Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா- இதெப்படி சாத்தியம் என வியக்கிறது மருத்துவ உலகம் மெக்சிகோ: புத்தம் புதிதாய் இந்த மண்ணில் வந்து பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் ஆச்சரியம், நம்பிக்கை, கனவு என எல்லாவற்றின் தொடக்கமுமாக அமையும் என்று உருகுவார் அமெரிக்க பெண் எழுத்தாளர் எடா ஜே லேசன். அப்படி ஒரு குழந்தை இந்த மண்ணில் வந்து உதித்த சில மணித்துளிகளில் உயிர்க்கொல்லி வைரசான கொரோனா பாதிப்புக்கு ஆளானால்? மனது கனத்துப்போகிறது. கொலைகார வைரஸ் என்று கொரோனாவை சொல்வது சரிதான். இப்படித்தான் மெக்சிகோ நாட்டில் நடந்திருக்கிறது. அங்கு ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. ‘ட்ரிபுள் டமாக்கா’ என்று அந்தக் குழந்தைகளின் தாயு…

  2. ரஷியாவுடன் பனிப்போர் : விண்வெளியில் அணு ஆயுதத்தை வெடிக்க செய்ய திட்டமிட்டஅமெரிக்கா...! நிலவை பிடிக்க பனிப்போர்: ரஷியாவை முறியடிக்க விண்வெளியில்,அணுஆயுதத்தை வெடிக்க செய்ய திட்ட மிட்ட அமெரிக்கா...! பதிவு: ஜூன் 24, 2020 09:55 AM வாஷிங்டன் விண்வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்டத்தட்ட ஒரு வெற்றிடம் ஆகும். நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும். இந்த பரந்த விண்வெளியில் நட்சத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே. விண்வெளி காலம் மனிதன், பூமி, நிலவு, கிரகங்கள், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள்…

  3. கொவிட்-19 முடக்கநிலையை மீண்டும் உள்ளூர் மட்டத்தில் அறிவித்தது ஜேர்மனி! இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், ஜேர்மன் அதிகாரிகள் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருகின்றனர். சுமார் 360,000 மக்கள் வசிக்கும் கெட்டர்ஸ்லோ மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் திரும்பும் என்று வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் முதல்வர் ஆர்மென் லாஷெட் கூறியுள்ளார். முடக்கநிலை கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும், இந்த நடவடிக்கை ஒரு ‘தடுப்பு நடவடிக்கை’ என்றும் அவர் விபரித்தார். மே மாதத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்த தொடங்கியதிலிருந்து, புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் என …

  4. பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் முடக்கநிலையில் தளர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ஜூலை 4 ஆம் திகதிமுதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. குறித்த வைரஸ் பெருந்தொற்றால் பிரித்தானியாவும் பாதிப்புக்கு இலக்காகியிருந்த நிலையில், இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 04ம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை தொடர்ந்து முடக்க காலத்தில் அனுமதி…

  5. கொரோனா வைரஸ் அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது; அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்குனர் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் கூறி உள்ளார். பதிவு: ஜூன் 24, 2020 09:03 AM வாஷிங்டன் அமெரிக்காவில் 23 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 121,000 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 25 மாநிலங்களில் அதிக புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன அவை அரிசோனா, கலிபோர்னியா, கொளராடோ, டெலாவேர், புளோரிடா, ஜார்ஜியா, ஹவாய், இடாஹோ, கன்சாஸ…

  6. கல்வானில் தாக்குதல் நடத்த சீன ராணுவம் உத்தரவிட்டுள்ளது: அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சித் தகவல் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் நதி பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சீனா உத்தரவிட்டது என்றுஅமெரிக்க உளவுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மே 22-ம் தேதி பாங்கோங்டிசோ, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. கடந்த15-ம் தேதி இரவு இந்திய -சீன ராணுவ வீரர்களுக்குள் மோதல்ஏற்பட்டது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 வீரர்கள் காய…

  7. நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் நால்வர் கைது! புலியாக இருந்த கரோனா தற்போது பூனையாகிவிட்டது; விரைவில் மறைந்து போகும் - இத்தாலி மருத்துவர் மார்ச் மாதத்தில் புலியாக இருந்த கரோனா வைரஸ் தற்போது பூனையாகி வலுவிழந்துவிட்டது என்று இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி இத்தாலியில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவராக உள்ளார். நீண்ட நாட்களாக கரோனா குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், கரோனா வைரஸ் வலுவடைந்துவிட்டதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து மேட்டியோ பாஸ்செட்டி கூறும்போது, “ வைரஸ் வீரி…

    • 7 replies
    • 952 views
  8. ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் சாதனை -கொரோனா இறப்பை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு உலகை உலுக்கி வரும் கொரோனாவால் நாளாந்தம் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து கண்டு பிக்க்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெக்சாமெத்தசோன் எனப்படும் இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டால் அவர்களது இறப்பு விகிதம் குறைகிறது. பரிசோதனை முயற்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 6 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேருக்கு டெக்சாமெத்தசோன் மருந்து கொடுக்கப்பட்டது. இந…

