Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப்புகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, சீனக் கப்பல்கள், ஈரானின் கச்சா எண்ணெயை ரகசியமாக எடுத்துச் செல்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கும் அணு ஏவுகணைத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை போடும் விதத்தில், அந்நாட்டின் மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கச்சா எண்ணெயை சீனக்கப்பல்கள் ரகசியமாக எடுத்துச் செல்வதாகக் கூறி, அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது . இரண்டு சீனக் கப்பல்கள் ஈரான் எண்ணெயை ரகசியமாக ஈராக் வழியாக எடுத்துச்சென்றிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. தனது திருட்டுத்தனத்தை மறைக்க சீனக் கப்பல்கள், கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப…

    • 0 replies
    • 233 views
  2. துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது பிரான்ஸ்! துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிரியாவின் வடபகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்திஷ் இனப் போராளிகளை குறிவைத்து, துருக்கி இராணுவம் கடந்த 9ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் குறித்த பகுதிகளில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரானும், சிரியா மீதான துருக்கியின் ஒருதலைபட்சமான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், சிரியா மீதான தாக்குதலில் பயன்படுத்தப்படலாம் என்ற கா…

  3. கனடாவைச் சேர்ந்த 79 வயது பெண் எழுத்தாளர் மார்க்கரெட் ஆட்வுட், பிரிட்டனைச் சேர்ந்த 60 வயது பெண் எழுத்தாளர் பெர்னர்டீன் எவரிஸ்டோ ஆகிய இருவருக்கு இந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டில்தான் இருவருக்கு புக்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.அதன் பின்னர் ஒருவருக்குத்தான் விருது என விதிமுறை வகுக்கப்பட்டது. ஆயினும் இந்த ஆண்டு தீவிரமான பரிசீலனைகளுக்குப் பிறகு மார்க்கரெட் ஆட்வுட் எழுதிய தி டெஸ்டமென்ட்ஸ் (The Testaments), எவரிஸ்டோ எழுதிய Girl Woman, Other ஆகிய இரண்டு நாவல்களும் சம அளவிலான தகுதி பெற்றன. இரண்டில் ஒன்றையும் தள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே விதியை தளர்த்தி இருவருக்கும் புக்கர் விருதை பகிர்ந்தளி…

    • 0 replies
    • 257 views
  4. ஜெர்மனியில் குழந்தைகளின் ஆபாசப்படம் குறித்த சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய 7 இந்தியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஜெர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்பவன் குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், அதை வீடியோவாக எடுத்து விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டான். அவன் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வாட்ஸ் ஆப் குழுக்கள் இருந்ததும், அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதில் 7 இந்தியர்களின் வாட்ஸ் ஆப் எண்களும் இருப்பதாகக் கூறி கடந்த ஜனவரியில் ஜெர்மனி தூதரகம் மூலம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. செப்டம்பர் மாத இ…

  5. துருக்கி மீது டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்தார்… October 15, 2019 சிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர். துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என 4 தினங்களுக்கு முன்பு…

  6. முடிவற்ற போர்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், குர்து போராளிக் குழு படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் குர்து படைகளை தீவிரவாதக் குழுவாகக் கருதி துருக்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த பகுதிகளில் இருந்து அமெரிக்கா தனது வீரர்களை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, துருக்கி படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. குர்து படைகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப், படைகளை திரும்பப் பெற்ற விவகாரத்தில் தான் தனித் தீவு போன்று ஒதுக்கப்ப…

    • 2 replies
    • 356 views
  7. வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரியதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார். அந்தப் பிராந்தியத்திற்கு மிக விரைவில் தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் பென்ஸ் கூறியுள்ளார். வடகிழக்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா ஜனநாயகப் படை என்ற குர்து ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து…

  8. துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் கருதுகிறார். குர்து இனப் போராளிகளை ஒழித்துக் கட்ட தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் வீரர்களை அமெரிக்கா திரும்ப அழைத்து கொண்டதை பயன்படுத்திக் கொண்டு குர்துக்கள் மீது தாக்குதல் நடத்த எர்டோகன் உத்தரவிட்டார். இதை அடுத்து சிரியாவின் வடக்கே உள்ள குர்துக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐந்து நாட்களாக தாக்குதல் தொடரும் நிலையில், தங்கள…

    • 2 replies
    • 774 views
  9. கட்டலோனியாவின் பிரிவினை போராட்ட தலைவர்கள் ஒன்பது பேரிற்கு எதிராகதேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ஸ்பெயின் நீதிமன்றம் அவர்களிற்கு நீண்ட கால சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2017 இல் இடம் பெற்ற சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பின் போது அவர்களின் நடவடிக்கைகளிற்காகவே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் துணை ஜனாதிபதி ஒரியோல் ஜன்குயரசிற்கு தேசத்துரோகம் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஸ்பெயின் நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. அவர் 13 வருடங்களிற்கு அரசியல்ரீதியிலான பதவிகளை வகிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டலானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரிற்கும் …

