிருந்து சிதிலங்களிலிருந்து மற்றொரு உலக ஒழுங்கு உருவெடுத்தது. பூமியையே கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அதீத அவாவுடனும், ஆசையுடனும், ஆவலுடனும் போர் வெறியில் குதித்த நாஸி அரக்கன் அந்த இரண்டாம் உலகப்போருடன் களத்த…

  3. அல் கைடா தலைவர் ஒசாமா பின் லேடன் சுகவீனம் காரணமாக கடந்த மூன்று கிழமைகளுக்கு முன் மரணமடைந்தார் என உறுதிப்படுத்தபடாத செய்திகள் வெளியாகி இருக்கின்றன மேலதிக செய்திகளை எதிர்பார்க்கிறேன்.

  4. பிரதமருடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு செப்டம்பர் 21, 2006 டெல்லி: இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழ் எம்.பிக்கள் குழுவினர் இன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசுகின்றனர். இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் சம்பந்தம், சேனாதி ராஜா, கஜேந்திர குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு இந்தியா வந்துள்ளது. டெல்லி வந்துள்ள இந்த எம்.பிக்கள் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமது, வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோரை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர…

  5. பாலை ஊற்றி பாம்பை வளர்த்தாலும் அது பாய்ந்து கொத்தும்" என்பது ஆன்றோர் வாக்காகும். சிங்கள அரசைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க உண்மையாகிவிட்டது. சிங்கள அரசுக்கு இந்தியா எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறது. இராணுவ ரீதியான உதவிகள் வளர்ச்சித்திட்டங்களுக்கான நிதிஉதவிகள் வணிக ரீதியான சலுகைகள் இன்னும் எத்தனையோ வகையில் சிங்கள அரசைத் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு செயல்பட்டுவந்திருக்கிறது. இலங்கை சுதந்திரம்பெற்றவுடன் 1949ம் ஆண்டில் இந்திய வம்சா வழியில் வந்த மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிங்கள அரசு பறித்தது. பல தலைமுறைகளாக உழைத்து இலங்கையில் ரப்பர் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியவர்களை விரட்டியடித்தது. ஆனால் இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை…

  6. ஈழப்பிரச்சினையும் தமிழக ஊடகங்களும் மாற்றத்துக்குக் காரணம் ஆட்சி மாற்றமா? -பொ.ஐங்கரநேசன்- ஈழப்போராட்டத்துக்குத் தமிழ்நாட்டு மக்களிடையே பெருகி வரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாற்றி வருகிறது ! பேராசிரியர் கு.அரசேந்திரன் (சென்னை கிறித்துவக் கல்லூரி) தமிழ்த்தேசியக் கொள்கை பேசிய திராவிட இயக்கங்கள் இந்திய அரசியலில் கரைந்துபோன காரணத்தால் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த முன்வரவில்லை. பார்ப்பனர்கள் கைகளில் சிக்கியுள்ள ஊடகங்களும் ஈழப்பிரச்சினையை இருட்டடிப்புச் செய்யவே விரும்புகின்றன. இந்த இரு நிலைகளையும் தாண்டித் தமிழீழ மக்களின் துன்பங்கள,விடுதலைப் போராட்ட வெடிப்புகள். தமிழ்நாட்டு ஊடகங்களில் சில …

  7. குண்டு வீச்சினை எதிர்கொள்ள தயாராயிருங்கள், கற்காலத்திற்கு செல்வதற்கு தயாராகயிருங்கள் என ரிச்சட் ஆர்மிட்டேஜ் குறிப்பிட்டதாக புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்தார் என முஷாரவ் குறிப்பிட்டுள்ளார். நான் இதனை மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகமாக கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலிபானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்தால் பாகிஸ்தானை தாக்குவோமென அமெரிக்கா எச்சரித்தது [23 - September - 2006] முஷாரவ் கூறுகிறார் செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் தலிபானிற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்தால் அந்த நாட்டின் மீது விமானத் தாக்குதலை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா எச்சரித்ததாக ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரவ் குறிப்பிட்டுள்ளார். சி.பி.எ…

