Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. யெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள் யெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 13 மில்லியன் பேர் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டுப்போரில் சவுதி அரேபியாவின் வான்தாக்குதல்களின் பங்களிப்பின் விளைவாக நிலைமை மோசமடைந்துள்ளது. உலகில் பஞ்சம் நிலவாது எனும் நம்பிக்கையில் 21 ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்துவைத்தோம், ஆனால் எத்தியோப்பியாவிலும் வங்காளத்திலும் சோவியத் ஒன்றியத்திலும் நாம் கண்ட பஞ்சம் உலகை உலுக்கியது. தற்போது மீண்டும் யெமனி…

  2. காணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு விவாகரத்து ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். அதன் பின் அவரை காணவில்லை. துருக்கி அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது செளதி. ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து செளதி முடியாட்சிக்கு எதிராக எழுதி வந்தார்…

  3. பாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்! ஐக்கிய நாடுகளின் நிவாரணம் வழங்கும் முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் கனடா 50 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வருட காலத்திற்கு அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மாரி-க்ளவுட் பிபீயூ நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் வேலைத்திட்ட முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீனிய அகதிகளின் சிறார் கல்வி, பெண்களுக்கான நலன் அபிவிருத்தி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றுக்காக கனடாவின் நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இது…

    • 0 replies
    • 357 views
  4. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை DHA/Youtube வடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர். புதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பாலம்தான் மேய்ச்சல் நிலத்துடன் மேட்டு பகுதிகளை இணைத்தது என டெமிரோரென் செய்தி முகமை தெரிவிக்கிறது. பலஹோர் ஓடையின் குறுக்கே இருந்த இந்த பாலத்தை கடந்தவாரம் கூட பார்த்ததாக மக்கள் கூ…

  5. செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். "அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்," என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்று கூறியுள்ளார். "ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி ம…

  6. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது. புளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக தனது அண்மைய அறிக்கையில் மியாமியை மையமாக கொண்ட தேசிய சூறாவளி மையம் (என்ஹெச்சி) தெரிவித்துள்ளது. மிகவும் வேகமாக காற்று வீசும் என்றும், உயிருக்கு ஆபத்து விளைவிக…

  7. அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை மூடிவிடுமாறு ஐநா வேண்டுகோள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் பாரிய நோய் அபாயம் உள்ளதால் அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டுமென ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. யுஎன்எச்சீஆர் அமைப்பின் அவுஸ்திரேலியாவிற்கான பேச்சாளர் கதெரின் ஸ்டபெர்பீல்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதாரசேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். நவ்று முகாமில் கடந்த மாதம் பதின்ம வயது யுவதியொருவர் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள ஐநா அமைப்பின் பேச்சாளர் அவரை முகாமிலிருந்து வெளியேற்றவேண்…

  8. தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கி அதிகாரியொருவர் இந்த தகவலை மேற்குலக புலனாய்வாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார். துருக்கியில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்தில் வன்முறைகள் இடம்பெற்றதாக ஆதாரங்கள் கிடைத்தள்ளன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் தாக்கப்பட்டவேளை அவர் அதிலிருந்து தப்புவதற்காக போராடியுள்ளார் என குறிப்பிட்டுள்ள துருக்கி அதிகாரிகள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை காண்பிக்கும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன என குறிப்பிட்டுள்…

  9. உகண்டா நிலச்சரிவில் சிக்கி இது வரை 34 பேர் பலி!!! உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உகாண்டாவிற்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. இக் கோர சம்பவத்தால் 34 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் முழுமையடைந்த…

    • 0 replies
    • 449 views
  10. மரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன் படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் மரண தண்டனையை நீக்கிய 20வது மாகாணம் வாஷிங்டன். மரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனையை உடனடியாக ஆயுள் தண்டனையானது. இந்த செய்தி பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-45832447

  11. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி தரையிறங்கினர். கஜகஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட்டில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர். இவர்களில் ஹேக்-க்கு இது முதல் விண்வெளிப்பயணம் என்றும் அவர் 6 மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்றும் நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் கிழக்கத்திய நேரப்படி காலை 10.44க்கு நிலையத்துக்கே திரும்புகிறார்கள் என்கிறது நாசா வெளியிட…

  12. "உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்": மெலனியா டிரம்ப் படத்தின் காப்புரிமை SAUL LOEB அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், சைபர்புல்லியிங்கிற்கு (இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவது) எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டில் செய்யப்படும் நபர் தாம்தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், "வலுவான ஆதாரத்தை" வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/global-45832447