    • 0 replies
    • 279 views
  10. கிழக்கு உத்தர பிரதேசத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், பலர் ஈடிபாடுகளில் சிக்கியிருக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கிழக்கு உத்தர பிரதேசத்தின் மாவே மாவட்டத்தில் முகமதாபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் தாக்கம் மிக வலுவாக இருந்துள்ளது. இதனால், அந்த முழு கட்டிடமே இடிந்து விழுந்தது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறும்போது, பெரும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் இருந்த பெரும் தீ பற்றி எரிந்தது என்று தெரிவித்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளா…

  11. சீனாவை பிரிக்க முயற்சிப்போர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுவார்கள் என நேபாள பயணத்தின் போது சீன அதிபர் ஜின்பிங் எச்சரித்துள்ளார். மாமல்லபுரம் பயணத்தை முடித்துக் கொண்டு நேபாளம் சென்ற சீன அதிபர், அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆகியோரை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்திய அவர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளில் சீன அதிபர் ஒருவர் நேபாள நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் நேபாள அதிபருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அந்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நேபாள மதிப்பில் 5 ஆயிரத்து 637 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்…

    • 2 replies
    • 407 views
  12. முன்னாள் பரா ஒலிம்பிக் வீரருக்கு விமான நிலைய வளாகத்துள் நுழையத்தடை காலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் போது விமானம் மீதேறிய முன்னாள் பரா ஒலிம்பிக் வீரருக்கு நாட்டின் எந்தவொரு விமான நிலையத்திற்குள்ளும் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எக்ஸ்ரிங்சன் ரெபெல்லியன் குழு மேற்கொண்டுவரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டங்களின் நான்காம் நாளான கடந்த வியாழக்கிழமை ஜேம்ஸ் பிரவுண் என்ற 55 வயதான குறித்த நபர், லண்டன் சிற்றி விமான நிலையத்தில் தரித்திருந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸூக்கு சொந்தமான விமானத்தின் மேல் ஏறினார். அவரை அதிலிருந்து இறக்கிய பொலிஸார் கைது செய்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் முன்;னிலைப்படுத்தினர். இதன்போது, தன…

  13. வடக்கு சிரியா மீது துருக்கி தாக்குதல் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் October 12, 2019 குர்து படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இவ்வாறு வெளியேறியவர்கள் அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரங்களில் உள்ள பாடசாலைகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதலுக்குப் பல மனிதாபிமான குழுக்கள் கவலை தெரிவித்துள்ள அதேவேளை யார் என்ன சொன்னாலும் தாங்கள் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என துருக்கி ஜனாதிபதி எர்துவான் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் படைகளுக்…

  14. எத்தியோப்பியப் பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு (Abiy Ahmed) அமைதிக்கான நோபல் பரிசு 2019 வழங்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா கடந்த ஆண்டு எரித்திரியாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 1998-2000 எல்லைப் போரைத் தொடர்ந்து 20 ஆண்டுகாலம் நிலவிய ராணுவ நெருக்கடிக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டது. ஒஸ்லோவில் நடைபெற்ற 100 வது அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்கும் விழாவில் அமைதிக்கான நோபல் பரிசு 2019 எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்குக் கிடைத்துள்ளது. ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் கிரௌன்ஸ் (£730,000) மதிப்ப…

  15. சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஒப்பரேசன் பீஸ் ஸ்பிரிங் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துருக்கி விமானதாக்குதல்களுடன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது எனினும் பின்னர் ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெறுகின்றன. சிரியாவின் எல்லை நகரான டெல்அப்யாட்டில் பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர். ரஸ் அலி அய்ன் என்ற நகரத்திலும் பாரிய சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. விமானங்களின் சத்தங்களை கேட்க முடிகின்றது ரஸ் அலி அய்ன் நகரிலிருந்து கரும…

    • 11 replies
    • 1.6k views
  16. ஹாங்காங்கில் போராட்டத்தில் வன்முறையாளர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் ஆப்-ஐ நீக்குவதற்கு அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.கே. மேப் லைவ் எனும் ஆப் பயன்படுத்தி போராட்டங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை போராட்டக்காரர்கள் கண்டறிந்து அங்கு சென்று சேர்ந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. காவல்துறை செக் போஸ்ட்களில் இருந்து தப்புவது, அவர்களைத் தாக்குவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாகவும், அதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் துணை போவதாகவும் சீன பத்திரிக்கைகள் சிலவற்றில் அரசு குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகின. ஹாங்காங் ரவுடிகளுக்கு ஆப்பிள் துணைபோகிறதா? என அந்நாட்டு அரசு ஊடகங்களில் ஒன்றான பீபிள்ஸ் ட…

  17. படத்தின் காப்புரிமைREUTERS 2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1998-2000 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார். அமைதிக்கான நோபல் பரிசை பெறும் 100ஆவது நபர்/அமைப்பு எனும் பெருமையை அபி அஹ்மத் பெற்றுள்ளார். வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழாவில், அபிக்கு நோபல் பரிசுட…