  8. ஈரக் காற்று வீசுகிற நீலாங்கரை இல்லம்! இந்தியில்'சினிமா' என்தலைப்பிலேயே ஒரு சினிமா இயக்கிக்கொண்டு இருக்கிறார் பாரதிராஜா. ''என்னோட 28 வருஷசினிமா வாழ்க்கையில், இப்படி சாத்விகமாக உட்கார்ந்து ஒரு படம் நான் செய்ததில்லை. 'பதினாறு வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ரெண்டுக்குப் பிறகு, இது நானே எழுதின கதை. ஒரு சினிமா டைரக்டரின் வாழ்க்கையில் நடக்கிற கதை. இதில் நானே நடிச்சிரலாம்னு முதல்ல நினைச்சேன். இது என் சொந்தக் கதைன்னு நினைச்சுடுவாங்க. அது ஒரு பிரச்னை. அதனால்,மனசில் பட்டவர்நானா படேகர். பெரிய ஞானஸ்தன். விதையைப் போட்டால், விருட்சமா வெளிச் சமா வெளியே வருவான். எனக்கே வித்தை காட்டுவான். தெரிஞ்சு கையாண்டால், மகா நடிகன். ரஜினி,கமல், சிவாஜி வரைக்கும்சகஜமா கொண்டுவந்திருக்கேன். இப்ப…

  9. நியூயார்க்: ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த இரான் அதிபர் அஹமதிநிஜாதும், வெனிசுவேலா அதிபர் சாவேசும் அமெரிக்காவை மிகக் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று வர்ணித்துள்ளார் ஹூயுகோ சாவேஸ். மேலும் ஐ.நா. சபை இப்போது அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனால் ஒரு பயனும் இல்லையென்றும், ஒரு வெட்டியான அமைப்பாக ஐ.நா. இருப்பதாகவும் தாக்கியுள்ளார். அதே போல இரான் அதிபர் அஹமதிநிஜாதும் அமெரிக்காவை வாரிவிட்டுச் சென்றுள்ளார். நியூயார்க் வந்துள்ள அகமதிநிஜாத் ஐ.நா. தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். பேட்டி தொடங்குவதற்கு முன்பு திருக்குரானிலிருந்து சில வாசகங்கள் வாசிக்கப்பட…

  10. வாணியம்பாடி: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், ஆத்திரத்தில் அவரது உதட்டைக் கடித்து துப்பிய சம்பவம் வாணியம்பாடியில் நடந்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வன்னியநாதபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு கல்யாணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந் நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார் வெங்கடேசன். இதுதொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தனது மனைவியின் உதட்டை ஆவேசமாக கடித்து துப்பினார். வலியால் துடித்த ஜானகி பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸார் வெங்கடேசனை கைது செய்துள்ளனர். அன்பில் மனைவியின் உதட்டைக் …

    • 8 replies
    • 2.1k views
  11. கிளின்டன் உலகளாவிய முன் முயற்சியின் இரண்டாவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நியூயோர்க் செல்கிறார். கிளின்டன் உலகளாவிய முன் முயற்சி'யின் மாநாடு இன்று 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நியூயோர்க் நகரில் இடம்பெறுகிறது. இம் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு திருமதி குமாரதுங்க உட்பட தனித்துவமும் அர்ப்பணிப்புணர்வும் உடைய உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசாங்கத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், கல்விமான்கள் ஆகியோர் மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும…

  12. Started by வடிவேல் 007,

    http://video.google.de/videoplay?docid=-12...960023&q=9%2F11

  13. தாய்லாந்தில் இராணுவ ஆட்சி? தாய்லாந்தின் தலைநகரில் இராணுவ ராங்கிகள் நிலைகொண்டிருப்பதாகவும், தாய்லாந்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் நிறுத்தப்பட்டு அரசகுடும்பம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    • 4 replies
    • 1.4k views
  14. கிருஷ்ணர் சிலைக்கு ஜீன்ஸ், டீ சர்ட் போட்டும், புல்லாங்குழலுக்குப் பதில் செல்போனை வைத்தும் 'அழகு' பார்த்த பூசாரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேக மாநிலம் பிருந்தாவனில் பேங்கி பிகாரி என்ற புகழ் பெற்ற கிருஷ்ணர் ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த திங்கள்கிழமை வந்த சில பக்தர்கள், கிருஷ்ணரை மாடர்ன் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டனர். உங்க ஆசையை நிறைவேத்த நான் என்ன பண்ணனும் என்று பூசாரி ஜூகல் கோஸ்வாமியும் குஷியாக கேட்டுள்ளார். உடனே அந்த குறும்புக்கார பக்தர்கள், ஜீன்ஸ், டீ சர்ட் போட வேண்டும், குழலுக்குப் பதில் கையில் செல்போனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பண்ணிடலாமே என்று கூறிய பூசாரி கோஸ்வாமி, பக்தர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டார். கிருஷ்ணர…