  9. தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்துவிட்டதா? மக்கள் அச்சம்! by : Anojkiyan தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் இருந்து வந்தாலும், கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தென் கொரியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். இதன்பின்னணியில் அண்மைய தினங்களில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது. இதனிடையே சியோல் மற்றும் தலைநகருக்கு வெளியே நோய்த்தொற்றுகள் தொ…

    • 0 replies
    • 406 views
  10. கரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 91,00,994 பேர் பாதிப்பு உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91,00,994 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91,00,994 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 49 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 23, 12,302 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்…

  11. குங் புளு என்று குறிப்பிட்டார்:‘கொரோனாவை 19 பெயர்களால் அழைப்பேன்’தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம் கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசமாக கூறினார். பதிவு: ஜூன் 22, 2020 05:15 AM வாஷிங்டன், அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், நேற்று முன்தினம் ஓக்லஹோமா மாகாணத்தில் துல்சா நகரில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்று பேசினார். …

  12. ஹஜ் யாத்திரை இரத்து செய்யப் படாது – சவூதி அரேபியா அறிவிப்பு இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது என சவூதி அரேபியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் ஹஜ் கடமையை நிறைவேற்ற மிக குறைவான நபா்களே அனுமதிக்கப்படுவா் என்றும் அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினரின் வருடாந்திர ‘ஹஜ்’ புனித யாத்திரை, எதிர்வரும் ஜூலை இறுதியில் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில், மெக்காவில் தொழுகை நடத்துவதற்காக உலகம் முழுவதும் இருந்து சுமாா் 20 இலட்சம் போ் சவூதி அரேபியாவுக்கு படையெடுப்பர். இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த்தொற்று பிரச்…

  13. 3 ஆயிரம் பலூன்களை பறக்கவிட்டு தென்கொரியா மீது உளவியல் போர் தொடுக்கும் வடகொரியா தென்கொரியாவுக்கு எதிராக உளவியல் போர் தொடுக்கும் விதமாக 1.2 கோடிக்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் அடங்கிய 3000க்கும் மேற்பட்ட ராட்சத பலூன்களை பறக்கவிடும் நூதன போர் முறையை மீண்டும் வடகொரியா கையிலெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில், வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள், வட கொரியாவுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பலூன்களைப் பறக்கவிட்டனர். இந்தச் செயலுக்குப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக வடகொரியா தனது எதிர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதற்கமைய, கொரிய நாடுகளுக்கு இடைப்பட்ட ஒப்பந்தத்தத்தை மீறி, பிரசாரங்களில் தேசத்துரோகிகள் ஈடுபடுகிறார்கள். …

  14. கொரோனா வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று கொரோனா வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. பதிவு: ஜூன் 23, 2020 04:30 AM ஜெனிவா, கொரோனா வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. 2020-ம் ஆண்டில் மக்கள் அதிகம் உச்சரித்ததும், அவர்களை அதிகம் அச்சுறுத்தியதும் ஒரு பெயர்; கொரோனா. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த ஆட்கொல்லி வைரஸ் மனுக்குலத்துக்கு சவால் விட்டு, நின்று விளையாடுகிறது. இந்த மரண களத்தில்…

  15. அமெரிக்க கோழி இறைச்சிக்குத் தடை விதித்த சீனா பெய்ஜிங்கில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கோழி இறைச்சிக்கு சீனா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் இயங்கும் டைசன் உணவு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பலருக்கு சமீபத்தில் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நிறுவனத்திலிருந்து ஏற்றுமதியாகும் இறைச்சிக்கு சீனா தடை விதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “பெய்ஜிங்கில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்காவின் டைசன் நிறுவனத்திடமிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதை தற்காலிகமாகத் தடை செய்கிறோம். மேலும் பெய்ஜிங்கில் செயல்பட்ட பெப்சி …

  16. பிரிட்டனில் மூவா் குத்திப் படுகொலை! பிரிட்டனின் தென்புற நகரான ரெடிங்கில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில், மூவர் கொல்லப்பட்டதுடன், ஆறு போ் காயமடைந்தனா். இவா்களில் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர். ரெடிங்கின் நகர மையத்தில் உள்ள ஃபோர்பரி கார்டனில் நேற்று (20) இடம்பெற்ற இந்தக் கத்திக்குத்துத் தாக்குதல் ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதப்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக ரெடிங் நகர துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் இயன் ஹண்டர் கூறினார். இந்தக் கத்திக் குத்துத் தாக்குதல் தொடா்பில் 25 வயதான ஒருவா் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தத் தா…

  17. இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம் காத்மாண்டு: இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார். நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு…

  18. ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்ளுக்கு கொரோனா ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான டோனிஸில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் 6,500 ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜேர்மனியில் அதிபர் அங்கலா மேர்க்கெல் நீண்ட காலமாக முடக்க நிலையை தொடர்வதற்கு விரும்பிய போதும் பிராந்திய முதல்வர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்தினார். ஐரோப்பாவில் கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்ட ஜேர்மனியில் இவ்வாறான இறைச்சி விற்பன…