    • 2 replies
    • 614 views
  18. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் ஆர்ன்டேல் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முயன்றார் என்ற சந்கேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் வணிகவளாகத்திற்குள் பாரியகத்தியால் தாக்குதலை மேற்கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் என கருதப்படும் நபர் வணிகவளாகத்தில் காணப்பட்டவர்கள் மீது தாக்குதலை நடத்தினார் என காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த ஆயுதமேந்தாத காவல்துறையினரையும்; குறிப்பிட்ட நபர் கத்தியால் குத்த முயன்றார் அவர்களை துரத்த முயன்றார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.முதலில் சாதரண தாக்குதல் முயற்சி என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை கை…

    • 0 replies
    • 492 views
  19. குர்திஸ் சிறையிலிருந்த மிகவும் ஆபத்தான ஐஎஸ் உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது அமெரிக்கா துருக்கி சிரியாவின் வடபகுதி மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐஎஸ் பீட்டில்ஸ் எனப்படும் ஆபத்தான பயங்கரவாதிகளை தனது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக்கினதும் சிரியாவினதும் சில பகுதிகளை ஐஎஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவேளை மேற்குலகை சேர்ந்தவர்களை பிடித்து பணயக்கைதிகளாக வைத்திருந்த பின்னர் படுகொலை செய்த லண்டனை சேர்ந்தஐஎஸ் தீவிரவாதிகள் ஐஎஸ் பீட்டில்ஸ் என அழைக்கப்படுகின்றனர். லண்டனை சேர்ந்த இருவரும் தற்போது அமெரிக்காவின் பிடியில் உள்ளனர…

  20. ட்ரம்பிற்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது – வெள்ளை மாளிகை! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வொஷிங்டனில் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டிஃபானி கிரிஷம் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், உக்ரைன் அரசை ட்ரம்ப் மிரட்டியதாக நடத்தப்படும் விசாரணை, முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது ஆகும். இந்த விவகாரத்தில் ட்ரம்ப் மீது எந்தத் தவறும் இல்லை. இது ஜனநாயகக் கட்சியினருக்கு நன்றாகவே தெரியும். இந்த விசாரணையை நடத்துவது மூலம் 2016-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராகவும், அம…

    • 2 replies
    • 675 views
  21. புத்தம் புதிய மாற்றங்களுடன் அறிவார்ந்த மாநிலமாக பினாங்கு திகழும் lingga அக்டோபர் 10, 2019110 பினாங்கு, அக்டோபர் 10- புத்தம் புதிய மாற்றங்களுடன் அறிவார்ந்த மாநிலமாக பினாங்கு திகழும் என வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகரப் பெரு வளர்ச்சித் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கான பற்பல வசதிகளை நிர்மாணிப்பதில் அதிநவீன நுட்பங்களுடன் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மெய்பிக்கும் வகையில் தற்போது மக்கள் பல்வேறு துறைகளில் பல்வகையான வசதிகளை எதிர் கொண்டிருப்பது இதற்கு சான்று என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பல்லூடக தொலைத் தொடர்பு தொழில் நுட்ப முற…

    • 0 replies
    • 409 views
  22. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை இம்மாத இறுதிக்குள் வெளியேற்றும் தனது உறுதிமொழியை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் 26ஆம் திகதி பொதுத் தேர்தலொன்றை பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆதரிக்கவுள்ளது என சண் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான வாக்களிப்பொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இம்மாதம் 21ஆம் திகதி முன்மொழிந்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றுக்குச் செல்ல தொழிலாளர் கட்சி இணங்கும் என சண் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ப…

    • 0 replies
    • 474 views
  23. ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு! ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹாலே நகரத்தில் உள்ள யூத வழிபாட்டு ஸ்தலத்திற்கு அருகிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தப்பி ஓடிய மற்றவர்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்பதால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/ஜேர்மனியில்-துப்பாக்கி-ப/

  24. ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு, இந்தாண்டு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.உலகின் மிக உயரிய விருதுகளில் நோபல் பரிசுக்கான, இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மருத்துவம், இயற்பியலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் விருதை தேர்வுக்குழு சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவித்தது. இவ்விருது, வேதியியல் பேராசிரியர்களான அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் குட்டெனப், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் மிஜோ பல்கலைக்கழகத்தின் அகிரா யோஷினோ ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இ…

    • 0 replies
    • 456 views
  25. ஜேர்மனியில் யூதவழிபாட்டு தலமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் உள்ள ஹலே நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன,சந்தேகநபர்கள் வாகனத்தில் தப்பியோடியவண்ணமுள்ளனர் மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினரை அங்கு அனுப்பியுள்ளோம்,இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் குற்றவாளிகள் தப்பியோடுகின்றனர் வீடுகளிற்குள் இருங்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இராணுவசீருடை அணிந்தவர்களே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் பெண்ணொருவர் உட்பட இரு…

    • 0 replies
    • 314 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.