  15. அப்பே சிங்கள வெதமாத்தயா "மகிந்த" கியூபாவில் லான்ட் பண்ணியிருக்கிறாராம்!! வேட்டி அவிழப் போகுது போலக் கிடக்கு!! கழுத்திலை இருக்கிற சுருக்கு வர வர இறுகிற மாதிரியும் கிடக்கு!!!! எது எப்படியோ, மாத்தயோ எஞ்ஜோய் பண்ணு!!! :wink: ஆனா ஒரு உண்மை மட்டும் சொல்லோணும், இந்த வயசிலேயும் மனுசி "லக்ஸன, கீல வடக் நா"!!!!..... :P

    • 8 replies
    • 2k views
  16. அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு, பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பிற்கு முதல் மரியாதை வழங்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் ஹவானாவில் மன்மோகன் சிங்கின் எயார் இந்தியா விமானம்தான் முதலில் தரையிறங்கியது. அதன் பிறகு, ஐந்து நிமிடங்கள் கழித்தே முஷாரப்பின் விமானம் தரையிறங்கியது. ஆனால், கியூப அரச அதிகாரிகள், பிரதமர் மன்மோகன் சிங் விமானத்திலிருந்து இறங்க அனுமதி வழங்கவில்லை. முஷாரப்பிற்கு முன்பாக வந்தும், கீழே இறங்காமல் அரை மணிநேரம் விமானத்திற்குள்ளாகவே பிரதமர், இந்திய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஏறக்குறைய `சிறை' வைக்கப்பட்டிருந்தனர். முதலில் முஷாரப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது…

  17. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் இடமாற்றம் [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 17:34 ஈழம்] [காவலூர் கவிதன்] இந்தியாவுக்கான தூதுவர்களின் இடமாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கொழும்பில் பணியாற்றிய நிருபமா ராவ் சீனாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் தற்போது இந்தியத் தூதுவராகக் கடமையாற்றும் அலொக் பிரசாத் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதுவரும் இடமாற்றம் பெறவுள்ளார். பாகிஸ்தானுக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் சிவசங்கர் மேனன், ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். தென்னாபிரிக்காவில் தற்போது இந்தியத் தூது…

  18. சில கள நண்பர்கள் ஜெயலலிதா திருந்தி விட்டதாகவும் அவரே தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர் போலவும் இங்கே சொல்லி வந்தார்கள்.... அவர்களுக்காக பின்வரும் செய்தியை இணைக்கிறேன்.... கிருஷ்ணசாமி கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன் ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு ஆண்டிப்பட்டி, செப். 6- விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா கூறினார். கிருஷ்ணசாமி புகார் அண்மையில் ஒரு கூட்டத்தில், அரசியல் ரீதியாக நடைபெற்ற கூட்டத்தில் கூட அல்ல. ஒரு திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, வேண்டாத, தேவையில்லா…

  19. கனடா மொன்றியலில் Dawson Collegeசில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் துப்பாக்கி சூட்டை நடாத்தியவர்களும் உள்ளடங்களா? என்பது இது வரை தெளிவாகவில்லை என தொலைக்காட்சி நிலையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மதிய வேளை மதிய உணவிற்காக, இருந்த மாணவர்கள் மீது தானியங்கி துப்பாக்கி மூலம் துப்பாக்கி நபர்கள் நடாத்திய தாக்குதலிலே 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 16 பேர் காயப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. பிறிதொரு செய்தியின் படி துப்பாக்கி பிரயோகம் மேற்க்கொண்டவர்களின் ஒருவர் தன்னைத்தானே சுட்டுள்ளதாகவும், மற்றவர் மொன்றியல் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதா

    • 3 replies
    • 1.6k views
  20. தலிபான்களை அழிக்க அதிபயங்கர ஆளில்லாத போர்விமானத்தை கொள்வனவு செய்தது பிரிட்டன் ஆப்கானில் தலிபான்களை அழிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் களமிறங்கியுள்ளன. ஆனால், அமெரிக்காவின் கைவசம் உள்ள வசதிக்கு பிரிட்டன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே, தீவிரவாதிகளின் இரகசிய நடமாட்டத்தை 50 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து உளவு பார்க்கும் திறமை வாய்ந்த ஆளில்லா போர் விமானங்களை, அமெரிக்காவிடம், இருந்து பிரிட்டன் வாங்குகிறது. விண்ணில் இருந்தபடியே, தீவிரவாதிகளின் இருப்பிடத்தை இதனால் அழிக்க முடியும். லண்டன் பாதாள ரயில் நிலையங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து, தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க பிரிட்டன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிர…

  21. வேள்விக்கு புறப்படும் ஆடு

  22. சந்தேகத்துக்கிடமான கம்யூட்டரால் திருப்பிவிடப்ட்ட அமெரிக்க விமானம் அமெரிக்க விமானத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கையடக்க கம்ப்யூட்டரை வெடிகுண்டாக இருக்கும் எனக் கருதியதால் அந்த விமானம் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த `யுனைட்டட் ஏர்லைன்ஸ்' விமானத்தில் இச்சம்பவம் நடந்தது. http://www.thinakkural.com/news/2006/9/13/...s_page10650.htm

  23. [திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:52 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசியலில் தலையிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் விளக்கம் அளித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: அப்பல்லோ மருத்துவமனை விவகாரத்தைப் பொறுத்த வரையில் எமது இந்திய முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதற்காக தலையிட்டோம். இது விடயத்தில் உரிய வழிமுறையில்தான் தலையிடப்பட்டது. தனது நாட்டு வர்த்தக நலன்களை மேம்படுத்துவதில் தூதுவருக்கும் கடமை உண்டு. இலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்த வரையில் அக்கட்சி சொந்த முடிவின் படியே அரசாங்கத்தில் இணைந்துள்ளது. முன்னர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எமத…

    • 0 replies
    • 664 views
  24. நிலைகுலைய செய்த நாள் 2001 செப்டம்பர்-11. எல்லா நாட்களையும் போலத்தான் அன்று காலை அமெரிக்கா தனது பயணத்தை தொடங்கி சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது. காலை 8.45 மணி இருக்கும். நிïயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் இரட்டை கோபுரங்களில் ஒன்றில் விமானம் ஒன்று மோதியது. நிïயார்க் நகரில் பறவைகள் பறப்பது போல எப்போதுமே நிறைய விமானங்கள் பறந்து கொண்டிருக்கும். இதில் ஏதோ ஒன்று கட்டிடத்தில் தவறுதலாக மோதி விட்டதாக கருதினார்கள். அடுத்த 18-வது நிமிடத்தில் இன்னொரு விமானம் அடுத்த கோபுரத்தை நோக்கி வந்தது. அட இன்னொரு விமானமும் தாழ்வாக பறந்து வருகிறதேப என்னதான் நடக்கிறதுப என்று மூளை தனது யோசனை வேலையை தொடங்குவதற்குள் அந்த விமானம் அடுத்த கோபுரத்தில் டமார் என மோதி தீ…

    • 0 replies
    • 880 views
  25. இணையத்தில் தமிழை முன்னணி மொழியாக்க வேண்டுமானால் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான யுனிகோட் தமிழ் பாண்ட் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதை கலாம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் இன்று தமிழ் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனாலும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் இருப்பதால் ஆங்கிலத்தைப் போல தமிழ் புகழ் பெற¬முடியாமல் உள்ளது. இதைப் போக்க உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியான தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தும் வகையில், ஒரே யுனிகோட் முறையை உருவாக்க தமிழறிஞர்களும், கம்ப்யூட்டர் நிபுணர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். …

    • 6 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.