  19. ட்றம்ப் நிர்வாகத்தின் அதியுச்ச பதவியை வகித்த கறுப்பினப்பெண் பதவி விலகினார் அமெரிக்க நிர்வாகத்தின் ராஜாங்கச் செயலகத்தில் உதவிச் செயலாளராகப் பதவி வகித்த மேரி எலிசபெத் ரெய்லர், தனது பதவிலிருந்து விலகுவெதென அறிவித்துள்ளார். ட்றம்ப் நிர்வாகத்தில் ஒரு கறுப்பினத்தவருக்கு வழங்கப்பட்ட அதியுச்ச பதவி இதுவாகும். ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலையைத் தொடர்ந்து உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் கறுப்பின மக்களுக்கான நீதி கோரும் போராட்டங்களின்போது ஜனாதிபதி ட்றம்ப் நடந்துகொண்ட விதம் குறித்து அதிருப்தி அடைந்தமையினாலேயே தான் பதவி விலகுவதாக ரெய்லர் அறிவித்துள்ளார். “கறுப்பின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக ஜனாதிபதி விடுத்த அறிக்கைகளும், கருத்துக்களும், எனது அடிப்படை …

    • 0 replies
    • 463 views
  20. கொவிட்-19 தடுப்பூசிக்கான முதல் மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்தது ஜேர்மனி! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான தடுப்பூசிக்கான முதல் மருத்துவ பரிசோதனையை ஜேர்மன் உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான க்யூர்வாக் (CureVac) ஆரம்பித்துள்ளது. டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இந்த சோதனையில், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 100 இற்க்கும் மேற்பட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். முதல் சோதனை முடிவுகள் இரண்டு மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜேர்மன் செய்தி வலைத்தளமான ஃபோகஸ் தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கு மனித சகிப்புத்தன்மையையும், அதற்கு மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் விஞ்ஞானிகள் கண்டறிய முயற்சிக்கின்றனர் என்று சோதனைக்கு பொறுப்பான பேராசிரிய…

  21. 11 கிளைகளை அதிரடியாக மூடிய அப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அங்கு இதுவரையில் 22 இலட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பிள் நிறுவனமும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்த 271 கிளைகளையும் மூடியது. பின்னர் வைரசின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 100 கிளைகளை மட்டும் மீண்டும் திறந்தது. ஆனால் தற்போது, அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரிசோனா, புளோரிடா போன்ற மாகாணங்களில் கொரோனா தொற்றுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா தீவ…

  22. கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுக்கும் உரிமை கொண்டாடும் சீனா லடாக்கின் ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் உரிமை கோருகிறது சீனா. சீன நிபுணர் ஒருவர் இதற்காக குவிங் பேரரசு காலத்தின் ஆதாரங்களைக் காட்டி வரலாற்று உரிமை கோரியுள்ளார். கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் மேற்கு பகுதி முழுதையும் தனக்கானது என்கிறது சீனா. அதாவது கல்வான் மற்றும் ஷ்யோக் நதிகள் சங்கமிக்கும் இடம் வரை கோருவதாகத் தெரிகிறது. பெரும்பாலான சீன வரைபடங்கள் கல்வான் நதியின் அனைத்துப் பகுதியும் சீனாவுக்கு உரியது போன்றே காட்டுகிறது. ஆனால் முந்தைய வரைபடங்களில் நதியின் மேற்குக் கரையோரம் அதாவது ஷ்யோக் நதியைச் சந்திக்கும் இடம் சீனாவின் பகுதியுடன் சேர்த்துக் காட்டப்படவில்லை. இந்நிலையில் ச…

  23. ஒக்ஸ்போர்டில் பட்டம் பெற்றார் மலாலா பெண்களின் கல்விக்கான செயற்பாட்டாளரான பாகிஸ்தானிய பெண் மலாலா யூசுப்ஸாய், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். 22 வயதுடைய மலாலா, அரசியல், தத்துவம் மற்றும் பொருளியல் துறைகளில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். பெண்­களின் கல்­விக்­காக குரல்­கொ­டுத்த மலாலா யூசுப்ஸாய், 2012ம் ஆண்டு பாகிஸ்­தானில் தீவி­ர­வா­தி­களால் தலையில் சுடப்­பட்டு படு­கா­ய­ம­டைந்தார். பின்னர் லண்­டனில் தீவி­ர­சி­கிச்சை அளிக்­கப்­பட்டு அவர் குண­ம­டைந்தார். 2014ம் ஆண்டு அவருக்கு சமா­தானப் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஒக்ஸ்போர்டில்-பட்டம்-பெற/

  24. ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு இந்தியா,மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன, ஒரு இருக்கை இன்னும் உள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 07:11 AM ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன, 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பே…

  25. அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு: அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை! by : Anojkiyan அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒபாமா நிறைவேற்றிய இத்திட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சரியான விளக்கத்தை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே சட்டத்திற்கு உட்பட்ட திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் தன்னிச்சையாக, செயற்பட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். சிறுவயதி…

    • 0 replies
    • 365 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.