  13. வட்டி விகிதம் தொடர்பாக அமெரிக்க மத்திய வங்கி எடுத்த முடிவும், வணிக சண்டையும் ஆசிய பங்கு சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்க பங்கு சந்தை மோசமாக வீழ்ந்ததை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்தது. ஜப்பான் பங்கு சந்தை நீக்கே 3.9 சதவீதம் வீழ்ந்தது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவே மிக மோசமான வீழ்ச்சி. சீன பங்குசந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவை சந்தித்திருக்கிறது. மேலும் சுமை அமெரிக்கா உள்நாட்டு பொருளாதாரம் உறுதியான வளர்ச்சியை சந்தித்தது. இதனை அடுத்து கடந்த மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தியது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து கடன் வாங்குவது மக்களுக்கு சுமையாக மாறியது. இதனால் பொருளாதாரம் இறங்கு முகத்தை சந்தித்தது…

  14. இன்று உலக மனநல தினம் ஒக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினமாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. இது உலக மக்கள் அனைவரையும் மனநலம் குறித்து வெளிப்படையாக பேசத்தூண்டும் நோக்குடன் மனநல ஆரோக்கியத்திற்கான உலக சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வருடாந்த நிகழ்வாகும். ஒவ்வொரு வருடமும் இந்நாள் ஒருகுறிப்பிட்ட அம்சத்தின்மீது கவனம் செலுத்திவருகிறது. இந்த வருடம் உலக மனநல தினம், மாறிவரும் உலகில் இளைய தலைமுறையினரின் மனநல ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துகிறது. இன்றைய இளைஞர்கள் பிரச்சினை மிகுந்த ஒரு சமூகத்தில் வளர்ந்து வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிடும் அவர்கள் இணைய துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதுடன் வன்முறை அல்லது சோகம் நிறைந்த உள்ளடக்கங்களை அதிகமாக பார்க்கவேண்டிய நில…

  15. 2018 சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு (VIDEO) 2018ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், சமாதானம், இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. அவ்வகையில், 2018ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது. கொங்கோ நாட்டை சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாதியா முராத் ஆகியோருக்கு சமாதான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கொங்கோவை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போரின…

    • 0 replies
    • 816 views
  16. மக்ரோனின் சீர்திருத்தங்களை எதிர்த்து பாரிஸ் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் திட்டமிடப்பட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் நகர வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமரசத்திற்கு இணங்காத CGT போன்ற தொழிலாளர் சங்கங்களின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கொள்கைகளை நிலைநிறுத்தும் வகையில் பிரான்ஸ் முழுவதும் ஆதரவலைகளை தேடும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களை வியாபிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்ரோனின், பிரான்ஸ் பொது சேவை மற்றும் வரவு-செலவுத் திட்ட சீர்திருத்தங்கள், மருத்துவமனை, பல்கலைக்க…

    • 0 replies
    • 829 views
  17. ஹிட்லர் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க புலனாய்வு பிரிவு! சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையை விரும்பினார் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் சர்வாதிகாரி என அழைக்கப்பட்டாலும் இவர் இளம் வயதில் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகியுள்ளார். 1943 ஆம் ஆண்டு ஹிட்லர் குறித்து அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டது. அமெரிக்க புலனாய்வு அமைப்பு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. அதில், 1910 ஆம் ஆண்டு முதல் 1913 வரை ஹிட்லர் ஆஸ்திரியாவின் Vienna வில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு, தனது 20 வயதில் ஜேர்மனிக்கு தன…

  18. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நிக்கி ஹேலியின் (Nikki Haley) ராஜினாமாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக தலைவராக அவர் பணியாற்றியதன் பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆனாலும் வெள்ளைமாளிகை அதிகாரபூர்வமாக இந்த செய்தியை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. தூதரக சமூகத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் வெளிப்படையான ஆதரவாளரும், இஸ்ரேலின் மீது ஐ.நா.வின் நிலைப்பாட்டை அடிக்கடி விமர்சித்தும் வரும் ஹேலி, கடந்த வாரம் தனது ராஜினாமா பற்றி ஜனாதிபதியுடன் முதன்முறையாக கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை த…

  19. சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். விடோஸ்டர்ன் ஏரியில், சகா வனசெக் என்ற சிறுமி இதனை கண்டுபிடித்தார். முதலில் இந்த வாள் 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டது. ஆனால், உள்ளூர் அருங்காட்சியத்தில் இருக்கும் நிபுணர்கள், இது 1500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்புகிறார்கள். வறட்சியின் காரணமாக, ஏரியில் தண்ணீரின் அளவு மிகக்குறைவாக இருந்ததினால் இந்த ஆயுதத்தை சகா கண்டுபிடித்திருக்கக்கூடும். "தண்ணீரில் திடீரென ஏதோ ஒன்றை உணர்ந்து, அதனை தூக்கிப் பார்த்தேன். அதற்கு கைப்பிடி இருந்தது. உடனே நான் போய் என் அப்பாவிடம் கூறினேன்" என ரேடியோ ஒன்றுக்கு சகா பேட்டி …

  20. செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு திருமண ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். ஆனால், அவர் அங்கிருந்து திரும்ப வரவே இல்லை என்கிறது துருக்கி காவல்துறை. இஸ்தான்புல் அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது செளதி. ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார். யார் இந்த ஜமால்? சரி யார் இந்த ஜமால். ஒரு ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்? இஸ்லாமியர்களின் புனித நகரமான மதி…

  21. ஜனாதிபதி ட்ரம்பின் மற்றுமொரு வெற்றி: உச்ச நீதிமன்ற நீதியரசராக கவனோக் பதவியேற்றார்! அமெரிக்க சட்டத்தில் இறுதி முடிவை எடுக்கும் உச்ச நீதிமன்ற நீதியரசராக ப்ரெட் கவனோக் (வயது-53) பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அவர் நேற்று (சனிக்கிழமை) மாலை உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதின்றத்தில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில், பிரதம நீதியரசர் ஜோன் ரொபேர்ட்ஸ் முன்னிலையில், அமெரிக்க அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்து அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்த நியமனத்தை உறுதிசெய்வதற்கான 50 வாக்குகள் அவருக்கு கிடைக்கப்பெற்றன. எதிராக 48 வாக்குகள் கிடைக்…

  22. மலேசிய மக்களில் வெறும், 7 சதவீதம் தான், இந்தியர்கள். ஆனால், அங்கு செயல்படும் கேங்ஸ்டர் அல்லது தாதாக்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்கள் தான். குறிப்பாக சொல்வதென்றால், தமிழ் வம்சாவளியினர். எஸ்டேட் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், கேங்ஸ்டராக மாறியதற்கு பின்னணியில் உள்ள வரலாறு என்ன? பொருளாதாரத் தட்டின் கீழ்நிலையிலேயே இந்தியர்கள் இன்னும் இருக்க, மலேசிய அரசின் பாரபட்ச கொள்கை ஒரு காரணமா?மலேசிய போலீசின், நிழலுலக குழுக்கள் கண்காணிப்பு பிரிவின் கணக்குப்படி, மலேசியாவில் மொத்தம், 106 ரகசிய குழுக்கள் இயங்குகின்றன. இவற்றுக்கு, 576 கிளைகளும், அதில், 9,042 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். அவற்றில், மக்கள் தொகையில், 23.2 சதவீதம் - ஏறக்குறைய 70 லட்சம் - உள்ள சீ…

    • 2 replies
    • 1.6k views
  23. பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கு எதிராக புவி வெப்பம் அதிகரிப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி செல்வதாக கூறுகிறார்கள். பருவநிலை மோசமாக பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்ப அதிகரிப்பு 1.5 செல்சியஸுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலை தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், இப்போதும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அறிவியலாள…

  24. நேரம் வந்துவிட்டது.. வேகமாக நெருங்கும் பேரழிவு.. 2030க்கு நாள் குறித்த ஐநா! நியூயார்க்: 2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.ஐநாவின் இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change) அமைப்பு நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 400 பக்கம் உள்ள அந்த அறிக்கை, மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுக்க கூடியது.மனிதர்கள் தற்போது இருக்கும் வாழ்க்கை முறையை கடைபிடித்தால், 2030ல் கண்டிப்பாக உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பூமியின் வெப்பநிலை வெகுவேகமாக உயரும் என்றும் கூறியுள்ளது. இப்போது என்ன ? கடந்த 10 வருடங்களில் பூமியின் வெப்ப…

  25. காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போலின் இயக்குநர் பதவி விலகல் October 8, 2018 1 Min Read சர்வதேச காவற்துறை அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை (Meng u;ongwei) பதவி விலகலுக்கான கடிதத்தினை கையளித்துள்ளார். சர்வதேச அளவிலான பொருளாதார, போதை மற்றும் குற்றவியல் குற்றங்களை தடுக்க உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச காவற்துறையின் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே கடந்த 2016-ம் ஆண்டு பொறுப்பேற்ற அவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 29-ம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை விசாரணைக்காக சீன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.